Showing posts with label ஆற்றாமை. Show all posts
Showing posts with label ஆற்றாமை. Show all posts

Thursday, May 7, 2009

உன் ஒற்றை வரி....

எதற்கும் கலங்காத கல் நெஞ்சக்காரான்

கடவுளே இவனுக்கு கல்லாகத்தான் தெரிவார்

முசுடு, பேசத்தேரியாதவன், எதுக்கும் கவலையே படாதவன்

பாசமில்லாதவன், பிழைக்கத்தெரியாதவன், உறவை மதிக்கத்தெரியாதவன்

இன்னும் எத்தனை எத்தனை பேச்சுக்கள், எத்தனை வசவுகள்
எதற்கும் அஞ்சாதவந்தான், கவலையே படாதவன்தான்.


என்னுள் நீ கொடுத்த இந்த மாற்றம் உன்னையே மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும் அளவுக்கு மிகப்பெரியது,

இருந்தும் உன் ஒற்றை வரியில் என் அத்தனையையும் மாற்றியது, உன் போலி மகிழ்ச்சிக்காக இதையும் தாங்கிக்கொள்வேன் என்று உன்னுள் நம்பிக்கை ஏற்ப்படுத்தும் அளவுக்கு வலி பழகிப்போனதாக இருக்கலாம் ஆனாலும் வலியும் நியாபகங்களும் என்றுமே வலியும் நியாபகங்களும்தான். உன் போலி மகிழ்ச்சிக்காக அவற்றை போலியாக்கதே. இழப்பு என்பது இருவர்க்கும்தான்