Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Wednesday, April 4, 2012

ஐபிஎல்- 2012 சில துளிகள்

எல்லா போட்டிகளுமே கண்டிப்பாக பத்தொன்பதாவது அல்லது இருபதாவது ஓவரில் மட்டும் முடியும்.

எந்த அணியும் தொடர்ச்சியாக பல போட்டிகளை வெல்லாது, அப்படி வென்று கொண்டு வந்தால் பின்னர் பல போட்டிகளை தோற்கும். 

எந்த அணியும் இறுதிப்போட்டிக்கு எளிதில் தகுதி பெறாது, கடைசி லீக் போட்டிவரை யார் இறுதிப்போட்டிக்கு போவார்கள் என்று முடிவு தெரியாது.  

போட்டியின் முதல் நாள் திடிரென்று ஏதும் ஒரு வீரர் காயம் அடைவார்கள், அதைப்பற்றிய காரசார விவாதம் நடைபெறும். 

வோடபோனின் புதிய ஜூ ஜூ விளம்பரம் வெளிவரும். 

புது புது வகையில் டிவி திரையை விளம்பரங்கள் மறைக்கும். 

விமான கம்பனிகள், மதுபான கம்பனிகள்  இரண்டு மாதத்துக்கு நல்லா கல்லா கட்டும்.
  
புது சினிமா இரண்டு மதத்துக்கு பெருசா ஏதும் வெளிவராது. 

ஏதும் ஒரு கிரிக்கெட் வீரருடன் புதுநடிகை போட்டிகளுக்கு பின்னால் கிசு கிசுக்கப்படுவார். அனேகமாக இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து  கோலி இடம்பெறலாம். 

காலையில் இருந்து தூங்கும் வரை ஐபிஎல் பற்றியே அனைவரும் பேசுவார்கள். ஐபிஎல் போட்டியை திரையில் காட்டி பாரில் கல்லா கட்டுவார்கள்.

நல்லா விளையாடும் வீரர்களின் பார்ம் பறிபோகும், மொக்கையை விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர் மறுபடியும் பார்ம் கிடைத்து அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய அணியில் இரத்தை பிடிப்பார்கள்.
 
ஓய்வு பெற்ற வீரகளுக்கு டிவி சானலில் கிராக்கி ஏற்படும், 12th man க்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தவன் எல்லாம் கிரிக்கெட்டை அலசி ஆராய்வான்.

துளிகள் தொடரும்....

Tuesday, April 14, 2009

ஐ பி எல் Vs தேர்தல்

எத்தனையோ பேர் இதைப்பற்றி எழுதிட்டாங்க நாமும் எழுதிடுவோம்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வரும், அதுவும் இந்த முறை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வரும் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தெரியும். ஐ பி எல் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு முன்னாடியே இதை முடிவு செய்தாகிவிட்டது. ஆனாலும் நம்ம பணக்கார ஆட்டம் எல்லவற்றையும் மாற்ற துணிந்ததே. ஏங்க தேர்தல்தான் வருதுன்னு தெரியும்தான அப்புறம் எதுக்குங்க ஏப்ரல்ல போய் போட்டிய வைக்கறீங்க?? மத்த வீரர்களோட கால்சீட் கிடைக்காதுன்னு என்றுதான. அப்ப மற்ற நாடுகள்ல என்ன நடந்தாலும் அத மாத்த சொல்ல மாட்டீங்க ஆனா நம்ம ஊர்ல ஜனநாயக கடமை என்று ஒன்னு அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை வருது அத மாத்தனும் என்று நினைப்பீங்க.

அய்யா நீங்க கிரிக்கெட விளையாடலாம் எப்படி வேண்டும் என்றாலும் விளையாடலாம் ஆனா நாட்ட பத்தியும் நாட்டு மக்களை பத்தியும் யோசிக்கணும். போட்டிய தேர்தல் முடிஞ்சப்புறம் மாத்தி வச்சா குறைஞ்சு போய்டுவீங்களா??

ஏங்க போட்டி ஆரம்பிக்கும்போது இளம் இந்திய வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்பாக இருக்கும்னு சொன்னீங்க ஆனா இப்ப பார்த்தா ஒரு அணில இந்திய வீரர்கள் அதும் புதுமுகங்கள் எண்ணிக்கை ஒன்றை தாண்டாது போல இருக்கே?? வெளிநாட்டுகாரன் சம்பாதிக்க எங்க வரி பணத்துல நடத்துற தேர்தல தள்ளியா வைக்க முடியும். நாங்க தொலைகாட்சில பார்த்தால் வரும் வருமானத்த எங்க நாட்டிலேவா செலவு பண்ண போறீங்க? வெளிநாட்டுக்காரனுக்கு விளையாட சம்பளமா தரீங்க. எங்க காச வெளிநாட்டுக்கு கொண்டு போக நாங்க துணை போகனுமா?

எல்லாம் சரிதானுங்க எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கா இருக்கும் ஆனால் தேர்தல் என்பது அதை விட பொழுதுபோக்கு நிறைந்தது. தேர்தலிலும் அனைத்து வித போட்டி பொறாமைகள் விறுவிறுப்பு என்று எல்லாமே உண்டு. வெளிநாட்டில கொண்டு போய் வச்சு வெளிநாட்டுகாறன விளையாட சொல்லிட்டு எதுக்கு இந்திய பிரிமியர் லீக் என்று பேர் வைக்கணும்??

சரி இந்தியா என்ற நாட்டுக்காக விளையாடி இவ்வளவு சொத்த சேர்த்த வீரர்கள் இந்த போட்டிக்காக வெளிநாட்டில் போய் விளையாட போறாங்க. இந்தியால நடக்கற தேர்தல்ல அனைத்து குடிமகனும் ஓட்டு போடுறது தலையாய கடமை, இந்த வீரர்கள் அந்த கடமையை அப்போ செய்ய மாட்டாங்க தானே? ஏங்க இந்தியா பேர்ல விளையாண்டு இவ்வளவு சம்பாதிச்சுட்டு இந்தியாவுக்கு தேர்தல் என்றல் ஓட்டு போட மாட்டீங்க? இதை எதிர்த்து எவனும் கேள்வி கூட கேட்க மாட்டான்.

இனி எதிர் பக்கம் வருவோம்.

மிக பெரிய ஜனநாயக நாடு உலகின் ஐந்தாம் ராணுவம் என்று எல்லாம் சொல்றாங்க ஆனா தேர்தல் சமயத்துல ஒரு விளையாட்டு போட்டிக்கு பாதுகாப்பு வழங்கறது கஷ்டமாம்.

சாதாரண மக்களுக்கே பாதுகாப்பு வழங்காதவங்க எப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கமுடியும்??? இதுக்கெல்லாம் காரணம் பொது மக்கள் தான். எவன் எப்படி போனால் நமக்கு என்ன என்ற மனநிலை தான்.

எனக்கு கிரிக்கெட் விளையாட்டு பிடித்திருந்தாலும் வெளிநாட்டில் பொய் விளையாடுவது பிடிக்கவில்லை, ஓட்டு போடாமல் விளையாடும் இந்த வீரர்கள் இனி இந்தியாவிற்காக விளையாடக்கூடாது என்பது என் நிலை. அப்படி சொன்னால் ஒழுங்காக ஓடிவந்து கடமையை செய்வார்கள் இவர்கள்.