Showing posts with label ஜாதகம். Show all posts
Showing posts with label ஜாதகம். Show all posts

Thursday, August 4, 2011

ஜாதகம்


நம்ம மக்கள் வாழ்க்கைல ஒரு நாளாது இத நெனச்சு கோவப்படாம இருந்தது இல்ல. சமீப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், ஆமா சந்தேகமெல்லாம் நமக்கு எப்ப வரும்? நாம ஏதாது ஒன்னுன்னால பாதிக்கப்பட்டா மட்டும் தான் வரும்.


அது ஏன்னு தெர்ல நம்ம ஊர் ஆளுங்க மட்டும் தொட்டதுக்கெல்லாம் ஏன் ஜாதகம் பாக்கறாங்கன்னு தெரியல. பிறக்கும் போதில் இருந்து இறக்கும்போது வரை நம்ம ஊர் மக்கள் வாழ்க்கைல அழுகையுடன் ஜாதகமும் கூடவே வருகிறது. ஆனா அதனால எந்த ஒரு நன்மையாவது நடந்து இருக்கா என்று தான் தெரியவில்லை.




குழந்தை பிறந்து பெயர் வைப்பதில் இருந்து ஆரம்பித்து விடுகிறது, இந்த எழுத்தில் தான் வைக்க வேண்டும் என ஆரம்பித்து இத்தனை எழுத்து தான் இருக்கணும், இத்தனை நம்பர் தான் இருக்கணும் என்று எல்லாம் கண்டிசன் போட்டு ஒரு வழிய நல்ல வாயில நுழையற வாழைப்பழம் என்னும் பெயரையே vaazhaaippaahaam என்று வைத்துக்கூப்பிடும் அளவுக்கு ஆகிப்போச்சு. கொழந்தைக்கு பேர் வைக்கணுமா? மொட்டை போடணுமா?? பள்ளிக்கூடம் சேர்க்கனுமா? அட நீங்க வேற பள்ளிக்கூடம் சேர்க்க பையனுக்கு ஜாதகம் பார்த்தா பரவால்ல பள்ளிக்கூடத்துக்கே ஜாதகம் பார்க்கறவங்க எல்லாம் இருக்காங்க. இப்படி எல்லாம் பார்த்து கொழந்தைய படிக்க வச்சா, அது படிப்புல கொஞ்சம் கம்மியாகிட்டா போதும் அவனுக்கு ஜாதகத்துல கிரகம் சரி இல்ல ரெண்டு வருசத்துக்கு அப்படித்தான்னு சொல்லி எல்லா தப்பையும் ஜாதகத்து மேல போட்டு சமாதானம் ஆகிடுவாங்க. நான் ஒன்னு கேட்க்கிறேன், இது வரைஜாதகம் பார்த்து எந்த ஜாதகக்காரனாது நாம எடுக்க முடிவ ஆமாம் இதான் சரின்னு சொல்லி இருக்கானா??. நீங்க ஒரு முடிவெடுத்து வீடு கட்டலாம்னு போனா கிரகம் சரியா இல்ல ரெண்டு வருசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது அப்படிம்பான்.


சின்ன முடிவு பெரிய முடிவு ரெண்டையும் நம்ம மேல நம்பிக்க வச்சு எடுக்கறத விட்டுட்டு எவனோ ஒருத்தன் ஜாதகம் பாக்கறான்னு சொல்லி அவன்கிட்ட போய் முடிவெடுக்க அலைஞ்சு தன்னம்பிக்கையே இல்லாத தமிழனா நம்மை நாமே மாத்திக்கிட்டோம்.




கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பாக்கரவன்கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கைல ஜாதகம் பார்த்து என்ன வளமா இருந்து இருக்கு, ஜாதகம் பார்க்காம இருந்து என்னதான் நடக்கல?? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் ஆனா இத யாரும் புரிஞ்சுக்கற நிலைமைல இல்ல.




இளைய தலைமுறைகூட ஒரு வயசுக்கப்புறம் ஜாதகத்துமேல ரொம்ப நம்பிக்க வச்சு அலையுதுங்க. சமீபத்துல எனது நண்பர் ஒருவர் கூட ஒரு பெரிய பிரச்சனைல இருந்து மீண்டு வர போராடிக்கிட்டு இருக்கார், ஆனா அவர் அதுக்கு பதிலா இன்னொரு பிரச்சனையான ஜாதகத்துல மூழ்கிவிட்டார். ஜாதகத்த ரொம்ப நம்பி தான் அதுல நிறைய தெரிஞ்சுகிட்டதாகவும் மேலும் அவரை விட யாருக்கும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றும் சொல்லி எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். உனக்கு தைரியம்னா என்னனு கூட தெரியலை என்று எனக்கு தலை சுத்தற அளவுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். நான் ஒன்னு கேட்கறேன், தைரியம்னா என்னன்னு எல்லோருக்கும் அவரவர் அகராதில ஒரு அர்த்தம் இருக்கும், நீங்க ஏன் உங்களோட அகராதில இருக்க அர்த்தத்தையே எல்லோரும் படிக்கணும் என்று நெனைக்கறீங்க??



மொத்ததுல ஜாதகத்தை நம்பினோர் எலோரும் தங்களோட தைரியத்தை, தெளிவான சிந்தனையை கைவிட்டுவிடுகின்றனர். அப்படி ஜாதகம் எல்லோருக்கும் இருக்கு என்றால் நம்ம ஊரைத்தாண்டி ஏன் வெளிநாட்டில் எல்லாம் என்ன இருக்கா? இல்லை ஜாதகத்தைபார்த்து சொல்லும் எல்லோரும் ஒரே மாதிரியாத்தான் சொல்றாங்களா? படிச்சவன் படிக்காதவன் என்று விதிவிலக்கு இல்லாம ஏன் போய் இதில் விழறாங்கன்னு எனக்கு தெரியல.




நான்கூட ஒரு காலத்துல ஜாதகத்தை நம்பிக்கிட்டு இருந்தவன்தான் ஆனா இப்ப எல்லாம் அதுல நம்பிக்க சுத்தமா இல்லாம போய்டுச்சு. கஷ்டம் வரும்போதுதான் மறுபடியும் ஜாதகத்தை எடுக்கணும் என்று தோணும் போல ஆனா இனி முடிவெடுத்துவிட்டேன், கஷ்டம் வந்தா ஜாதகத்தை நம்பாம என்னை நம்புவது என்று... என் ஜாதகம் எழுதியவர் இனிமேல் ஜாதகம் பார்ப்பது இல்லை என்ற முடிவில் உள்ளாராம்.






பின்குறிப்பு: நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் பிழை இருந்தாலும் மன்னிக்கவும்

Wednesday, June 11, 2008

ஜாதகம் நம்பலாமா??

எனக்கு மனதுக்குள் மிகப்பெரிய கேள்வி, ஜாதகத்தை நம்பலாமா? சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த ஜாதகம், ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, வயசு அதிகமாக அதிகமாக கோவிலுக்கு செல்வதும் குறைந்தது, பரீட்சை காலங்களில் எலோரும் போல கோவிலுக்கு செல்வது என இருந்தேன்.

இப்பொது கோவிலுக்கு செல்வதும் குறைந்து விட்டது, சென்னை வந்து 2 முறை பெசென்ட் நகரில் உள்ள புதிதாக கட்டப்பட்ட முருகன் கோவிலுக்கு மட்டுமே சென்றுள்ளேன். எனக்கோ கூட்டம் என்றால் ஒத்துக்காது அப்புறம் எங்க கோவிலுக்கு செல்வது.

சரி ஜாதகத்துக்கு வருவோம், நான் ஒரு எட்டாவது படித்துக்கொண்டு இருப்பேன் அப்போ எல்லாம் வீட்டில் அம்மா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று விடுவார்கள். ஒரு நாள் எங்க மாமா வீட்டிற்க்கு ஒரு ஆள் ஜாதகம் பார்க்க வந்தார், பின்னர் அவரை எங்க வீட்டிற்க்கு கூட்டி வந்து பார்க்க சொன்னார்கள். அவர் சொன்னதிலிருந்து முதலில் அண்ணன் ஜாதகம், அண்ணன் சுமாராக படிப்பார் என்று சொன்னார், எங்களுக்கு அதிர்ச்சி என்னடா மருத்துவம் படிப்பவரை சுமாராக படிப்பார் என்று சொல்கிறாரே என்று, இருந்தாலும் அதில் மற்றவர்களை விட எதோ சுமாராக படிப்பார் போல என்று சமாதான படுத்திகொண்டோம். பின்னர் பையன் இரும்பு சம்பந்தப்பட்ட படிப்பு மற்றும் தொழில் தான் இருப்பார் என்றார். எங்க அப்பா குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் பையன் காதல் திருமணம் செய்ய போகிறான் என்று சொன்னார். அதையும் குறித்து வைத்துக்கொண்டோம்.

பின்னர் அக்கா ஜாதகம் (அக்காவும் விடுமுறையில் வந்திருந்தார்) ஜாதகத்தை பார்த்த உடன் இந்த பெண்ணிற்கு படிப்பு வராது, 12 வரை மட்டுமே படிக்க வாய்ப்பு உள்ளது என்று அடுத்த குண்டு போட்டார், பின்ன அவரும் மருத்துவம் படிக்கும்போது அப்படி சொன்னா?? உண்மையில் எங்க வீட்டில் அவர்தான் ரொம்ப நல்லா படிப்பார். அவரிடம் என்னங்க சும்மா மாத்தி மாத்தி சொல்றீங்க என்று சொன்னா அவர் அதற்கு பையன் மருத்துவம் படித்தால் ஊசி இரும்பு தான இரும்பு சம்பந்தமான தொழில் தானனு முடக்கினார், காதல் கல்யாண மேட்டர் பொறுத்து இருந்து பார்த்தாயிற்று, எனக்கு தெரிந்து என் அண்ணன் கல்லூரியில் மௌனம் பேசியதே சூரியா மாதிரி இருந்தார், பொண்ணுங்கன்னா ஒத்துக்காது. அக்கா படிப்புக்கு பதில் பேசவே இல்ல இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பலாமா?

இன்னொரு விஷயம் உள்ளது, என் ஜாதகம் தப்பா எழுதி இருக்காங்க என்று சொல்லி மறுபடியும் ஒருத்தர் எழுதி குடுத்தார், அஅதில் அடுத்து வரும் 80 வருடங்களுக்கு சிறு சிறு குறிப்பாக குறிப்பு எழுதி உள்ளார். நான் எதையும் நம்பவில்லை அவர் குறிப்புப்படி 2002-2003 படிப்பில் மந்தமா இருக்கும் என்றார், நான் இரண்டாம் வருடம் படித்துகொண்டிருந்தேன், 5 பேப்பரில் கப்பு.
2003 இறுதியில் காவல்நிலையம் செல்வேன் என்று எழுதி இருந்தார், அதன்படி செல்ல வேண்டியதாயிற்று. அதிலிருந்து சிறிது நம்பிக்கை ஏற்ப்பட்டது.

இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பறதா வேண்டாமா?

அனாலும் எப்பலம் மனசு கஷ்டப்படுகிறதோ அப்போ ஜாதகத்தை நம்பலாமா என்று சஞ்சலம் மனதில், அம்மா வழக்கம் போல ஜாதகம் பார்த்துவிட்டு வந்து டைம் சரி இல்ல பார்த்து இருந்துக்கோ என்பார்கள், நானும் சரி என்று விட்டு உங்களுக்காக பாத்துக்கறேன் ஆனா ஜாதகம்லாம் நீங்களே பாத்துக்கோங்க எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வேன்.

டைம் நல்லா இருக்கிறது என்று சொன்னால் அதே வரிகளை பொய்யாக சொல்லி வைப்பேன். நல்லது நடக்கும் என்றால் நம்பலாம் தான?

கடவுள் நம்பிக்கையுமுண்டு அனாலும் கோவிலுக்கு செல்ல பிடிக்கவில்லை, நான் கடவுளை வணங்கும் பல பேரை பார்த்து இருக்கிறேன் எல்லோரும் தங்களுக்க்காகவும் குடும்பதிர்க்காகவும் வேண்டுகின்றனர், எவரும் அனைவரும் நல்லா இருக்கணும் என்றோ, தனது நாடு நல்லா இருக்கணும் என்றோ வேண்டுவது இல்லை, இதுவே எனது கோவில் வெறுப்பை குடுத்தது. என்ன இருந்தாலும் நானும் சராசரி மனிதன் தானே, நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல அதான் நல்லதுன்னா நம்பலாம், கெட்டதுன்னா நம்ப தேவை இல்லைனு முடிவெடுத்துள்ளேன் இது சரியா?