வஞ்சித்தலும் வஞ்சிக்கப்படுதலும் என் வாழ்வின் அங்கமாகிவிட்டது சமீபகாலங்களில். மனசோர்வு அதிகமாகி போன இந்நாளில் என்ன செய்வதென்றே தெரியாமல் தனிமையில் இருக்க பயந்து என்னை நானே வஞ்சித்துக்கொண்டேன். ஆம் இப்போதெல்லாம் தனிமை பயமாய் இருக்கிறது, அதற்கு காரணமும் உண்டு.
தன்னம்பிக்கை இழந்து, என் நம்பிக்கையும் குறைந்து சோர்ந்து போய் உள்ளேன், மனதில் எங்கோ ஒரு சிறிய இடத்தில் மீண்டு வருவேன் என்ற தீ எரிந்து கொண்டு உள்ளது, அதை நம்பியே எனது தனிமையை களிக்கின்றேன்.
எதற்கும் யாருக்கும் தவறிழைக்க கூடாதென்ற நினைப்புடன் இருப்பவனை எவரும் எளிதாக பலவீனப்படுத்திவிடலாம். உன்னை பதிலுக்கு சீண்டுவதை கூட கேவலமாக நினைக்கும் என்னிடம் விளையாண்டு கொண்டு உள்ளாய், உன்னிடம் சரி நிகராக சண்டையிட உனக்கு தகுதி இல்லை. அதற்காக பலவீனப்பட்டு உன்னிடமிருந்து ஓடி விடுவேன் என்று மட்டும் நினைக்காதே, மீண்டு வருவேன், இன்னிடத்தில் இருந்தே உனக்கு புரிய வைப்பேன், என் சக்தி என்னவென்று எனக்கு தெரியாத நிலைமையை ஏற்படுத்திய உனக்கு நன்றி.
எத்தகைய நினைப்பு உனக்கு என்மீது, என் வரலாறு எனகூட்டும் நம்பிக்கையில் சொல்கிறேன், தயவு செய்து என்னுடைய எதிர்ப்புகுரிய நபர்களின் பட்டியலில் வந்துவிடாதே, இழப்பு உனக்குத்தான் அதிகமாய் இருக்கும் வரும் நாட்களில்.நீ இந்த பதிவை படிக்கபோவது இல்லை என்று எனக்கு தெரியும் அனால் அடிக்கடி நான் படிப்பேன், இது உன்னை பலவீனப்படுத்த இல்லை என்னைப்பலப்படுத்த. தற்போதைய இடம் உனக்கு என்னை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தி ஒதுக்கி, புறக்கணித்து கொடுமைப்படுத்த வேண்டும் என்பதே, அனால் எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை உண்டு, எனது தனிமை என்னை எப்போதும் தாலாட்டும் என்பது உனக்கு தெரியாது.
நான் தற்ப்போது பலவீனப்பட்டு உள்ளேன் என்பது உண்மை, அனால் இது தற்காலிகமானது ----------. உன்னை சொல்லி அழைக்க உறவுகளே இல்லை, எந்த பெயருக்கும் உனக்கு தகுதி இல்லாமல் போய்விட்டாயே என்று வருத்தப்படுகிறேன். எனது எதிரிகளுக்கு கூட எதிரிகள் என்ற உறவு உண்டு ஆனால் உனக்கு????
தெரிகின்றது நாட்கள் நெருங்கிக்கொண்டு உள்ளன என்று எனக்கா? உனக்கா?பொறுத்திருந்த பார்ப்போம். உன் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிந்ததால்தானே இன்னும் என்னைபலவீனப்படுத்த முயல்கிறாய், உனக்கு தெரியாது உனக்கிறுப்பது உன் சுற்றத்தில் ஒரு போலி மரியாதையை என்று. என்னால் மட்டுமே உன் ரகசியங்கள் காக்கப்படும் ஆனால் மற்றவரால்??
மேலும் எழுத மனது துடிக்கிறது ஆனால் உன்னை மையமாக வைத்து எழுத என் புத்தி மறுக்கிறது. மன்னிக்ககூட தகுதி இல்லாத உனக்கு இபோதைக்கு இப்பதிவு கூட தகுதி இல்லை.