Showing posts with label நீ. Show all posts
Showing posts with label நீ. Show all posts

Monday, July 28, 2008

நீ

நான் விலக்கப்படேனா? இத்தகவலை நண்பர்களுக்கு தெரிவித்த உன்னை கண்டிப்பாக வாழ்த்தவேண்டும் அனால் எல்லா புகழுக்கும் நீயே பொறுப்பு என்ற ஒரு கொள்கை உன்னிடம் இருக்கும்போது என் வாழ்த்துக்கள் உனக்கு எப்போதும் தேவை இல்லாதவை. உன்னைப்பற்றி நீயே மற்றவர்களுக்கு புரியவைத்த நிகழ்ச்சி என்னை எதிலும் பாதிக்கவில்லை. மேலும் என்னதான் சுற்றமும் சூழமும் மகிழ்ச்சியாய் இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி குடுக்கக்கூடிய எந்தவித மாற்றமும் ஏற்பட வண்ணம் பார்த்துக்கொண்ட நீ கவனத்தை சிறிது மற்ற வழிகளிலும் காட்டியிருக்கலாம்.

எந்த பாதிப்பும் மனதிற்கு ஏற்றா நான் சில காலங்களால் மனத்தால் மட்டுமே பாதிப்படைந்த குற்றத்திற்கு காரணம் நீ. உன்னை போற்றுவர்கள் இருக்கும்வரை எந்தவொரு சுடும் உண்மையும் உன்னை நெருங்காது. நெருங்கும் உண்மைகளும் உன்னை பொறாமை என்ற பெயரில் வந்து சேரும். என்னாலான உதவிகளை செய்யாதபோது கூட அதற்கான காரணத்தை சுயநலத்தின் பாதிப்பில் மாற்றிகொண்டாய் அதற்க்கு என்றுமே நான் வருத்தப்பட போவது இல்லை.

உலகம் தவறு செய்தவரைக்கூட மன்னிக்கும் ஆனால் துரோகம் செய்தவரை மன்னித்தாலும் இகழ்ந்துவிடும், நீ தவறுகள் பல செய்தாலும் உன்னை மன்னிக்கதவாறு துரோகமும் செய்துள்ளாய். எனக்கு மட்டும் அவ்வாறு செய்திருந்தால் மற்றவர்கள் மன்னிக்கலாம், மற்றவர் அறியாமலே நீ அவர்களுக்கும் துரோகம் செய்திருப்பதால் உன்னை யாரும் மன்னிக்க போவது இல்லை. ரகசியங்கள் காக்கப்படுவதால் உனக்கு வழங்கப்படும் மன்னிப்புகள் வெற்றியடையும் என்று நம்பிவிடாதே. என்றோ ஒருநாள் கண்டிப்பாக எங்கிருந்தோ உண்மைகள் வெளிப்படும் அன்று உன்னை காப்பாற்ற நான் இருக்க மாட்டேன்.

உனக்கு என்னால் முடிந்த ஒன்று நன்றி சொல்வது, தனிமையின் இன்பத்தை அனுபவிக்க காட்டிய உனக்கு நன்றி என்று எவ்வாறு கூறுவது, நீ கற்றுகொடுத்தது தனிமை மட்டுமல்ல, எனக்கென்று உள்ள உலகத்தையும்.

அனுபவம் மட்டுமே பக்குவத்தை கொடுக்கும், எனக்கு அனுபவத்தை கொடுத்தாய் ஆனால் நீ பக்குவத்தை மட்டும் கற்றுக்கொள்ள மறுத்துவிட்டாய், பாதிப்படைந்த பயனாளிகள் வரிசையில் நீயும்.

இன்று முதல் பதிவு எழுத நேரமிருக்காது என்று நினைத்தேன் அனால் அதற்க்கு சிறிது காலம் நேரம் நீடித்து கொடுத்த உன்னை என்னவென்று சொல்ல, நீ எனக்காக செய்யும் ஒவ்வொரு தடை முயற்சியும் எனக்கான முன்னேற்றம் என்று எடுத்துக்கொள்வதா?இல்லை உனக்காக நீயா போட்டுக்கொண்ட கடினப்பாதை என்று சொல்வதா? எதுவாக இருந்தாலும் சரி இனி எனக்குண்டான பாதையில் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது