Friday, August 1, 2008
புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??
நேற்றிரவு வீட்டுக்கு செல்ல சிறிது நேரம் ஆனது, இரவு பாத்து மணிக்கு சென்று வழக்கம் போல செய்திகள் வரும் தொலைக்காட்சியை போட்டா ஒருத்தர் எதோ மன்னிப்பு கேட்டுக்கறேன் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சுடுச்சு அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தார்.
எல்லா ஆங்கில செய்தி சேனல்களும் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் அவர் படம் பக்கத்து மாநிலத்தில் இனி தடை இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறினார் அனால் ஒருவர் கூட அதைப்பத்தி நம்ம ஊர்க்காரன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வெளியிடவில்லை. சரி அத விடுங்க கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வார்கள் நம்ம ஆளுங்க..
நம்ம கூட ஒரு நண்பன் வீட்டில் தங்கி உள்ளான், அவன் அவரின் ரசிகன், என்று நினைத்து இருந்தேன், இருந்தாலும் என் அதிருப்தியை தெரிவித்துவிட்டு அவனிடம் வாதாடி என் பக்கத்து உண்மையை கூறி.. அவர் என்ன வேண்டும் என்றாலும் கேட்கட்டும் என் பழக்கம் அவர் படங்களை பார்ப்பதில்லை.. இதுவரை எந்த படத்தையும் திரை அரங்கிலோ இல்லை தொலைக்காட்சியிலோ பார்த்து கிடையாது அவ்வபோது தொலைக்காட்சியில் போடும் சிறிது நேர காட்சிகளே போதும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள என்று கூறிவிட்டு அவன் புரிந்து கொள்வான் என்று நம்பி தூங்கினேன்.
காலையில் நேரமே எழுந்து கொள்ளும் நான் வழக்கம் போல எழுந்து அலுவலகத்துக்கு கிளம்புகையில் என்னுடன் வந்து தங்கின அலுவலக நண்பன் பற்பசையை கேட்டான். தேடினால் இல்லை, அப்போதுதான் கவனித்தேன் அந்த ரசிகன் வெகு நேரத்தில் எழுந்து குளித்துக்கொண்டு இருந்தான். அவன் இந்த நேரத்தில் எழுந்து நான் இன்றுதான் பார்க்கிறேன். வந்து கிளம்பிக்கொண்டு இருந்தவனிடம் என்னடா இன்று அலுவலகத்தில் வேலை அதிகமா என்றதற்கு சிரித்துக்கொண்டே..
"அலுவலகத்திற்கு எவன் போவான் இனிக்கு தலைவர் படம் அதன் லீவ் எடுத்துவிட்டு படம் பாக்க செல்கிறேன் என்றான்".~!@#%!~#
பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் சிந்திவிட்டது வந்துவிட்டேன்.சம்பளம் வாங்கும் நாளில் இந்த பதிலை எதிர்பாக்கவில்லை...
வழக்கம் போல இதையும் படத்தை புறக்கணிப்போம் என்று இருந்த நான் கண்டிப்பாக மற்றவரிடமும் புறக்கணிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
Wednesday, June 25, 2008
பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு
என்னங்க பாக்கறீங்க திடிர்ன்னு குண்ட தூக்கி போடுறேன்னா? உண்மை தாங்க, விலை ஏற்றம் செய்து ஒரு மாதம் ஆக போகின்ற நிலையில் இந்த நாட்களில் நான் கண்ட உண்மை.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக வழக்கமாக நான் பெட்ரோல் போடுகிற நிலையங்களில் ஆகட்டும், இல்லை மற்ற எல்லா நிலையங்களில் ஆகட்டும் பெட்ரோல் விலை 60 ரூபாய் ஒரு லிட்டர்க்கு.
ஒவ்வொரு முறையும் நான் பெட்ரோல் போடும்போது சாதரண பெட்ரோல் போடுவது வழக்கம், கடந்த மாதங்களில் அது எங்கேயும் கிடைப்பதில்லை. சாதரண பெட்ரோல் விலை 55 ரூபாய் அனால் சூப்பர் பெட்ரோல், எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் விலை 60 ரூபாய். எங்கேயும் சாதரண பெட்ரோல் கிடைப்பது இல்ல.
கூட்டி கழிச்சு பாருங்க விலை ஏற்றம் 5 ரூபாய் இல்லை 12 ரூபாய். எப்போதும் கிடைத்த சாதரண பெட்ரோல் இப்போ கிடைப்பதில்லை, 60 ரூபாய் போட்டு பெட்ரோல் போடும் நிலை. இரண்டு சக்கர வண்டிகளில் இந்த சூப்பர் பெட்ரோல் போடுவதால் எந்த பயனுமிருக்கப்போவது இல்லை. அப்படியே இருந்தாலும் 2 -3 கிலோமீட்டர் அதிகம் ஓடும் அதற்கு 5 ரூபாய் அதிகம் குடுக்க வேண்டும்.
அதும் என்னோட யமாஹா எல்லாம் லிட்டர்க்கு 30 கிலோமீட்டர் குடுத்தாலே அதிகம் அதையும் அடிச்சு பிடிச்சு கெஞ்சி ஓட்டி 40 கிலோமீட்டர் குடுக்க வைக்கறேன். முடியலப்பா சாமி. இதுல சூப்பர் பெட்ரோல் வேறயாம் அய்யா என் வண்டி எத போட்டாலும் 30 தான் குடுக்கும் என்று கெஞ்சியும் எவனும் மசிய மாட்டேங்கிறான்.
இதுல இவங்க சூப்பர்னு சொல்லி சாதரண பெட்ரோல்ல கலப்படம் செஞ்சு வித்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஏதும் இல்லை. ஏற்கனவே ஒரு நிலையத்தில சாதரண பெட்ரோல் போடும் இடத்தில் சூப்பர் என்று ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருந்தனர். அதான் டவுட்டு...
இதெல்லாம் மாறனும்னா ஒரே வலி (வழின்னு தான் டைப் பண்ணுனேன் அனா அதுவா இப்படி வலின்னு மாறிவிட்டது) நம்ம தலைவர் விஜயகாந்த் ஆட்சிக்கு வரணும். ( ஒரு காமெடி வேனாமாங்க....)
ஆட்சிய மாத்துங்க (மாத்துன மட்டும் குறைய போகுதா இல்லபா ஒரு சேஞ்க்குதான். மாத்தின நம்ம மக்கள் இதையெல்லாம் மறந்துடுவாங்க தான.)
அணையைப்போற விளக்கு இவ்ளோ நாள் பிரகாசமா எரிஞ்சுக்கிட்டு இருந்த மாதிரி இருக்கு.
Tuesday, June 24, 2008
பிஎஸ்என்எல் சேவை அற்புதம்
இது பழைய நிகழ்வு, சென்ற வருடம் தீபாவளியின் போது நான்கு நாட்கள் விடுமுறை வந்தது, விடுமுறைக்கு முதல் நாள் எனது தந்தையின் அலைபேசி தொலைந்து போனது. நாங்களும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காமல் போகவே சரி வாடிக்கையாளர் சேவை மையத்தில் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தோம்.
எதற்கும் தொலைந்த நம்பர்க்கு அழைத்து பார்ப்போம் என்று அழைத்தால் யாரோ எடுத்தார்கள், எங்களுக்கோ மகிழ்ச்சி, அவரிடம் அலைபேசி எங்களுடையது, தவற விட்டுவிட்டோம், நீங்கள் எங்கு உள்ளீர்கள் வந்து வாங்கிகொள்கிறோம் என்று கூறினோம். அவரோ நான் வெளியூரில் உள்ளேன் தர முடியாது என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். பின்னர் எங்களது நெருங்கிய நண்பர் ஒருவரது பெண்ணிற்கு என் தந்தை நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியது வேறு யாரோ இருக்கவே அவர்கள் செய்ய என்னிடம் கேட்க அவர்களுக்கு அலைபேசி தொலைந்ததை சொன்னோம்.
இனிதான் ஆரம்பம் நம்ம பிஎஸ்என்எல் சேவை, வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்பு கொண்டு சொல்லலாம் என்று நினைத்தால் முதல் கேள்வி, வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளதா என்று, இருதால் என்ன நம்பர்? ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நம்பர் கண்டு பிடித்து அழைத்தோம், நம்பரை சரி பார்க்கவும் என்று வந்தது, பின்னர் பல முறை தொடர்பு கொண்டும் தங்கள் நம்பரை சரி பார்க்கவும் என்று மட்டுமே வந்தது, பின்னர் வேறு தொலைபேசியில் இருந்து அழைத்தால் அழைப்பு போயிற்று, யாரோ ஒரு பெண் எடுத்தார், தகவலை சொல்லி தந்தையின் நம்பரை துண்டிக்குமாறு வேண்டினோம். அவர் அதற்க்கு அசால்டாக இது தமிழ்நாடு சரக நம்பர் நீங்கள் அதற்க்கு தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி தொடர்பை துண்டித்தார் . அப்பா சென்னை தமிழ் நாட்டில் இல்லையா என்று மனதில் கேள்வி எழுந்ததுலாம் சொல்லனுமா??
கஷ்டப்பட்டு சேவை மைய நம்பரை கண்டுபிடித்தால் இப்படி சொல்றாங்க என்று நினைத்து மறுபடியும் அதே நம்பர்க்கு அழைக்க, அந்த பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது, "இப்போது தான சொன்னேன் இங்க சொல்ல கூடாதுன்னு, ஏங்க மறுபடியும் பண்றீங்க" என்று கேட்டார், அம்மா எனக்கு தமிழ்நாடு சேவை நம்பர் தெரியாது நீங்க உதவி செஞ்சா நல்லார்க்கும் என்று கேட்டால் கடுகடுப்புடன் எப்படியோ ஒரு நம்பரை கூறினார்.. அவரிடம் ஏனிந்த நம்பர்க்கு வேறு தனியார் நம்பரில் இருந்து அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கேட்டோம் அதற்க்கு அவர் இது எங்கள் சேவைக்கு மட்டும் மற்றவர் தொடர்பு கொண்டால் அப்படிதான் அடிக்கடி நடக்கும் என்று சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் :)
வேறு நம்பரை தொடர்பு கொண்டு விசயத்தை சொன்னால் அவர் அப்படிங்களா, சரிங்க நீங்க பக்கத்துல இருக்க ஆபிஸ் போய் ஒரு எழுத்துபூர்வமான புகார் குடுங்க தொடர்பை துண்டித்து விடுவார்கள் என்றார். எல்லாம் என் நேரம் என்று நினைத்து அருகில் இருக்கும் ஆபிஸ் தேடினால் கிண்டில இருந்தது, அங்கு சென்றால் தீபாவளி அரசாங்க விடுமுறை நான்கு நாட்கள் என்று சொல்லி மூடி இருந்தனர், பின்னர் சென்னையை அலசியதில் அனைத்து அலுவலகமும் விடுமுறை, மறுபடியும் சேவைமையம் , இந்த முறை வேறு அதிகாரி மறுபடியும் முதலில் இருந்து விளக்கி என்ன பண்ண என்று கேட்டோம், திங்கட்கிழமை சென்று புகார் குடுங்க என்றார். அய்யா அதில் மீத தொகை 3200 ரூபாய் இருக்கு, மற்றும் எடுத்த நபர் அதை தவறான முறையில் உபயோகிக்கறார் அதனால் தான் சொல்கிறோம் என்று சொல்ல, அப்படிலாம் தொடர்பை துண்டிக்கும் வசதி இல்லை என்றார். என்ன மறுபடியும் ஷாக் ஆகிட்டேன் :)
ஏர்டெல் நம்பரை பல முறை இப்படி பண்ணின அனுபவம் எனக்கு இருந்தும் நம்ம பிஎஸ் என் எல் ல ஒன்னும் பண்ண முடியல. அடுத்து அவரிடம் "அய்யா அதுவரை அவர் தவறான முறையில் அதை உபயோகித்து அதற்கு பின்னால் எங்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன பண்ண" என்று கேட்டோம். அதற்க்கு நாங்கள் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார். சரி நாங்கள் அழைத்ததுக்கு பதிவு என் குடுங்க, பின்னால் நாங்கள் புகார் குடுக்கும்போது இதையும் சொல்லி விடுகிறோம் எங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கட்டும் என்றால் அதெல்லாம் முடியாது என்று தொடர்புதுண்டித்தது.
இதற்கிடையில் அலைபேசியில் சேமித்து வைத்த நம்பர்களில் பலருக்கு அழைப்பு போயிருந்தது , பலர் அலறி அடித்து எங்களை தொடர்புகொள்ள விஷயம் மிக சீரியஸ் ஆனது. மறுபடியும் சேவை மையம்,இந்த முறை வேறு நபர் எடுத்தார், விசயத்தை மறுபடியும் சொல்லி புரிய வைத்து உதவி கேட்க அவர் இங்க அந்த வசதி ஏதும் இல்லை, நீங்கள் எழுத்து பூர்வ புகார் குடுக்க வேண்டும் என்றார்,சரி நீங்கள் நாங்கள் அழைத்து சொன்னதற்கு ஆதாரமாக பதிவு எண்குடுங்க என்றால் அதற்கும் வழி இல்லை என்றார். பின்னர் அவரே ஒரு விஷயம் சொல்லி எங்களை ஓரளவிற்கு மகிழ்ச்சிபடுத்தினார். அது நீங்கள் பேசியது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகையால் பயப்பட வேண்டாம் ஏதும் பிரச்சனை ஆகும் பட்சத்தில் இது உதவும் என்று கூறினார்.
அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நண்பர் ஒருவரின் உறவினர் ஒருத்தர் காவல் அதிகாரி, அவரிடம் உதவி கேட்டோம். அவரும் எண் தந்தை நம்பர்க்கு அழைக்கவே அவரிடமும் ஏகதாளம் பேசி உள்ளான் அலைபேசியை வைத்திருந்தவன். பின்னர் அவரே ஒரு யோசனை சொன்னார், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் குடுத்து நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள், திங்கள் கிழமை அலுவலகம் திறந்தவுடன் அவன் எங்குள்ளான் என்று கண்டு பிடித்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அதன் படியே செய்தோம்.
திங்கட் கிழமை, புகார் குடுத்து ஆளை தேடினால் அதற்க்கு நிறைய நேரம் ஆகும் என்று செய்தி... சரி மீதம் உள்ள தொகை எவ்வளவு என்று பார்த்தால் 1200 ரூபாய். அதாவது மிஞ்சட்டும் என்று தொடர்பை துண்டித்து வேறு சிம் வாங்கினோம். இதற்க்கு இடையில் பிஎஸ்என்எல் இணைய சேவை மூலம் புகார் குடுக்கலாம் என்று முயற்சித்து பார்த்தேன், அதை எழுதினால் இன்னும் ஒரு பதிவுவரும்.
இவர்கள் சேவை இப்படி இருக்க இவர்கள் நாங்கள் முதல் இடத்தில் இருந்தூம் இப்போ ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று புலம்புகிறார்கள் .
ஏங்க நான் கேட்கறேன், இந்த நான்கு நாட்களில் இதே அலைபேசி வேறு எதாவது தேசவிரோத, சமூகவிரோத கூட்டத்திடம் சிக்கி இருந்து அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது??
அலைபேசி இணைப்பு குடுப்பதில் அக்கறை காட்டும் இவர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும். சமீபத்தில் வேறு ஒரு பிரச்சனைக்காக இணையத்தில் குடுத்த சேவை மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் LIC ஆபிஸ் என்று தொடர்பை துண்டித்தனர். ~!!! ஒண்ணுமே புரியல.
நண்பர்களே நீகள் பிஎஸ்என்எல் அலைபேசி வைத்திருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.
Friday, June 13, 2008
இவங்களையும் என்ன செய்யறது
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் தினமும் சாலை விதிகளை மதித்து நீங்கள் என்றாவது வண்டி ஒட்டி உள்ளீர்களா? பெரும்பாலான பதில் இல்லை என்று வரும்.நான் சொல்வது மிக மிக அடிப்படை சாலை விதிகள் பற்றி.
பொதுவாக இடது பக்கமாகவே செல்ல வேண்டும், ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு 300, 400 மீட்டர் செல்ல வேண்டும் என்பதற்க்காக எதிர் திசையில் வண்டி ஒட்டுகின்றோம், யோசித்து பாருங்கள் இது நன்றா?
நிறுத்த கோட்டிற்கு முன்னால் வண்டியை நிறுத்த வேண்டும், எனக்கு தெரிந்து சென்னை சாலைகளில் அப்படி ஒரு பழக்கம் இருப்பதாக தெரியவில்லை, குத்து மதிப்பாக சிக்னல் முன் நிறுத்துவார்கள் பின்னர் இன்ச் இன்சாக நகர்ந்து (சில நேரங்களில் அடி அடியாக ) பாதி தூரம் சென்று விடுவார்கள். யோசியுங்கள்
சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், நம்மில் பாதி பேர் மதிப்பது அங்கு போக்குவரத்து காவலர் நிற்பதால், ஏன்னுங்க இன்னும் கொஞ்சம் பேர் முன்னாடி நிக்கறவன் நின்னா நிப்பாங்க.
சிக்னல் குடுக்காமல் கண்டபடி திரும்புவது, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்க மறுப்பது, அடிபட்டா இருவருக்கும் தான் ஆனால் அதை யோசிப்பதே இல்லை. தான் மட்டும் நல்ல இருந்தா போதும், நான் மட்டும் போன போதும் நீ எப்படி போன எனக்கென்ன.
ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிக்கு வழி விடுவதில்லை இல்லை என்றால் அவர்கள் கூடவே செல்வது, அப்பத்தான அவர்கள் வழியில் நாமும் சென்று விடலாம்.
தலை கவசம் அணிவது கிடையாது கேட்டா முடி கொட்டுகிறது தலையில் வேர்க்கிறது என்று, உண்மை தான் ஆனால் கொஞ்சம் யோசி எதாவது ஒன்னுன தலையே போய்டும் அப்புறம் முடி கொட்டி என்ன ஆக போகிறது??? (இது தனி நபர் விருப்பம் அனாலும் யோசியுங்கள் )
நண்பர்களே! இதெயெல்லாம் செய்வது படிக்காத பாமரன் இல்லை அனைவரும் இல்லை இல்லை பெரும்பாலும் படித்தவர்கள் மட்டுமே, லைசென்ஸ் வாங்க அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்று மாற்றம் கொண்டு வந்தாயிற்று அதனால் கண்டிப்பாக வண்டி ஓட்டும் அனைவரும் இனி படித்து இருபபர்.
சிக்னலில் நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பதனால் என்ன ஆகிவிட போகின்றது?? பத்து அடி முன்னால் சென்று நிற்பதனால் என்ன பயன்?? மாறாக கோட்டிற்கு பின்னால் நின்றால் சாலையை கடப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும். நான் வழக்கமாக நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பேன், ஆனால் இதுவரை ஒரு முறை கூட பின்னால் இருப்பவர் ஒலிப்பானை அடித்து என்ன நகர சொல்லாமல் இருந்தது இல்லை. நானும் ஒரு முறை கூட நான் நகர்ந்தது இல்லை, காரணம் என்னபார்த்தாது ஒருத்தன் திருந்தனும் என்றுதான்.
ரோட்டில் போக்குவரத்து அதிகம் இல்லை என்றால் சிக்னலை மதிப்பது இல்லை, உன்னை பார்த்து பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே செல்வார்கள் இதுவே நீ நின்று பார் கண்டிப்பாக உன் பின்னால் வருபவர்கள் நிறுத்துவார்கள்.
ஒரு போக்குவரத்து காவலரிடம் கேட்டேன் ஏன் இப்படி கடுகடுப்பாகவே பெரும்பாலும் இருகிறீர்கள் என்று, அவர் பார்வையில் சொல்கிறார், தினமும் 8 மணிநேரம் பணி, அதுவும் ரோட்டில்தான், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த புகையில் நின்று பாருங்கள் அதும் போக்குவரத்தை ஒழுங்கு செய்து பாருங்கள் என்றார். இதில் சாலையை கடப்பவர்க்கு கண்டிப்பாக போக்குவரத்தை ஒதுக்க வேண்டும் என்பது எங்கள் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஆனால் அதற்குள் இரண்டு நிமிடம் காத்திருக்காமல் வாகனங்கள் செல்லும்போது கடப்பவர்கள் எத்தனைபேர், அனைவரும் படித்தவர், அப்போது நாங்கள் கோபப்படுவது தப்பாக தெரிகிறது என்றார். நம்மவர்கள் வண்டி ஓடும் லட்சணத்தில் எங்கே நாங்கள் நிம்மதியாய் இருப்பது, காவலாளி இல்லை என்றால் பத்தில் 6 பேர் சிக்னல் மதிப்பது இல்லை என்கிறார்.
வண்டி ஓட்டிகள் நாங்கள் செல்வதால் என்ன வந்துவிட போகிறது என்று நினைக்கின்றனர் , ஒலிப்பானை தேவையான இடத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் ஆனால் நம்மவர்கள் அவர்கள் கைக்கு வேலை இருக்கும்போது மட்டும் ஒலிக்க மறுக்கிறார்கள். வண்டியில் செல்லும்போது எச்சில் துப்புவது, அய்யா உங்கள் வீட்டில் துப்பினால் என்ன சொல்வீர்கள், இந்த சாலையை நீங்களும்தான பயன் படுத்துகிறீர்கள், அப்புறம் எதுக்குங்க இப்படி? போக்குவரத்துக்கு இடையுறாக வண்டியை நிறுத்துவது, நோ பார்க்கிங் என்றாலும் பத்து நிமிடத்தில் வந்துடலாம் என்று நிறுத்தி செல்வது.
நான் மட்டும் தப்பு செய்யாமல் நல்லவனாகவே இருக்கிறேன் என்று சொல்ல வில்லை, சில சமயம் நானும் போக்குவரத்து விதி மீறலை செய்ய வேண்டயுள்ளது, ஆனால் என்னை பொறுத்தவரை அடிப்படை விதிகளையும் பாதசாரிகளையும் மதித்தே செல்கிறேன். ஒரு நாள் எந்த விதி மீறலையும் செய்யாமல் வண்டி ஒட்டி பாருங்கள் அதில் எவ்வளவு திருப்தி கிடைக்கின்றது என்று பின்னூட்டம் இடுங்கள், திருப்தி இல்லை என்றால் நீங்கள் உங்க மனதிற்கு பட்டவாறு செல்லுங்கள்.
அடிப்படை விதிகளை கடை பிடித்து செல்கையில் மற்றவர் உங்களை விதி மீறல் செய்ய சொன்னால் இது விதிக்கு புறம்பானது செய்ய மாட்டேன் என்று கம்பீரமாக சொல்லுங்கள். அப்போது மற்ற சில உங்களை பார்க்கும்போது பெருமையாய் உணர்வீர்கள். நான் நிறுத்த கோட்டை தாண்டாமல் நின்று பின்னால் வரும் வாகனம் வழி கேட்ட போது மறுத்தேன் இதற்க்கு ஒரு போக்குவரத்து காவலர் வாழ்த்து தெரிவித்தார் (அந்நேரம் அருகில் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார், இப்போது உங்கள் மதிப்பை பற்றி யோசித்து பாருங்கள்) இதெல்லாம் சிற்சில நல்ல பழக்கங்கள். இந்த பதிவை படித்து ஒருவராவது மாறினால் கூட எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி.
நண்பர்களே சிந்தியுங்கள், வெளி நாட்டில் இருப்போர் அங்கு உள்ள வெளிநாட்டினர் நம்ம நாட்டு போக்குவரத்தை பற்றி என்ன நினைக்கின்றனர் என கேட்டு பாருங்கள் பின்னர் முடிவெடுங்கள்.
நன்றி