Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, March 11, 2010

ஆச்சரியம்

உனக்காக நானும்



எனக்காக நீயும்


காத்திருக்கையில் இல்லா ஆச்சரியம்


நமக்காக காத்திருக்கும் காதலில் உள்ளதோ?

Sunday, May 17, 2009

கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி

யாருக்கும் தெரியாத ஒரு முன்னிரவில்
எல்லோருமே இருக்கும் பரபரப்பான சாலையில் 
யாவருமில்லா தனிமையை அனுபவித்து
என்னிடம் நீ வாங்கிய காதலை
மூன்றே மாதத்தில் திருப்பி தந்தாய் வட்டியுடன் 
ஆனாலும் அடுத்த ஆறு மாதத்தில் மொத்தமும் முடிந்ததென முடிவெடுத்து
எல்லாவறையும் மொத்தமாக முடித்து என் வாழ்க்கையை ஆரம்பித்ததன் நோக்கமென்ன?  

உன்னை காதலி என்பதா இல்லை தோழியா என்பதா இல்லை உலகை கற்றுகொடுத்த குரு என்பதா? நானே கேட்டு நானே பதில் சொல்லும் நிலைமை என்றுமே இனிமை.  
ரசனையை கற்றுக்கொடுத்த நீயும் கற்று அனுபவித்து வரும்நானும் என்றுமே நலமுடன் வாழ அவசியம் இந்த பிரிவு. 

கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி