Showing posts with label கவிதை முயற்சி. Show all posts
Showing posts with label கவிதை முயற்சி. Show all posts

Wednesday, November 18, 2009

இதோ வந்துவிட்டேன்

வழக்கம் போல நம்ம ஊரு ரயில்வே இணைய தளம் சண்டித்தனம் பண்ணுகிறது. மூணு மாசம் முன்னாடி டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை. இவங்களே கொள்ளை அடிக்க பயன் படுத்தும் தத்கால் வசதி கூட கிடைப்பதில்லை. கடந்த ஆறு மாதத்தில் நான் முயற்சி செய்த ஒரு முறை கூட சரியாக வேலை செய்தது இல்லை. அதிக பயனாளிகள் வருகிறார்கள் என்றால் அதற்கு தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டாமா? சர்வீஸ் கட்டணம் மட்டும் வாங்குகிறார்களே? இது இந்தியா இப்படித்தான் எல்லாமே.

கடந்த மாதத்தில் பத்து நாட்கள் வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்தேன். தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. ரயில் பயணம் அலுத்து விட்டது.

பதிவு உலகத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆறு மாதம் ஆகின்றது இப்போதுதான் கவனித்தேன் நூறு பதிவுகளை என்றோ தாண்டிவிட்டேன். எனக்கே தெரியாமல் இருந்து இருகின்றது. சமீப கலங்கலாக பதிவு எழுத முடியாமல் பல தடங்கல்கள், சோம்பேறித்தனம் எல்லாவற்றையும் முறியடித்து மறுபடியும் எழுத துவங்கி உள்ளேன். உங்கள் ஆதரவு தேவை.

சச்சின் டெண்டுல்கர் மீது மறுபடியும் ஒரு சர்ச்சை, இந்த முறை அனைவரும் சச்சின் பக்கம். ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியே சிலர் இருக்கிறார்கள். வெறுப்பாக இருக்கிறது.

சமீப காலமாக பதிவுலகத்தில் சுவாரசியமான பதிவுகள் குறைந்து வருகின்றன, ஏன் என்று தெரியவில்லை, என்னை போலவே எல்லோரும் எழுதுவதை நிறுத்தி விட்டனரா தெரியவில்லை.

இந்த பதிவுலகத்தை பத்தி கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறன். நான் பதிவு உலகத்திற்கு வந்தது ஒரு விபத்து எதையோ தேடி கூகுளில் துலாவியபோது சில பதிவுகள் வந்தன, அதில் ஒன்று கிட்டத்தட்ட என்னுடைய பள்ளி பருவத்து நினைவுகள் போலவே இருக்க எழுதியது யார் என்று பார்த்தேன். கடைசியாக நம்ம அருட்பெருங்கோ, என்னுடன் பள்ளியில் படித்த நண்பர். பின்னர் தேன்கூடு தமிழ்மணம் அறிமுகம் எல்லாம் கிடைத்து பல பதிவுகளை படித்து நாமும் எழுதலாம் என்ற எண்ணம் வந்தது.

நமக்கு என்று வலைபூ துவங்கி எழுதவும் ஆரம்பித்து ஒரு வருடம் மேல் ஆகின்றது. ஆனாலும் நமக்கு இந்த பதிவுலகம் புடிபடவே மாட்டேன் என்கிறது. சில பல சந்தேகங்கள். சில நண்பர்கள் என்று வாழ்க்கை ஓடுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பு பதிவர்கள் சந்திப்பு என்று சொல்கிறார்கள் ஆனால் அது எப்போது நடக்கிறது எங்கு நடக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை. வார வாரம் யாராவது இதை பற்றி எழுதுகிறார்கள். சில சமயம் என்னடா நாமும் எழுதுகிறோம் ஆனால் நமக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேன் என்கிறதே என்று இருக்கும்.

அப்புறம் இந்த வலைப்பூவை அழகு படுத்துவது. template மாற்றுவது எதனை பேர் நம்மை பார்க்கின்றனர் என்று பார்ப்பது என்று நானும் பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் ஆனால் பலன் மட்டும் ஹி ஹி ஹி.

நமக்கும் பலர் பின்தொடர்வது சந்தோசத்தை கொடுத்தாலும் என்னதான் எழுதினாலும் பின்னூட்டம் வருவது மட்டும் ஏன் இல்லை என்று தெரியவில்லை.

பதிவர்களில் பலர் புதிதாக பதிவுலகத்திற்கு வந்தாலும் விரைவில் பெரிய லெவலில் தங்கள் வலைப்பூவை மாற்றிவிடுகின்றனர், மிக அழகாக வைத்திருக்கின்றனர். நமக்கு மட்டும் ஒன்னும் வேலைக்கு ஆகமாட்டேன் என்கிறது.

இதையும் மீறி பதிவுலகில் நான் கற்றுகொண்டது ஏராளம், புது முயற்சிகள், புது நம்பிக்கைகள்,புது நண்பர்கள் என்று என்னை வாழ்வில் ஒரு படி மேலேற்றி விட்டுள்ளது என்று கூறலாம்.

அன்றொருநாள் யோசிக்கையில் நிறைய தோன்றியது பதிவுலகத்தை பற்றி எழுத ஆனால் இன்று எல்லாம் மறந்துவிட்டது. மறுபடியும் தோன்றும்போது எழுதுகிறேன்.

Friday, June 13, 2008

கோபப்பட்ட தருணங்கள்..

நீச்சல் பயிற்சியாளர் கமெண்ட் அடித்த போதும்

பெட்ரோல் அளவை குறைத்து சதி செய்ததை அறிந்த போதும்

எனக்கு வேலை இல்லாதபோதும்

நண்பன் துறை சார்ந்த அநியாயத்தை கேட்ட போதும்,

உணவகத்தில், உறைவிடத்தில் என்று எங்கும் நடக்கும் அலட்சியத்திலும் கோபப்பட்ட நான்

நெடுநாளைக்கு பிறகு என் குரலை கேட்கும் வாய்ப்பை குடுத்து என் தந்தையை சந்தோசப்படுத்தினேன்.

இது கவிதையா? தெரியாது அனால் இப்படி எழுத தோன்றியது முதல் முறையாக..
சந்தோசப்பட்டேன் இத்தருணத்தில்.