Showing posts with label முயற்சி. Show all posts
Showing posts with label முயற்சி. Show all posts

Wednesday, June 24, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்-5

பகுதி-4

காலையில் எழும்போதே பரபரப்பாக இருந்தது எனத் வேலையுமில்லை அனால் ஆறு மணிக்கே எழுந்து விட்டான். திடிரென்று கிளம்பினான் நேராக நண்பர்களது வீடிற்கு சென்றான், அங்கு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர், இவங்களை எழுப்பி கிளம்பவைக்க நேரமாகும் என்பதால் நேராக வண்டியை ECR திருப்பினான், முட்டுக்காடு வரை சென்று திரும்பினான், வீடிற்கு வந்து பார்க்கையில் செல போனில் மூன்று missed calls. எதற்கோ சைலன்டில் வைத்தவன் மாற்ற மறந்து விட்டிருந்தான்.

அழைத்து பேசலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு உரிமையில் அழைத்தான்.. இரண்டாவது முறை அழைத்தபோது எடுக்கப்பட்டது. எங்க இருகிறாய் என்ற கேள்விக்கு வீட்டில் தான் என்று பதில் வந்தது,தூங்கிற்றுந்தியா என்றாள், இல்லை ஒரு வேலையை வெளியே சென்று இப்போதுதான் வந்தேன், சைலன்டில் வைத்ததால் உன் call பார்க்கல என்றான்.
சரி பரவாயில்லை எனக்கு ஒரு பூட்டு வாங்கணும் எங்கே வாங்கறதுன்னு தெரியலை அதான் உங்கிட்ட கேட்டா தெரியும் என்று கால் பண்ணினேன் என்றால். பின்னர் ஆனா நானே என்னோட பழைய பூட்ட கண்டுபிடிச்சுட்டேன் so no problem என்றாள்.

ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு பிறகு அவள் அவளது தோழியை காண செல்வதாக கூறியதால் வைத்தான். ஏன் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி? விடை தெரிந்தும் அதை புரியாமல் விழித்தான். எதோ புரிந்தும் புரியாமல் ஒரு விதமான நிலைமையில் இருந்தது.

ஆகா மனதில் சுதா நியாபகம் வந்தது. காலையிலேயே missed call வந்து இருந்தது, வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். பேசினான். எல்லாம் நன்றாக இருப்பதாகவும் திங்கள் வந்துவிடுவதாகவும் கூறினால். thanks என்று சம்பந்தம் இல்லாமல் அவளிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான். எதற்கு எனக்கு thanks சொல்றான் இவன், என்ன ஆச்சு என்று குழம்பியபடியே போனை வைத்தாள் சுதா.

வாரக்கடைசியும் ஓடியது, எப்பவும் sms அவ்வப்போது phone call என்று பேசிக்கொண்டு இருந்தான். அலுவலகத்தில் சில நாட்களில் நேரம்கடந்து வேலை செய்வது உண்டு. அன்று ஒரு நாள் அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும்போது போன் வந்தது அவளிடமிருந்து. என்னவென்று தெரியவில்லை மிக சோகமான நிமையில் பேசினாள், அவனுக்கோ நேரில்பார்க்க வேண்டும் போல இருந்தது அனால் கேட்க்க தயக்கம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "சரி எப்ப கிளம்புவ" என்று கேட்டான். தெரியல என்று பதில் வந்தது. சரி கிளம்பும்போது சொல்லு என்று கூறினான்.

பத்து நிமிடத்தில் sms " i am leaving " உடனே பதில் அனுப்பினான் " wait am on d way" உடனே போன் வந்தது, "எங்க இருக்க? ஏன் வர நீ? நான் ஆட்டோல போய்க்கிறேன் என்று, இல்லை பக்கத்துலதான் இருக்கேன் இரண்டு நிமிடத்தில் அங்க இருப்பேன் என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடத்திலேயே அங்கு இருந்தான். . வண்டியில் அமர்ந்தாள், நேராக அந்த ரெஸ்டாரன்ட்சென்றது. அவளிடம் கேட்க்காமலேயே ஆர்டர் பண்ணினான். அவளுக்கு நான் ஆர்டர் பண்ணி வரவைத்தான். சாப்பிட்டு முடிக்கும்போது அவள் மாறி இருந்தாள், வழக்கம் போல உற்சாகத்துடன்.

அவளை விட்டுவிட்டு வீட்டிற்க்கு வந்தான். செல்போனில் இருந்த ஒரே பாட்டு " சுட்டும் விழி சுடரே" திரும்ப திரும்ப ஓடியது வீடு வரும் வரை. சொல்லவும் வேண்டுமா வீட்டிற்க்கு வந்தவுடன் ஆரம்பித்த sms பின்னர் phone call ஆக மாறி நெடுநேரம் பேசியது பற்றி.

தொடரும்

Friday, May 15, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-4

பகுதி 3
நாள்தோறும் smsகள், forward mail என்று நடப்பு வளர்ந்து கொண்டு இருந்தது. treat போவதற்கு மட்டும் சரியான நாள் அமையவில்லை.
திடிரென்று ஒரு நாள் அவனுக்கு தோன்றியது, y dnt v meet today? என செய்தி அனுப்பினான்.

"naanum athan nenachen, iniku meet panalaama nu" பதில் வந்தது. மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. எதோ அவனது yamaha பைக்கில் ரேஸ் ஜெயித்து போன்ற உணர்வு.

" enga meet panalaam?" செய்தி அனுப்பினான், "hostel va " என்று பதில்.
hostela ஐயோ சுதா இருப்பாளே, ஒரு பைக் தான் இருக்கு ரெண்டு பேரையும் குட்டி போகனும்னா auto ல போகணும் என்று யோசித்துக்கொண்டு சுதாவுக்கு மெயில் அனுப்பினான்.

ஈவினிங் ப்ரீயா? treat போலாமா என்று, ஊருக்கு போகிறேன் என்று பதில் வந்தது.

சரி உன்ன டிராப் பண்ணிட்டு போறேன் என்றுசொல்லிவிட்டு, "ethana manikku meet பண்லாம்" என்று அனுப்பினான், பின்னாலேயே "7.30 to 8 pm tonght? " என்று அனுப்பினான்.

yes என்று பதில் வந்தது, சரி "call u evening " என்று பதில் அனுப்பிவிட்டு வேளையில் மூழ்கினான்.

மாலை சுதாவை கூடிக்கொண்டு போகும்போது சில அலுவலக கண்கள் அவர்களை மொய்ப்பதை கவனிக்க தவறவில்லை.

சோகமாக இருந்தாள், ஏன் சுதா சோகமா இருக்க என்ன ஆச்சு என்று கேட்கையில், அவளது அக்கா பையனுக்கு உடம்பு சரி இல்லை அதான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அமைதியானாள். கவலைபடாதே என்று ஆறுதல் படுத்திவிட்டு அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு கிளம்பினான். சிறிது தூரம் நடந்திருப்பான்.
பேருந்து கிளம்ப்பத்தொடங்கும்போது திடிரென்று சுதாவிற்கு யாரோ அழைப்பது போல தோன்ற திரும்பினால், கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் கேக் உடன் கதிர்.

" எப்படியும் நீ சாப்பிட மாட்ட அதான் இத சாப்பிடு" என்று கையில் திணித்துவிட்டு இறங்கி சென்றான், அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தாள் சுதா.

மொபைலை எடுத்து " thanks for being my friend" என்று அனுப்பினாள்.பதில் உடனடியாக வந்தது " i dnt need ur thx, hav a safe jurny.gve me a call r sms hn u rech." என்று.

"drive safe, take care" என்று பதில் அனுப்பினாள், ஏனோ தெரியவில்லை இவனுக்கு என்மேல ரொம்ப அக்கறை என்று தோன்றியது.

சரியாக கதிர் 7.15 க்கு hostel அருகே நின்று கொண்டு இருந்தான். அவள் வந்தால், அவனுக்குமுதன்முறை ஒரு பெண்ணோடு வெளியே செல்வது எங்கு போவது என்று தெரியவில்லை.

ஹை எப்படி இருக்க? லேட் ஆகிவிட்டதா? என்று கேட்டபடி வந்தாள். 'இல்லை இப்பத்தான் வந்தேன் 'என்று சொல்லியபடி சிரித்தான்.
எங்கயாது போகலாம் இங்க பேச வேண்டாம் hostel ல பார்த்தா திட்டுவாங்க என்று சொல்லியபடி நின்றாள், வண்டியை கிளப்பி திருப்பி நிறுத்தினான். "எப்படி உட்க்கார?" என்று கேட்டால், எப்படி உனக்கு இஷ்டமோ அப்படி உட்கார் என்று பதில் கொடுத்தான்.

வண்டி கிளம்பியது இருவரும் பேசவில்லை எங்க போகலாம் என்று கேட்டான், "எனக்கென்ன தெரியும் நீ எங்க கூட்டிக்கொண்டு போறியோ அங்க வருவேன்" என்றாள்.

"எங்கயாது சாப்பிட போலாமா?" என்று கேட்டான். போலாமே என்று பதில் கூறினாள். "எங்க போறது?" என்று இவன் கேட்க எனக்கு எந்த இடமும் தெரியாது நீ எங்க போறியோ அங்க வரேன் என்று கூறிவிட்டாள். ஆபிஸ் பக்கதுல இருக்கும் ஹோட்டல் போகலாம் என்று தோன்றியது.

வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான், எங்கு செல்கிறோம் என்பதையே மறந்து வழி எல்லாத்தையும் மறந்து வண்டியை ஓடிக்கொண்டு இருக்கும் பொது கேட்டாள் "எங்க கூட்டிட்டு போற" என்று அப்போதுதான் நியாபகம் வந்தது வழி மாறி எங்கோ சென்று கொண்டு இருக்கிறோம் என்று. எப்படியோ பத்து நிமிடத்தில் போகும் இடத்தை நாற்ப்பது நிமிடத்தில் அந்த ஹோட்டேல் சென்று அடைந்தனர்.

அன்று அவனின் கனவு நனவாகியது முதன்முதலாக ஒரு பெண்ணுடன் உணவருந்தினான். அதுவும் மனதுக்கு மிக பிடித்த பெண்ணுடன் என்று தோன்றியது.
மறுபடியும் அவளை கொண்டு விட்டுவிட்டு திரும்புகையில் வண்டியை மிக வேகமாக ஆனால் நிதானம் தவறாமல் ஓட்டி சென்றான். அனுபவித்து வண்டி ஓட்டும்போது இருக்கும் நிறைவே நிறைவு. இவன் இப்படித்தான் மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது வேகமாக வண்டி ஓட்டுவான் சோகமாக இருக்கும்போது மிகவும் அனுபவித்து மெதுவாக ஓட்டுவான்.

வீடு வந்து சேர்ந்து "reched home, wat u doing " என்று கேட்டு செய்தி அனுப்பினான்.
"aftr a lng time i had gud dinner. so gng 2 sleep " என்று பதில் வந்தது.
"me 2, gud nte, slp wel" என்று பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றான்.

Wednesday, May 6, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-3

பகுதி 2
எதுக்கு இவ்ளோ கோவமா சென்றாள் என்று புரியாமல் இருக்கைக்கு வந்தான், வேலை நிறைய இருந்தாலும் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைத்து விட்டு சுதாவுக்கு மெயில் பண்ணினான், "என்ன ஆச்சு ஏதும் கோவமா?" என்று.

treat மட்டும் என்கிட்டே கேளு ஆனா நேத்து உதவின்னு கேட்ட நீ பாட்டுக்கு நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கட் பண்ணின, என்ன எதுன்னு கேட்க மாட்ட. பதில் இப்படி வந்தது..

உடனே அவளுடைய extn க்கு கால் பண்ணினான், நேத்து நீ பேசினப்ப நான் அவ கூடத்தான் இருந்தேன், அந்த பக்கமா போறப்ப திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா என்ன ஆச்சுன்னு கேக்கலாம் என்று நின்னேன் நீ கால் பண்ணிட்ட. அதான் நான் அப்படி சொன்னேன் என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

sorry கதிரா எனக்கு இதெல்லாம் தெரியாது உன்கிட்ட அவ நம்பரும் இல்லை, அப்புறம் பேசினப்ப சுரேஷ் கொண்டு வந்து விட்டான்னு சொன்ன ரொம்ப கோவம் வந்துடுச்சு, உன்கிட்ட ஒரு உதவி கேட்டா இப்படித்தான் பண்ணுவியா என்று.


மறுபடியும் கேட்டப்பக்கூட நீ சரியாய் பேசாத மாதிரி தெரிஞ்சுது அவளும் ஆட்டோல வந்து இறங்கினா அதான் கோவம்.எதுவுமே பண்ணாம treat கேக்கறது பாருன்னு கோவம் வந்தது டா அதான்.

சமாதான படுத்திவிட்டு மொபைலை எடுத்தான், sry i slept yest, hpe u r busy dnt wanna dis u. sms u l8r. என்று அனுப்பினான். உடனே வந்தது பதில் its k i too slept imm.. also im nt too busy, என்று பதில் வந்தது

ஆகா வேலை கிடக்குது என்று மனதில் நினைத்துக்கொண்டு 1st time i hrd dat 1 SW engg telng c s nt bsy. 2 strange... என்று அனுப்பினான். கோவமாய் பதில் வரும் என்று நினைத்து, ஆனால் வந்தது வேறு. actly im too bsy bt i thgt i nd a brk n imm i gt ur msg. so i replid u. so hw abt thr?

nthng bsy,just chkig fwd msg. hey chk ur mail என்று சொல்லி அனுப்பினான் ( மனசு திட்டியது, அட பாவி எவ்ளோ வேலை இருக்கு நீ என்னடா சொல்ற என்று)ஒரு fwd மெயில் அனுப்பினான் , அவனுக்கு பிடித்த ஒன்று, ஒரு game இருக்கும் அதில்.

thx 4 d mail, will see u l8r ltl bsy என்று பதில் வந்தது... அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை அவனுக்கு

தொடரும்

திடிரென்று அலுவலக வேலை வந்து விட்டதால் இந்த பகுதி இத்தோடு முடிக்கப்படுகிறது

Wednesday, April 29, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-2

பகுதி 1
மனதுக்குள் ஒரு சந்தோஷ நெருப்பூற்று வழிந்து ஓடியது . யோசித்தான், பதில் அனுப்பலாமா? வேண்டாமா?

அனுப்பினா வழிகிறான் என்று நினைத்துக்கொள்வாளோ? அனுப்பனும் என்று மனசு சொல்லுது, வேணாம் என்று அறிவு சொல்லுது எத கேக்கறதுன்னு தெரியாம முழித்தான்.

பதில் அனுப்பலாம் என்றாலும் என்ன அனுப்புவது, மொக்கைய அனுப்பவும்கூடாது. forward msg அனுப்பலாம் என்றாலும் இவன்கிட்ட அப்படி ஒரு sms இருக்கவே இருக்காது. forward msg அனுப்பி பழக்கம் இருந்தாலும் எதாவது ஒன்னு ரெண்டு இவனுக்கும் வரும்.

நெகு நேரம் sms டைப் செய்து அழித்து என்று யோசித்தான். கொஞ்ச வருஷம் முன்னாடிலாம் லவ் லெட்டர் எழுதுவது மாதிரி சினிமால காட்டும்போது ஒரே குப்பையா நாயகனை சுத்தி கிடக்கும், நல்ல வேலை cellphone இருக்கறதால பேப்பர் செலவு மிச்சம் என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு வழியா 'dis s nt the 1st time im getting ths kinda trt msg' னு அனுப்பி வச்சான். அனுப்பிச்சுட்டு ஐயோ அப்ப நமக்கு நிறைய பொண்ணுங்க பிரண்ட்ஸ் இருக்காங்க என்று நெனச்சுகிட்டா? என்று நினைத்து கடுப்பானான்.எதையுமே உறுப்படியா பண்ணாதடா என்று மனதுக்குள் திட்டிக்கொண்டான்.


அவன் அனுப்பிய குறுஞ்செய்தி அவளை கோபப்படுத்தியது.அவள் கேள்விப்பட்டவரை அவன் ஒரு விதமான சீரியஸ் டைப் என்று. இவன் என்னடா என்றால் நம்ம நக்கலடிக்கறான் என்று நினைத்து. ஆமா இந்த சுதா எத்தன தடவ அவனுக்கு treat தரேன்னு சொல்லி ஏமாத்தி இருக்கா , இவகூட இருக்க நம்ம எப்படி அவன் ஒழுங்கா நெனைப்பான் என்று நினைத்தாள். அடுத்த வாரம் கண்டிப்பா treat குடுக்கணும் என்றும் நினைத்தாள்.

ths s d 1st time im sendng dis kinda msg என்று பதில் வந்தது, கதிருக்கு ஏண்டா இப்படி அனுப்பினோம் பாரு இப்ப அவ நாம நெனச்ச மாதிரியே நினைத்துருக்கா என்று கடுப்பானான்.

sry i jus kiddng, i knw am gonna get a gr8 tr8 :) but its true wat i sent, even u can chk with ur frn என்று பதில் அனுப்பினான்,நாளைக்கு சுதாக்கு தெரிந்தாலும் தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்து.

its k but its tru frm dis side 2, also nthg 2 confrm coz i alrdy knw the fact என்று பதில் வந்தது,

ஆக நம்ம பத்தி தெரிஞ்சு வச்சுதான் இருருக்கா போல. மனதுக்குள் ஒரு இசை நிகழ்ச்சியே நடத்தி முடித்திருந்தான், ஆகா நானும் ஒரு பொண்ணுக்கு SMS அனுப்பிட்டு இருக்கேன் என்று மகிழ்ச்சியாய் இருந்தான். முழித்துக்கொண்டே கனவுகண்டான், நண்பர்கள் அனைவரும் சாப்பிட போவது போலவும், அவளும் அவனும் நன்றாக நெருங்கிய நண்பர்களை இருப்பது போலவும், இன்னும் என்ன என்ன கனவுகளோ. அப்படியே தூங்கியும் போனான்.

k gud ngt nd thx 4 d helps again என்று ஒரு குறுஞ்செய்தியை பாத்துவிட்டு ஐயோ gud night சொல்லாம கூட தூங்கிட்டேனே என்று வருந்தினான். உனக்கு பொண்ணுங்க கூட பேசவே தெரியல அப்புறம் எப்படிடா நீ மத்தவங்கள மாதிரி இருக்கா போற, எப்பயும் பொரம பட்டுகிட்டே இருக்கத்தான் லாயக்கு என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்.

காலங்காத்தால msg அனுப்பினா எதும் நெனசுக்குவா அப்புறம் office போயிட்டு அனுப்பலாம் என்று நினைத்து கிளம்பினான்.

அலுவலகத்தில் அன்று ஏனோ தெரியவில்லை சுதாவை காபி குடிக்க கூப்பிட்டன் அதிசயமாய். அவளிடம் என்ன பேசுவது தெரியவில்லை, எதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பின்னர் ஒழுங்கா உன் பிரண்டிடம் treat வாங்கி கொடுத்துடு, நாங்க சும்மாலாம் உதவி செய்ய மாட்டோம் என்று கூறினான்.

உனக்கு வேணும்னா நீ போய் கேட்டுக்க என்று கோவமாய் சொல்லிவிட்டு சென்ற சுதாவை பார்த்து அதிர்ந்து நின்றான். என்ன ஆச்சு நேத்து msg பண்ணினது இவளுக்கு புடிக்கலையோ? இல்ல இவட்ட சொல்லலைனு கோவம் வந்துடுச்சா என்று நினைத்து குழம்பினான்.
கூப்பிட்டான் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இவங்க கிட்ட மட்டும் தான் பேசணும் நு நெனைப்பாங்க அனா இவங்க மட்டும் எல்லோரிடமும் பேசுவாங்களாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கைக்கு வந்தான்.

தொடரும்...

Wednesday, April 22, 2009

நானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன்னது (சங்கமம் போட்டிக்காக)

சிவா கந்தசாமி அண்ணனுடன் சேர்ந்து ஊருக்கு போவது என்று முடிவெடுத்து விட்டான், இனியுமிங்கு வேலை செய்வது என்பது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தான்.என்ன இவர்கள் நாம் படிக்க வில்லை என்பதாலேயே இவர்கள் இப்படி நடத்துகிறார்கள், ஆனால் எனக்கு படிக்க பிடிக்கவில்லை என்பதே உண்மை. கந்தசாமி அண்ணன் கம்பனியிலேயே சூப்பர்வைசர் வேலை இருக்கிறதாம் அதில் சேர்த்துவிடுவதாக சொல்லியிருந்தார்.

சிறு வயதில் இருந்தே அவனுக்கு பாடத்தில் கவனம் செல்ல வில்லை, படிப்பான் ஒரு அம்பது அறுவது மதிப்பெண் எடுத்து தேறுவான், சில சமயம் பெயில் ஆகி விடுவான். கணக்கு என்பது அவனுக்கு வரவே வராதது. எப்படியோ 12 வகுப்பு வரை வந்துவிட்டான். தேர்வு முடித்து காத்திருந்தவனுக்கு பேரிடி வந்தது ஆமாம் அவன் தந்தையும் மாமாவும் பேருந்து விபத்தில் பலி ஆயினர்.

குடும்பத்தையே புரட்டி போட்ட நிகழ்வு அது, அதுவும் இரண்டு குடும்பத்தை, அன்றில் இருந்து சிவா ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தான், கல்லூரி கல்வியை தொலைதூர கல்வியில் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த கடைக்கு வேளையில் சேர்ந்தான், கணக்கு எழுதும் வேலை, வரவுசெலவு கணக்கு எல்லாம் இல்லை ஒரு ஸ்டோர் கீபர் வேலை போல. அது பிடிக்காமல் பின்னர் ஒரு இரு சக்கர வாகனம் சரி செய்யும் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை செய்தான், என்றோ படித்து வைத்த கம்பியுட்டர் வேலை தேடி கொடுத்தது.

அவனுக்கு சர்வீசுக்கு வரும் வாகனத்தை என்ட்ரி போடும் வேலை. என்ட்ரி போட்டு பின்னர் சூப்பர் விசர் சொல்லுவதை சோப் கார்டில் என்டி போடா வேண்டும், பின்னர் மெக்கானிக் எழுதி வைக்கும் பொருட்களை என்ட்ரி போட்டு ஸ்டோருக்கு அனுப்ப வேண்டும்.
சாதாரண வேலை என்றாலும் அவனுக்கு பிடித்தமான வேலை, ஆமாம் மதியமே எல்லா என்ட்ரி வேலையும் முடிந்துவிடும் மதியத்துக்கு பிறகு மற்றவரிடம் பேசி அவர்கள் வேலை செய்வதை பார்ப்பான். பிடித்து போய்விடும். இப்படியே போகும்போது சிறிது சிறிதாக அவனும் வேலை கற்றுக்கொண்டுவிட்டன் ஆனால் அப்போது அவனுக்கு முன்னேற வேண்டும் என்று வெறி இருந்தது அதனால் அவன் அடுத்து ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை சேர்ந்தான், அப்போதுதான் அவனுக்கு இந்த வேலை பிடிக்காமல் இருந்தநேரம் வேலை அதிகம் குறைந்த சம்பளம், அங்கு சர்வீஸ் கொண்டு வரும் கார் diraivargalukku அவனை விட சம்பளம் அதிகம்.

ஒரு நாள் வேலையை முடித்து வெளியே சென்று பேருந்தை பிடித்து வீட்டுக்கு செல்ல நினைத்து பேருந்தில் நின்று கொண்டு இருக்கையில் ஒரு லாரி அவனது பேருந்தை இடிக்கும் போல வந்து நின்றது, பயணியர் அலறிவிட்டனர், இரண்டு ஓட்டுனருக்கும் சண்டை முற்றி பேச்சு தடித்தது.

'ஏண்டா உன் வண்டி அடிபட்டா ரெண்டு உசுருதான் அதிலும் ஒன்னு எப்படியும் எட்டி குதிச்சு ஓடிரும், அறிவிருக்கா இங்க அம்பது உசுரு இருக்குடா, பாத்து வரமாட்டியா' என்று இவனும் பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாய் குரல் கொடுத்தான். யாரும் உதவிக்கு வராத நிலையில் பேருந்து ஓட்டுனருக்கு இவன் குரல் பிடித்து போய்விட அவனிடம் பேசி பழக ஆரம்பித்தார். தினமும் அந்த பேருந்திலேயே கிளம்பி வீடு திரும்பும் அளவுக்கு நட்பு வலுத்தது.

ஒரு விடுமுறை நாளில் வெளியூர் சுற்றுலா செல்ல அவர் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார்.தனியாக செல்வதால் அவனையும் அவர் அழைக்க இவனும் கிளம்பினான். குற்றாலம் சுற்றுலா சென்ற பேருந்து, கல்லூரி மாணவ மாணவியர் இருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அவன் பேருந்தை பற்றி ஓரளவிற்கு அறிந்திருந்தான், அங்கு அந்த பேருந்தில் சில மாற்றங்களை செய்து அழகு படுதியிருந்தான்.சிவாவிற்கு இதெல்லாம் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. முன்னால் உள்ள கிரில்லில் கயிறை மாற்றி மாற்றி கட்டுவது, லைட்டை அங்கங்கு மாடி அழகு பார்ப்பது என்று அழகு படுத்துவான். பேருந்து பயணமும் அவனுக்கு பிடித்த பயணம் ஆகியது, எப்போதும் ஒரு பரபரப்பாக இருக்கும்.

ஒவ்வொரு பயணமும் வித வித மனிதர்களை கொண்டு இருக்கும் , ரயில் பயணங்களை போல இலாமல் ஒரே மாதிரியான பயணிகள் ஏறியவுடன் படுத்து தூங்குவது, கீழ் படுக்கைக்கு சண்டை போடுவது என்று இல்லாமல். எப்போதும் வெளியே வேடிக்கை பார்க்கலாம், இரவிலும் பார்க்கலாம், ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் பேருந்து பயணங்களில். ஜன்னலில் அழும் குழந்தைகள், ஊருக்கு செல்லும் மனைவிகள், வெளியூர் செல்லும் மாணவர்கள் என்று எலோருக்கும் பேருந்து பயணம் என்பது பிடித்தமான ஒன்று. அதுவும் நல்ல ஓட்டுனரும் பேருந்தும் கிடைத்து விட்டால்.

அன்று அப்படியே அந்த கல்லூரி மாணவ மாணவியரை அழைத்து சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர். ஹ்ம்ம் சிவாவிற்கு தானும் படித்திருந்தால் இப்படி தானும் வந்திருப்போம் என்று நினைத்தான். தவிர்க்க முடியாமல் அவனுக்கு தந்தையின் நினைவும், பேருந்து விபத்தும் நினைவுக்கு வந்தது. மனதே சரி இல்லை.அப்போதுதான் அவன் தந்தை அடிபட்ட விபத்து நினைவுக்கு வந்தது.இதுபோல ஒரு சுற்றுலா பேருந்துதான், வேண்டும் என்றே தவறாக வந்து தந்தை பயணம் செய்த வண்டியின்மேல் இடித்து விட்டது. அவன் அன்றிலிருந்து பேருந்து விபத்துகளை பார்த்தாலே ஒரு வித பதட்டத்துக்கு உள்ளாவான்.தந்தைமேல் கோவம் வரும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி ஊராரின் பேச்சுக்கு இடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக சென்று விட்டார் என்று.

அன்றும் அப்படியேதான் திரும்பி வந்தனர்.மாணவ மாணவியர் சந்தோசமாக இருந்தனர், அவனுக்கு தெரிந்து அந்த பேருந்தில் மூன்று காதல் ஜோடிகளும் இருந்தனர். கந்தசாமி அண்ணனிடம் சொல்லியிருந்தான். இதில் 'எத்தனை ஒன்னு சேர போவுதுன்னு யாருக்கு தெரியும்' என்று சிரித்தார் அவர். பேருந்து ஊரை நெருங்கி இருந்தது, ஒரு சிலர் அவரிடம் பேசிக்கொண்டே வந்தனர்,அப்படி ஒருவன் பேசும்போது அடுத்து வரும் ஆளில்லா பகுதியில் நிருந்துங்க அண்ணே வெளியே போகணும் என்று கேட்டான். அவரும் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த கும்பல் வழிமறித்தது. பேருந்தை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க அவர்கள் அடுத்த ஊரில் கலவரம் நடக்குது அதனால் இந்த வழியா போங்க என்று வேறு வழி காட்டினர். அதன் வழியே செல்லும்போதுதான் சிவாவிற்கு உரைத்தது, இந்த வழி அவன் அப்பா இறந்து போன சாலை. கந்தசாமி அண்ணனிடம் அவன் அப்பா இறந்த இடத்தை கூறி அந்த வளைவில் பார்த்து போங்க வண்டி வந்தால் தெரியாது என்றான். அதுபோல அந்த இடமும் வந்தது அவரும் பார்த்துதான் சென்றார்,எதிரே அதுபோலவே ஒரு இரு சக்கர வாகனம். நல்ல வேலை ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாவதை தடுத்து விட்டோம் என்று.

சிறிது தூரம் சென்றிருப்பார்கள் ஒரு பாலத்தின் அருகே வண்டியை நிறுத்தி இயற்கை உபாதையை கழிக்க அந்த பையன் இறங்கினான். சிவாவும் இறங்கி நின்று கொண்டிருக்க, அவர்களை கடந்து ஒரு இஸ்கார்பியொ சென்றது. கந்தசாமி அண்ணனிடம் சொன்னான், ஒரு நாள் அரசியல்வாதி ஆகி இந்த காரை வாங்க வேண்டும் என்று கூறி முடிக்கும் முன், டொம் என்ற சத்தம், அந்த கார் அப்படியே உருண்டது. பாலத்தில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து அவ்வழியே சென்ற அரசியல்வாதி கார் சேதம். இருவர் உயிர் இழந்தனர்.

ஒரு வருடத்தில் நடந்தது: அன்று அந்த காரை பார்த்து சிவா ஓடியிருக்க அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை தூக்கி பின்னால் வந்த காரில் எடுத்து போட்டு அசுர வேகத்தில் சென்று ரத்தம் கொடுத்து காப்பாற்றினான். பின்னர் அப்பழக்கம் அவரிடம் அவனை வேலைக்கு சேர்த்தது, அவனும் சேர்ந்தான், அவரின் வலதுகை ஆகிவிட்டான். அரசியல்வாதியாக இருக்கும் அவர் அவனை அரசியல் வாரிசு என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டான். ஆமாம் அவனும் அரசியல் வாதி இன்று, அதே காரை வாங்கி விட்டான். இந்த வருடம் தேர்தலில் நிற்கிறான். இந்த நாள் நினைத்து பார்க்கிறான், வீட்டுக்கு வரும் வழியில் அவன் பண்ணை வீட்டை சென்று பார்க்கிறான் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அந்த பேருந்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டான். அது இல்லை எனில் அவன் இல்லை இன்று.

சராசரி அரசியல்வாதி ஆகிவிட்ட அவனுக்குள் அவ்வப்போது அந்த சம்பவம் வந்து மனத்தை உறுத்தும், ஆமாம் அன்று பாலத்திற்கு குண்டு வைத்தது அந்த வண்டியில் வந்த இருவர்தான். அவர்களின்மேல் பேருந்தை ஏற்றாமல் தடுத்த சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாகாம தடுத்துவிட்டோம் என்று, இன்றும் அதே நினைத்துகொண்டான் இன்னொரு சிவா உருவாக வேண்டாம் என்று.அவனுக்கும் கொஞ்சூண்டு மனசாட்சி இருக்கும் போல. இன்னும் எவ்வளவு நாளைக்கோ என்று அந்த பேருந்து அவனை பார்த்து சிரித்தது போல இருந்தது அவனுக்கு.

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.

கதிரவன் அழுதுகொண்டு இருந்தான் எல்லாமே வெறுத்து போனது போல இருந்தது, வாழ்க்கையில் எபோதுமே அழக்கூடாது என்று அம்மா சொன்னது நியாபகத்தில் வந்தது ஆனாலும் அழுவதை நிறுத்தவில்லை... மனது துயரத்தில் இருந்தாலும் ஏதேதோ யோசித்தது. கடந்த ஆறு மாதமாக இனித்த வாழ்க்கை ஏன் இப்போது இவ்வளவு நரகம் ஆகிற்று??

அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை ஆனால் கடவுள் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்,

தன்னை மாற்ற வந்தவளாக அவளை அவன் எண்ணவில்லை, அவளை முதலில் ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை, அவளும் கூட இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். சுதாவின் தோழியாக அறிமுகம் செய்யப்பட்டாள் அவள், இரு முறை வணக்கம் சொல்லி சிரித்து இருக்கிறான்.அலுவலகத்தில் அவ்வப்போது சுதாவுடன் பேசுவது வழக்கம், ஒரு நாள் சனிக்கிழமை எதோ வேலைக்காக வெளியே செல்லவேண்டி இருந்தும், என்ன வேலை என்று நினைவில்லை, நேற்று சுதாவிடம் பேசியபோது முடிந்தால் அவள் விடுதிபக்கம் வர சொல்லியிருந்தாள், எங்கோ வெளியே செல்கிறார்களாம் முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். கதிரவனுக்கு இப்படி எல்லாம் சென்று பழக்கம் இல்லை. கல்லூரி முடிக்கும் வரை அவனுக்கென்று எந்த ஒரு நெருங்கிய பெண் தோழி இல்லை, சில பேரிடம் பேசுவான் எப்போதும் யாரையாது ஓட்டிக்கொண்டு இருப்பான் நெருங்கிய தோழர்கள் என்றும் பெரிதாக இல்லை. எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.

முதல் முறையாக சுதாவை பார்க்கலாம் என்ற நினைப்பில் வண்டியை செலுத்தினான், விடுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே அவன் வருவதாக sms அனுப்பிவிட்டு சென்றான். அவன் செல்லவும் அவள் வெளிவரவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் 'இருடா கதிரா' என்று சொல்லிவிட்டு திரும்பினாள், அவளின் தோழிகள் வந்திருந்தனர். அவனிடம் 'கதிரா இது எல்லாம் என் பிரண்ட்ஸ்' என்று சொல்லி அறிமுகம் நடந்தது. நான்கு பெண்கள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் அசிங்கப்படுதிவிடுவார்கள் என்று சொல்லி உடனே விடை பெற்றான். என்னவோ தெரியவில்லை கிளம்பி மறையும்போது திடிரென்று திரும்பி பார்க்கையில் அவள் அவனை பார்த்தது அவனுக்கு தெரிந்தது.

பின்னர் ஒரு நாள் எதோ பேசிக்கொண்டு இருக்கையில் சுதாவிடம் இந்த வாரம் சினிமாவிர்க்கு போவதை கூறினான். இந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொண்டிருப்பான் கதிரவன். ஆமாம் அப்போதுதான் அவள் எங்களுக்கு டிக்கெட் செய்து தா நாங்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். செய்தும் கொடுத்தான்.

அந்த வா(வ)ரமும் வந்தது. இவன் நண்பர்களிடம் அலுவலகத்தில் வேலை இருக்கிறது சென்று விட்டு நேராக படம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தான்.

நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என்று அண்ணாநகருக்கு வண்டியை விரட்டினான். அண்ணாநகரை நெருங்கிய சமயம் அவளை எங்கோ பார்த்தோமே என்று நினைத்து யோசிப்பதற்குள் சுதாவின் தோழி. ஏன் இங்கு கையை பிசைந்துகொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.. பிறகு வேறு ஏதாவது வேலையாக வந்தாளோ என்று தெரியவில்லை எதுக்கு வம்பு வீணா வந்து கடலை போடுறான் என்று நினைத்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து வண்டியை செலுத்தினான். சிறிது தூரம் சென்றிருப்பான் ஏதோ தெரியவில்லை வண்டியை திருப்பி அவளிடம் சென்று என்ன ஆச்சு ஏன் இங்கே என்று கேட்டான். கேட்டுக்கொண்டே இருக்கும்போது அவள் சுதா சொல்லிவிட்டாளா என்று கேட்டாள். அதே நேரம் சுதாவிடம் இருந்து போனே வந்தது. 'கதிரா நீ எங்கருக்க எனக்கொரு உதவி வேண்டும்' என்று இவள் விடிதியில் இருந்து குடும்ப நண்பரை பார்க்க சென்றதாகவும் பேருந்து மாறி ஏறி எங்கோ சென்று விட்டதாகவும் ஆட்டோ பிடித்து திரும்பலாம் என்றால் கைப்பையில் இருந்த பணம் எல்லாம் தொலைந்து விட்டதாகவும் கூறினாள். சரி நான் பாத்துக்கொள்கிறேன் என்றுவிட்டு அவளிடம் திரும்பினான். 'உங்கள விடுதில விட்டுவிடவா' என்றேன் அதற்கு அவள் சரி என்று குழம்பி அவனை பார்த்தாள். அதற்குள் இன்னொரு வண்டி வந்து நின்றது. மற்றொருவன் அதிலிருந்து இறங்கி இங்க நிற்கரியா என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், சுரேஷ் இது கதிரவன் சுதாவின் நண்பன் என்று. சிரித்து கை கொடுத்தேன், மனதில் அவனை பற்றி நல்ல உருவம் இல்லை, சரி வா நான் கொண்டு விடுகிறேன் என்று கூறி வண்டியை கிளப்பினான்.

வண்டியை கிளப்பிவிட்டு நண்பனை பார்க்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான், சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது புது நம்பரில் இருந்து, நன்றி என்று கூறி. ஒருவேளை அவளாக இருக்குமோ என்றுநினைத்து, யாரென்று கேட்கலாமா? அவளாக இருந்து நீ யார் என்றுகேட்டால் தப்பா நினைத்து விடுவாளோ என்று யோசித்தான். மறுபடியும் சுதாவிடமிருந்து போன் கதிர மறுபடியும் ஒரு உதவிடா, என்று சொலிவிட்டு அந்த சுரேஷ் நண்பனுக்கு வண்டி தேவையாம் அதனால் அவன் கிளம்புறான், நீ அவளை நேராக படத்துக்கு கூட்டி வந்துவிடு என்று. சரி என்று சொலிவிட்டு அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு சுரேஷ் நம்பரை வாங்கி அவனிடம் எங்கிருக்கிறான் என்று பேசி அறிந்து கிளம்பினான். அவன் செல்லவும் சுரேஷ் கிளம்பவும் சரியாக இருந்தது. திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அதில் நேராக சத்யம் தியேட்டர் அனுப்பிவிட்டு பைக்கில் பின்னால் சென்றான்.

நண்பர்களுடன் படம் பார்த்தவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவளையும் பர்ர்த்தான். அவளின் தோழிகளை அடைந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்து சிரித்தான். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒரு sms.
மறுபடியும் நன்றி, உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன் என்று. அவனுக்கு அது யார் என்று தெரிந்தாலும் நன்றி எல்லாம் தேவை இல்லை treat வேணும் என்று பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவன் செங்கல் அவனுக்கு அந்த செய்தியை காட்டியது. சரி தருகிறேன் கண்டிப்பாக என்று.

தொடரும்....

பகுதி 2

பி. கு: ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன் எதோ எழுதியுள்ளேன், அடுத்த பகுதியில் முடிக்கிறேன்

Wednesday, March 25, 2009

முட்டாள் திட்டம்.. இல்லை இல்லை முட்டாளாக்க திட்டம்

இந்த முறை முட்டாள்கள் தினத்தை எப்படி கழிப்பது?? இந்த முறை யாரையது கண்டிப்பாக முட்டாளாக்க வேண்டும் என்று தோன்றுகிறது, நேற்றிலிருந்து யோசித்து வருகையில் ஒருவர் இல்லை இல்லை ஆறு பேர் சிக்கி உள்ளனர்.
ஆமாம் ஒரு ஆறு பேரை முட்டாளாக்க முடிவு செய்து விட்டேன். அவர்கள் யார் எப்படி என்பதை வெகு விரைவில் தெரிவிக்கிறேன். தகுந்த முன் ஏற்பாட்டுடன் எல்லாவிதமான திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

இப்படி தோன்றும்போதே இதை பதிவாக போட்டால் என்ன என்றும் தோன்றியது ஏனென்றால் நான் முட்டாளாக்க போகும் யாருக்கும் பதிவுலகம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் என் பதிவுகள் அவர்களை அடைய நெடு நாளாகும்.எனவே நேரலை போல இல்லாவிடிலும் திட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன். தங்களின் வரவேற்ப்பை பொருத்து...

வரவேற்ப்பு அதிகம் என்றால் திட்டம் செயல் வடிவம் பெரும்.