Thursday, September 29, 2011

செல்ல பிராணிகள்

திடிரென்று செல்ல பிராணிகள் பற்றி எழுதலாம் என தோணியது காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை போன வாரம் ஜாக்கிங் சென்று வரும்போது பக்கத்து வீட்டு புது நாய் மேலே ஏறி விளையாண்டு விட்டது அதான். எனக்கும் நாய்க்கும் ரொம்ப தூரம் ஏன் எங்க வீட்ல எல்லோருக்கும் நாய் என்றால் ஆகாது. எல்லோருக்கும் எதோ ஒரு விதத்தில் ஒரு பாதிப்பு மிக முக்கியமாக என்னைத்தவிர எல்லோரும் நாய் வந்து வண்டியின் குறுக்கே விழுந்து கீழே விழுந்த அனுபவம் உண்டு.

நாங்களும் சிறு வயதில் செல்ல பிராணிகள் வளர்த்து அனுபவப்பட்டவங்க தான். கிராமத்தில் இருந்த போது பட்டியில் உள்ள ஆடுகளில் எங்களுக்கு ஆளுக்கொன்று செல்லமாக இருந்தன ஆனால் அவை எல்லாம் கசாப்புக்கடைக்கு போகும் வரை மட்டுமே. ஆட்டை வித்துவிட்டால் அடுத்த குட்டி செல்லம் ஆகிவிடும். அப்போது பட்டி ஆடுகளுக்கு காவலுக்கென்று ஒரு நாய் இருந்தது. வீட்டில் யார் என்ன சொன்னாலும் சொல்படி கேட்க்கும்.

பாடி ஊரிலும் நாய் இருந்தது அதுவும் கூட நம் சொல்படி கேட்கும் ஊருக்கு இரண்டு மாத இடைவெளியில் போனாலும் நியாபகம் வைத்து ஓடி வரும். இரண்டு நாய்களும் இறந்துவிட ஆடுகளின் எண்ணிக்கை குறைய, நாங்களும் கிராமத்தில் இருந்து கரூருக்கு வந்துவிட எல்லாம் மாறிவிட்டது. டவுன் வாழ்க்கை உடனே ஒன்றி விட வில்லை அப்போது நாய் வளர்ப்பது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே செய்வார்கள் எனக்கு அதிசயமாக இருக்கும் என்னடா நாயா புடிச்சு எல்லோர்க்கும் காட்டிகிட்டு காலைல நடக்கறாங்க அவுத்து விட்டா அதுவே போய்ட்டு வந்துடாதா என. பின்னர் பள்ளி நண்பர்களின் மூலமாக மீன் வளர்ப்பு, குருவி வளர்ப்பு என ஒரு விஷயம் தெரிந்தது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் இரண்டு கப்பீஸ் மீன்களை வாங்கி வந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் வளர்க்க ஆரம்பித்தேன். மேலும் இரண்டு பாட்டிலில் ஒன்றில் பைட்டர் மீனும் இன்னொன்றில் கோல்ட் மீனும் வளர்த்து வர ஆரம்பித்தேன். ஆரம்பித்து ஒரு வாரத்தில் கதை முடிந்தது, ஆமாம் மீன்களின் மேல் இருந்த அதீத பாசத்தால் அதற்க்கான உணவை அடிக்கடி அள்ளி கொட்டி பாட்டில் தண்ணீரை குட்டை போல குழப்பி மீன்களை ஒவ்வொன்றாக செத்து விழ செய்தேன். செத்த மீன்களை மாற்றினாலும் ஒன்னும் வேலைக்காகவில்லை. அதே நேரத்தில் நண்பர்கள் எல்லோரும் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்க எனக்கும் தொட்டி வாங்க ஆசையாக இருந்தது. அப்போதைய சூழலில் மீன் தொட்டி கேட்டா எங்க வீட்டில் என்ன தண்ணி தொட்டி கழுவ விட்டு விடுவாங்க அதனால் நண்பர்கள் வீட்டில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

பள்ளி நண்பன் ஒருவன் அவங்க ஊரில் உள்ள கிணற்றில் மீன் வாங்கி விட்டு விடுவான் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு அவை மிகப்பெரியதாக வளர்ந்து விட அவற்றை ஒரு மீன் 300 முதல் 400 ரூபாய் வரை விற்றுவிடுவான். நானும் அந்த ஆசையில் பாட்டி வீட்டு கிணற்றில் வாங்கி வளர்க்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் மறந்து விட்டேன் ஏகப்பட்ட மீன்கள் பெரிதாக வளைந்து விட அவற்றை பிடித்து விற்று சைக்கிள் வாங்கலாம் என கனவு காண்டேன் ஆனால் திடீரெண்டு வந்த ஒரு பஞ்சத்தில் கிணற்ற்று நீர் வற்றி விட அனைத்து மீன்களும் அண்டை வீட்டாரின் அடுப்பில் பொரிந்தன.

மீன்களை தவிர மற்ற வளைப்பு பிராணிகளை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இப்போ மீன்களையும் புடிக்கல சாப்பிடுவதை தவிர. நாய்கள் என்றால் ஒரு ஒவ்வாமை காரணம் அவை அடிக்கடி குறைக்கும்போது வரும் அதிக சத்தம், ஒரு வித நாற்றம் மேலும் யார் வந்தாலும் குறைத்து வீட்டுக்கு வருபவரை மனதளவில் பயமுறுத்தி ஒரு அச்சத்துடன் வீட்டிற்க்கு வர வைத்தல் இதெல்லாம் எனக்கு பிடிக்காது.

நண்பர்கள் வீட்டில் நாய் இருந்ததாலே அவர்களுடன் பழக்கம் குறைந்து போனது இன்னும் சமீபத்தில் என் நெருங்கிய நண்பர்கள் வீட்டில் நாய் வளர்க்க ஆரம்பிக்க அந்த நாய் யார் போனாலும் கூட விட்டு விடுகிறது இரண்டு வருடமாக நான் போனால் தொடர்ந்து மிரட்டுகிறது. அவர்கள் வீட்டுக்கு போவதையே நிறுத்தியாகிவிட்டது.

நமக்கும் நாய்க்கும் ரொம்ப தூரம், செல்ல பிராணிகளில் பூனை என்பது அடுத்தது, பூனை மேல் எந்த அபிப்ராயம் இல்லாமல் இருந்த எனக்கு சமீப காலமாக பூனையை கண்டாலே பிடிக்கவில்லை. வீட்டில் இரவு சமைத்ததை எப்படியாது மோப்பம் பிடித்து நாங்கள் தூங்கியபின் வந்து சாப்பிட்டு எல்லாவற்றையும் இறைத்து சென்று விடுகிறது. சன்னலை மூடாமல் சிறிது திறந்து இருந்தாலும் முடிந்தது. பக்கத்து வீட்டு பூனை ஒருநாள் கண்டிப்பாக எதிர்த்த வீட்டு நாய்க்கு பிரியாணிதான் அந்த அளவு வெறியில் உள்ளேன்.

ஆகையால் செல்ல பிராணிகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம், எதிர்த்த வீட்டுக்காரர் ஆசையாய் நாய் வாங்கி உள்ளார் எவ்வளவு நாள் என பார்ப்போம். ஆனால் சமீபகாலமாக எதாவது ஒரு செடி வளர்க்க வேண்டும் என ஆசை உள்ளது பார்ப்போம் நடக்கிறதா என.


Friday, September 2, 2011

நிலையான நிம்மதி

நிலையான நிம்மதி என்ன்றுமே சிலருக்கு வைப்பதில்லை அதற்காக வருத்தப்படுவதையே வழக்கமாகக்கொண்ட ஒருவன் எப்படி முகத்தில் தெளிவைத்தர முடியும்?  அகத்தெளிவு மட்டுமே அங்கு சாத்தியம் அதுவும் அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.  தான் தெளிவு பெற்றவன் என்பதை வெளிப்படுத்தும் எந்த ஒருவனையும் உலகம் ஒப்புக்கொள்வதில்லை. அதைப்பற்றி அவனும் கவலைப்படுவதில்லை.

சமூகத்தைப்பற்றி நினைக்க அவனுக்கென்று நேரமோ, காலமோ இல்லை தேவையோ என்றுமே ஏற்பட்டதில்லை. சமுதாயமும் சமூகமும் சம்பந்தப்பட்டவர்கள் கெடுக்கும் நிம்மதியை கொடுக்கவல்ல எதுவும் எளிதில் கிடைப்பதில்லை.  நிராகரிப்பு என்பது பழகிப்போன உலகில் தனக்கான காரணத்தை அறியாமல் நிராகரிக்கப்படுபவனை விட தனக்கு சம்பந்தமே இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்படுபவனுக்கு வலி அதிகம். நிராகரிப்பின் வலி என்பது எல்லோருக்குமே உண்டு அதிலே கொடிய வலி என்பது கொடுமை. 
காரணத்தை சொல்லி ஆதாயமோ, அனுதாபமோ வாங்கும் நிலைமையில் எவன் இருப்பானோ அவனே உலகின் மோசமான வலிமையற்ற ஒருவன். தேவைப்படாத அனுதாபத்தை   பெற விரும்பாமல்  செய்யும் எந்த காரியத்தையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. 

சுயத்தைப்பெற மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் உறவுகள் விரும்புவது இல்லை, எதை ஒன்றை இழந்தால் மட்டுமே விரும்புவது கிடைக்கும் என்பது இந்த சமூகத்தின் நியதி. காலங்காலமாக வளர்க்கப்படும் கட்டுப்படும் தட்டுப்படும் எவனையும்