Wednesday, December 31, 2008

வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்

வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்

ரொம்ப முக்கியமாக எட்டு மாதங்களில் அறுபது பதிவு, எல்லாம் மொக்கை பதிவுகள் என்பது மிகப்பெரிய விஷயம். பதிவு எழுத வந்த கதை பற்றி இப்போது பார்ப்போம்,

இந்த வருடத்தின் (2008) முதல் மாதத்தில் நான் இருந்தது டென்மார்க்கில், இந்த வருடம் இனிமையாக துவங்கியது முதல் இரு மாதங்கள் மிக நன்றாக சென்றது, வேலையும் அதிகம் இருக்கவில்லை.

முதல் இரு மாதங்களில் இரண்டு மிக பெரிய ஆர்டர்கள் பெற்றேன், ஒன்றின் மதிப்பு சுமார் இருபது லட்சம் யுரோ. மகிழ்ச்சியான தருணம்.

மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தேன், வரும்போதே சிறிய குழப்பம், கடந்த நவம்பரில் நடந்த அபுரைசலில் நிறைய புளுகினானே நமது டேமேஜர் ஒண்ணுமே பண்ணவில்லையே என்று.

எனக்கு தரப்பட்ட வாக்குறுதி என்னவென்றால் பிரெஞ்சு பேசும் நாடுகளின் விற்பனை உதவி வேலைகளை எனக்கு கீழ்கொண்டு வரப்போவதாகவும் மேலும் அலுவலகத்திலேயே பிரஞ்சு மொழி கற்றுத்தர போவதாகவும் கூறினர்.

சொல்லி மூன்று மாதம் ஆனது மூன்று மாதத்தில் இந்தியாவிலிருக்கும் டேமேஜர் என்னுடம் கொண்டிருந்த சுமூக உறவை சிறிது சிறிதாக கைவிடுவதயுனர்ந்தேன்,அவனைப்பற்றி நன்றாக தெரியும் ஆதலால் கண்டுகொள்ளவில்லை.இந்தியா வந்து சேர்ந்தவுடன் இதைப்பற்றி பேசலாம் என்று அவனிடம் சென்றால் மீடிங்கில் பேசுவோம் என்றான்.

என்னடா என்று குழம்பி பின்னர் தனியாக பேசினால் சொல்கிறான் நீ சொல்றமாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று, அப்புறம் எதுக்கு அப்போது சொல்லி ஒத்துகொண்டாய் என்றுகேட்க எதுவும்பதில் இல்லை. பின்னர் ஒரு பதில் சோனான்,இதையெல்லாம் செய்ய எனக்கு நேரம் இல்லை என்று, அத்துடன் எழுந்து வெளியே வந்துவிட்டேன், பின்னர் ஆரம்பித்தது அவனுடைய வேலைகள், எனக்கு மட்டும் வேலை குடுப்பது இல்லை, டீமில் உள்ள அனைவரும் ஒரு வாரத்திற்கு இருபது என்கொயரி பார்த்தால் எனக்கு இரண்டு மட்டுமே.

நானும் விடவில்லை நீ என்னவேணும் என்றாலும் செய் ஆனால் நான் விட்டுகொடுக்க மாட்டேன் என்று, நேற்று சேர்ந்த பயிற்சி பொறியாளர் என்னிடம் வேலை வாங்கும் அதிகாரம் பெற்றான்.

எனது மேலதிகாரியிடம் இந்த பிரிவில் இருந்து விலகி வேறு பிரிவிற்கு மாறும்படி கோரிக்கைவைத்தேன், இவை அனைத்தும் ஏப்ரலில் நடந்தது, அபோதுதான் வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் நிறைய பதிவுகளை படித்தேன், பின்னர் நானும் பதிவு எழுதினால் என்ன என்ற கேள்வி முளைத்தது, பின்னர் நெடு நாளைக்கு பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி முதற்பதிவை எழுதினேன்.

எனது வாழ்கையின் மிக மோசமான நேரத்தில் நான் பதிவு எழுத ஆரம்பித்தேன், இந்த பதிவுகள்தான் என்னை மேம்படுத்தின இல்லை என்னை அந்த மோசமான நேரங்களில் இருந்து காத்தன என்று சொல்லலாம்.
எனது நேரத்தை பதிவுகளில் செலுத்தினேன் சிறிது நாட்களிலேயே எனக்கும் நல்ல நேரம் வந்தது ஆம், நான் அலுவலகத்தில் வேறு பிரிவுக்குமாற்றப்படேன். அதிலிருந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. அவ்வப்போது பதிவுகளை படித்தும் சில நேரங்களில் எழுதியும் வருகிறேன்.

பிறந்த நாளுக்கு நானே எனக்கு பரிசு வாங்கிக்கொண்டேன் ஆம் நான் கார்வாங்கியது இந்த வருடம் தான்.

எனது சகோதரரின் திருமணம்

எனது காரில் எனது உறவினருக்கு ஏற்பட்ட சிறிய விபத்து

பாட்டியின் மரணம் புதிய

பழைய நண்பர்களின் முகமூடி என்று பல தரப்பட்ட அனுபவங்களையும் அவை கொடுத்த வருத்தத்தையும் வைத்து மோசமான வருடம் என்று கூற மனம் வரவில்லை,

பல சோகங்களை கொண்டு வந்தாலும் அத்தகைய அனுபவங்களை கொடுத்ததால் மிக சிறந்த வருடம் என்று சொல்வேன் இதை.

இந்த பதிவு எழுதும்போதே அடுத்த சில பதிவுக்கு கரு கிடைத்து விட்டது, ஏன் எனது தேமேஜருடனான அனுபவங்களை பதிவாக எழுதக்கூடாது என்று தோன்றுகிறது, எழுதாலம் கண்டிப்பாக

விரைவில் எதிர்பாருங்கள்

நீங்களும் மேனேஜர் ஆவது எப்படி???

Wednesday, December 24, 2008

கஜினி வெளியாகுமா நம்மூரில்?

இந்தி கஜினி படம் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, அமிர்கான் நடிப்பில் நம்ம முருகதாஸ் இந்தியில் முதலில் இயக்கம் படம், மேலும் அசினுக்கும் இந்தியில் முதல்படம். அமிருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் அமீர் படம் என்றால் எப்படியும் நல்ல இருக்கும் என்ற நினைப்பு எல்லாம் இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் கூட பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.


நேற்று வீடிற்கு சென்று செய்திகளை பார்க்கையில் இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாக தடை என்று சொல்லப்பட்டது, எதுவுமே புரியவில்லை, காரணம் இந்த படத்தை தமிழில் தயாரித்தவர் நீதி மன்றத்தில் தன்னிடம் உரிமம் வாங்க வில்லை என்று வழக்கு போட்டுள்ளார் . நீதிமன்றம் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்து உள்ளது

என்னடா நாளைய விடுமுறையை ஒரு நல்ல படம் பார்த்து களிக்கலாம் என்றால் இப்படி நடந்துபோச்சே என்று நினைத்தபோது என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

இந்த படத்தை கடந்த ஒரு வருடகாலமாக இந்தியில் எடுத்து வருகின்றனர், இதை பற்றிய செய்திகளும் எல்லா பத்திரிக்கையிலும் வெளிவந்தது கொண்டு உள்ளது. இப்படி இருக்க திடீரென்று படம் வெளியாகும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக வழக்கு போட என்ன காரணம்?

படத்தை தயாரித்தவர் என்னிடம் உரிமை வாங்கவில்லை என்று வழக்கு போட என்ன உரிமை இருக்கிறது?

படத்தின் கதை முருகதாசுக்கு சொந்தம் அவரின் கதையை இந்தியில் எடுக்க அவர் உபயோகபடுத்தி இருக்கிறார், இந்த தமிழ் படத்தை தயாரித்தவர் இந்த கதையை தயாரித்தாலே கதை அவருக்கு சொந்தம் ஆகுமா? எனக்கு தெரியவில்லை தெரிந்தவர் சொல்லுங்களேன்?

கடைசி நேரத்தில் பிரச்சனை பண்ணினால் பணம் கறக்கலாம் என்ற எண்ணம்தானே இதற்க்கு காரணம்??

இப்படி செயல்பட்டால் தமிழரை பற்றி மற்றவர் என்ன நினைப்பர், முன்னரே இத்தகைய வழக்கினை போட்டு பிரச்சனையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான ?

Thursday, December 18, 2008

நமது நாட்டு சுற்றுலா பாதுகாப்பானதா?

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளை நாம் எப்படி நடத்துகிறோம்?? இந்த கேள்வி எனக்குள் பலமுறை ஏற்பட்டது உண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாண்டியில் எனது அலுவலக நண்பருக்கு நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள சென்றேன். அலுவலகத்தில் இருந்து 8 பேர் செல்லும்படி திட்டம் அதனால் இரண்டு கார்களில் செல்ல திட்டமிட்டு கடைசி நேரத்தி எண்ணிக்கை ஆறாக குறைந்தது. மாலை கிளம்பி கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எங்களது அலுவலக நண்பர் போனில் அழைத்தார், நாங்கள் அவர் மதியமே கிளம்பிவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் தான் மாமல்லபுரத்தில் நிற்பதாகவும் அதனால் போகும்போது கூடிசெல்லுமாறு கூறினார். இரண்டு கார்களில் வருகிறோம் என்று தெரிந்தவுடன் ஒருஉதவிகேடார், என்னுடன் இரண்டு ஜேர்மனிய நாட்டு சுற்றுலா பயணிகள் இருக்கிறார்கள் அவர்களை பாண்டியில் விட்டுவிட முடியுமா என்று கேட்டார். நமதுவண்டியில் இடம் இருகிறதே என்று சரிசொல்லிவிடோம்.

மாமல்லபுரத்தில் அவர்களை சென்று அடையும்போது மணி ஏழு. மூன்று மணிநேரமாக நிற்கும் அந்த பெண்களுக்கு பேருந்து கிடைக்கவே இல்லை பாண்டி செல்ல, அவர்களை ஏற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது அவர்களிடம் இருந்த சுமைகளை பார்த்து மலைத்து போய்விட்டோம் , இரண்டு பெரிய சுமைகளும் எப்படியும் நூறு கிலோ இருக்கும், எப்படியோ இரண்டு வண்டிகளிலும் ஏற்றி கிளம்பினோம்.

பயணத்தின்போது தெரிந்தது அவர்கள் சுற்றுலாவிற்காக இந்தியா வந்துள்ளனர், இருவரும் தனியாக வந்து மும்பையில் சந்தித்துக்கொண்டு உள்ளனர். கடந்த மூன்று மாதமாக இந்தியாவில் பல இடங்களை கடந்து தமிழ்நாடு வந்துள்ளனர். படிப்பை முடித்து கொஞ்சம் வேலைபார்த்து பணம் சம்பாதித்து இந்தியாவை பார்க்க வேண்டும் என்று வந்ததாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் கிளம்பு வேண்டும் என்றும்கூறினார்.

பாண்டியில் எங்கு தங்க போகிறீர்கள் என்றதற்கு இனிதான் இடம் பார்க்க வேண்டும் என்றும், பேருந்துக்கு நான்கு மணிநேரம் காத்திருந்ததால் என்ன பண என்று தெரியவில்லை என்று கூறினார், பாண்டி
செல்லவே மணி ஒன்பது, பின்னர் அவர்களை எங்கு இறக்கி விடுவது என்ற கவலை. அவர்களுக்கோ சிறிது பயம் கொள்ள தொடங்கியது பின்னர் நண்பர்கள் உதவியுடன் ஒரு தங்குமிடத்தை கண்டுபிடித்தோம். அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியாது மிக குறித்த அளவில் இடம் வேண்டும் என்பதால் மிக பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட தேடுதல் நடத்தி கண்டுபிடித்தோம்.

அப்போது தெரிந்தது, வெளிநாட்டினர் நமது நாட்டில் வந்து செல்ல எந்தளவுக்கு பாதுகாப்புக்கு உள்ளது என்று, பணம் இருப்பவர்கள் சரி இல்லாதவர்கள்?? எளிமையான சுற்றுலா இந்தியாவில் என்பது பாதுகாப்பானதாக இல்லையோ என்று தோன்றுகிறது.


அன்று ஒரு நாள் மட்டுமே அந்த இடமும் கிடைத்தால் வேறு வழியில்லாமல் அவர்களையே அடுத்த நாள் தேடிக்கொள்ள கூறி கிளம்பினோம், அதற்குபிறகு குறுஞ்செய்தியில் மிக கஷ்டப்பட்டு தங்குமிடத்தை தேடி கண்டுபிடித்ததாகவும் எங்களை மறுபடி தொடர்பு கொள்ள தயங்கியதாகவும் கூறினார்.


எனது ஐரோப்பிய நாட்களில் எந்த நாட்டுக்கும் எந்த பயத்துடன் சென்றது இல்லை, அங்கு சுற்றுலா பயணிகள் எந்த அளவிற்கு சுதந்திரமாக பயமின்றி செல்ல முடிகிறது என்று அனுபவித்து அறிதேன். இந்தியாவில் மட்டும் சுற்றுலாவை பிரபலப்படுதினால் எந்த அளவிற்கு வருமானம் வரும் என்பதை வெளிநாடுகளில் சுற்றுலா சென்று அங்கு உள்ள மியுசியங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். அவர்கள் சுற்றுலாவை எவ்வாறு பிரபலபடுதுகின்றனர், எப்படி வசதி செய்து கொடுக்கின்றனர் என்று பார்த்தால் அதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம்.

நேற்று அந்த நண்பர்கள் அனுப்பிய மின் மடலில் இருந்த செய்தி என்னை மிக மிக பாதித்தது. ஏன் நமது சகோதரர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தவறான நோக்கத்தில் மட்டும் அணுகி வருகின்றனர் என்று தெரியவில்லை.

அந்த மின்மடலில் இருந்த சில வரிகளை காணுங்கள்.

** when I was talking about the cultural differences. I know that there are not a lot of differences between the young, modern and educated people in India and the people in germany for example.**


**Here, often I don’t know a lot of things. By the time I made a good experience I transfer it to another situation, but the situation respectively the person is totally different. And especially the Indian men can be so different. Sometimes I feel like a touristical attraction: It would not be the first time that a group of Indian men were standing around me, eyeballing at me. Or that they were talking about how much I would cost, cause they could not imagine that I only wanted to talk to a men. But as I already said, I think between the young, modern and educated people there are often no differences between India and Germany. It’s difficult for me to explain you in english, what I really mean. I hope you understood**

** You don’t have to feel sorry about the trouble I/we faced in India. In spite of everything I like India a lot. I think I have to take it in the end with humour, though it does not feel like this in the situation. It could happen in every country**

மேற்கூறிய வரிகள் எண்ணி மிகவும் பாதித்தன, நாம் எந்த அளவிற்கு மற்றவரி மதிப்பு அளிக்கின்றோமோ அதே அளவிற்குத்தான் அவர்களிடமும் நமக்கு மரியாதையை கிடைக்கும்.

இந்த பதிவு நமது நாட்டை எந்த விதத்திலும் குறை கூறுவதற்கோ, வெளிநாட்டை உயர்த்தி சொல்லுவதர்க்கோ எந்த வித சுய தம்பட்டதிற்கோ எழுதப்பட்டது அல்ல, எந்த விதத்திலும் நமது நாடு குறைந்தது இல்லை, வந்தவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டில் வரவேற்புக்கும் , உபசரிப்புக்கும் எந்த பாதிப்பும் இருந்ததாக கேள்விப்பட்டது இல்லை.இருந்தாலும் சிலர் பண்ணும் தவறுகளால் மொத்த நாட்டின் பெயரும் சிதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

சுற்றுலாவாசிகளை (வெளிநாடு /உள்நாடு) மதிக்கவும் மரியாதை செய்யவும் கற்றுக்கொள்ளவேண்டி எழுதியுள்ளேன். காந்தி சொன்னது போல நமதுநாட்டில் பெண் தனியாக பனிரெண்டு மணிக்கு சுதந்திரமாக செல்லும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்பது உண்மை.

இப்போது பகலிலேயே தனியாக செல்ல முடிவது இல்ல, இதில் எங்கே இரவில்...

எதாவது நடந்தாலும் நமது ஊடகங்களும் உடனே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு பணம் பெற்று தரும்படி இருந்தால் கதறிக்கொண்டு வரும் , ஒரு வாரத்திற்கு கத்துவார்கள் பின்னர் மறந்துவிடுவார்கள்.

Wednesday, December 17, 2008

விவசாயம் ஏன் செய்யக்கூடாது??

கல்லூரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததும் சிறிது காலத்தில் எனக்கு தோன்றியது எதாவது தொழில் செய்ய வேண்டும் என்பது. இன்று வரை அந்த எண்ணம் இருக்கின்றது ஆனால் என்ன தொழில் செய்வது? எந்த தொழில் செய்தாலும் அதில் ஏற்கனவே இருக்கும் நிறுவனகள் பல, எதாவது புது ஐடியா (இதுக்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் தோன்ற வில்லை) கிடைத்தாலும் நல்ல இருக்கும் எதுவும் கிடைக்க வில்லை.

எனது தந்தை வேறு ஓட்டுனராக பணிபுரிகிறார், அவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே விருப்ப ஓய்வு குடுத்துவிட்டு வர சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அவரும் வந்தபாடு இல்லை, ஓய்வு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் என்ன வேலை செய்வது என்று கேள்வி. நான் தயங்காமல் சொன்னது விவசாயம், அடிப்படையில் விவசாயக்குடும்பம் எங்களது குடும்பம், எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் விவசாயம் செய்து வந்தோம், எங்களது படிப்பை முன்னிட்டு சொந்த ஊரில் இருந்து நகருக்கு குடி வந்து பின்னர் விவசாயத்தை கைவிடும் நிலைமை ஏற்ப்பட்டது. அது வரையிலும் எனது தாயார் எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

சிறு வயதில் எனது தாத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பை காரணம் காட்டி இன்று வரை வயலில் இறங்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர் எனது தந்தை. படிப்படியாக லாபம் குறைந்து பின்னர் நட்டம் வரும்படி ஆனதால் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டது. இப்போது வீட்டில் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வந்து விட்டதால் எனது தந்தையை வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்கும்படி அழைக்கிறேன்.

பரம்பரை தொழிலை சிறிது காலமெனும் நடத்த வேண்டும் என்று ஒரு ஆசை மற்றும் என்னவோ தெரியவில்லை விவசாயதிலொரு நாட்டம் இன்னமும் இருக்கிறது. மற்ற ஊர் பெரியவர்கள் (அவ்வாறுதான் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் ஊர் மந்தையில் தினசரி தாயம் விளையாண்டுகொண்டு உள்ளது, எந்த வேலையும் செய்யாமல்) போல எனது தந்தையையும் தினமும் தோட்டத்திற்கு சென்று மேற்ப்பார்வை பார்த்துவிட்டு வெட்டி நியாயம் அடித்துக்கொண்டு வரும்படி சொன்னால் கேட்க்க மாட்டேன் என்று சொல்கிறார். அவருக்கு பிடிக்கவில்லையாம்,பிள்ளைகள் வளர்ந்து நன்றாக இருக்கும்போது இன்னும் ஏன் கஷ்டப்படவேண்டும்?? அவர் காலில் அவர் நிக்க வேண்டும் என்பது சரி அதற்காக கஷ்டப்பட வேண்டும் என்று இல்லை, அவர்க்கென்று ஒரு தொழில் ஏற்படுத்தி தருகிறோம் கவனியுங்கள் என்றால் வறட்டு சண்டையை நினைத்து மாட்டேன் என்கிறார்.

விவசாயத்திற்கு வருவோம், நமது நாட்டில் விவசாயம் என்பது செத்துக்கொண்டு வருகிறது, எனக்கு தெரிந்து விவசாயக்குடும்பத்தில் இருந்து என்னுடன் படிக்க வந்த எந்த மாணவரும் இன்று மறுபடியும் விவசாயத்தை பொழுதுபோக்காக செய்யகூட தயங்குகின்றனர். விவசாயிக்கு நமது நாட்டில் மரியாதையுமில்லை, எங்கு சென்றாலும் அவமானமும், நட்டமும் கிடைகின்றதால் எவரும் தம் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை.

விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் வசதி நமதுநாட்டில் இல்லாதவரை விவசாயிகள் கண்டிப்பாக ஒழிந்து போவார்கள், எனது மனதில் தோன்றுவது இனும் பத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு மீண்டும் பெரிய வரவேற்பு இருக்கிறது, ஏனெனில் விவசாய பொருளுக்கு டிமாண்டு அதிகம் வரும் ஆனால் அதற்கான உற்பத்தி கண்டிப்பாக இருக்காது. அப்போது எளிதில் கிடைக்காத பொருளுக்கு விலை ஏற்றம் என்பது நடக்கும் அனால் அதுவரை நமது குறுநில விவசாயிகள் தாக்குபிடிப்பார்களா என்பது தெரியவில்லை.

விவசாயத்திற்கு பயன்படும் வகையிஒல் பல கருவிகள் இயந்திரங்கள் வந்துள்ளன ஆனால் அவற்றை பயன்படுத்த பெரிய நிலப்பரப்பு வேண்டும், குறுநில விவசாயிகள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலைமையில் அவ்வசதிகள் கண்டிப்பாக அவர்களுக்கு பயன்படுத்த கிடைக்காது, வேண்டும் என்றால் சில குறுநில விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக விவசாயம் செய்து அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்த முயற்சி செய்யலாம் ஆனாலும் அதை தடுக்க நமதுநாட்டில் சாதி என்று ஒன்றை உருவாக்கி உணவளித்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்கள் ஏன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது, தமது தந்தையரை மற்றும் உறவினர்களை வைத்து தமக்கு தெரிந்த புதிய தொழில்நுட்பங்களை வைத்து ஏன் முயற்சி செய்யக்கூடாது இதில் ஓரளவிற்கு லாபம் கிடைத்தால் பின்னர் பெரிய அளவில் செய்யலாமே?

விவசாயத்தில் ஈடுபட்டு பணம் ஈட்டினால் நன்றாக வருமானம் ஏற்படுத்தினாலும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அவமானத்தால் எவரும் ஈடுபட தயங்குகின்றனர். எனக்கு தெரிந்த நண்பரின் உறவினர் மாதம் விவசாயத்தில் மட்டும் நாற்பது ஆயிரங்கள் சம்பாதிக்கிறார் ஆனாலும் அவருக்கு ஐந்து வருடங்களாக பெண் தேடிக்கொண்டு இருந்து பின்னர் சொந்தத்தில் திருமணம் செய்தனர். எவரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.
இந்நிலைமாறினால் கண்டிப்பாக நமது சமுதாயத்தில் மாற்றம் வரும்.

Tuesday, December 16, 2008

எனது 2008 இன் சிறந்த தருணங்கள்

வருடத்தின் முதல் நாளில் எனது அயல்நாட்டு மேலதிகாரியின் வீட்டில் கொண்டாடிய புத்தாண்டு.

ஊரை விட்டு தனியே வந்திருப்பதனால் நான் தனிமையில் இருக்க கூடாது என்று என்னையும் அவர்களுடன் வந்து புத்தாண்டை கொண்டாட அழைத்த அவரும் அவர் துணைவியும் என்னால் மறக்க இயலாதவர்கள், என் பிறந்தநாளை நானே மறந்து விட்டபோது தனியாய் இருப்பாய் எங்களுடன் வந்து பிறந்த நாளை கொண்டாடு என்று அழைத்து என்னை எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருந்தனர்.

முதல் இரண்டு மாதங்கள் நன்றாக சென்று பின்னர் இந்தியா வந்து சென்னை அலுவலகத்திற்கு வந்த முதல் நாளில் இருந்து ஆரம்பித்த சனி ஆகஸ்டு ஒன்றாம் தேதியுடன் முடிந்தது. ஆம் அன்று முதல் அலுவலகத்தில் வேறு துறையில் மாற்றப்பட்டேன். என் வேண்டுகோளுக்கு இணங்கி என்னை மாற்றிய துறை தலைவர் என்னால் மறக்க முடியாதவர்.
2008 நான் பதிவு எழுத ஆரம்பித்த வருடம், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைத்துப்பார்த்தால் அதிசயமாய் உள்ளது. இருந்தாலும் எழுத்துப்பிழைகளும் வருகின்றன.

முதன் முதலாக கார் வாங்கினேன் எனது பிறந்த நாளுக்கான என் பரிசாய்

எனது சகோதரரின் திருமணம்.

என் சகோதரிக்கு பிறந்த பெண் குழந்தை.

சந்தோசமாக குடும்பத்துடன் பேசி மகிழ்ந்த நாட்கள் என்று இந்த மோசமான ஆண்டின் நல்லதொரு மறுபக்கம்.

இவை அனைத்தும் நான் இழந்த நட்பு மட்டுமே என்னிடம் இருந்து பிரித்தது, அதற்காக வருத்தப்படாத நாட்களே இல்லை என்ற நிலைமையில் எதற்காக வருத்தப்பட வேண்டும் என்று யோசிக்கிறேன்.

இந்த வருடம் இவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு கொடுத்தும் இது மோசமான வருடம் என்று இரண்டு கசப்பான நிகழ்வுகளை மட்டும் நினைத்து வருந்தியுள்ளேன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன் இந்த ஆண்டு இறுதியில்தான்.

என்னைப்பொருத்தவரை அதிக துயரை கொடுத்த நிகழ்வு இரண்டு இருந்தாலும் அவை ஏற்ப்படுத்திய மகிழ்ச்சியான தருணம் பல என்பதால் மிக நன்றாக இருந்தது, இருந்துகொண்டு உள்ளது

கல்வி நமது நாட்டில்

கல்வி நமதுநாட்டில் வியாபாரம் ஆகி பல நாட்கள் ஆகின்றன
இவற்றின் விளைவுகளை நாம் என்றாவது நினைத்து பார்த்தூமா?
இந்திய சூழலில் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் பெரும்பான்மை தனியார் பள்ளிகளே.

ஒருவர் தமது மகனையோ மகளையோ முதன் முதலில் பள்ளியில் சேர்க்க என்னென்ன செய்ய வேண்டி உள்ளது.

முதலில் மிக சிறந்த பள்ளி என்று சொல்லப்படும் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க நாள் முழுக்க நிக்க வேண்டும், பின்னர் அதற்க்கு சிபாரிசு பிடித்து நன்கொடை குடுத்து இடம்பிடிக்க வவேண்டும், ஒரு சாமானியனால் அதை செய்ய கண்டிப்பாக முடியாது .நன்கொடை என்று சொல்வது எல் கே ஜி க்கு லட்சகணக்கில். நினைக்கவே பயமாய் உள்ளது.

நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நிலைமை இதுதான், என்ன நன்கொடை என்பது அளவில் மாறும் லட்சத்தில் தொடங்கி ஆயிரத்தில் முடிகிறது இந்த லட்சிய கல்வி.

பள்ளிகளின் மார்கெட்டை பொருத்து நன்கொடை மாறும்.
பள்ளிக்கே இவ்வளவு தொகை செலவு செய்தால் பின்னர் மேற்படிப்பன கல்லூரிக்கு எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள், பொறியியல் கல்லூரியில் படித்து வெளியே வர பல லட்சங்கள் செலவு ஆகும்.
இவாறெல்லாம் செலவு செய்து படித்து வருபவர் செலவுசெய்த பணத்தை எடுக்க முயற்சி செய்யாமல் இருபாரா? நன்றாக படிக்கும் மாணவருக்கே இவ்வளவு செலவு என்றால் சிறிது குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால் அவ்வளவுதான் அவங்க அப்பா கொள்ளை அடித்து தான் பணம் காட்ட வேண்டும்.

படித்து முடித்த பின்னர் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது ஆனாலும் குடும்ப கஷ்டம் தீர மூன்று ஆண்டுகள் சம்பாதித்து கடனை அடைத்தால் அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய வேண்டிவரும். அதற்க்கு கையில் சல்லி காசு இருக்காது கடன் வாங்கி செய்ய வேண்டும் பின்னர் சம்பாதித்து அதை அடைக்க வேண்டும், பின்னர் குழந்தை என்று வந்தால் பள்ளியில் சேர்க்க செலவு என்று அரம்பிக்கும்பாருங்கள்.

ஏன் நமது அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து செயல் இழந்து காணப்படுகின்றன? நேர்மையான அதிகாரிகள் ஆசிரியர்கள் என்று எவருமே காணப்படுவது இல்லையா? மக்கள் நம்பிக்கை வைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு முறை ஒரு அலுவலர் கூறினார்.

நம்பிக்கை வைத்து அனுப்பும் அளவிற்கு பள்ளி இருக்கிறதா? தகுந்த வசதிகளுடன் பள்ளி இருந்து மக்கள் அனுப்பவில்லை என்றால் கேள்வி கேட்கலாம் , எந்த வசதியும் இல்லாமல் எப்படி அனுப்ப?

மொத்தத்தில் நமது நாட்டின் கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று மாற்றப்பட்டு வருகின்றது. பின்னர் எப்படி பின்தங்கி உள்ள மாணவன் முன்னேறுவான்? அவனுக்கு ஆரம்பத்திலேயே முறையான கல்வி கிடைக்க வில்லை அப்படி கிடைத்தாலும் படிக்க முடியாத வரு பணம் தடையாக உள்ளது. சும்மா கல்வியில் முன்னேறி உள்ளது என்று சொல்லிகொண்டாலும் கடந்த பத்து வருடத்தில் எத்தனை அரசாங்க பொறியியல் கல்லூரி தொண்டங்கப்பட்டது நமது மாநிலத்தில்? தனியார் கல்லூரிகள் ஏற்க்கனவே நிறைய உள்ளன அவர்களுடன் கெஞ்ச வேண்டிஉள்ளது ஒவ்வொரு வருடமும் இத்தனை இடங்களை அரசாங்கத்திற்கு கொடுங்கள் என்று.
தகுந்த கல்வி கொடுக்க கூடிய தரமான அரசாங்க கல்லூரிகளை உருவாக்கினால் தாமாக தரமான கல்வி மற்றும் குறைவான தங்குந்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகள் கல்வி அளிக்க வரமாட்டார்களா?
என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திருமணத்திற்கு பின்னர் வரும் செலவுகளை நினைத்து பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.

இன்னும் நாம் வானளாவிய கட்டிடங்களையும், நிலாவிற்கு ஆள் அனுப்பினாலும் ஏழை மக்கள் சாலையோரத்தில் vaala இடம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நான் படித்தது அரசு பள்ளியில் ஆனாலும் அதற்கு தனிப்பாடம் சென்றுதான் படிக்க முடிந்தது . இருந்தாலும் படிக்கிற மாணவன் எங்கு இருந்தாலும் படிப்பான் என்ற கொள்கை இப்போதெல்லாம் உடைபடுகிறது.

தீர்வு:
கல்வியை அரசு மட்டுமே செயல் படுத்த வேண்டும், இதை செய்ய இப்போதைக்கு முடியாது.

அப்படி என்றால் கல்வி கொள்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.

பள்ளிகளின் தரத்தை உயர்த்தி எந்த ஒரு மாணவனும் இருக்கும் இடத்திற்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற விதி வேண்டும்.

கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு தரும் உதவி தொகையினை தகுதி வாய்ந்தவர்களுக்கு அவர்களின் நிலைமையை பொருத்து மாற்றி அமைக்க வேண்டும்.

அனைவருக்கும் சமசீரான கல்வி வேண்டும்.

இதெல்லாம் நடந்தால்?? என்ன அதற்குள் உங்கள் தூக்கம் கலைந்துவிடும்

Monday, December 15, 2008

இரண்டு மணி நேர பயணம் அலுவலகத்திற்கு

நேற்று ஒரு திருமணத்திற்காக பாண்டி சென்று இரவு திரும்ப நேரமானதால் இன்று காலை ஒரு மணி நேர தாமதமாக அலுவலகம் செல்லலாம் என்று தீர்மானித்து தூங்கி விட்டேன்.சரியாக கிளம்பி எட்டு மணிக்கு காரை கிளப்பி வேளச்சேரியில் இருந்து பழைய மஹாபலிபுரம் சாலை அடைந்து பார்த்தல் life line மருத்துவமனை அருகே சாலையில் ஒரே வாகன கூட்டம்.

அட இன்று முதல் இந்த சாலையில் பணம் வாங்குகிறார்களே என்று நொந்துகொண்டு வாகனத்தை செலுத்தினேன், நமதுமக்கள் படித்தவர் படிக்காதவர் என்று பாகுபாடு இல்லாமல் சாலை விதிகளை பின்பற்றாமல் அவசர குடுக்கை தனமாக வாகனத்தை ஓட்டி ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு இருந்தனர், ஐந்து வரிசையாக செல்ல வேண்டிய இடத்தில் ஒன்பது வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அந்த இடத்தை கடந்து வர சரியாக ஒரு மணி நேரம் பிடித்தது .

இதில் அங்கே பணம் வாங்குபவரிடம் திரும்பி வருவதற்கும் சேர்த்து ரசீது கொடுங்கள் என்று கேட்டால் அவர் அது எல்லாம் இங்கு கிடையாது ஒவ்வொரு முறையும் நீங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார். விதியை நொந்துகொண்டு இனி இந்த சாலையில் வர கூடாது மாலை திரும்பும்போது கிழக்கு கடற்க்கரை சாலையில் வந்து விட வேண்டும் என்று தீர்மானித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், மணி அப்போது சரியாங்க ஒன்பது நாற்பத்து ஐந்து.

சில குளறுபடிகள்: மொத்தமாக ஒரு நாளைக்கு என்று பணம் வசூலிக்கும் முறை இல்லை, ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டும் அல்லது மொத்தமாக 50 முறை பயணிக்க 100 முறை பயணிக்க என்று வாங்கி வைத்து கொள்ள வேண்டும், மாற்ற சாலைகளில் இருப்பது போல ஒரே நாளில் திரும்பி வந்துவிடும் சீட்டு, ஒரு நாளைக்கு முழுவதையும் உபயோகிக்கும் முறை எல்லாம் இல்லை.

இதில் பாவப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு வாகனம் ஓடுபவர்கள் தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 தடவை அந்த சாலைகளை பயன்படுத்துகின்றனர், ஒவ்வொரு முறைக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், மொத்தத்தில் பெரிய தொகை.

இன்னும் சில மாதங்களுக்கு பெரிய போராட்டத்திற்கு பின்னரே வீடு செல்வோம் என்று நினைக்கிறேன்.

நேற்று இரவு சென்னை திரும்புகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவன்மியுரை நெருங்கும்போது போலீசார் வழிமறித்தனர், எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று எல்லாம் கேட்டுவிட்டு எதற்கு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டனர், நான் வந்தது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம், நான் இரவு இரண்டு மணிக்கு இந்த வேகத்தில் செல்லவில்லை என்றால் நாளைக்கு அலுவலகம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு வந்தேன்.

இருந்தாலும் அவர்கல்பணி மிக சிறந்தது.இரவு இரண்டு மணிக்கும் சாலையில் நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Thursday, December 11, 2008

மனதில் பட்டவை

இன்று பதிவு எழுவது என்று முடிவெடுத்துவிட்டேன், என்ன எழுவது என்று தெரியவில்லை
சமீப காலங்களாக என் மனது வெறுமையாக உள்ளது
------------------------------
பெட்ரோல் விலையை அரசு குறைத்து உள்ளது ஆனாலும் எதிர்பார்த்த அளவு விலை குறைப்பு இல்லை, சாதாரண மக்களே எளிமையாய் கணக்கு போடுகின்றனர்.
விலை 70 டாலராக இருந்த பொது இங்கு 48 ரூபாய் , பின்னர் 147 டாலராக ஏறியது 5 ரூபாய் ஏத்தினார்கள் மறுபடியும் விலை 45 டாலராக குறைந்து விட்டது ஆனால் விலை குறைப்பு 5 ரூபாய் (ஆக விலை குறைப்பு 70 டாலராக இருந்த நிலைக்கு மட்டுமே )
எனக்கென்னமோ தேர்தலுக்கு முன் ஜனவரியிலோ இல்லை மார்ச் மாதத்திலோ ஒரு விலைகுறைப்பு இருக்கும். தேர்தலில் பிச்சை எடுக்க ஒரு பரிதாப காரணம் வேண்டும் அல்ல.
சென்னை ஆட்டோகாரங்க ரொம்ப நல்லவங்க பெட்ரோல் விலை குறைந்தாலும் கட்டணத்தை கொஞ்சம் கூட குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இதற்க்கு பேசாமல் காரிலேயே வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது, செலவு ஒன்றும் பெரிய அளவிற்கு வித்தியாசமில்லை.
பகல் கொள்ளைகாரர்கள்
---------------------------
சட்ட கல்லூரி பிரச்சனை, மும்பை பிரச்சனை எல்லாம் மறந்து விட்டு போகும் நேரம் இது, இந்த ஊடகங்கள் அவர்கள் மீது சுமற்றப்பட்ட கேள்விகளுக்கும் தவறுகளுக்கும் எந்த பதிலையும் சொல்லவில்லை, ஒரு வருத்தம் கூட சொல்லவில்லை,இந்த ஊடகங்களை நாம் மதிக்க வேண்டுமா? சில நாட்களுக்கு முன்பு times now சானலில் ஒரு செய்தி காட்டினர், இந்திய நகரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு எல்லாம் மீறுகின்றனர் என்று, இதற்க்கு தீர்வு என்ன என்று எல்லாம் கேட்டனர் அடுத்த நாள் காலையில் அலுவலகம் வரும்போது என்னை முந்தி சென்ற ஒரு வாகனம் தாறுமாறாக சென்றது, எந்த ஒரு பூகுவரத்து விதிகளையும் மதிக்க வில்லை, இரு சக்கர வாகனங்களில் செல்பவரை மிரட்டிவிட்டு செல்லும் வகையில் செலுத்தப்பட்டது, நன்றாக கவனிக்கையில் அது Times of India பத்திரிக்கையின் அலுவலர்களை கொண்டு வந்து விடும் வாகனம், அவர்களே இவ்வாறு இருந்துகொண்டு இவர்கள் மற்றவர்களை சொல்கிறார்களாம், ---------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன்ன்பு சென்னை ரயில் நிலையம் சென்றேன், ஒரு நண்பரை வரவேற்க, அங்கு நிறுத்தியிருந்த காவல் படையினர் மற்றும் சோதனை எல்லாம் நன்றாக இருதது உள்ளே சென்ற பின்பு என் வாழ்வில் முதல் முறையாக ஒரு பொது இடத்தில் செல்லும்போது தீவிரவாதிகள் தாக்கிவிட்டால் என்ன ஆவது என்ற பயம் வந்தது, இவ்வளவு நாட்களில் நடந்த எந்த தாக்குதலுக்கு பின்பும் தோன்றாத பயம் இப்போது தோன்றுகிறது என்பதால் கண்டிப்பாக நமது உள்நாட்டு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது
---------------------------------------------------------------------
எது கூறினாலும் குறை கூறுபவர் என்று எப்போதும் நமக்கு அருகிலேயே இருகிறார்கள் நாம் என்னதான் ஒரு விசயத்தை நன்றாக அலசி நன்மை இருக்கிறது என்று கூறினாலும் அதில் ஒரு குறை இல்லை என்றால் அந்த விஷயம் முற்றிலும் தவறு என்று கூறுபவர் என் அருகில் இருக்கிறார். நல்ல மனிதர் ஆனாலும் தற்போது அவரின் மறுத்தல்கள் எல்லாமும் கடுப்படிக்கிறது எனக்கு, எது சொன்னாலும் அது தவறு நான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறார், என்ன சொல்ல இவர்களை விட்டு சற்று தள்ளியே இருக்க வேண்டும் என்று முயன்று கொண்டு இருக்கிறேன்
-----------------------------------------------------------
தனிமை இப்போதெல்லாம் நன்றாக இருக்கிறது, அதை அனுபவிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆனாலும் என்னை இது சோம்பேறி ஆக்கிவிடும் போல பயமாய் உள்ளது, நண்பர்களை அழைத்தால் எவனும் மதிப்பளிக்க மாட்டேன் என்கிறான், அவனவன் அவனவன் காதலியுடன் வார இறுதியில் காலத்தை கழிக்க விரும்புகிறான், என்னைப்போல காதலி இல்லாத மூன்று நண்பர்கள் அவ்வப்போது கூடுகிறோம், பின்னர் வேறு என்ன பாட்டிலை திறக்கும் வேலையத்தான் செய்கிரூம், நான் என் தனித்துவத்தை மறந்து தண்ணிதுவம் கண்டுவிடுவேனோ என்ற பயத்தில் பேசாமல் திருமணம் செய்துகொல்லாலாம் என்று நினைக்கிறேன், வீட்டில் ஒரு வருடம் கழித்து என்று சொல்கின்றனர். என்னதான் நடக்கிறது என்று பொருத்து பார்க்கலாம்.---------------------------------------------------