Sunday, October 25, 2009

சென்னையில் இருந்து தில்லி-முதல் நாள் நாளை

எனது முதல் வடநாட்டு பயணம்

அலுவலக விசயமாக ராஜஸ்தானில் 10 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள போகிறேன். எனது வாழ்நாளில் முதல் வடநாட்டு பயணம். அமாம் இதுவ அரை நான் தமிழ் நாடு தாண்டி சென்றது கடந்த வருடம் ஆந்திர மனாநிலம் தான் அதுவும் அலுவலக நண்பருடன். அவர் எல்லா விதமான திட்டத்துடன் வந்ததால் நான் சும்மா கூட செண்டு வந்தேன்.

இந்த முறை நான் தனியாக பயணப்பட வேண்டி உள்ளது. நாளை காலை சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் பயணம். அங்கிருந்து கோட்டான் என்ற ஊருக்கு மறுபடியும் ரயில்.

ஒரு நாளில் அலுவலக வேலை முடித்து விட்டு அடுத்த நாள் ஜோத்பூர் செல்கிறேன். அங்கிருந்து sirohi. இரண்டு நாட்கள் அங்கு வேலை முடித்து விட்டு சிட்டுர்கர் சென்று பின்னர் beawar அங்கிருந்து மறுபடியும் தில்லி, சென்னை. பத்து நாட்கள் சென்னையை விட்டு செல்ல வேண்டும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.

வெளிநாடு சென்ற போது கூட இந்த பதட்டம் இல்லை, இந்தி தெரியாததால் வந்த வினை இது, இந்தி தெரியாதது ஏளனமாக பார்க்கப்படுவதால் இந்த பதட்டம் என்று நினைக்கிறேன்.

பார்ப்போம் நாளை நமக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்று. கூடவே ரிலையன்ஸ் netconnect எடுத்து செல்வதால் இடையிடையே பதிவிட முடியும் என்று தோன்றுகிறது.

மீண்டும் சிந்திப்போம்

மாலை நேரத்து குழப்பங்கள் (மயக்கங்கள்)

எழுத வேண்டும் என்று மனம் வேண்டுகிறது இதயம் தடுக்கிறது. என்னவென்று தெரியாத இந்த குழப்பம், நாளை மேற்கொள்ள வேண்டிய நெடுந்தூர பயணத்திற்கு மனதை தயாரிக்காமல் அதனை அதன் போக்கில் விட்டு எதையோ யோசிக்கிறேன். என்றுமே எந்த பயணத்திற்கும் இந்த அளவிற்கு யோசித்தது இல்லை.

ஒரு விதமான எதிர்பார்ப்போடு கிளம்பும் நான் இன்று மட்டும் ஏனென்று தெரியாமல் தடுமாற்றத்துடன் தயாராகிறேன். தனிமையை இப்பொழுதெல்லாம் அனுபவிப்பது இல்லை, மனம் தயாராக இருந்தாலும் ஏனோ தெரியவிலை தனிமை கசக்கிறது, அந்த கசப்பும் எனக்கு இனிக்கிறது.


ஒரு விதமான கழிவிரக்கம் இருந்தாலும் இன்னும் எங்கோ நான் நானாக இருந்து வருகிறேன். புது முயற்சி, புது மாற்றம், புது நட்பு என்று எதிலும் புதிதாய் தேடும் நான் புது பயணத்திற்கு மட்டும் ஏன் யோசிக்கிறேன்?? யோசனை எல்லாம் யோசனையாகவே போய்விட மட்டுமே முடியும்.
நாளை மேற்க்கொள்ள போகும் புது பயணத்தில் வரப்போகும் சவால்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள மனது தயாராகிறது.


இந்த நாட்களில் உன்னை எண்ணாமல் என்னையே எண்ணிக்கொள்ள வில்லை, எதையும் எண்ணாமல் இல்லத்தை இல்லாததாய் நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கிறேன்.

மனதின் உள்ளே ஒரு வித வலி இருப்பது தெரிந்தாலும் அதை மறந்து இருக்க முயற்சி செய்வது எல்லோரையும் போல நானும் செய்வேனென்று நினைத்தாயா?
எதையோ எழுத வேண்டி வந்து எதையோ எழுதியுள்ளேன். குழப்பத்தில் எப்போதும் தெளிவு பிறக்கும் இப்போதும் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வடநாடு புறப்படுகிறேன்.

Monday, October 12, 2009

மறுபடியும் நான்

எதனை நாள் ஆகிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன், வலைப்பதிவிற்கு வந்து பின்னர் சிறிது இடைவெளி விட்டு இப்போது பெரிய இடைவெளி விட்டிருக்கிறேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை, வேலைப்பளு என்று சொல்லலாம் ( ஆனால் அது பொய் என்று என்னாலேயே நிரூபிக்க முடியும்) எழுத மனம் இல்லை என்று சொல்லலாம் ஆனால் அதுவும் ஏற்க்கத்தக்கது அல்ல.. சோம்பேறித்தனம் என்றால் அது மிக சரியான பதில்.

என்று என்னை விட்டு இந்த சோம்பல் போகுமோ என்று தெரியவில்லை அன்று மறுபடியும் என்னை எழுத்து உலகில் பார்க்கலாம். பெருசா எதையும் எழுதி கிழிக்கவில்லை ஆனாலும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்த சில விசயங்களில் எழுத்தும் ஒன்று. சோகமாக இருக்கும் தருணங்களே நான் எழுத தூண்டும் தருணம், மீண்டும் ஒரு சோகம் என்னை தாக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது

Tuesday, September 15, 2009

வழக்கம்போல ஒரு நாள்

கலையில் அலாரம் அடிக்கும்போதே இன்னிக்கு லீவு போட்டுவிடலாமா என்ற எண்ணத்துடனேயே கண்ணை திறந்தான் ஜெய். திங்கள் கிழமை கலையில் ஆறு மணிக்கே எழுந்திருக்கனுமா என்ன வாழ்க்கைட, பேசாம வேற கம்பெனி பாது வேலைய மாத்திக்கணும் என்ற நினைப்பிலேயே, அடுத்த அரை மணிநேரம் அலாரத்தை மாதி மாதி வைத்து படுத்தான். ஒழுங்கா சிக்கிரமே தூங்கி இருக்கலாம் ஒரு கேம் என்று சொல்லி சொல்லி கடசில 2 மணி வரை வீடியோ கேம் விளையாண்டா?

எழும்போதே காலையில் உள்ள மீட்டிங் நியாபகத்துக்கு வந்தது, குளித்து கிளம்பும்போது தோன்றியது பேசாம லீவ் போட்டு விடலாமா என்று, வேண்டாம் அடிக்கடி லீவ் போடுகிறோம் அப்புறம் அடுத்த வாரம் வெளியே போலாம் என்று இருக்கும் பிளானுக்கு லீவ் கிடைக்காது.


கிளம்பி வெளியே வந்தான், வெளியே வந்தவுடன் அவன் உலகம் மாறிப்போனது,என்னதான் தூக்க கலக்கம் இருந்தாலும் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கையில் வழக்கமாக வரும் அவளை எங்கே காணோம் என்று தேடிப்பார்த்தான், பின்னால் வந்துகொண்டு இருந்தால். அவளுக்காக மெதுவாக நடந்தால் பேருந்து போய்விடும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். தெரு திரும்புகையில் வழக்கமாக எதிர்த்து வரும் அந்த பெண், இவனும் அவளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான், இவனை பார்த்தால் சிரிக்கலாம் என்று மூன்று மாதமாய் முயற்சித்தும் இவனை ஒரு பார்வை கூட பார்க்காமல் போகிறாளே??
மெயின் ரூட்டை தாண்டியதும் எதோ ஒரு IT கம்பெனி பசங்க பொண்ணுங்க கலை கலராய் நின்று கொண்டு இருந்தனர், சனியனுங்க திங்க கிழமை காலைல கூட கடலையா என்று நினைத்துக்கொண்டு அவன் பேருந்துக்காக சற்று தில்லி காத்திருந்தான். நாதாரிங்க பஸ் ஸ்டாப் பக்கத்துல மாத்த சொன்ன கேட்க மாட்டேன்கறாங்க, ஒரு தேவாங்குக்காக நான் இங்க வந்து நிக்கணுமாம். அது கூட நம்மள திரும்பி பார்க்க பிகு பனிக்குது.
ச எப்படி இவங்க எல்லாம் இப்படி கரெக்ட் பண்றாங்க நமக்கு தெரிய மாட்டேங்குது. அதுக்காக பொண்ணுங்க கிட்ட போய் பேசி நம்ம கெத்த குறைச்சுக்க கூடாது என்ற நினைப்பில் நிற்க பேருந்து வந்தது.


திங்கள் கிழமை கலையில்பெருந்து லேட் அக வந்து அவன் தேவதை போகும் பேருந்துக்கு பின்னால் வந்தது. வர வர நம்ம பஸ் டைம் சரி இல்ல எப்பவுமே அந்த காலேஜ் பஸ்கு பின்னாடி வரான். அடுத்த நிறுத்தத்தில் கல்லூரி பெண் ஒன்னு ஏறும் அது இப்பதான் இவனை பார்த்து சிறிதாக புன்னகை செய்து வருகிறது ஆனால் வாரத்துல இரண்டு நாள் அந்த பேருந்துக்கு பின்னால் வரதால பார்க்க முடியறது இல்ல.


அட என்ன ஆச்சரியம் அந்த பொண்ணு இன்னும் நிக்குது, ஹே நான் இங்க இருக்கேன் என்ன ஆச்சு தெரியலையே, பஸ்ஸ விட்டுடுச்சா? இனிக்கு பார்த்து பஸ்ல வந்துட்டேனே வண்டில வந்திருக்கலாமோ? ஏதேதோ தோன்றி அவளை வண்டியில் கூடி போவதைபோல நினைத்துப்பாற்கும்போதே சடாரெண்டு வந்து நின்றது ஒரு பைக் . உடனே ஏறி அமர்ந்தாள், வண்டி கிளம்பியது. அட இனிக்கு ரூம்ல இருக்க மீதி சரக்க தனியாதான் அடிக்கணும் என்று நினைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான். வழக்கம்போல ஒரு திங்கள் கிழமை துவங்கியது அவனுக்கு.

Friday, August 21, 2009

ஈரம் மற்றும் ஆதவன் பாடல்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஈரம் படத்தின் பாடல்கள் கேட்டேன். நண்பனிடமிருந்து குறுந்தட்டை வாங்கி ஒரு வாரம் கழித்து ஒரு நேரத்தில் சும்மாகேட்டு பார்ப்போமே என்று கேட்டேன்.முதல் பாட்டு சுசித்ரா பாடி இருக்கிறார் ஆனால் அவர் குரல் சிறிது மாற்றத்துடன் இருக்கிறது. " தரை இறங்கிய பறவை போலவே " என்று ஆரம்பிக்கும் பாடல் ..
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கேட்ட நிமிடத்திலேயே பிடித்து விட்டது
இன்னொரு பாட்டு மழை மழை என்று, அதுவும் மிக அருமையாக இருந்தது. மொத்தம் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு theme மியூசிக்.
மொத்தத்தில் அருமையான இசை மற்றும் பாடல்கள்.


நேற்று ஆதவன் பாடல்கள் கேட்டேன். சிறிது நேரமே கேட்டாலும் அப்படி ஒன்றும் உடனே பிடிக்க வில்லை, வழக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கேட்ட உடனே கண்டு பிடித்து விட முடிகிறது.
பாடல்கள் என்னை பொறுத்தவரை என்னை impress பண்ணவில்லை. கார்கி சொன்னதற்காக மறுபடியும் காரில் கேட்டு பார்க்கிறேன்.


அடுத்த மாதத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்காவது செல்லலாம் எங்கு இருக்கிறேன். ஆனால் எங்கு செல்வது?? நீண்ட பயணம் மேற்க்கொள்ளலாம் என்று முடிவு பதிவர்கள் யாருக்கேனும் யோசனை இருந்தால் கூறவும்.

மனதில் திடீரென்று எண்ணம், நாம் ஏன் ஒரு நாள் எந்த இலக்கு ம் இல்லாமல் கிளம்பி ஒரு வாரம் பயணித்து வரக்கூடாது என்று, பார்ப்போம் என்னமுடிவு எடுக்கிறேன் என்று.

இன்று கந்தசாமி பார்க்கலாம் என்று இருக்கிறேன், பார்ப்போம் இரவு காட்சி மாயஜாலில் கிடைத்தால் செல்லலாம். படம் நன்றாக இருப்பதாக நண்பன் கூறுகிறான். வடிவேலு வரும் காட்சிகள் கொஞ்சம் இல்லை ரொம்பவே bore அடிக்குதாம். சற்று முன் கிடைத்த தகவல் படி.

Thursday, August 20, 2009

மறுபடியும் நான்

வெகு நாளாக பதிவுலகில் இருந்து விலகி இருந்தேன்.. காரணம் எல்லாம் தெரியவில்லை ஒரு விதமான சோம்பேறித்தனம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இனி மறுபடியும் துவங்கலாம் என்று இருக்கிறேன். என்னையும் ஒரு பதினோரு பேர் follow பண்ணுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் நான் யாரென்று மறந்து போய் பல நாட்கள் இருக்கும்.

எனவே இது ஒன்றும் comeback இல்லை... இத்தனை நாளாய் அதிகம் பதிவுகளை படிக்கவும் இல்லை சில சில பதிவுகளை படித்தேன். என்னை போலவே பலரும்பதிவுலகில் தற்காலிக விடுமுறை எடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன், கூடிய செய்கிறம் அனைவரும் திரும்புவார்கள் என்று எண்ணுகிறேன்.

எழுதுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன்.

வாழ்க்கை எத்தனை வேகமாய் நகருகிறது பாருங்கள், அனால் எத்தனை பேர் இதனை வருடம் அதை தங்களுக்குரியதாய் வாழ்ந்து அனுபவித்திருக்கிறீர்கள், ஏதோவொரு நிமிடத்தில் ஏன் நாம் இதை செய்கிறோம் இதனால் நமக்கு வருத்தம் வந்தாலும் எதற்கு செய்கிறோம் என்று எண்ணியது உண்டா? நான் எண்ணியிருக்கிறேன், என் வாழ்க்கை அதன் போக்கில் போகின்றது, பலர் அதை கடிவாளம் போட்டு இழுக்கின்றனர், முரண்டு பிடிக்கும் குதிரையாக சண்டித்தனம் பணிக்கொண்டு இருக்கிறேன் நான்.

பார்ப்போம் வரும் நாளில் என்ன வருதிறது என்று.

Friday, June 26, 2009

நடுநிசி நியாபகங்கள்

நீ சொல்லும்போது காயப்பட்டது என் நெஞ்சம் மட்டும் அல்ல நம் காதலும் தான்,

இறப்புக்கு பின் வலி என்பது காதலில் மட்டுமே சாத்தியம் என்பதை அனுபவித்தேன்
அனுபவம் என்பது வழியில் ஆரம்பித்து வலியில் முடியுமோ?