Thursday, August 14, 2008

இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்

இந்திய கால்பந்தாட்ட அணிக்கு எனது வாழ்த்துக்கள்


நேற்று நடந்த AFC challenge கோப்பைக்கான இறுதி போட்டியில் கஜகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்திய கால்பந்தாட்ட அணி. எப்போதும் கிரிக்கெட் கிரிகெட் என்று அதை மட்டுமே பார்க்கும் நாம் ஏன் நமது கால்பந்தாட்ட அணியை ஆதரித்து வாழ்த்தக்கூடாது?. இந்த ஆட்டம் கடந்த வருடத்தின் மிக சிறந்த ஆட்டத்தில் ஒன்று என்று கூறப்படுகின்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் பெற்ற நேரு கோப்பை வெற்றிக்கு பிறகு மிகப்பாரிய வெற்றி இது, வெற்றி பெற்ற அணிக்கு எனது வாழ்த்துக்கள்

குழப்பம்

எல்லோருக்கும் வணக்கம்,

வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.

நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.

நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.

சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்

Monday, August 4, 2008

விபத்து

நமது வலையுலக நண்பர் ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி தப்பி வந்தது பற்றி இந்த பதிவை எழுதியுள்ளார், இன்று எப்பாடுபட்டாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது இந்த பதிவு கண்ணில் பட்டது. நான் எழுத இருந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சிறிதளவு சம்பந்தம் உள்ளது.

நேற்று முன்தினம் எனது உறவினர் பையன், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பவன் தன் நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்தான். இவன் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டு இருக்க எதிரே வந்த மினி டோர் ஆடோ சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த இவர்களை நோக்கி வந்து எதிர்பாராத விதமாக இவர்களை இடித்து விட்டது.

இடித்த பின் வாகனத்தை விட்டு இறங்கவில்லை அந்த ஓட்டுனர், மக்கள் கூடி பார்க்கையில் அவர் மிக அதிக போதையில் இருந்துள்ளார், எனது உறவினர் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார், வண்டி ஓட்டி சென்ற பையனுக்கு இடது கையில் சதை கிழிந்துவிட்டது அனால் இவருக்கோ இடது கையில் எலும்பு முறிவு, தொடை எலும்புமுறிவு, முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு. internal bleeding அதிகமாக இருந்துள்ளது, நல்ல வேளையாக விபத்து நடந்த இடமும் எனது உறவினர் வேலை செய்யும் அரசாங்க மருத்துவமனையும் அருகில் இருந்தது, முதற்கட்ட சிகிச்சை முடிந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போதைய நிலவரம் கையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது, காலுக்கு சிகிச்சை செய்ய இனும் நான்கு நாட்கள் ஆகும், காலின் எலும்பு முறிவு காயத்துடன் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி தோலின் தன்மை சோதித்து விட்டு செய்ய வேண்டுமாம். பின்னர் அறுவை சிகிச்சை க்கு பின் உள்ள நாட்களில் infection ஆகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவர்க்கென ஒதுக்கப்பட்ட அறையில் உடன் வந்த உறவினர்கள் நோயாளியின் பெட்டில் ஏறிப்படுத்து விட்டனர், நாங்கள் அவர்களை அழைத்து கண்டிகையில் எங்களிடம் சண்டை, காலையில் அவரை கொண்டு வருவார்கள் அதுவரை என்ன என்று, நாங்கள் எவ்வாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை, பின்னர் உறவினரின் பெற்றோரை அழைத்து கூறி ஒரு வழியாக சரி செய்தோம். கடைசி வரை உடனிருந்து பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை எங்களுக்கு, இருந்தும் பெற்றோரிடம் கடினமாக கூறி வந்துளோம், மிக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. நோயாளியை பார்க்க வரும் உறவினர் தயவு செய்து இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது காவல்துறையில் புகார் செய்வது பற்றி, அந்த புகாரில் அந்த ஓட்டுனர் குடித்துவிட்டு வந்தது பற்றி ஒரு வார்த்தை இல்லை, அதை விட ஆச்சரியம் ஓட்டுனர் பெயரே மாறி இருந்ததுதான், அந்த வாகனத்தின் வசதிக்காக இவ்வாறு மாற்றி விட்டனர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு விபத்து காப்பீடு இல்லை, ஒட்டிய பையனுக்கு உரிமம் இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றதால் கோர்ட்டில் நட்ட ஈடு கேட்க்க வழி உள்ளது. காவல் துறையினரிடம் பின்னர் பேசியபோது தெரிந்தது ஓட்டுனர் மாற்றப்பட்டார், காரணம் அவர்க்கு உரிமம் இல்லை என்று.
குடித்து விட்டு வாகனத்தை ஓடியதால் இப்போது யாருக்கு நட்டம்? பாவம் ஒரு பையனின் ஒரு வருட வாழ்க்கை.

ஓட்டிய பையனுக்கு அடி இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றவருக்குபலத்த அடி.

இடித்த வண்டியின் உரிமையாளர் நேற்று வந்து பார்த்துவிட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவை குடுத்து விடுகிறேன் சமாதானமாக செல்லலாம் என்றார், அவரிடம் சிகிச்சைக்கு இரண்டு லட்சங்கள் ஆகும் என்று கூறுகையில் வேறு மருத்துவமனையில் வைத்து குறைந்த செலவில் குடுக்கிறாராம் ஆனால் புகார் வேண்டாமாம். தற்ப்போது நாங்கள் புகார் குடுத்து கோர்ட் மூலமாகவே செல்ல விருப்பம் என்று கூறி விட்டோம்.

தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டதீர் நண்பர்களே, இன்றில்லை என்றாவது சிறிது நேர தவறில் எதிர்காலம் பாழாகும் வாய்ப்பு எதற்கு குடுக்க வேண்டும்.

Friday, August 1, 2008

புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??

புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??

நேற்றிரவு வீட்டுக்கு செல்ல சிறிது நேரம் ஆனது, இரவு பாத்து மணிக்கு சென்று வழக்கம் போல செய்திகள் வரும் தொலைக்காட்சியை போட்டா ஒருத்தர் எதோ மன்னிப்பு கேட்டுக்கறேன் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சுடுச்சு அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தார்.

எல்லா ஆங்கில செய்தி சேனல்களும் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் அவர் படம் பக்கத்து மாநிலத்தில் இனி தடை இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறினார் அனால் ஒருவர் கூட அதைப்பத்தி நம்ம ஊர்க்காரன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வெளியிடவில்லை. சரி அத விடுங்க கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வார்கள் நம்ம ஆளுங்க..

நம்ம கூட ஒரு நண்பன் வீட்டில் தங்கி உள்ளான், அவன் அவரின் ரசிகன், என்று நினைத்து இருந்தேன், இருந்தாலும் என் அதிருப்தியை தெரிவித்துவிட்டு அவனிடம் வாதாடி என் பக்கத்து உண்மையை கூறி.. அவர் என்ன வேண்டும் என்றாலும் கேட்கட்டும் என் பழக்கம் அவர் படங்களை பார்ப்பதில்லை.. இதுவரை எந்த படத்தையும் திரை அரங்கிலோ இல்லை தொலைக்காட்சியிலோ பார்த்து கிடையாது அவ்வபோது தொலைக்காட்சியில் போடும் சிறிது நேர காட்சிகளே போதும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள என்று கூறிவிட்டு அவன் புரிந்து கொள்வான் என்று நம்பி தூங்கினேன்.

காலையில் நேரமே எழுந்து கொள்ளும் நான் வழக்கம் போல எழுந்து அலுவலகத்துக்கு கிளம்புகையில் என்னுடன் வந்து தங்கின அலுவலக நண்பன் பற்பசையை கேட்டான். தேடினால் இல்லை, அப்போதுதான் கவனித்தேன் அந்த ரசிகன் வெகு நேரத்தில் எழுந்து குளித்துக்கொண்டு இருந்தான். அவன் இந்த நேரத்தில் எழுந்து நான் இன்றுதான் பார்க்கிறேன். வந்து கிளம்பிக்கொண்டு இருந்தவனிடம் என்னடா இன்று அலுவலகத்தில் வேலை அதிகமா என்றதற்கு சிரித்துக்கொண்டே..
"அலுவலகத்திற்கு எவன் போவான் இனிக்கு தலைவர் படம் அதன் லீவ் எடுத்துவிட்டு படம் பாக்க செல்கிறேன் என்றான்".~!@#%!~#

பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் சிந்திவிட்டது வந்துவிட்டேன்.சம்பளம் வாங்கும் நாளில் இந்த பதிலை எதிர்பாக்கவில்லை...

வழக்கம்
போல இதையும் படத்தை புறக்கணிப்போம் என்று இருந்த நான் கண்டிப்பாக மற்றவரிடமும் புறக்கணிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.