Sunday, October 25, 2009

சென்னையில் இருந்து தில்லி-முதல் நாள் நாளை

எனது முதல் வடநாட்டு பயணம்

அலுவலக விசயமாக ராஜஸ்தானில் 10 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள போகிறேன். எனது வாழ்நாளில் முதல் வடநாட்டு பயணம். அமாம் இதுவ அரை நான் தமிழ் நாடு தாண்டி சென்றது கடந்த வருடம் ஆந்திர மனாநிலம் தான் அதுவும் அலுவலக நண்பருடன். அவர் எல்லா விதமான திட்டத்துடன் வந்ததால் நான் சும்மா கூட செண்டு வந்தேன்.

இந்த முறை நான் தனியாக பயணப்பட வேண்டி உள்ளது. நாளை காலை சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் பயணம். அங்கிருந்து கோட்டான் என்ற ஊருக்கு மறுபடியும் ரயில்.

ஒரு நாளில் அலுவலக வேலை முடித்து விட்டு அடுத்த நாள் ஜோத்பூர் செல்கிறேன். அங்கிருந்து sirohi. இரண்டு நாட்கள் அங்கு வேலை முடித்து விட்டு சிட்டுர்கர் சென்று பின்னர் beawar அங்கிருந்து மறுபடியும் தில்லி, சென்னை. பத்து நாட்கள் சென்னையை விட்டு செல்ல வேண்டும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.

வெளிநாடு சென்ற போது கூட இந்த பதட்டம் இல்லை, இந்தி தெரியாததால் வந்த வினை இது, இந்தி தெரியாதது ஏளனமாக பார்க்கப்படுவதால் இந்த பதட்டம் என்று நினைக்கிறேன்.

பார்ப்போம் நாளை நமக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்று. கூடவே ரிலையன்ஸ் netconnect எடுத்து செல்வதால் இடையிடையே பதிவிட முடியும் என்று தோன்றுகிறது.

மீண்டும் சிந்திப்போம்

மாலை நேரத்து குழப்பங்கள் (மயக்கங்கள்)

எழுத வேண்டும் என்று மனம் வேண்டுகிறது இதயம் தடுக்கிறது. என்னவென்று தெரியாத இந்த குழப்பம், நாளை மேற்கொள்ள வேண்டிய நெடுந்தூர பயணத்திற்கு மனதை தயாரிக்காமல் அதனை அதன் போக்கில் விட்டு எதையோ யோசிக்கிறேன். என்றுமே எந்த பயணத்திற்கும் இந்த அளவிற்கு யோசித்தது இல்லை.

ஒரு விதமான எதிர்பார்ப்போடு கிளம்பும் நான் இன்று மட்டும் ஏனென்று தெரியாமல் தடுமாற்றத்துடன் தயாராகிறேன். தனிமையை இப்பொழுதெல்லாம் அனுபவிப்பது இல்லை, மனம் தயாராக இருந்தாலும் ஏனோ தெரியவிலை தனிமை கசக்கிறது, அந்த கசப்பும் எனக்கு இனிக்கிறது.


ஒரு விதமான கழிவிரக்கம் இருந்தாலும் இன்னும் எங்கோ நான் நானாக இருந்து வருகிறேன். புது முயற்சி, புது மாற்றம், புது நட்பு என்று எதிலும் புதிதாய் தேடும் நான் புது பயணத்திற்கு மட்டும் ஏன் யோசிக்கிறேன்?? யோசனை எல்லாம் யோசனையாகவே போய்விட மட்டுமே முடியும்.
நாளை மேற்க்கொள்ள போகும் புது பயணத்தில் வரப்போகும் சவால்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள மனது தயாராகிறது.


இந்த நாட்களில் உன்னை எண்ணாமல் என்னையே எண்ணிக்கொள்ள வில்லை, எதையும் எண்ணாமல் இல்லத்தை இல்லாததாய் நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கிறேன்.

மனதின் உள்ளே ஒரு வித வலி இருப்பது தெரிந்தாலும் அதை மறந்து இருக்க முயற்சி செய்வது எல்லோரையும் போல நானும் செய்வேனென்று நினைத்தாயா?
எதையோ எழுத வேண்டி வந்து எதையோ எழுதியுள்ளேன். குழப்பத்தில் எப்போதும் தெளிவு பிறக்கும் இப்போதும் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வடநாடு புறப்படுகிறேன்.

Monday, October 12, 2009

மறுபடியும் நான்

எதனை நாள் ஆகிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன், வலைப்பதிவிற்கு வந்து பின்னர் சிறிது இடைவெளி விட்டு இப்போது பெரிய இடைவெளி விட்டிருக்கிறேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை, வேலைப்பளு என்று சொல்லலாம் ( ஆனால் அது பொய் என்று என்னாலேயே நிரூபிக்க முடியும்) எழுத மனம் இல்லை என்று சொல்லலாம் ஆனால் அதுவும் ஏற்க்கத்தக்கது அல்ல.. சோம்பேறித்தனம் என்றால் அது மிக சரியான பதில்.

என்று என்னை விட்டு இந்த சோம்பல் போகுமோ என்று தெரியவில்லை அன்று மறுபடியும் என்னை எழுத்து உலகில் பார்க்கலாம். பெருசா எதையும் எழுதி கிழிக்கவில்லை ஆனாலும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்த சில விசயங்களில் எழுத்தும் ஒன்று. சோகமாக இருக்கும் தருணங்களே நான் எழுத தூண்டும் தருணம், மீண்டும் ஒரு சோகம் என்னை தாக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது