Tuesday, December 29, 2009

மாலை நேரத்து உளறல்கள்


ஏன்இந்த கேள்வி ஒருவனை துளைக்கவும் செய்யும்  துணிச்சலை  அளிக்கவும் செய்யும்எனக்கு எதைக்கொண்டு வந்தது என தெரியவில்லைனால் ஏன் என்றகேள்விமட்டும் மனதில் வந்துகொண்டே  இருக்கின்றது...


ஏன் நான் இப்படி இருக்கின்றேன்விடை தெரியா கேள்விக்கு விடையை கண்டு பிடிக்க தேடலை துவக்கிய நான் இப்போது அந்த தேடலையே தேடுகிறேன்.

தொலைந்து போனவை காலத்தால் மறக்கப்பட்ட மகிழ்ச்சி மட்டும் அல்ல மகிழ்ச்சியை கொணர்ந்த காரணிகளான முயற்சியையும்.

உங்களுக்கு தெரியாது என்னை எது ஆள்கிறது என்று ஆனால் என்னால் சொல்ல முடியும் என்னிடம் எது இல்லை என்று இல்லை என்று சொன்னால்சிரிக்கிறீர்கள்இருக்கு என்று சொன்னால் மகிழ்கிறீர்கள் ஆனால் இல்லாததை இல்லை என்று சொல்லாமல் இருக்கு என சொல்லி இருவரையும் ஏமாற்றவிரும்பவில்லை நான்.

உங்களுக்காக வாழும் என் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாய் பார்க்கலாம் ஆனால் என்னையும் பார்க்க சொன்னால் எப்படி   பார்ப்பதுஎப்படி சொல்வது என் மகிழ்ச்சிஎன்பது உங்கள் வருத்தம் என்று?


குழப்பத்தில் தானே மீன் பிடிக்க முடியும் என என்னுள் பிடிக்க ஏதும் இல்லைஇது பயமாமுயலாமையாமுயற்சியின்மையாஅயர்ச்சியாஇல்லை என்னவென்றுதெரியாத ஒரு சூனியமா?  புள்ளி இல்லாத ஒரு முற்றுப்புள்ளி  போல இருக்கிறது வாழ்க்கை,  உடனடித்தேவை ஒரு முற்றுப்புள்ளி ஆனால்  அதைச்சுற்றி கோலம்போட வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.


சுயமா நலமா என வருகையில் சுயம் என தெரிந்தும் நலம் என சொல்ல அனுமதிக்கப்பட்டேன்என்ன சொல்ல என் சுயத்தை விட மற்றவர் நலம் முக்கியமாயிற்றே.சமூகம் எதை வைத்து அவர்களை தீமாணிக்கிறது?  ஆயிரம் பேர் சொல்லலாம் சமூகத்திற்காக வாழ்வை மாற்றாதே என்று ஆனால் ஆயிரம் பேர்சொன்னால்அவர்களும் சமூகம் தானேஆனால் ஒருவரும் சொல்லவில்லையே வாழ்வை  இழந்துவிடு  என்று அதற்காக அவர்கள் சமூகம் இல்லையா?

கேள்விகள் துளைத்தாலும் கேள்விகளை மட்டுமே சுமந்து  செல்கிறேன் உங்களை போலவே குழப்பத்துடன்.
பதில் கிடைத்தால் கண்டிப்பாக முற்றுப்புள்ளியுடன்  மட்டுமே கிடைக்கும் என நம்பிக்கையோடு!

Friday, December 18, 2009

அரசு விரைவு பேருந்துகள் விபத்து

நம்ம சதீஸ் ராஜின் இந்த பதிவை படித்தவுடன் எழுத தோன்றியது


இரண்டு விபத்தை பற்றியும், அரசு விரைவுப்போக்குவரத்து பேருந்துகளை பற்றியும் எழுதிருந்தார்.


முதலில் விபத்தை பற்றி:
இந்த விபத்தில் முதல் தவறு: லாரி ஓட்டுனர் மீது, நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்துவது விபத்துக்கு வழிவகுக்கும். வாகனத்தை நிறுத்த அதற்க்குண்டான இடத்திலேயே நிறுத்த வண்டும், நாடு இரவில் சாலையில் ஒரு வாகனத்தை நிறுத்தினால் பின்னல் வரும் வாகனத்துக்கு தெரியும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும்.




வாகனத்தில் அபாய விளக்குகள் இருக்கும், அதை எரிய விட்டிருக்க வேண்டும், ஆபதுக்குரியான சிவப்பு முக்கோணத்தை நூறு மீட்டார் பின் தள்ளி வைத்திருக்க வேண்டும். இதை எதுவுமே பண்ணவில்லை.




நமது நெடுஞ்சாலைகள் மணிக்கு என்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணப்படும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன என சொல்கிறார்கள். என்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் பல டன் எடை உள்ள பேருந்தை நிறுத்த குறைந்தபட்சம் 20 மீட்டர் இடம் வேண்டும்.



ஆனால் விளக்குகளே இல்லாத லாரியை இரவில் பார்க்கும்போது இருபது மீட்டர் தூரமே இருக்கும், மிக சிறந்த பார்வை திறன் உள்ளவர்கள் கூட வாகன வெளிச்சத்தில் முப்பது மீட்டர் தூரம் தான் தெளிவாக பார்க்க முடியும். விபத்து நடக்க இதுவே போதுமான காரணம்.




இரண்டாவது தவறு: பேருந்து ஓட்டுனர் மீது, ஐவரும் அதே தவரைசெய்திருக்கிறார், வண்டி நின்றவுடன் ஆபத்து விளக்குகளை ஒளிர செய்து இருந்திருக்கலாம். அதற்கென்று தனி இணைப்பு இருக்கும் வண்டி அடிபட்டாலும் பாட்டரி இருக்கும் வரை எரியும்.



மூன்றாவது தவறு: பயணிகள் மீது, ஏற்கனவே அவர்கள் வந்த பேருந்து நின்ற வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கும்போது மறுபடியும் அதே வண்டியின் முன்னாள் நிற்பது ஏற்புடையது இல்லை. பெருதுக்கு பின்னல் வரும் வண்டி இதே போல வந்து இடித்தால் என்ன ஆகும் என யோசித்திருந்தால் இப்படி நடந்திருக்க வாயப்பு குறைவு.


நமது நெடுஞ்சாலை விபத்துகள் யாரோ ஒருவரின் அலட்சியத்தால் மட்டுமே நடக்கின்றன.


அரசு விரைவு பேருந்துகள் பற்றி வருவோம்



அரசு விரைவுப்பெருந்துகள் ஒரு காலத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு இருந்தன (எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்)  பின்னர் அவற்றின் பராமரிப்பு படிப்படியாக குறைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது. இதற்க்கு காரணம் பல



எனக்கு தெரிந்து ஒரு பணிமனை மொத்தம் பதினைத்து பேருந்துகளை கொண்டிருந்தது, சென்னைக்கு மட்டும் எட்டு பேருந்துகள்,(காலையில் மூன்று இரவில் ஐந்து பேருந்துகள்) எல்லாமே தினமும் நிரம்பித்தான் கிளம்பும். 1996 இல் பணிமனை மூடப்பட்டது, காரணம் தெரியவில்லை, சென்னை பேருந்துகள் சென்னை பணிமனையுடன் இணைக்கப்பட்டன. இப்போது இரவில் மட்டும் இரண்டு பேருந்துகள் சென்று வருகின்றன, ஆனால் தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நான்காக மாறி பின்னர் மேலும் இரண்டுகூடியுள்ளது. மற்ற அரசு பேருந்துகள் நான்கு.


பேருந்துகளை குறைத்து பணிமனையை மூட பல கோடிகள் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். பேருந்துகள் குறைக்கப்பட்டாலும் அதிகாரிகள் அப்படியேதான் இருக்கிறார்கள், சம்பளம் கொடுக்க வேண்டாமா? வெறும் கலக்சன் பணத்தை வைத்து சம்பளம் மட்டுமே கொடுக்க முடிகிறது. எனக்கு தெரிந்து ஒருமுறை சம்பளம் பனிரெண்டாம் தேதி கொடுத்தார்கள், அதில் ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தனர் பணமுடிப்பாக.


வாகனங்களை பராமரிக்க என்று ஒதுக்கப்படும் தொகை  குறைவு, அப்படியே ஒதுக்கினாலும் அதை யாரை பராமரிக்க செலவு செய்கிறார்கள் என தெரியவில்லை. டீசல் சிக்கனம் செய்ய வேண்டும் என்று புது பேருந்துகளை கொடுப்பதற்கு முன்னை சொல்லி ஓட்டுனர்களை   வருத்தேடுத்தனர், இன்று வரை அரசு விரைவுப்பெருந்துகள் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போகாது காரணம் டீசல் பம்ப்பை லாக் செய்து வைத்துள்ளனர். மற்ற பேருந்துகள் ஆறு மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை இவை ஒன்பது மணி நேரத்தில் கடக்கின்றன


ஒரு வருடத்திற்கு முன்னை அரசு விரைவ்வு பேருந்துகளை மூடிவிடலாம் என்று தீர்மானிக்கும்போது ADMK பக்கம் இருந்துகுரல் வந்தது உடனே திட்டம் கைவிடப்பட்டது ஆனால் அதற்கு முன்னாள் பூர்வாங்க வேலைகள் நடந்து முடிந்து ஒரு பணிமனையில் இருந்த இரண்டு ஏலக்ட்ரிசியனை வேறு பக்கம் மாற்றி விட்டனர், திட்டம்கைவிடப்பட்டவுடன் நான்கு மாதங்கள் வரை எலக்ட்ரிசியன் இல்லாமல் 800 பேருந்துகள் பராமரிக்கப்பட்டன.


பதினைந்து வருடம் பழைய பேருந்துகள் இன்னமும் ஓடிக்கொண்டு உள்ளன அவற்றில் இருந்து லிட்டருக்கு 5.5km கிடைக்கவைக்க ஓட்டுனருக்கு உத்தரவு. இப்படிப்பட்ட பேருந்தில் சென்று விபத்துக்குள்ளாவது பரவாயில்லை, சமீபத்தில் ஒரு பிரபல தனியார் பேருந்து விபத்துக்குளாகி 16 பேர் பலியாயினர் ஆனால் அது வெளிவரவில்லை, கிரிசனகிரியில் நடந்த விபத்து, பேருந்து ஓட்டுனர் சாலையை கடந்த லாரியை கவனிக்காமல் ஓட்டியுள்ளார் .


மற்ற அரசுப்பேருந்துகள் சுமாரான நிலையில் பராமரிக்கப்படுகின்றன காரணம் அவை லாபத்தில் இயங்குகின்றன, கடந்த இரு வருடத்தில் அரசு விரைவுப்போக்குவறது கழகத்திற்கு எத்தனை MD மாற்றப்பட்டனர் என்று பார்க்கவும். தனியார் பேருந்து முதலாளிகள் பணம் கொடுப்பதாகவும் அதனால் பேருந்துகள் பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் பேச்சு









Tuesday, December 15, 2009

Hard Decision

Still I remember the day you became mine. It was in the late evening on September 5th 2006. I never thought you would become mine, though I admit I was dreaming about you. I am sure it’s my friend manoj who told me about you and introduced you to me. When I was introduced to you I was not in a position to even look at you but I was looking for someone new.

Time passed and my interest towards you started getting increased and finally I was ready to accept you. it was me  who decided and chose you. I had to prepare myself before you became mine and I was mentally prepared for the financial burden I was going to face.

The day you became mine was my friend’s birthday. I still remember that I used to get something on her birthday. It has been three years three months and eight days since our relationship started and we have been together from all my best moments to worst moments of life. After you came to me, I never thought about anyone other than you. You never hesitated to share with me any good, bad, trivial things without worrying about how I would take it.

We came across lot of fights, sometimes you won and created some financial burdens to me but made sure those burdens gave me very good time. I admit I have beaten you to near death many times, misused you, tortured you like anything, but u have never failed me. Time has passed, we are becoming older and sometimes we feel bored to do the same thing or to be with the same person and especially it is hard for me with my character. For a guy who gets bored to everything soon, three years and three months is a great period. Actually you have really beat my character - yes, I don’t want to leave you. You are never boring to me, you are still interesting. I know all those tortures I gave you might have changed you like this.

Its not your age but its me who did all this to you and now its not you who is not helping me - Its me who made you incapable to help me.  You always know my love towards you, you were kind enough to me always till now, but I understand you are not able to be like you had been three years before.


I never cared about what your parents named you but to my entire my life you have always been my pretty petty. 14th December 2009 - it was the day I decided not to torture you anymore, and to set you free. Even though I cannot continue to be with you, I don’t want to hurt you anymore. I decided to start another relationship with someone new but it doesn’t mean that my love towards you has shrunk.

I still love you my W700i, I miss you so much.



My new love is LG KP500, welcome home my dear 500.


பதிவு எழுதினாலே மொக்கை பதிவாகவே வருகிறது

இந்த வார கடைசி மற்றுமொரு வாரமாக இல்லாமல் கொஞ்சம் நன்றாக இருந்தது. வெள்ளிகிழமை இரவு எதாவது சினிமாவிற்கு போகலாம் என்று முடிவு செய்தோம் வழக்கம் போல பார்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் போகவில்லை. ஆர்யா 2 போகலாம் என்று நினைத்தோம் அனால் தியேட்டரில் எப்படியும் தெலுங்கு பையன்கள் தான் இருப்பார்கள் அங்கே  பார்க்க ஒரு சங்கடம்.



இந்த வாரத்தில் மூன்று படம் பார்த்தேன், சா பூ த்ரீ, சொல்ல சொல்ல இனிக்கும் மற்றும் the Tournament. முதல் இரண்டு படத்தையும் என் தோழர்கள் மொக்கை படம் என்று ஒதுக்கியதால் தனியாக பார்க்கும் பாக்கியம் பெற்றேன். அப்படி ஒன்றும் மொக்கை படம் இல்லை, எதையும் ரசித்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்கு இது ஒரு சான்று. இரண்டு படமும் ஜாலியா பார்க்கலாம். அடுத்த ஆங்கில படம் the tournament, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வந்த the condemed படம் போலவே இருந்தது. உலகில் உள்ள திறம் நிறைந்த கொலைகாரகளை கொண்டு ஒரு போட்டி ஆரம்பிக்கபடுகிறது. அதில் எல்லோரையும் கொன்று கடைசியாக உயிரோடு இருக்கும் ஒருவற்கு பத்து மில்லியன் டாலர் கொடுக்கிறார்களாம். இதில் தெரியாதனமாக ஒரு சர்ச் பாதர் வந்து மாட்டிக்கொள்கிறார். இதில் யார் ஜெயித்தார் என்பதுதான் கதை. வழக்கம் போல அடுத்து என்ன என்று எதிர்பார்த்தாலும் விறுவிறுப்பாக சென்றது. படம் முழுக்க ரத்தம் ரத்தம் ரத்தம்.




போன வாரம் ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்து எழுதி முடித்து அதை publish செய்யும் போது error வந்தது அதற்கு மேல் மறுபடியும் எழுத புடிக்காமல் விட்டுவிட்டேன்.



WWE: TLC நேற்று முடிந்து இருக்கும் இன்று இரவு எப்படியும் பார்த்து விட வேண்டும் சின்ன பையனாக இருந்த பொது பார்க்க ஆரம்பித்தது இடையில் சில நாட்கள் விட்டு மறுபடியும் பார்க்க ஆரம்பித்துள்ளேன்.







சென்னையில் OMR சாலையில் வாகனம் ஓடுவோர் தினமும் பாதுகாப்பாக வந்து சேருவது ஏதாவது கடவுளின் புண்ணியம் என்று சொல்லலாம். சென்னையில் வாகனம் ஓட்டி பாருங்கள், உயிர் பயம் என்றால் என்ன என்று தெரியும். காலையில் கிளம்பி அலுவலகதிரு வருவதற்குள் எத்தனை ம உரை கடவுளை வேண்டுவது. சாலையில் ஒழுங்காக வாகனம் ஓடுவது என்பது கொடுமையான விஷயம் போல உள்ளது. தனியார் அலுவலக பேருந்துகள் தொண்ணூறு சதவிகிதம் சாலை விதிகளைமதிப்பது இல்லை. சாலை அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல வாகனத்தை ஓடுகின்றனர். மேலும் அழ்ரசாங்க பேருந்துகள் , இவங்கள சொல்லவே வேண்டாம் திட்ட முதலில் தயங்குவேன் இப்போதெலாம் மனதில் மிக மோசமான முறையில் திட்டுகிறேன். எனது தந்தையும் அரசுப்பேருந்து ஓட்டுனராக இருந்தவர் என்பதால் முதலில் திட்ட தயக்கமாக இருக்கும். இரு சக்கர வாகன ஓட்டிகள், எந்த பக்கம் வருகிறார்கள் என்றே தெரியாது இடது புறத்தில் முந்தி சென்று உடனே பிறகே போட்டு வலது புறம் வருவார்கள், அவர்கல்முந்தி சென்ற வாகனம் எந்த வேகத்தில் வருகிறது என்றெல்லாம் கவலை இல்லை. அடிபட்டால் இந்தியாவில் உள்ள விதிப்படி பெரிய வண்டி தான் தவறு. வண்டி எடுத்து பத்திரமாக திரும்பி வருவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது.


நாளுக்கு நாள் இந்த சமுதாயத்தின் மேல் கேள்விகளை விட கோவம் அதிகமாக வருகிறது. மிகப்பெரிய சுயநல வாதிகளாகி விட்டார்கள் அனைவரும் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். வீட்டை விட்டு வெளிவரும்போதே நான் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கின்றது. ஒரு பொருள் ஓசியில் கிடைக்கிறது என்றால் அதை நான் தான் முதலில் வாங்க வேண்டும் அதனால் மற்றவர்க்கு எந்த இடைஞ்சல் வந்தாலும் கவலை இல்லை போன்ற மனது. எதுவும் ஒருவித விளிம்பு எல்லைக்கு சென்று மறுபடியும் துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும், இந்த சமுதாயமும் விதிவிலக்கு இல்லை என்று தோன்றுகிறது.




நேற்று நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருந்தபோது தோன்றியது. தமிழ்நாடு நன்றாக வளர்ந்து வருகிறது, ஏகப்பட்ட அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று என நண்பன் கூற அனால் அங்கு தமிழர்கள் வேலை செய்வது மிக கம்மி என்றேன்நான். உதாரணத்திற்கு சென்னையில் இருக்கும் எனது எழுவலகத்தில் எனது குழுவில் கூட மிக குறைந்த சதவிகிதமே தமிழர்கள் உள்ளனர் என்றேன், மற்றொரு நண்பனும் அதை ஆமோதித்தான், ஆக இவ்வளவு தொழிற்சாலைகள் வந்தாலும் அலுவலகங்கள் வந்தாலும் ஏன் தமிழர்கள் வேலை செய்வது குறைந்து இருக்கிறது? எல்லோரும் எங்கு இருக்கின்றனர்? அண்டை மாநிலத்திலா?? வேறு நாடுகளிலா?? தெரியவில்லை, ஆனால் தமிழ் நாடு என்பது கூடிய விரைவில் பெயரளவில் தான் . இதை நான் எதிர்க்கவில்லை, அனைவருக்கும் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் வேலை செய்ய உரிமை உள்ளது.தமிழர்கள் எங்கே உள்ளனர் என்பதுதான் என் கேள்வி....


வேட்டைக்காரனை நினைத்தால் சிரிப்பு வராமல் வருத்தம் தான் வருகிறது இப்போதெலாம், பாவம் அவர் விட்ருங்க எல்லோரும் போட்டு ஏன் இப்படி ஓட்றீங்க??


வர வர பதிவு எழுதினாலே மொக்கை பதிவாகவே வருகிறது :(


Wednesday, December 2, 2009