Friday, October 24, 2008

கோரிக்கை

யாருக்காவது ஆறாம் வகுப்பில் படித்த "i Know a Face " என்ற ஆங்கில poem முழுவதும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிவிடவும்.

Tuesday, October 14, 2008

மொக்கை

தீபாவளிக்கு ஊருக்கு போக வேண்டாம் என்று நேற்று முடிவு செய்துவிட்டேன், பல காரணங்கள்.

முதலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, கடைசி நாளில் கண்டிப்பாக பேருந்திலோ இல்லை ரயிலிலோ கிடைக்காது என்பது தம்மாதூண்டு போடுசுக்கு கூட தெரியும். நமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பேருந்தில் டிக்கெட் வாங்கலாம் அனால் அன்று பேருந்தில் செல்வது போல பெரிய கொடுமை இருக்காது. இருக்கைக்குமேல பலரை ஏற்றுவார்கள் அவர்கள் அனைவரும் காலுக்கு அடியில் அமர்ந்து பயணம் செய்வார்கள், நமக்கும் தொந்தரவு மற்றவர்க்கும் தொந்தரவு.

இரண்டாவது காரணம் மின்சாரம் துண்டிப்பு, கரூரில் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது, இதுல ஊருக்கு போய் என்ன செய்வது, நிம்மதியாக தூங்க முடியாது, சிறப்பு திரைப்படம் பார்க்க முடியாது, வெட்டியா உட்கார்ந்து இருக்க இங்கயே இருக்கலாம்ல.

இப்போது ஊர்பக்கம் ஒரே பேச்சு உங்க வீட்ல யு பி எஸ் போட்டாச்சா? என்பதுதான், ஒரு மதத்திற்கு முன்புவரை இல்லை என்றால் இளக்காரமான பார்வை பதிலாக கிடைத்தது அனா இப்போ 15000 ரூபாய் போட்டு அதை மாட்டியவர்கள் இப்போது அதை சார்ஜ் செய்ய மின்சாரம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். இப்போதைக்கு சூரிய ஒளியில் மின்சார விளக்கு பற்றி யோசித்து கொண்டு உள்ளேன். அதுக்கு கொஞ்சம் அதிக செலவு பிடிக்கும் என்று நினைக்கிறேன் அனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

தீபாவளி விடுமுறையிலாவது நிம்மதியாக வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால் மாமாவிடம் தொலைபேசி அழைப்பு வந்தது, திருப்பதிக்கு செல்லலாம் தீபாவளி விடுமுறைக்கு என்று; மறுக்கவும் முடியாது அனாலும் நமக்கு கூட்டம் என்றால் ஒத்துக்கொள்ளாது, என்ன செய்ய ஏதோ தலை ஆட்டி வைத்திருக்கிறேன். அக்காவிடம் பேசும்போது நல்ல மாட்டிகொண்டாயா என்று சிரிக்கிறார் பின்ன, அவர்கள் கூபிடும்போது எனக்கும் கூட்டத்திற்கும் ஒத்துகொள்ளது என்று பலமுறை தவிர்த்திருக்கிறேன். இப்போது அதற்க்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமாம், கடவுளை தரிசிக்க கூட முன்பதிவா? அங்கும் இடமில்லை என்று சொல்கிறார்கள்.

இனி இன்னும் இரண்டுமாதத்திற்கு விடுமுறையே கிடையாது, ரொம்ப கொடுமை.

Friday, October 3, 2008

மனசு சந்தோசமா இருக்கு

மனசு சந்தோசமா இருக்கு, எனக்கு அரசியல்ல பெருசா ஆர்வம் இல்லை, எந்த அரசியல்வாதியையும் புடிக்காது

அனால் அன்புமணி ராமதாஸ்க்கு ஒரு நன்றி, புகை பிடிக்க கூடாது என்று ஒரு தடை, எனது அலுவலகத்தில் மதியம் உணவுக்கு பின்னர் என்னுடன் வருபவர்கள் புகைபிடிப்பார், சிலரைத்தவிர, நாங்கள் எவ்வளவோ சொல்லியும் விட மாட்டாமல், மேலும் எங்களையும் தொந்தரவு செய்தனர் அவர்கள் புகையால்.

இன்று முதல் எங்கள் அலுவலகத்தில் புகை பிடிக்க தடை அனைவரும் பல்லு புடுங்கப்பட்ட பாம்பு போல ஆனார்கள், அலுவலகத்தை விட்டு வெளியே சென்று பிடித்தனர் அனாலும் எங்களை குப்பிடவில்லை, குப்பிட்ட சிலரையும் நாங்கள் ஒதுக்கி விட்டோம்.
நிம்மதி
நண்பன் ஒருவன் மிக அதிகமாக புகை பிடிப்பவன் எவ்வளவோ சொல்லியும் திருந்தாத அவன் இப்போது அடிக்கடி புகை பிடிக்க முடியாமல் தவித்து பின்னர் பான்பராக் போட மாறிவிட்டான் இன்றிலிருந்து.எதோ பண்ணட்டும் எங்களை தொந்தரவு செய்யாதவரை.

புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்யாமல் இருக்கலாம் முடிந்தவரை அனால் அத பண்ண முடியாது.

எனக்கு தெரிந்தவரை பூடான் மட்டுமே புகையிலை தயாரிப்புகள் தடை செய்யப்பட்ட நாடு.

ராமன் தேடிய சீதை-பாத்துபுட்டோம்ல

ராமன் தேடிய சீதை
எனக்கு படத்திற்கு விமர்சனம் எழுதவெல்லாம் தெரியாது அனால் இந்த படத்தை பார்த்தபோது தோன்றியவை இங்கே.

ஒரு ஆணின் பார்வையில் இருந்து பெண் பார்க்கும் படலம் மற்றும் திருமணம் பற்றிய பார்வை.

இந்த படத்தில் நிறைய இடத்தில் இந்த பெண் பார்க்கும் படலத்தை பழைய சினிமா தனமாக எடுத்துள்ளனர். போன், இணையம் என்று வந்து அனைவரும் இந்த வசதிகளை உபயோகிக்க துவங்கிய பிறகும் நேரில் சென்று பெண் பார்த்து முடிவு பண்ணுகிறோம் என்று சொல்வது கொஞ்சம் நெருடல்.
இவரிடம் இருக்கும்குறைகளை பார்ப்பதற்கு முன்னரே தெரிவித்து சம்மதம் வாங்கலாமே?

அனால் படத்தில் திருமண வயதை கடந்து பெண் கிடைக்காமல் இருக்கும் ஆண்களைப்பற்றி அவர்களின் உணர்வுகளை தெளிவாக காட்டியுள்ளார் சேரன்.

பசுபதி இன்னும் நன்றாக செய்திருக்கலாம், பாவம் சேரன் குருடன், திருடனுக்கேலாம் பெண் கிடைக்கிறது அனால் இவருக்கு கிடைக்க வில்லை.
நவ்யா நாயரை பார்க்கும் முன்னரே ஒரு காட்சியில் மணிவண்ணன் நான் வேணும் என்றால் அந்த ஆஸ்பிடல் பொண்ணுகிட்ட பேசறேன் என்பார் சேரன் வேணாம் என்று மறுத்து விடுவார்.

அப்பவே சரி என்று சொல்லி இருந்தால்படத்தில் இருபது நிமிடங்களையும் நிஜத்தில் சில லகரங்களை மிச்சம் பிடித்திருக்கலாம்.

நாயகனுக்கு வேலையே வார இறுதியில் பெண் பார்க்க போவது பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு பைத்தியம் என்று சொல்வது, இப்படியே பொழுதை ஊட்டி இருக்கிறார். அப்பத்தான் அந்த பெண் இவரை வேணாம் என்று சொல்லும் அடுத்த வீட்டில் பஜ்ஜி சாப்பிடலாம். (யாரையம் இது புண்படுத்த அல்ல, பார்க்கும் பொது நண்பர்கள் அடித்த கமன்ட் )
போலீசில் அடி வாங்குவது செம சீன். மொத்தத்தில் இரண்டரை மணி நேரமும் நன்றாக சிரித்து பார்த்த படம் இது, சீரியஸ் படமாக எடுத்தாலும் நண்பர்களுடன் பார்கையில் சிரிப்பு படமாக போய்விட்டது,

இதற்கு முன்னர் பார்த்த சத்யம் படத்திற்கு இது எவ்வளவோ தேவலை. அவர் போலீசு என்று நினைத்தாலே சிரிப்பு வருது இதுல மிரட்டற இடத்துல எல்லாம் கெஞ்சிகிட்டு இருக்காபுல. உபேந்திர வரும் சீன்கள் நன்றாக இருந்தன.

தயவு செஞ்சு இனி எப்படி போலீசு கேரக்டரில் நடிக்க கூடாது என்று இந்தப்படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

ராமன் தேடிய சீதை- இந்த படத்திற்கு இரண்டு டிக்கட் எடுத்து அப்பா அம்மாவை பார்க்க சொல்லி அனுப்ப வேண்டும், பின்ன ஒழுங்கா இப்பவே பெண் பார்க்காமல் விட்டுவிட்ட பின்னர் இப்படித்தான் நானும் அலையனும் என்று தெரிஞ்சுக்க வேணாமா?

அனைத்து பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் :)