Thursday, November 27, 2008

எங்கே போகின்றன நமது செய்தி ஊடகங்கள்

எங்கே போகின்றன நமது செய்தி ஊடகங்கள்,

நேற்று இரவு மும்பை பயங்கரவாதத்தை அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டினர், அப்போது ஒரு தொலைக்காட்சி நமது ராணுவ வீரர்கள் விடுதியின் உள்ளே செல்வதை காட்டினர், அப்போது நடந்த உரையாடல்
செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து கேட்கிறார்கள், நீங்கள் எங்கு நின்று கொண்டு உள்ளீர்கள், விடுதியின் அருகில் செல்ல தடை விதிக்க படுகின்றதா?

பதில்: நாங்கள் விடுதியின் அருகில் இல்லை, எங்களை விலகி செல்லும்படி சொல்லிவிட்டனர் நாங்கள் ஒரு 500 மீடர் தள்ளி உள்ளோம்,
அலுவலகத்தில் இருந்து: ராணுவ வீரர்களை சிறுது அருகில் காட்டும்படி கேமராமேனிடம் கூறுங்கள்.

அவரும் காட்டுகிறார் அப்போது செய்தியாளர், எங்களை எந்த வீரர்களையும் வெளியே நடப்பதையும் நேரடியாக காட்டவேண்டாம் என்று இராணுவம் கேட்டுக்கொண்டு உள்ளது, விடுதியினுள்ளே தொலைக்காட்சி இருக்கலாம் தீவிரவாதிகள் அதிலிருந்து செய்திகளையும் காட்சிகளையும் பார்த்துக்கொண்டு இருந்தால் இருந்தால் நல்லது இல்லை என்று கூறுகிறார்
ஆனாலும் அந்த தொலைக்காட்சி அதையும் வீரர்கள் உள்ளே செல்வத்தையும் காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

இவர்களுக்கு இதனால் பெயர் மட்டும் பணம் சம்பாதிப்பது மட்டுமே இவர்களுக்கு வேண்டுமா??

Tuesday, November 25, 2008

இடது கை பழக்கம்

இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிருபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் எத்தனை அவஸ்தைகள்? எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே தயாராகிறது, இடது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைக்காமல் தயாரிக்கின்றனர்.

பொதுவான இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷ்டப்படும் பொருட்கள் இவை கத்தரிகோல் - எனக்கு தெரிந்து மிக மிக பொதுவான பொருள் இது, இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் கத்தரி இதுவரை நான் இந்தியாவில் பார்த்து இல்லை, தேடி பார்த்துவிட்டேன் இங்கு கிடைப்பதும் இல்லை.

ஹாக்கி மட்டை- இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கான மட்டை இந்த விளையாட்டில் கிடையாது.

கிடார்- வாரணம் ஆயிரம் படத்திற்கு அப்புறம் தெரிகிறது, கிடார் கூட இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதாக கிடைப்பது இல்லை என்று.

பள்ளியில் இருக்கையுடன் அமர்ந்து இணைக்க பட்டு இருக்கும் மேசை, இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது.

உணவு மேசையில் ஏற்க்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே இருக்கும்.

மேசை நாகரீகம் என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களை தவறாக நினைக்க உதவுகிறது.

சீட்டுக்கட்டு விளையாடும்போதும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பிடிக்கும் விதம் அவர்களுக்கு அருகில் உள்ளவர் எளிதாக பார்க்கும் வண்ணம் அமைந்து விடுகிறது.

நமது வீடுகளில் எதாவது விசேச நாட்களில் சாப்பாடு பரிமாறும் வேலை வந்துவிட்டாள் இடது கை பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்த்து விடுகின்றனர், இல்லை எனில் மற்றவர்கள் பேச்சுக்கு ஆளாக வேண்டும்.
இத்தனைக்கும் நடுவில் அவர்கள் சந்தோசமாக இருக்க காரணம் எல்லோரும் இடதுகை பழக்கம் உள்ளவராக இருப்பதில்லையே

Tuesday, November 18, 2008

வாரணம் ஆயிரம் எனக்கு வைத்தது நானூறு ரூபாய் ஆப்பு.

வெள்ளி அன்றே மாயாஜாலில் பார்த்தாயிற்று அனாலும் ஞாயிற்றுகிழமை ஏற்கனவே முடிவு பண்ணியபடி கல்லூரி நண்பர்களுடன் போவது உறுதியாயிற்று.

வெள்ளிக்கிழமை இரவே படம் பார்த்தோம், மொத்தம் சரியாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது. முதல் பாதி கலகலப்பாக சென்றது இருந்தாலும் ஏன் இன்னும் இடைவேளை வரவில்லை என்ற கேள்வி மனதில் வந்து தொலைத்தது. இடைவேளைக்கு பின்னர் படம் கொஞ்சம் நீளம், கெளதம் பேட்டில எல்லாம் சொன்ன மாதிரி இந்த படம் பார்த்த அப்பாவ என்னவோ எவ்வளவு மிஸ் பண்ணினூம் அவர போய் கட்டி பிடிக்கணும் என்றுலாம் எனக்கு தோணல. ஆனாலும் மனசு முழுக்க பையன் சூர்யா இருந்தார்.

இந்த படத்தில் கெளதம் மேனன் தெரியல, அனா சூர்யா படம்முழுக்க தெரியறார். நல்ல நடிச்சு இருக்கிறார்.

அப்பாவ பையன் வி ஆர் எஸ் வாங்க சொல்றார் அப்புறம் அமெரிக்க போறார், நானும் எங்கப்பாவ வி ஆர் எஸ் வாங்க சொல்லி இருக்கேன் பார்ப்போம் யாரையது தேடி நானும் அமேரிக்கா போறேனானு. இந்த காரணத்த சொன்ன விசா குடுக்க மாட்டான் கண்டிப்பா.
மொத்ததுல படம் பார்த்துட்டு வரும்போது மறுபடியும் ஒருதடவ பையன் சுர்யாக்காக பார்க்கணும் என்று தோணிச்சு (இல்லைனாலும் பார்க்கத்தான் போறேன் என்பது வேற விஷயம்)

ஞாயிறு காலை வழக்கம் போல கிளம்பி நண்பர்களை அழைத்துக்கொண்டு ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன், காரப்பாக்கம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற தேள் வண்டி (அதாங்க ஸ்கார்பியோ ) வழி விடாம ஆமை வேகத்தில போனாங்க, திடிர்னு வழி விட்டானே என்று நம்பி வேகமா போன புடிச்சாங்க போலிசு, அதி வேகமா வண்டி ஓட்டினேன் என்று. அதெப்படியோ கண்டிப்பா அவங்க இதையெல்லாம் ஞாயிற்று கிழமை மட்டும் தான் பண்ணுவாங்க ஏன்ன அப்பத்தான் போக்குவரத்து கம்மியா இருக்கும், சாலை எல்லாம் காலியா இருக்கும் நிறைய மாட்டுவாங்க என்று.

வண்டியை தூரமாக நிறுத்தி விட்டு பேப்பர் எல்லாம் எடுத்துக்கொண்டு போய் நிறுத்தியவரை பார்த்தேன், நீங்க நிறுத்துவீங்க என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி உங்க வண்டிய நிறுத்த சொல்லி அடுத்த செக் போஸ்ட்ல சொல்லி விட்டோம் என்றார்.

பின்னர் அதி வேகத்துக்கு கட்டணம் 300 ரூபாய் ரசீது குடுப்போம் என்றார்.சரி என்று கட்ட 300 ரூபாய் எடுத்து குடுத்தேன், ரசீது கொடுக்க சிறிது நேரம் ஆகும், நீங்கள் எங்கு போகிறீர்கள் என்றார், மாயாஜால் போகிறேன் என்றேன், வாரணம் ஆயிரம் படமா என்று அவர் கேட்க ஆமாம் என்றேன், படத்திற்கு நேரமாச்சு என்றால் எதாவது பார்த்து செய்து விட்டு போங்கள் என்றார். எவ்வளவு நேரம் ஆனாலும் ரசீது வாங்கி செல்கிறேன் என்றேன் 5 நிமிடத்தில் ரசீது குடுத்தார், கிளம்பும்போது உங்கள் காட்சிக்கு நேரம் ஆகிவிட்டால் சொல்லுங்கள் அடுத்த காட்சிக்கி டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று கூறி அசத்தி விட்டார், ஆனாலும் கிளம்பி நேரத்துக்கு சென்று விட்டோம்.

இந்த முறை ஆபரேடர் எடிட்டிங் வேலையை சரியாக செய்து இருந்தார், படம் சரியாக இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஓடியது. இரண்டாம் முறை பார்க்கும்போது சில காட்சிகளை தவிர மற்றவை எல்லாம் நன்றாக இருந்தது.
திரும்பி வரும்போது சிக்னல் மீறி விட்டதற்க்காக ஒரு நூறு கட்டியது மனதை உறுத்தியது, ஆக வாரணம் ஆயிரம் எனக்கு வைத்தது நானூறு ரூபாய் ஆப்பு.

கடைசி செய்தி, தியேட்டர் காரங்க எல்லாம் வெவரமா விலை எத்திவிடாங்க, மாயஜாலில் டிக்கெட் 120 ரூபாய் ஆனால் அவர்கள் பாக்கேஜ் டிக்கெட் ஆக மட்டுமே தருவார்களாம், ஒரு டின் பெப்சி மற்றும் சோள பொறி நூறு ரூபாய்,கண்டிப்பாக அதையும் சேர்த்து 220 ரூபாய்க்கு வாங்க வேண்டுமாம். இதை தடுக்க புகார் சொல்ல எங்கு செல்வது தெரியவில்லை

Friday, November 14, 2008

மாணவர்கள் இல்லை ரவுடிகள்

சட்ட கல்லூரி வன்முறையை பற்றி நேற்று பதிவுகளை பார்த்து மட்டுமே தெரிந்துகொண்டேன். இன்று காலையில் நண்பன் அனுப்பிய வீடியோ பார்த்து அதிர்ந்து போனேன்.

மாணவர்களுக்குள் அடிதடி சகஜம் அனால் இது அப்படி இல்லை ஒரு கொலை வெறி தாக்குதல், இந்த பரதேசிகள் எல்லாம் சட்ட கல்லூரி மாணவர்களாம் , இவர்கள் நாளைக்கு வக்கீல்கள், நீதிபதிகள். நிலைமை மோசமாகிக்கொண்டே போகின்றது.

எனக்கு தெரிந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் எல்லோருமே ரவுடிகள் மற்ற கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், மற்றும் பள்ளியிலேயே பொறுக்கிகள் மாட்டுமே இங்கு வந்து படிப்பார்கள், எனது நண்பனின் சகோதரி சட்ட கல்லூரியில் படித்தார் ஆனால் ஆண்டில் பாதி நாட்கள் அவர் வீட்டில் மட்டுமே இருப்பார் ஏன் என்றால் கல்லூரியில் எதாவது ஒரு பிரச்சனை விடுமுறை என்று பதில் சொல்வார்.

அப்போதே தெரியும், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, கீழ்பக்கம் மருத்துவ கல்லூரி விழாவில் இரண்டு சட்ட கல்லூரி மாணவர்கள் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டு அடி வாங்கி சென்றனர், அப்போது அங்கிருந்த காவல் அதிகாரிகள், இவர்களை மாணவர்கள் என்று யார் சொன்னது, எல்லோரும் ரவுடிகள், சந்தர்பத்திற்காக காத்திருக்கிறோம், கிடைத்தால் புளிந்து எடுத்து விடுவோம் என்றனர்,

நேற்று இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லையா? ஏன்யா உன் கண்ணு முன்னாடி ஒருதானை அப்படி அடிக்கிறார்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் கூட உங்களுக்கு மனச்சாட்சி இல்லை? இப்படி அடிக்க எப்படி மனசு வருகிறது, ஏண்டா 20 பேர் சேர்ந்து ஒருத்தனை அதுவும் மயங்கி விழுந்தவனை அடிப்பது என்னடா வீரம் .

இதெல்லாம் பண்ணினால்தான் நாளைக்கு வக்கீல் தொழிலில் கட்ட பஞ்சாயத்து பண்ண வசதியாய் இருக்கும் போல. காவல் துறை கண்டிப்பாக இவர்களில் சிலரை கைதுசெய்யும் ஆனாலும் வழக்கம் போல கடுமையான நடவடிக்கை இருக்காது, பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.
வெட்ககேடு,