Thursday, April 30, 2009

வழக்கம் போல இந்த வாரக்கடைசி செய்க்கிரம் வந்துவிட்டது, இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. வழக்கமாக வார இறுதியில் பதிவு எழுவது ல்லை, அதற்க்கு மாற்றாக இந்த வாரம் எழுதலாம் என்று இருக்கிறேன்.. இந்த வாரம் பட்டியலில் இருக்கும் வேலைகளை முடிக்க வேண்டும். எப்பயும் சோம்பேறியாக இருந்து வீடு முழுக்க குப்பை ஆகிவிட்டது, இனி அதை மாற்ற வேண்டும்.

வாரக்கடைசி என்கிறது வெளியே செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம் எங்கு செல்வது?? எனக்கு தெரியவில்லை அனால் சென்னையிலேயே இருந்தால் பைத்தியம் புடித்துவிடும்.
ஏலகிரி செல்லலாமா என்று யோசிக்கிறேன் ஆனால் இந்த வெயில் காலத்தில் அங்கு ஒன்றும் பெரிதாக இருந்துவிடப்போவதுமில்லை.
இந்த சென்னை ஒரு மொக்கையான ஊர், எங்காவது இரண்டு நாள் விடுமுறைக்கு வெளியே செல்லலாம் என்றால் பெரிதாங்க எந்த இடமும் இல்லை,

நண்பன் பாண்டிச்சேரி கூப்பிடுகிறான் எனக்கு போவதற்கு விருப்பம் இல்லை.
பேசாமல் வீட்டிலேயே இருந்து நல்ல படங்களை பார்த்துக்கொண்டு பொழுது போக்கிற்கு need for speed most wanted விளையாண்டுகொண்டு இருக்கலாம்.
சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எதாவது உருப்படியாய் செய்யலாம் என்று இருக்கிறேன். கார் வேறு சரி செய்ய வேண்டும், பேசாமல் மூன்று நாட்களும் மேக்காநிக்கே கதி என்று கிடந்தது கற்றுக்கொள்ளலாமா?
இந்திய பொழுது மிக நீண்டு கொண்டே செல்கிறது, அலுவலக வேலைகள் முடியவில்லை.

மூன்று நாட்களை வெள்ளிக்கிழமை பசங்க படம் போலாம் என்று இருக்கிறேன், வருபவர்கள் இரவுக்காட்சிக்கு வரலாம்.
சனிக்கிழமை நண்பர்களுடன் மரியாதையாய் ஒரு படம் பார்க்க போகலாம் என்று இருக்கிறோம். நிறைய சிரித்து நெகு நாட்கள் ஆகின்றன.

பெண்களை பற்றிய என்னுடைய எண்ணம்

பெண்களை பற்றிய ஆண்களின் எண்ணங்களை பதிவெழுதிய எனக்கு மறுபடியும் இதே தலைப்பில் எழுத வேண்டிய ஒரு நிலைமை.

பொதுவாக பெண்களை பற்றி நினைக்கும் போதே முதலில் ஒவ்வொருவர் நினைப்பில் வருவது பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலிமையற்றவர்கள், அமைதியானவர்கள், போன்ற மென்மையான, சிறுபான்மையான எண்ணங்களே தோன்றுகின்றன. ஆண்களின் மனதில் மட்டுமல்ல பெண்களின் மனதில் கூட இதே நிலைமை தான்.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகின்றனர், நல்ல செய்தி அவர்களும் வாழ்வில் மேலே வர வேண்டும் என்று ஆனால் நம்மில் எத்தனை பெண்கள் அவர்களுக்கு என்று இருக்கின்ற உரிமைகளை சரியாக பயன்படுத்துகின்றனர்? எங்கும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டே வருகிறது.

பேருந்தில் பெண்களுக்கு என்று தனியாக இருக்கைகள் ஆண்களின் இருக்கையில் அவர்கள் அமரலாம் ஆனால் இடம் காலியாக இருந்தாலும் பெண்களின் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் உடனே பெண்ணுரிமை எண்ணம் தோன்றிவிடும் சிலருக்கு.

வரிசையில் கூட பெண்களுக்கு என்று தனி வரிசை, ஆண்களுடன் சேர்ந்து நிற்க கூடாதாம், இல்லை நிற்க விருப்பம் இல்லையாம்.

கல்லூரிகள், பள்ளிகள் பெண்களுக்கென்று தனி ஏனென்றால் பெண்களுக்கு என்று தனி கல்விக்கூடங்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் மேல் எழும்பி வர முடியும்.நன்றாக் படிக்க முடியும், இப்படி வளரும்போதே இருபாளர் மனதில் இப்படி ஒரு பிரிவு எண்ணத்தை வளர்த்தால் எப்படி??

மகளிர் தினம் என்று வேறு கொண்டாட்டங்கள்.பெண்கள் சிறப்பிதழ்கள், மங்கையர் மலர், அவள் என்று தனி புத்தகங்கள்.

சாலையில் ஒரு பெண் அடிபட்டுவிட்டால் உடனே மக்கள் கருணை பொங்கி விடும். பெண்களும் சளைத்தவர்கள் இல்லை அவர்கள் எங்கெல்லாம் பெண்கள் என்ற பெயரை உபயோகிக்க முடியுமோ அங்கே எல்லாம் உபயோகித்து விடுவார்கள். எனக்கு தெரிந்து சிறு வயதில் சினிமா டிக்கெட் எடுக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடியும்.

இப்பொது விசயத்துக்கு வருகிறேன், ஏங்க இப்படி நீங்களே பெண்கள் என்றால் இலக்காரமானவர்கள், மென்மையானவர்கள் சில வேலைகளுக்கு முன்வர மாட்டார்கள், இல்லை சில வேலைகள் பெண்களுக்கானது அல்ல என்று வரையருத்துக்கொள்கின்றீர்கள்.
என்னைப்பொறுத்தவரை பெண்களை பிரித்து பார்க்கவில்லை, சமுதாயத்தில் பெண்கள் என்றால் பெண்கள் அவ்வளவுதான், அவர்களுக்கென்று எந்த சலுகையும் இருக்கக்கூடாது, பெண்கள் என்றால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிறு சிறு சலுகைகளால் மனதளவில் எல்லா ஆண்களுக்கும் ஒரு எண்ணம் வந்துவிடுகிறது. பெண்ணாக இருந்தால் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும், போன்ற எண்ணங்கள்.

சிறிய நிகழ்ச்சி, அலுவலக பேருந்தில் கடைசி வரிசையில் அமர்ந்ந்தால் முதுகு வலி வருகிறது என்று சில நாட்களாக (மூன்று நாட்களாக) முதல் வரிசையில் அமர்ந்து பயணம் செய்கிறோம், இன்று காலையில் பேருந்துக்கு என்று பொதுவாக உள்ள மேற்பார்வையாளர் கூப்பிட்டு நீங்கள் பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள் முன் இருக்கைகள் பெண்களுக்கு என்று கூறினார்கள். ஏன் என்றால் முன் இரண்டு இருக்கைகள் பெண்களுக்கானதாம். அவர்களுக்கு வேண்டும் என்று பயணம் செய்யும் பெண்கள் மெயில் அனுப்பி எங்களை உட்க்கார வேண்டாம் என்றார்களாம். எனக்கு சிரிப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஏங்கடா எந்த காலத்தில் இருக்கிறீர்கள், பேருந்தில் எங்கு அமர்ந்தால் என்ன என்று கேட்டால் பதில் இல்லை. அவ்வாறு மெயில் அனுப்பிய யுவதிகளை நன்கு தெரியும், என் மனதில் அவர்களை பற்றி இருந்த உயர்வான எண்ணம் தகர்ந்தது. பின்னே என்னை பொறுத்தவரையில் எங்கள் பேருந்தில் வரும் பெண்களில் சுயமான சிந்தனையுடன், சுதந்திரமான பெண்கள் என்று நினைத்திருந்த இருவர் தான் அவ்வாறு கேட்டுள்ளனர்.

ஒரே ஒரு கேள்வி, இதே பெண்கள் சில காலங்களுக்கு முன் வழக்கமாக நாங்கள் அமரும் பின் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர் அப்போது நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அவரவர் விருப்பம் எங்கு வேண்டுமோ அங்கு அமரலாம். எனக்கும் கூட முன் இருக்கையில் அமரலாம் என்று எண்ணம் இல்லை அதென்ன பெண்கள் என்பதால் நாங்க விட்டுக்கொடுக்க வேண்டுமா? அப்படியே அவர்களுக்கு அசவுகரியமாக இருந்தால் எங்களிடம் சொல்லி இருக்கலாம். தெளிவாக சொல்லிவிட்டேன் அலுவலகத்தில் இருந்து எனக்குதனியாக எதுவும் அறிவிப்பு வரவில்லை, நான் எங்கு உட்க்கார வேண்டும் என்பது நான் முடிவு செய்ய வேண்டும். இல்லை அதை மற்றவர் முடிவெடுத்தால் அதை பின்னர் பார்க்கலாம் என்று கூறினேன்.

அப்புறம் இந்த மகளிர் தினம் பெண்களுக்கு என்று ஒரு தினம், அன்று பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த என்னை போன்ற ஆண்கள் எல்லோரும் எதாவது செய்ய வேண்டும் என்று, இல்லை ஒரு மொக்கை பதிவு எழுதி வாழ்த்து செய்ய வேண்டும்.

சில தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கும். அவை என்ன என்றால் கோலப்போட்டி, சமையல் சிறப்பு நிகழ்ச்சி, சிறப்பு பட்டி மன்றம் இன்று இந்த காலத்தில் வீட்டை பராமரிப்பது எப்படி போன்ற மொக்கையான நிகழ்ச்சிகள். இவர்களே பெண்கள் என்றால் இவ்வளவுதான் சமையல் நிகழ்ச்சி,கோலப்போட்டி, அழகுப்போட்டி, மேக் அப் செய்வது எப்படி போன்ற மிக சிறந்த நிகழ்ச்சிகள் மட்டுமே தர வேண்டும் என்று எப்படி நினைக்கலாம். பெண்களுக்கு என்று எதற்கு தனியாக நிகழ்ச்சிகள்? தனியான சமையல் நிகழ்ச்சி போன்று ஒதுக்கி கொடுப்பது எதற்கு யார் இதை முடிவெடுப்பது?? முதலில் இப்படி இவர்களே தனியாக பிரித்துக்கொள்வதை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் பொதுவாக கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பெண்கள் மலர் என்றால் அதில் பெண்களுக்கென்று செய்திகள் இருக்க வேண்டும். சரி ஆனால் அவை எல்லாம் சமையல், அழகு சாதனைகள், கோலங்கள், இவை தவிர்த்து வேறு எதுவும் ஏன் இருப்பது இல்லை, இவைகள்தான் பெண்களுக்கென்று எதற்கு ஒரு வரைமுறை?
எல்லோரையும் குறை சொல்லவில்லை ஆனால் சராசரி பெண்கள் மனதில் சுய உரிமை என்றால் ஆண்களை எதிர்த்து பேசுவது, பெண்கள் குழு அமைப்பது என்ற எண்ணங்களை தவிர்த்து எல்லோரும் சாதாரணம் பாகுபாடுஇல்லை என்ற நினைப்பை எப்போது வளர்ப்பது?

பெண்களை பற்றி தவறாக என்னும் ஆண்கள் அதிகமுள்ள இந்த ஊரில் பெண்களை பற்றி பெண்களே தவறாக எண்ணும் நிலைமையும் இருக்கின்றது, இவர்களே ஒரு வேலி அமைத்துக்கொண்டு அதில் வெளியே வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்.பெண்களே தயவு செய்துகுருகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள், ஆண்களே அவ்வாறு வெளியே வரும் பெண்களை வரவேற்க தயாராக இருங்கள் ஆனால் தயவு செய்து மறுபடியும் அவர்களை வட்டத்துக்குள்ளே தள்ள முயற்சி செய்யாதீர்கள்.

இந்த பதிவு எழுதப்பட்ட நோக்கம் யாரையும் குறை கூறுவதற்கு அல்ல மேலாக குறைகளை தெரிந்து மேலே வருவதற்கு. சொல்ல வந்த முறையில் சொல்ல வந்த கருத்துகளை சரிவர கொண்டு சேர்க்கவில்லை என்றால் மன்னிக்கவும். எனக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்த மட்டுமே இந்த பதிவு, யாரையும் புண்படுத்தவோ இகழ்ந்து பேசவோ அல்ல.

மேற்கூறிய நிகழ்வுதான் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. மிக சிறிய நிகழ்வு ஆனால் என்னுள் இவை எழுப்பிய கேள்விகள் எத்தனை? பெண்கள் என்றால் முன்னாள் உட்க்கார வேண்டும் என்று முடிவு செய்வது செய்தது யார்?

ஆண்கள் என்றால் பின்னால் உட்க்கார வேண்டும், பெண்கள் சொன்னால் உடனே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்க சொன்னது யார்?
எதற்கு பெண்களுக்கு சலுகைகள்?

அவர்களும்படிக்கிறார்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் சிறப்பு சலுகைகள்.

வருமானத்தில் கூட வரி பிடிப்பதில் சலுகைகள்.
சமையல் என்றால் பெண்கள் செய்ய வேண்டும் என்பது யார் முடிவெடுத்தது??
கேள்விகள் ஆயிரம் பதில் ஏதும் இல்லை.

ஒரு சுய புலம்பல் போன்ற பதிவு இது, முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அளவுக்கு பெருசா ஒன்னும் இல்லை

Wednesday, April 29, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-2

பகுதி 1
மனதுக்குள் ஒரு சந்தோஷ நெருப்பூற்று வழிந்து ஓடியது . யோசித்தான், பதில் அனுப்பலாமா? வேண்டாமா?

அனுப்பினா வழிகிறான் என்று நினைத்துக்கொள்வாளோ? அனுப்பனும் என்று மனசு சொல்லுது, வேணாம் என்று அறிவு சொல்லுது எத கேக்கறதுன்னு தெரியாம முழித்தான்.

பதில் அனுப்பலாம் என்றாலும் என்ன அனுப்புவது, மொக்கைய அனுப்பவும்கூடாது. forward msg அனுப்பலாம் என்றாலும் இவன்கிட்ட அப்படி ஒரு sms இருக்கவே இருக்காது. forward msg அனுப்பி பழக்கம் இருந்தாலும் எதாவது ஒன்னு ரெண்டு இவனுக்கும் வரும்.

நெகு நேரம் sms டைப் செய்து அழித்து என்று யோசித்தான். கொஞ்ச வருஷம் முன்னாடிலாம் லவ் லெட்டர் எழுதுவது மாதிரி சினிமால காட்டும்போது ஒரே குப்பையா நாயகனை சுத்தி கிடக்கும், நல்ல வேலை cellphone இருக்கறதால பேப்பர் செலவு மிச்சம் என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு வழியா 'dis s nt the 1st time im getting ths kinda trt msg' னு அனுப்பி வச்சான். அனுப்பிச்சுட்டு ஐயோ அப்ப நமக்கு நிறைய பொண்ணுங்க பிரண்ட்ஸ் இருக்காங்க என்று நெனச்சுகிட்டா? என்று நினைத்து கடுப்பானான்.எதையுமே உறுப்படியா பண்ணாதடா என்று மனதுக்குள் திட்டிக்கொண்டான்.


அவன் அனுப்பிய குறுஞ்செய்தி அவளை கோபப்படுத்தியது.அவள் கேள்விப்பட்டவரை அவன் ஒரு விதமான சீரியஸ் டைப் என்று. இவன் என்னடா என்றால் நம்ம நக்கலடிக்கறான் என்று நினைத்து. ஆமா இந்த சுதா எத்தன தடவ அவனுக்கு treat தரேன்னு சொல்லி ஏமாத்தி இருக்கா , இவகூட இருக்க நம்ம எப்படி அவன் ஒழுங்கா நெனைப்பான் என்று நினைத்தாள். அடுத்த வாரம் கண்டிப்பா treat குடுக்கணும் என்றும் நினைத்தாள்.

ths s d 1st time im sendng dis kinda msg என்று பதில் வந்தது, கதிருக்கு ஏண்டா இப்படி அனுப்பினோம் பாரு இப்ப அவ நாம நெனச்ச மாதிரியே நினைத்துருக்கா என்று கடுப்பானான்.

sry i jus kiddng, i knw am gonna get a gr8 tr8 :) but its true wat i sent, even u can chk with ur frn என்று பதில் அனுப்பினான்,நாளைக்கு சுதாக்கு தெரிந்தாலும் தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்து.

its k but its tru frm dis side 2, also nthg 2 confrm coz i alrdy knw the fact என்று பதில் வந்தது,

ஆக நம்ம பத்தி தெரிஞ்சு வச்சுதான் இருருக்கா போல. மனதுக்குள் ஒரு இசை நிகழ்ச்சியே நடத்தி முடித்திருந்தான், ஆகா நானும் ஒரு பொண்ணுக்கு SMS அனுப்பிட்டு இருக்கேன் என்று மகிழ்ச்சியாய் இருந்தான். முழித்துக்கொண்டே கனவுகண்டான், நண்பர்கள் அனைவரும் சாப்பிட போவது போலவும், அவளும் அவனும் நன்றாக நெருங்கிய நண்பர்களை இருப்பது போலவும், இன்னும் என்ன என்ன கனவுகளோ. அப்படியே தூங்கியும் போனான்.

k gud ngt nd thx 4 d helps again என்று ஒரு குறுஞ்செய்தியை பாத்துவிட்டு ஐயோ gud night சொல்லாம கூட தூங்கிட்டேனே என்று வருந்தினான். உனக்கு பொண்ணுங்க கூட பேசவே தெரியல அப்புறம் எப்படிடா நீ மத்தவங்கள மாதிரி இருக்கா போற, எப்பயும் பொரம பட்டுகிட்டே இருக்கத்தான் லாயக்கு என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்.

காலங்காத்தால msg அனுப்பினா எதும் நெனசுக்குவா அப்புறம் office போயிட்டு அனுப்பலாம் என்று நினைத்து கிளம்பினான்.

அலுவலகத்தில் அன்று ஏனோ தெரியவில்லை சுதாவை காபி குடிக்க கூப்பிட்டன் அதிசயமாய். அவளிடம் என்ன பேசுவது தெரியவில்லை, எதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பின்னர் ஒழுங்கா உன் பிரண்டிடம் treat வாங்கி கொடுத்துடு, நாங்க சும்மாலாம் உதவி செய்ய மாட்டோம் என்று கூறினான்.

உனக்கு வேணும்னா நீ போய் கேட்டுக்க என்று கோவமாய் சொல்லிவிட்டு சென்ற சுதாவை பார்த்து அதிர்ந்து நின்றான். என்ன ஆச்சு நேத்து msg பண்ணினது இவளுக்கு புடிக்கலையோ? இல்ல இவட்ட சொல்லலைனு கோவம் வந்துடுச்சா என்று நினைத்து குழம்பினான்.
கூப்பிட்டான் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இவங்க கிட்ட மட்டும் தான் பேசணும் நு நெனைப்பாங்க அனா இவங்க மட்டும் எல்லோரிடமும் பேசுவாங்களாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கைக்கு வந்தான்.

தொடரும்...

Tuesday, April 28, 2009

கடை புதுப்பிக்கப்படுகிறது

பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிப்போச்சு ஆனாலும் நம்ம கடைய பார்த்த ஏதூ பேருக்கு கடை வச்சுட்டு விக்க தெரியாம இருக்க மாதிரி இருக்கு.
ஆமா இன்னிக்கு நேத்து வந்தவங்க எல்லோரும் அவங்க கடைய நிறைய அலங்கரிச்சு வச்சுருக்காங்க அனா நமக்கு அப்படி எதுவுமே தெரிய மாட்டேங்குது. இந்த blog counter கூட சமீபத்துல இன்னொருத்தர் கடைல இருந்து சுட்டு போட்டு வச்சுருக்கேன்.


எனவே மக்களே நம்ம கடைய renovate பண்ணலாம் என்று இருக்கேன், தங்களால முடிஞ்ச உதவிய செஞ்சு நம்ம கடைய அலங்கரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதைக்கு என் கடைல என்ன என்ன மாத்தனும், இன்னும் என்ன என்ன விசயங்கள சேத்துக்கலாம், இந்த அலங்காரம் செய்யற ஐட்டம் எல்லாம் எங்க எப்படி சேர்க்கணும்னு யாராவது டியுசன் எடுத்தா நல்ல இருக்கும்.

எதோ நாம நட்டு ஸ்பானர் புடிச்சு வளந்தாலும் கம்பியுடரையும் கத்துகிட்டு போலப ஓட்டறோம், அத ஒழுங்கா ஊட்ட வேணாம்??
மக்களே வாங்க உங்க அறிவுரைய, அனுபவத்த, முயற்சிய எதனாலும் சொல்லுங்க. இன்னிய பதிவ எப்படியோ போட்டுட்டோம் அப்பாடா :)

Friday, April 24, 2009

ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் மறுபடியும் சேர்ந்தன (கண்டிப்பாக பிரியாணிக்காக அல்ல)

ஒரு மகிழ்ச்சியில் உடன் இருக்காத நிலையில் நண்பனை விட்டு சிறிது காலம் விலகி இருந்தேன் ஆனால் எனக்கு தெரிந்த வரையில் எங்கள் இருவருக்கும் உள்ளான நட்பு ஒரு வித்தியாசமானது மற்றவர்கள் பார்வைக்கு.

மூன்று வருடத்தில் நான்கு முறை பிரிந்து ஒட்டிய எங்கள் நட்பு, என்ன விசேசம் என்றால் எப்போது பிரிந்தாலும் அதற்கு எதுவும் சண்டை காரணமாக இருக்காது. இரு முறை எங்கள் இருவரின் நலன் கருதியே பிரிந்தோம்,ஒரு முறை பிரிந்தால் மட்டுமே எங்கள் நட்பு பலப்படும் என்பதால் பிரிந்தோம், ஒரு முறை காரணமே இல்லாமல் பிரிந்தோம். சேரும்போது எங்களுக்குள் எந்தவிதமான சங்கடங்களோ கேள்விகளோ இல்லாமல் முன்பு பிரிவதற்கு முன் எப்படி இருந்தோமோ அப்படியே சேருவோம். இப்போதும் அப்படித்தான். என்னிடம் இருந்து அவன் எதை கற்றானோ இல்லையோ அவனிடம் இருந்து நான் கற்றது நிறைய. நல்லதோ கெட்டதோ அந்த தைரியத்தை, தன்னம்பிக்கையை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு என்னுள் விதைத்தவன்.

எனக்கு கஷ்டம் வரும் வேளையில் எல்லாம் நீ என்னுடன் இருந்தாய், இப்போதும் கூட, எனக்கு தெரியும் நீ கண்டிப்பாக கணித்திருப்பாய் எனக்கு உன் அருகாமையும் நட்பும் இப்போது தேவை என்று. உனக்கு நன்றி என்று சொல்லி அந்த சொல்லையும் அதற்க்கு உள்ள மரியாதையையும் காயப்படுத்தவில்லை.

எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தால் கண்டிப்பாக சிலருக்கு ஆற்றாமையும் கோபமும் வரும் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எதிர்ப்புகள் இருந்தால்தான் முன்னேற்றம் சாத்தியம். எதிர்ப்புகளை எதிர்க்க சேர்ந்து வருகிறோம். தடைகள் எப்போதும் எங்களுள் ஒரு விவாதப்போருளே, அதை தாண்ட எத்தகைய பயணங்கள் தேவை என்பதை தீர்மானிக்க என்றுமே நாங்கள் தயங்கியது இல்லை. இருவருக்கும் குறிக்கோள் ஒன்றாக இருப்பினும் அதை அடையும் பாதை வேறாக உள்ளது.அதற்காக என்றுமே நாங்கள் கவலைப்பட்டது இல்லை, அவரவர் பாதை அவரவர்க்கு.

Wednesday, April 22, 2009

நானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன்னது (சங்கமம் போட்டிக்காக)

சிவா கந்தசாமி அண்ணனுடன் சேர்ந்து ஊருக்கு போவது என்று முடிவெடுத்து விட்டான், இனியுமிங்கு வேலை செய்வது என்பது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தான்.என்ன இவர்கள் நாம் படிக்க வில்லை என்பதாலேயே இவர்கள் இப்படி நடத்துகிறார்கள், ஆனால் எனக்கு படிக்க பிடிக்கவில்லை என்பதே உண்மை. கந்தசாமி அண்ணன் கம்பனியிலேயே சூப்பர்வைசர் வேலை இருக்கிறதாம் அதில் சேர்த்துவிடுவதாக சொல்லியிருந்தார்.

சிறு வயதில் இருந்தே அவனுக்கு பாடத்தில் கவனம் செல்ல வில்லை, படிப்பான் ஒரு அம்பது அறுவது மதிப்பெண் எடுத்து தேறுவான், சில சமயம் பெயில் ஆகி விடுவான். கணக்கு என்பது அவனுக்கு வரவே வராதது. எப்படியோ 12 வகுப்பு வரை வந்துவிட்டான். தேர்வு முடித்து காத்திருந்தவனுக்கு பேரிடி வந்தது ஆமாம் அவன் தந்தையும் மாமாவும் பேருந்து விபத்தில் பலி ஆயினர்.

குடும்பத்தையே புரட்டி போட்ட நிகழ்வு அது, அதுவும் இரண்டு குடும்பத்தை, அன்றில் இருந்து சிவா ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தான், கல்லூரி கல்வியை தொலைதூர கல்வியில் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த கடைக்கு வேளையில் சேர்ந்தான், கணக்கு எழுதும் வேலை, வரவுசெலவு கணக்கு எல்லாம் இல்லை ஒரு ஸ்டோர் கீபர் வேலை போல. அது பிடிக்காமல் பின்னர் ஒரு இரு சக்கர வாகனம் சரி செய்யும் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை செய்தான், என்றோ படித்து வைத்த கம்பியுட்டர் வேலை தேடி கொடுத்தது.

அவனுக்கு சர்வீசுக்கு வரும் வாகனத்தை என்ட்ரி போடும் வேலை. என்ட்ரி போட்டு பின்னர் சூப்பர் விசர் சொல்லுவதை சோப் கார்டில் என்டி போடா வேண்டும், பின்னர் மெக்கானிக் எழுதி வைக்கும் பொருட்களை என்ட்ரி போட்டு ஸ்டோருக்கு அனுப்ப வேண்டும்.
சாதாரண வேலை என்றாலும் அவனுக்கு பிடித்தமான வேலை, ஆமாம் மதியமே எல்லா என்ட்ரி வேலையும் முடிந்துவிடும் மதியத்துக்கு பிறகு மற்றவரிடம் பேசி அவர்கள் வேலை செய்வதை பார்ப்பான். பிடித்து போய்விடும். இப்படியே போகும்போது சிறிது சிறிதாக அவனும் வேலை கற்றுக்கொண்டுவிட்டன் ஆனால் அப்போது அவனுக்கு முன்னேற வேண்டும் என்று வெறி இருந்தது அதனால் அவன் அடுத்து ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை சேர்ந்தான், அப்போதுதான் அவனுக்கு இந்த வேலை பிடிக்காமல் இருந்தநேரம் வேலை அதிகம் குறைந்த சம்பளம், அங்கு சர்வீஸ் கொண்டு வரும் கார் diraivargalukku அவனை விட சம்பளம் அதிகம்.

ஒரு நாள் வேலையை முடித்து வெளியே சென்று பேருந்தை பிடித்து வீட்டுக்கு செல்ல நினைத்து பேருந்தில் நின்று கொண்டு இருக்கையில் ஒரு லாரி அவனது பேருந்தை இடிக்கும் போல வந்து நின்றது, பயணியர் அலறிவிட்டனர், இரண்டு ஓட்டுனருக்கும் சண்டை முற்றி பேச்சு தடித்தது.

'ஏண்டா உன் வண்டி அடிபட்டா ரெண்டு உசுருதான் அதிலும் ஒன்னு எப்படியும் எட்டி குதிச்சு ஓடிரும், அறிவிருக்கா இங்க அம்பது உசுரு இருக்குடா, பாத்து வரமாட்டியா' என்று இவனும் பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாய் குரல் கொடுத்தான். யாரும் உதவிக்கு வராத நிலையில் பேருந்து ஓட்டுனருக்கு இவன் குரல் பிடித்து போய்விட அவனிடம் பேசி பழக ஆரம்பித்தார். தினமும் அந்த பேருந்திலேயே கிளம்பி வீடு திரும்பும் அளவுக்கு நட்பு வலுத்தது.

ஒரு விடுமுறை நாளில் வெளியூர் சுற்றுலா செல்ல அவர் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார்.தனியாக செல்வதால் அவனையும் அவர் அழைக்க இவனும் கிளம்பினான். குற்றாலம் சுற்றுலா சென்ற பேருந்து, கல்லூரி மாணவ மாணவியர் இருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அவன் பேருந்தை பற்றி ஓரளவிற்கு அறிந்திருந்தான், அங்கு அந்த பேருந்தில் சில மாற்றங்களை செய்து அழகு படுதியிருந்தான்.சிவாவிற்கு இதெல்லாம் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. முன்னால் உள்ள கிரில்லில் கயிறை மாற்றி மாற்றி கட்டுவது, லைட்டை அங்கங்கு மாடி அழகு பார்ப்பது என்று அழகு படுத்துவான். பேருந்து பயணமும் அவனுக்கு பிடித்த பயணம் ஆகியது, எப்போதும் ஒரு பரபரப்பாக இருக்கும்.

ஒவ்வொரு பயணமும் வித வித மனிதர்களை கொண்டு இருக்கும் , ரயில் பயணங்களை போல இலாமல் ஒரே மாதிரியான பயணிகள் ஏறியவுடன் படுத்து தூங்குவது, கீழ் படுக்கைக்கு சண்டை போடுவது என்று இல்லாமல். எப்போதும் வெளியே வேடிக்கை பார்க்கலாம், இரவிலும் பார்க்கலாம், ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் பேருந்து பயணங்களில். ஜன்னலில் அழும் குழந்தைகள், ஊருக்கு செல்லும் மனைவிகள், வெளியூர் செல்லும் மாணவர்கள் என்று எலோருக்கும் பேருந்து பயணம் என்பது பிடித்தமான ஒன்று. அதுவும் நல்ல ஓட்டுனரும் பேருந்தும் கிடைத்து விட்டால்.

அன்று அப்படியே அந்த கல்லூரி மாணவ மாணவியரை அழைத்து சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர். ஹ்ம்ம் சிவாவிற்கு தானும் படித்திருந்தால் இப்படி தானும் வந்திருப்போம் என்று நினைத்தான். தவிர்க்க முடியாமல் அவனுக்கு தந்தையின் நினைவும், பேருந்து விபத்தும் நினைவுக்கு வந்தது. மனதே சரி இல்லை.அப்போதுதான் அவன் தந்தை அடிபட்ட விபத்து நினைவுக்கு வந்தது.இதுபோல ஒரு சுற்றுலா பேருந்துதான், வேண்டும் என்றே தவறாக வந்து தந்தை பயணம் செய்த வண்டியின்மேல் இடித்து விட்டது. அவன் அன்றிலிருந்து பேருந்து விபத்துகளை பார்த்தாலே ஒரு வித பதட்டத்துக்கு உள்ளாவான்.தந்தைமேல் கோவம் வரும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி ஊராரின் பேச்சுக்கு இடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக சென்று விட்டார் என்று.

அன்றும் அப்படியேதான் திரும்பி வந்தனர்.மாணவ மாணவியர் சந்தோசமாக இருந்தனர், அவனுக்கு தெரிந்து அந்த பேருந்தில் மூன்று காதல் ஜோடிகளும் இருந்தனர். கந்தசாமி அண்ணனிடம் சொல்லியிருந்தான். இதில் 'எத்தனை ஒன்னு சேர போவுதுன்னு யாருக்கு தெரியும்' என்று சிரித்தார் அவர். பேருந்து ஊரை நெருங்கி இருந்தது, ஒரு சிலர் அவரிடம் பேசிக்கொண்டே வந்தனர்,அப்படி ஒருவன் பேசும்போது அடுத்து வரும் ஆளில்லா பகுதியில் நிருந்துங்க அண்ணே வெளியே போகணும் என்று கேட்டான். அவரும் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த கும்பல் வழிமறித்தது. பேருந்தை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க அவர்கள் அடுத்த ஊரில் கலவரம் நடக்குது அதனால் இந்த வழியா போங்க என்று வேறு வழி காட்டினர். அதன் வழியே செல்லும்போதுதான் சிவாவிற்கு உரைத்தது, இந்த வழி அவன் அப்பா இறந்து போன சாலை. கந்தசாமி அண்ணனிடம் அவன் அப்பா இறந்த இடத்தை கூறி அந்த வளைவில் பார்த்து போங்க வண்டி வந்தால் தெரியாது என்றான். அதுபோல அந்த இடமும் வந்தது அவரும் பார்த்துதான் சென்றார்,எதிரே அதுபோலவே ஒரு இரு சக்கர வாகனம். நல்ல வேலை ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாவதை தடுத்து விட்டோம் என்று.

சிறிது தூரம் சென்றிருப்பார்கள் ஒரு பாலத்தின் அருகே வண்டியை நிறுத்தி இயற்கை உபாதையை கழிக்க அந்த பையன் இறங்கினான். சிவாவும் இறங்கி நின்று கொண்டிருக்க, அவர்களை கடந்து ஒரு இஸ்கார்பியொ சென்றது. கந்தசாமி அண்ணனிடம் சொன்னான், ஒரு நாள் அரசியல்வாதி ஆகி இந்த காரை வாங்க வேண்டும் என்று கூறி முடிக்கும் முன், டொம் என்ற சத்தம், அந்த கார் அப்படியே உருண்டது. பாலத்தில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து அவ்வழியே சென்ற அரசியல்வாதி கார் சேதம். இருவர் உயிர் இழந்தனர்.

ஒரு வருடத்தில் நடந்தது: அன்று அந்த காரை பார்த்து சிவா ஓடியிருக்க அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை தூக்கி பின்னால் வந்த காரில் எடுத்து போட்டு அசுர வேகத்தில் சென்று ரத்தம் கொடுத்து காப்பாற்றினான். பின்னர் அப்பழக்கம் அவரிடம் அவனை வேலைக்கு சேர்த்தது, அவனும் சேர்ந்தான், அவரின் வலதுகை ஆகிவிட்டான். அரசியல்வாதியாக இருக்கும் அவர் அவனை அரசியல் வாரிசு என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டான். ஆமாம் அவனும் அரசியல் வாதி இன்று, அதே காரை வாங்கி விட்டான். இந்த வருடம் தேர்தலில் நிற்கிறான். இந்த நாள் நினைத்து பார்க்கிறான், வீட்டுக்கு வரும் வழியில் அவன் பண்ணை வீட்டை சென்று பார்க்கிறான் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அந்த பேருந்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டான். அது இல்லை எனில் அவன் இல்லை இன்று.

சராசரி அரசியல்வாதி ஆகிவிட்ட அவனுக்குள் அவ்வப்போது அந்த சம்பவம் வந்து மனத்தை உறுத்தும், ஆமாம் அன்று பாலத்திற்கு குண்டு வைத்தது அந்த வண்டியில் வந்த இருவர்தான். அவர்களின்மேல் பேருந்தை ஏற்றாமல் தடுத்த சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாகாம தடுத்துவிட்டோம் என்று, இன்றும் அதே நினைத்துகொண்டான் இன்னொரு சிவா உருவாக வேண்டாம் என்று.அவனுக்கும் கொஞ்சூண்டு மனசாட்சி இருக்கும் போல. இன்னும் எவ்வளவு நாளைக்கோ என்று அந்த பேருந்து அவனை பார்த்து சிரித்தது போல இருந்தது அவனுக்கு.

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.

கதிரவன் அழுதுகொண்டு இருந்தான் எல்லாமே வெறுத்து போனது போல இருந்தது, வாழ்க்கையில் எபோதுமே அழக்கூடாது என்று அம்மா சொன்னது நியாபகத்தில் வந்தது ஆனாலும் அழுவதை நிறுத்தவில்லை... மனது துயரத்தில் இருந்தாலும் ஏதேதோ யோசித்தது. கடந்த ஆறு மாதமாக இனித்த வாழ்க்கை ஏன் இப்போது இவ்வளவு நரகம் ஆகிற்று??

அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை ஆனால் கடவுள் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்,

தன்னை மாற்ற வந்தவளாக அவளை அவன் எண்ணவில்லை, அவளை முதலில் ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை, அவளும் கூட இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். சுதாவின் தோழியாக அறிமுகம் செய்யப்பட்டாள் அவள், இரு முறை வணக்கம் சொல்லி சிரித்து இருக்கிறான்.அலுவலகத்தில் அவ்வப்போது சுதாவுடன் பேசுவது வழக்கம், ஒரு நாள் சனிக்கிழமை எதோ வேலைக்காக வெளியே செல்லவேண்டி இருந்தும், என்ன வேலை என்று நினைவில்லை, நேற்று சுதாவிடம் பேசியபோது முடிந்தால் அவள் விடுதிபக்கம் வர சொல்லியிருந்தாள், எங்கோ வெளியே செல்கிறார்களாம் முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். கதிரவனுக்கு இப்படி எல்லாம் சென்று பழக்கம் இல்லை. கல்லூரி முடிக்கும் வரை அவனுக்கென்று எந்த ஒரு நெருங்கிய பெண் தோழி இல்லை, சில பேரிடம் பேசுவான் எப்போதும் யாரையாது ஓட்டிக்கொண்டு இருப்பான் நெருங்கிய தோழர்கள் என்றும் பெரிதாக இல்லை. எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.

முதல் முறையாக சுதாவை பார்க்கலாம் என்ற நினைப்பில் வண்டியை செலுத்தினான், விடுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே அவன் வருவதாக sms அனுப்பிவிட்டு சென்றான். அவன் செல்லவும் அவள் வெளிவரவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் 'இருடா கதிரா' என்று சொல்லிவிட்டு திரும்பினாள், அவளின் தோழிகள் வந்திருந்தனர். அவனிடம் 'கதிரா இது எல்லாம் என் பிரண்ட்ஸ்' என்று சொல்லி அறிமுகம் நடந்தது. நான்கு பெண்கள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் அசிங்கப்படுதிவிடுவார்கள் என்று சொல்லி உடனே விடை பெற்றான். என்னவோ தெரியவில்லை கிளம்பி மறையும்போது திடிரென்று திரும்பி பார்க்கையில் அவள் அவனை பார்த்தது அவனுக்கு தெரிந்தது.

பின்னர் ஒரு நாள் எதோ பேசிக்கொண்டு இருக்கையில் சுதாவிடம் இந்த வாரம் சினிமாவிர்க்கு போவதை கூறினான். இந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொண்டிருப்பான் கதிரவன். ஆமாம் அப்போதுதான் அவள் எங்களுக்கு டிக்கெட் செய்து தா நாங்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். செய்தும் கொடுத்தான்.

அந்த வா(வ)ரமும் வந்தது. இவன் நண்பர்களிடம் அலுவலகத்தில் வேலை இருக்கிறது சென்று விட்டு நேராக படம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தான்.

நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என்று அண்ணாநகருக்கு வண்டியை விரட்டினான். அண்ணாநகரை நெருங்கிய சமயம் அவளை எங்கோ பார்த்தோமே என்று நினைத்து யோசிப்பதற்குள் சுதாவின் தோழி. ஏன் இங்கு கையை பிசைந்துகொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.. பிறகு வேறு ஏதாவது வேலையாக வந்தாளோ என்று தெரியவில்லை எதுக்கு வம்பு வீணா வந்து கடலை போடுறான் என்று நினைத்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து வண்டியை செலுத்தினான். சிறிது தூரம் சென்றிருப்பான் ஏதோ தெரியவில்லை வண்டியை திருப்பி அவளிடம் சென்று என்ன ஆச்சு ஏன் இங்கே என்று கேட்டான். கேட்டுக்கொண்டே இருக்கும்போது அவள் சுதா சொல்லிவிட்டாளா என்று கேட்டாள். அதே நேரம் சுதாவிடம் இருந்து போனே வந்தது. 'கதிரா நீ எங்கருக்க எனக்கொரு உதவி வேண்டும்' என்று இவள் விடிதியில் இருந்து குடும்ப நண்பரை பார்க்க சென்றதாகவும் பேருந்து மாறி ஏறி எங்கோ சென்று விட்டதாகவும் ஆட்டோ பிடித்து திரும்பலாம் என்றால் கைப்பையில் இருந்த பணம் எல்லாம் தொலைந்து விட்டதாகவும் கூறினாள். சரி நான் பாத்துக்கொள்கிறேன் என்றுவிட்டு அவளிடம் திரும்பினான். 'உங்கள விடுதில விட்டுவிடவா' என்றேன் அதற்கு அவள் சரி என்று குழம்பி அவனை பார்த்தாள். அதற்குள் இன்னொரு வண்டி வந்து நின்றது. மற்றொருவன் அதிலிருந்து இறங்கி இங்க நிற்கரியா என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், சுரேஷ் இது கதிரவன் சுதாவின் நண்பன் என்று. சிரித்து கை கொடுத்தேன், மனதில் அவனை பற்றி நல்ல உருவம் இல்லை, சரி வா நான் கொண்டு விடுகிறேன் என்று கூறி வண்டியை கிளப்பினான்.

வண்டியை கிளப்பிவிட்டு நண்பனை பார்க்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான், சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது புது நம்பரில் இருந்து, நன்றி என்று கூறி. ஒருவேளை அவளாக இருக்குமோ என்றுநினைத்து, யாரென்று கேட்கலாமா? அவளாக இருந்து நீ யார் என்றுகேட்டால் தப்பா நினைத்து விடுவாளோ என்று யோசித்தான். மறுபடியும் சுதாவிடமிருந்து போன் கதிர மறுபடியும் ஒரு உதவிடா, என்று சொலிவிட்டு அந்த சுரேஷ் நண்பனுக்கு வண்டி தேவையாம் அதனால் அவன் கிளம்புறான், நீ அவளை நேராக படத்துக்கு கூட்டி வந்துவிடு என்று. சரி என்று சொலிவிட்டு அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு சுரேஷ் நம்பரை வாங்கி அவனிடம் எங்கிருக்கிறான் என்று பேசி அறிந்து கிளம்பினான். அவன் செல்லவும் சுரேஷ் கிளம்பவும் சரியாக இருந்தது. திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அதில் நேராக சத்யம் தியேட்டர் அனுப்பிவிட்டு பைக்கில் பின்னால் சென்றான்.

நண்பர்களுடன் படம் பார்த்தவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவளையும் பர்ர்த்தான். அவளின் தோழிகளை அடைந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்து சிரித்தான். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒரு sms.
மறுபடியும் நன்றி, உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன் என்று. அவனுக்கு அது யார் என்று தெரிந்தாலும் நன்றி எல்லாம் தேவை இல்லை treat வேணும் என்று பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவன் செங்கல் அவனுக்கு அந்த செய்தியை காட்டியது. சரி தருகிறேன் கண்டிப்பாக என்று.

தொடரும்....

பகுதி 2

பி. கு: ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன் எதோ எழுதியுள்ளேன், அடுத்த பகுதியில் முடிக்கிறேன்

Tuesday, April 21, 2009

மூன்று மாதத்தில் உங்களுக்கு உலகில் இடம் இல்லை என்றால்?

இன்னும் மூன்று மாதத்தில் நீங்கள் இல்லை என்றால் என்ன எல்லாம் செய்வீர்கள் என்று ஒரு todo லிஸ்ட் போட்டால் எப்படி இருக்கும். இந்த கேள்வியை இன்று பார்த்த இந்த வலைப்பூவில் பார்த்தேன் அதை பார்த்து எழுதிய பதிவு

கடந்த மாதம் இந்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தால் என்னலன்ன பதில்.

1. Ford Mustang கார் வாங்க வேண்டும்

2. எதாவது ஒருகம்பனிக்கு MD ஆகவேண்டும்

3.குடும்பத்தோடு ஒரு வாரம் ஊர் சுற்ற வேண்டும்

4.ஒரு நெடுந்தூர பயணம் மேற்க்கொள்ள வேண்டும் எனது காரில், அதில் தாஜ் மகாலை பார்க்க வேண்டும்

5.கல்லூரி நண்பர்களை ஒன்றிணைத்து சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

6. Australia மற்றும் Denmark செல்ல வேண்டும் ( டென்மார்க்கில் உள்ள எனது நண்பருடன் ஒரு நாளை கழிக்க வேண்டும் )

7. ஒரு முறையேனும் காதல் பண்ண வேண்டும்

8. ஒரு மாதமேனும் ஏதாவது ஒரு கல்லூரியில் MBA படிக்க வேண்டும்

9. எதாவது ஒரு வாலிபருக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது சாதிக்க சிறு துரும்பையோ கிள்ளி போட வேண்டும்

10. எனது வாழ்வில் என்னால்மறக்க முடியாத அளவுக்கு பணத்துக்காகவும் சொத்துக்க்காகவும் எங்களை துன்பப்படுத்தின எனது ஒரு உறவினரை எனது காலில் விழ வைக்க வேண்டும்

இதுவே இப்போது கேட்டால்

மூன்று மாதத்திற்கு அப்புறமும் இருக்க போராட வேண்டும் என்று பத்து முறை சொல்வேன். ஆமாம் எனது தேவை எனது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் எப்போதும் தேவை. இந்த போராட்டத்திலேயே மேற்கொண்ட பத்து செயல்களையும் அடைந்து அதையும் மீறி பல செயல்களை அடையலாம் ஏன்று நினைக்கிறேன் .

என்ன கார் வாங்குவது??

இன்று பதிவு எழுத வேண்டும் என்று கலையில் எழுந்த உடன் நினைத்துக்கொண்டே வந்தேன். என்ன பதிவு எழுத என்று பெரிதாக யோசனை இல்லை...

மகிழுந்து வாங்குவதை பற்றி எழுதுகிறேன்.

கார் வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள?? நல்ல முடிவு, இரு சக்கர வாகனத்தை விட பாதுகாப்பான வாகனம். வாங்கும்போதே அதன் பராமரிப்பு பற்றியும் தெரிந்துகொண்டால் வாங்கிய பின்னால் வரும் சில மனகஷ்டத்தை தவிர்க்கலாம்.

கார் வாங்கும்போது புதுசாக வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு. முதலில் இருந்தே ஆரம்பிப்பது என்ன சார் வாங்கலாம் என்பது. பலர் இதில் கோட்டை விடுகின்றனர். என்ன கார் வாங்கினால் நனது தேவைக்கு சரியாக இருக்கும் என்று தெரியாமல் எதாவது வாங்கிபின்னால் புலம்புவதை பலமுறை கேட்டிருக்கிறேன்.

முதலில் தங்கள் தேவைகளை பட்டியல் இடுங்கள். உதாரணத்திற்குதங்கள் மாதந்திர உபயோகம் என்ன, தினமும் எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள், எவ்வளவு பயணிகள் பயணம் செய்வீர்கள், நகரத்திற்குள் மட்டுமே ஊடுவீர்கள இல்லை அடிக்கடி நெடுந்தூர பயணம் செல்வீர்களா, மலைப்பிரதேச பயணம் செய்வீர்களா என்று ஒரு பட்டியல் தயார் செய்து அதற்க்கு தகுந்த படி உங்கள் தேவைக்கு உகந்த கார்களை ஒரு பட்டியலாக தயார் செய்து தேர்ந்து எடுக்க வேண்டும்.

சும்மா பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாருதி சுவிப்ட்டு வாங்கிட்டன் அதனால நானும் வாங்கறேன் திரு உங்கள் தேவை அதை விட சிறுசாக இருக்கும் பொது பெருசாக வாங்க கூடாது.

உதாரணமாக, தாங்கள் தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்வீர்கள் அதுவும் நகரத்தில் நெடுஞ்சாலை பயணம் அதிகம் மேற்க்கொள்ள மாடீர்கள் அப்படி செய்தாலும் நெடுந்தூரம் போக மாட்டீர்கள் என்றால் உங்களுக்கு தேவை சிறிய பெட்ரோல் கார் மட்டுமே. உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள் டிசல் கார் இருந்தால் மாதந்திர எரிபொருள் செலவு கம்மி என்று நினைக்க வேண்டாம்.

நீங்கள் மாதம் செல்லும் தூரம் தினமும் ஐம்பது கிலோமீட்டர் என்றால் மாதம் ஆயிரத்து ஐந்நூறு (1500). வார இறுதியில் ஒரு 200 கிலோமீட்டர் அதிகம் செல்விக்றீர்கள் அன்றாலும் மொத்த தூரம் 1700-1800 km . தற்கு மாதம் ஆகும் எரிபொருள் செலவு ஒரு பெட்ரோல் வண்டி சராசரியாக ஒரு லிட்டருக்கு 14 கிலோமீட்டர் கொடுக்கின்றது என்று வைத்தால் மாதம் 125 லிட் எரிபொருள் தேவை அதற்க்கு உண்டான பணம் 5625.

இதுவே டிசல் வண்டி என்றால் ஒரு லிட்டருக்கு சராசரியாக 17 கிலோமீட்டர் கொடுக்கும்.மாதம் ஆகும் எரிபொருள் செலவு 103 லிட்டர். அக எரிபொருள் செலவு 3708.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 1917 ரூபாய்.இப்போது ஒரு பெட்ரோல் காருக்கும் டிசல் காருக்கும் உள்ள விலை வித்தியாசம் சராசரியாக ஒரு லட்சம். ஒரு லட்சத்திற்கான மாத வட்டி 13% விகிதத்தில் கணக்கிட்டால் 1084 ரூபாய்.மீதம் உள்ளது 833 ரூபாய். இதில் நீங்கள் டிசல் காருக்கு ஆகும் பாராமரிப்பு செலவை கணக்கிட்டால் மிஞ்சுவது ஒன்றும் இருக்காது. அதற்க்கு பராமரிப்பு செலவு கம்மியாக ஆகும் பெட்ரோல் காரை நீங்கள் தேர்ந்து எடுக்கலாம். மாதம் கட்டும் வட்டியில் எரிபொருள் போடலாம்.

இதுவே உங்கள் மாதந்திர உபயோகம் 3000 kmக்கு மேல் போகும்போது டிசல் காருக்கு செல்லலாம்.

இது ஒரு உதாரணம் தான் ஆனாலும் இதற்கு மேலும் பல காரணிகள் இருக்கு தங்களின் காரை தேர்ந்து எடுக்க.

இன்று இத்தோடு போதும் நாளை மேலும் சில குறிப்புகளுடன் எழுதுகிறேன்.

எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Monday, April 20, 2009

ஒரு இழப்பும் அதற்கு பின்னாலும்

பணம் மக்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள ஒற்று மரணம் தேவைப்படுகிறது. நண்பர்களாக பழகுவர், உறவினர்களாக பழகுவார்கள், வாடிக்கையாளராக பழகுவார்கள், இனிக்க இனிக்க பேசுவார்கள் அனால் எல்லாம் ஒரு உயிரின் மதிப்பு தெரிந்து அல்ல அந்த உயிரின் மூலமாக அவர்களுக்கு ஆகும் ஆதாயம் பற்றிய மதிப்பு தெரிந்து தான்.

குடும்பத்தின் முக்கிய அங்கத்தை இழந்துவிட்டால் அவரிடம் வியாபார தொடர்பு வைத்திருந்தவர்கள், அனைவருக்கும் உள்ளூர மகிழ்ச்சி இருக்கும். ஒருவர் ஒரு தொழில் செய்து கொண்டிருக்கிறார் மிக குறுகிய காலத்தில் மிக வேகமான வளர்ச்சியில் இருக்கிறார், திடிரென்று அவரை அவர்கள் குடும்பத்தினர் இழந்துவிட அடுத்து நடப்பவை எல்ல்லோரையும் நிலை குலைய செய்கிறது. அவரின் சக தொழில் போட்டியாளர்கள் முடிந்த வரை அவரின் வாடிக்கையாளர்களை எவ்வாறு தன்னிடம் அழைப்பது என்று தொடங்கி எவ்வளவு குழி பறிக்கின்றனர். அலுவலகத்தில் இருந்த கணக்குகளை அந்ந்தந்த வாடிக்கையாளரின் கணக்காளரிடம் பேசி ஒரு கணக்குக்கு இரண்டாயிரம் தருவதாக சொல்லி சை இவர்கலேலாம் மனிதர்களா?? இறந்தவர் வீட்டுக்கு துக்கம் விச்சாரிக்க வரவில்லை என்றாலும் பரவாயில்லை அவரின் அலுவலகத்தை சூறையாட நினைத்தீர்களே .

அவர் செய்து கொடுத்த வேலைக்கான கூலியை கொடுக்க மறுக்கின்றனர் வாடிக்கையாளர்கள். நேர்மையாய் இருக்க எங்களை கத்துக்கொடுத்த அவரின் கொள்கைப்படி அவர் செலுத்த வேண்டிய எல்லா தொகையையும் செலுத்திவிட்டோம், நண்பர்களின் உதவியுடன் அலுவலகத்தை காத்து உரியவரிடம் ஒப்படைத்து விட்டோம். இந்த சூழலில் எந்த ஒரு உறவும் உதவிக்கு வராத நிலையில் நண்பர்கள் உடனிருந்து எல்லாவற்றையும் கவனித்து கொண்டனர். நண்பர்களை ஒரு அளவோடு வைத்திரு என்று சொன்ன குடும்பத்தில் இப்போது அவர்கள் மட்டுமே உதவிக்கு.

இதில் கோயம்புத்தூரில் அவர்க்கு சிகிச்சை செய்த பிரபல மருத்துவமனை இன்னமும் discharge summary கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர், இதற்க்கு முழு காரணம் அவர்கள் தரும் அந்த காகிதத்தால் பின்னாடி ஏதும் தப்பு இருந்து அவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டி இருந்தால்?? ஒரு நோயாளி என்ன காரணம் என்று தெரியாமலே இறந்து விட்டார், பணத்தை கட்டி அவர்கள் கிளம்பும்போது கொடுக்க வேண்டிய discharge summary கொடுக்கவில்லை, இரண்டு நாள் கழித்து கொடுக்கிறோம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதால் நாங்களும் வந்துவிட்டோம்.

மருத்துவர்களின் பிரச்சனைகளை புரிந்து விட்டுகொடுத்து தப்பாயிற்று, ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட மருத்துவரை பார்க்க சென்றால் அவ மரியாதை, இவர்கள் யாரென்று தெரியாதது போல பேசியிருக்கின்றனர். ஒரு நோயாளி காரணம் தெரியாமலே இறந்திருக்கிறார் அந்த நோயாளி சம்பதபட்டவற்றை ஒரு வாரத்துக்குள் மறந்து விடிருக்கின்றனர். பார்க்க சென்றது இரண்டு மருத்துவர்கள் அவர்களையும் மூன்று மணி நேரம் காக்கவைத்து அப்போதும் discharge summary கொடுக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இவர்கள் நினைக்கலாம் மருத்துவமனை பெயர் கெட்டுவிடும் என்று ஆனால் என்ன செய்தாலும் மருத்துவமனை பெயர் கேட்டுவிட்டது.

எங்களுக்கு தெரிந்த எந்த மருத்துவரும் இனி அவர்களுக்கு refer செய்ய மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர். அண்ணா அக்காவுடன் படித்தவர் அவர்களுடன் வேலை செய்தவர் என்று அனைவரும் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர், இப்போது மட்டும் எப்படி பெயர் இருக்க போகிறது, ;பொதுமக்களுக்கு வேண்டும் என்றால் பெயர் கேட்டது இல்லாமல் இருக்கலாம் மருத்துவ துறையில் இருப்பவரிடம் ஏற்கனவே கேட்டுவிட்டது.

இது நாள் வரை மருத்துவருக்கு மருத்துவ மனைகளுக்கு support செய்துவந்தேன் ஆனால் இனிக்கு தெரிந்துகொண்டேன். கார்பொரேட் மருத்துவமனைகள் என்றுமே மாறவில்லை அவர்கள் கொள்ளை அடிக்கும் செயல்கள் தெளிவாக தெரிகின்றது. காய்ச்சல் என்று சென்ற ஒருவர் இறந்து வெளிவருகிறார் அவருக்கு அப்படி ஆக காரணம் என்ன என்று ஆராயவில்லை ஆனால் அவர் பற்றிய அனைத்தையும் ஒரு வாரத்துக்குள் மறந்து விட்டிருக்கின்றனர், நாளைக்கு இதே காரணத்துக்காக வேறு ஒரு நோயாளி வந்தால் எப்படி மருத்துவம் செய்வார்கள்?? மருத்துவ துறையில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு ????

இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நிக நன்றி. இந்த நேரத்தில் உண்மையான அன்புள்ளவர்கள் யார் என்று தெரிந்து கொண்டோம். சிலருக்கு பணமிருப்பதால் செருக்கு இருக்கலாம் இன்று சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கிறேன். இன்றுவரை உங்கள் ஆட்டத்தை ஆடிவிட்டீர்கள் ஆடிக்கொண்டு இருக்கிறீர்கள், இன்று முதல் என்னுடைய ஆட்டத்தை காணப்போகிறீர்கள். என்னுடைய பட்டியலில் சில பெயர்கள் ஏறியுள்ள உங்களுக்கு எந்த விதத்தில் பதிலடி கொடுப்பது என்பதை காலமும் நானும் முடிவு செய்வோம். அதுவரை நீங்கள் உங்கள் வழியில் ஆடிக்கொண்டு இருங்கள்.

எந்த மருத்துவமனை என்று கூறவில்லை, தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தனியாக தொடர்பு கொள்ளலாம்.

எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Wednesday, April 15, 2009

பெண்கள் பற்றிய ஆண்களின் எண்ணங்கள்

இந்த பதிவு முழுவதும் பெண்களை பற்றி ஆண்களின் நினைப்பு பற்றித்தான். எனக்கு தெரிந்து ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணை பற்றி ஒவ்வொரு ஆணும் எப்படி நினைக்கிறான் என்பதை எளிதாக கண்டுபிடித்து முடிந்துவிடுகிறது. உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும், ஆமாம் இந்த உண்மையும் கூட.

எனக்கு தெரிந்து நமது சமூகத்தில் நம்முடன் இருக்கும் ஆண்களில் மிக குறுகிய சதவீதத்தினரே பெண்களை பற்றி ஒரு நல்ல எண்ணம், பார்வை வைத்துள்ளனர். பெரும்பாலானோர் ஒருவிதமான தாழ்வான, மோசமான, அயோக்கியமான பார்வையே கொண்டுள்ளனர். இதில் படித்தவர் படிக்காதவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல்.

இந்த பதிவை எழுத காரணம் எனது இதனை ஆண்டு கால வாழ்க்கையில் இவாறன ஆட்களை பார்த்து பழகி பின்னர் விலகி சலிப்படைந்து ஒதுங்கி இருந்த நேரத்தில் மறுபடியும் ஒரு வெறுப்பு. ஆமாம் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பையன். சிறு வயது இப்போதுதான் பயிற்சியில் இருக்கிறன் ஆனால் நல்ல படிப்பு, அறிவு அதனால் தான் அலுவலகத்திலேயே அவனை மேல்படிப்புக்கு அனுப்புகின்றனர். அவனிடம் ஒரு நல்ல மதிப்பு வைத்திருந்தேன், அவனுக்கும் காதல் இருந்தது, தினமும் அலுவலகத்திலிருந்து செல்கையில் போகும் வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுவான், அவனுக்காக அந்த பெண் நின்றுகொண்டு இருக்கும். அத்தகைய பையனின் எண்ணங்கள் நன்றாக இல்லை, அவன் பெண்கள் மீதான எண்ணங்கள் மிக மோசமானவை. முன்பே சிறிது சிறிதாக அவனின் பேச்சகளில் இருந்து இவனும் சராசரி மனிதன் போல இந்த சமூகத்தின் போக்கினால் மாற்றப்பட்டவன் இருந்தாலும் இந்த படிப்பாலும் பழக்கத்தாலும் அதில் இருந்து வெளி வந்துவிடுவான் என்று இருந்தேன். நேற்று அவன் கூறிய சில பேச்சுக்கள் அவன் எப்போதும் மாறப்போவது இல்லை என்று தெரிந்துவிட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அவன் பேச்சு இருக்கிறது. மறுப்பு கூறி அவன் பேசுவது தவறு என்று சொல்ல முற்பட்டாலும் அவன் எனக்குபுத்தி சொல்கிறான்.

பெரும்பாலான ஆண்கள் பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்கு அடிமை என்ற நினைப்பிலேவே வளர்ந்துவிடுகின்றனர் இல்லை வளர்க்கப்படுகின்றனர். காலம் மாறிவரும் வேளையிலும் இவர்கள் படித்து பெரிய வேலையில் பன்னாடு நிறுவனத்தில் இருந்தாலும் மனதை மட்டும் மாற்றாமல் வைத்துள்ளனர்.

ஒரு பெண் மற்றவர்களை போல ஆண்களிடமும் நன்றாக பேசினால் அது மற்ற ஆண்களுக்கு தவறாக தெரிகிறது. அப்படி பேசாமல் தனியாக சென்றாலும் அதுவும் தவறாக தெரிகிறது.
இவர்கள் பார்வையில் அனைத்து பெண்களும் ஒழுக்கம் கேட்டவர்கள், ஆனால் இவர்கள் வீட்டு பெண்கள் மட்டும் ?????

இப்படி பேசும்போது தங்கள் வீட்டு பெண்களை ஒரு நிமிடம் நினைத்தால் இப்படி பேசும் எண்ணம் வருமா??

தண்ணி அடித்தும் புகை பிடித்தும் கெட்ட பல ஆண்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் அவர்களில் கூட சில பேர் பெண்களைப்பற்றி நல்ல எண்ணம். வைத்திருக்கின்றனர், ரவுடித்தனம் செய்து கல்லூரியில் கெட்ட பெயர் எடுத்த என் சீனியர்கள் பலர் பெண்களை பற்றி நல்ல எண்ணம் வைத்துள்ளனர் ஆனால் நன்றாக படித்து கேட்ட பழக்கமில்லாமல் இருக்கும் பலபேர் பெண்களை பற்றி மோசமான எண்ணங்களை வைத்திருக்கின்றனர்.

உடன் படிக்கும், வேலை செய்யும் பெண்களிடம் நன்றாக இனிக்க பேசிவிட்டு பின்னர் அவர்கள் அகன்றதும் அவர்களை பற்றியும் அவர்களின் அங்க அவயங்களைபற்றியும் மோசமான எண்ணங்களை பேசும் பலரை பார்த்து மனம் வெம்பியுள்ளேன். இவங்களும் திருத்த போவது இல்லை சம்பந்தப்பட்ட பெண்களிடம் ஒரு விதமாக தெரியப்படுத்தியும் பயன் இல்லை அவர்கள் புரிந்து கொள்வதாய் இல்லை. நன்றாக தெரிந்த பெண்ணிடம் இப்படி கூறுகையில் அதையும் அவன் possesiveness வந்து பேசுகிறானென்று தட்டை திருப்பி போட்டு நம்மை காலி செய்து விட்டனர்.

எப்போதும் ஒதுங்கியே இருக்கும் என்னை மனதை மாற்றி மறுபடியும் மற்றவர்களுடன் சகஜமாய் பழக சொல்லி ஒரு நண்பர் வற்புறுத்தினார். ஆனால் இரண்டு மாதத்திலேயே மனது வெறுத்து விட்டது, உண்மையாய் சொல்கிறான் இந்த சமூகம் ஆணாதிக்க சமூகம் மட்டுமல்ல, பெண்களை அற்ப்பமாய்,புழுவாய் மிக கேவலமாய் எண்ணும் ஒரு கேவலமான சமூகம். மெத்த படித்து இந்த வேளையில் வந்தமரும் இவங்களும் இப்படித்தான் இருக்கிறாங்கள். நீங்கலாம் என்னடா படிச்சீங்க?? ஒழுக்கமும்,நல்ல எண்ணமும் இல்லாவிடில் நீ உன்னை மட்டுமே மட்டுமே சந்தோசப்படுத்தி மற்றவரை துயரத்தில் கொண்டு விடுவாய், காலங்கள் கடந்தால் பின்னர் வருத்தங்களே வரும்.


ஒரு சாரர் இப்படி என்றால் இன்னொரு பக்கம் பெண்கள் என்றால் உடனே வந்துவிடும் இறக்கம். வண்டியில் அடிபட்டு விழுந்தாலும், வரிசையில் நின்றாலும், பேருந்தில் நின்றாலும், என்ன செய்தாலும் பெண்கள் அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று. பேருந்தில் ஏறினால் முதல் மூன்று வரிசை பெண்களுக்காம், அடேய் இது எல்லாம் முன்னுரிமை இல்லையடா என்று கத்தலாம் போல இருக்கிறது.விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து வெறுத்து போயாச்சு பாஸு. இந்த பதிவை படிக்கும் பெண்களுக்கு உங்களிடம் பழகும் ஆண்களில் பெரும்பாலானோர் மோசமான எண்ணத்துடனே பழகலாம் எச்சரிக்கையாய் இருங்கள். இந்த பதிவை படிக்கும் ஆண்களுக்கு. நீங்கள் இந்த பதிவில் கூறியுள்ள வகையை சேர்ந்தவராக இல்லாவிடில் வாழ்த்துக்கள், நீங்கள் இந்த மோசமான எண்ணத்துடன் இருபவராயின் உங்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வழி ஏதும் இல்லை.

படிக்கும் பலர் நீ என்ன யோக்கியனா? என்று கேட்க நினைக்கலாம் என்னைப்பொருத்த வரையில் நான் யோக்கியன்தான், மற்றவர் பார்வைக்கு எப்படி வேண்டும் என்றாலும் நான் தெரியலாம், தனி மனித ஒழுக்கத்துடன் என்னால் முடிந்த வரை நேர்மையாகவும் இல்லாவிடில் ஒதுங்கியும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவன். நீ பண்றது தப்பு, நினைப்பது தப்பு என்று தெரியாத அளவுக்கு உன் எண்ணங்கள் இருந்தால் உன்னை விட்டு விலகுவதை தவிர வலி இல்லை, உன்னை திருத்துவது என் வேலை இல்லை, அதை உன் அனுபவம் பார்த்துக்கொள்ளும். இந்த பதிவை படித்து நான் ஒரு பழம், சோம்பு என்று நினைத்தால் அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை.

Tuesday, April 14, 2009

ஐ பி எல் Vs தேர்தல்

எத்தனையோ பேர் இதைப்பற்றி எழுதிட்டாங்க நாமும் எழுதிடுவோம்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வரும், அதுவும் இந்த முறை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வரும் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தெரியும். ஐ பி எல் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு முன்னாடியே இதை முடிவு செய்தாகிவிட்டது. ஆனாலும் நம்ம பணக்கார ஆட்டம் எல்லவற்றையும் மாற்ற துணிந்ததே. ஏங்க தேர்தல்தான் வருதுன்னு தெரியும்தான அப்புறம் எதுக்குங்க ஏப்ரல்ல போய் போட்டிய வைக்கறீங்க?? மத்த வீரர்களோட கால்சீட் கிடைக்காதுன்னு என்றுதான. அப்ப மற்ற நாடுகள்ல என்ன நடந்தாலும் அத மாத்த சொல்ல மாட்டீங்க ஆனா நம்ம ஊர்ல ஜனநாயக கடமை என்று ஒன்னு அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை வருது அத மாத்தனும் என்று நினைப்பீங்க.

அய்யா நீங்க கிரிக்கெட விளையாடலாம் எப்படி வேண்டும் என்றாலும் விளையாடலாம் ஆனா நாட்ட பத்தியும் நாட்டு மக்களை பத்தியும் யோசிக்கணும். போட்டிய தேர்தல் முடிஞ்சப்புறம் மாத்தி வச்சா குறைஞ்சு போய்டுவீங்களா??

ஏங்க போட்டி ஆரம்பிக்கும்போது இளம் இந்திய வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்பாக இருக்கும்னு சொன்னீங்க ஆனா இப்ப பார்த்தா ஒரு அணில இந்திய வீரர்கள் அதும் புதுமுகங்கள் எண்ணிக்கை ஒன்றை தாண்டாது போல இருக்கே?? வெளிநாட்டுகாரன் சம்பாதிக்க எங்க வரி பணத்துல நடத்துற தேர்தல தள்ளியா வைக்க முடியும். நாங்க தொலைகாட்சில பார்த்தால் வரும் வருமானத்த எங்க நாட்டிலேவா செலவு பண்ண போறீங்க? வெளிநாட்டுக்காரனுக்கு விளையாட சம்பளமா தரீங்க. எங்க காச வெளிநாட்டுக்கு கொண்டு போக நாங்க துணை போகனுமா?

எல்லாம் சரிதானுங்க எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கா இருக்கும் ஆனால் தேர்தல் என்பது அதை விட பொழுதுபோக்கு நிறைந்தது. தேர்தலிலும் அனைத்து வித போட்டி பொறாமைகள் விறுவிறுப்பு என்று எல்லாமே உண்டு. வெளிநாட்டில கொண்டு போய் வச்சு வெளிநாட்டுகாறன விளையாட சொல்லிட்டு எதுக்கு இந்திய பிரிமியர் லீக் என்று பேர் வைக்கணும்??

சரி இந்தியா என்ற நாட்டுக்காக விளையாடி இவ்வளவு சொத்த சேர்த்த வீரர்கள் இந்த போட்டிக்காக வெளிநாட்டில் போய் விளையாட போறாங்க. இந்தியால நடக்கற தேர்தல்ல அனைத்து குடிமகனும் ஓட்டு போடுறது தலையாய கடமை, இந்த வீரர்கள் அந்த கடமையை அப்போ செய்ய மாட்டாங்க தானே? ஏங்க இந்தியா பேர்ல விளையாண்டு இவ்வளவு சம்பாதிச்சுட்டு இந்தியாவுக்கு தேர்தல் என்றல் ஓட்டு போட மாட்டீங்க? இதை எதிர்த்து எவனும் கேள்வி கூட கேட்க மாட்டான்.

இனி எதிர் பக்கம் வருவோம்.

மிக பெரிய ஜனநாயக நாடு உலகின் ஐந்தாம் ராணுவம் என்று எல்லாம் சொல்றாங்க ஆனா தேர்தல் சமயத்துல ஒரு விளையாட்டு போட்டிக்கு பாதுகாப்பு வழங்கறது கஷ்டமாம்.

சாதாரண மக்களுக்கே பாதுகாப்பு வழங்காதவங்க எப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கமுடியும்??? இதுக்கெல்லாம் காரணம் பொது மக்கள் தான். எவன் எப்படி போனால் நமக்கு என்ன என்ற மனநிலை தான்.

எனக்கு கிரிக்கெட் விளையாட்டு பிடித்திருந்தாலும் வெளிநாட்டில் பொய் விளையாடுவது பிடிக்கவில்லை, ஓட்டு போடாமல் விளையாடும் இந்த வீரர்கள் இனி இந்தியாவிற்காக விளையாடக்கூடாது என்பது என் நிலை. அப்படி சொன்னால் ஒழுங்காக ஓடிவந்து கடமையை செய்வார்கள் இவர்கள்.

Monday, April 13, 2009

வார இறுதி

இந்த வார இறுதியில் மூன்று படங்களை பார்த்தேன்.

முதலில் fast and furious 4 : இந்த பட வரிசையில் நான்காவது படம். முதல் மூன்றைபோல இல்லை. படம் முழுவதும் செண்டிமெண்ட் காட்சிகளும் பாதி படத்துக்கு வசனங்களும் மட்டுமே வருகின்றன. அடிப்படை கார் வெறியனான எனக்கு கார்கள் வரும் காட்சிகளோ, சேசிங் காட்சிகளோ அதிக இல்லாதது குறை. முதலில் வரும் கடத்தல் காட்சி மிக அருமை.. மூன்றாம் பகுதியே அவ்வளவாக இல்லாமல் இருந்தது நான்காம் பகுதி ஏமாற்றம் அளித்தது. vin diesel மட்டும் மின்னுகிறார் அதுவும் அவர் அந்த muscle காரில் பண்ணும் வீலிங் அருமை.

தற்போது நண்பரின் maruti esteemஐ ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறோம் அதற்கு ஏற்ற கலர் இந்த படத்தில் கிடைத்துவிட்டது. மற்றேபட்ட படி சொல்லிகொள்ளும்படி ஒன்னும் இல்லை.

இந்த படம் தந்த ஏமாற்றத்தில் வீட்டுக்கு வந்து இதன் இரண்டாம் பாகமான 2fast anf 2 furious படத்தை பார்த்தேன். இதை பார்த்து முடித்ததும் தான் படம்பார்த்த ஒரு நிறைவு வந்தது. அந்த கார்களின் custom டிசைனும் அதை டியூன் செய்திருந்த விதமும் அட்டகாசம். அதிலும் முதலில் வரும் ரேசில் அந்த பாலத்தில் பறக்கும் காட்சி. ஹ்ம்ம் அப்பப்ப இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டும். நான்காம் பாகம் போகும்போது நண்பருடைய இரவல் காரில் சென்றிருந்ததால் பத்திரமாக ஓட்டி வந்து சேர்க்கும் வண்ணம் மெதுவாக வந்தோம். பெட்ரோல் வேறு இல்லை அந்த வண்டியில்.

வழக்கம் போல என்னுடைய காருக்கு சில உதிரி பாகங்களை மாற்றி வண்டியை இன்னும் டியூன் செய்யலாம் என்று இருக்கையில் நண்பனின் அவசரத்தால் அடிபட்டு விட்டது, இப்போது அந்த செலவை வண்டியை சரி செய்ய செய்தாகிவிட்டது. எல்லோருக்கும் ஒரு விண்ணப்பம் வண்டியை ஓசி மட்டும் எப்போதும் கொடுக்காதீர் மன(பண) கஷ்டம் வரும்.


சரி நாமும் நல்ல படம் பார்ப்போம் என்று நேற்று shawshank redemption படம்பர்த்தேன், அற்புதமான படம், ஆரம்ப காட்சியில் கோர்ட்டில் நடக்கும் காட்சியை வைத்து படம் ஒரு விசாரணை படம் போல என்று நினைத்தேன் ஆனால் என் எண்ணத்தை முற்றிலும் ஒளித்துக்கட்டியது. பின்னர் நடக்கும் ஜெயில் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் அடுத்து நடக்கப்போவதை மனதுக்குள் அடிக்கடி நினைவு வந்துவிட்டது. . சுரங்கம் அமைத்து தப்பிப்பது பற்றி நினைக்க வில்லை, ஆனால் அந்த சினிமா நடிகை படத்துக்கு பின்னால் என்னமோ இருக்கும் என்று நினைத்தேன். படம் தந்த பாடம் எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர். என்ன அற்புதமான செய்தி. மிக நல்ல படம், எப்போதும் நண்பர்களுக்கு சிபாரிசு செய்யும் அளவிற்க்கு நல்ல படம்.

படத்தில் வரும் ஒரு நல்ல வசனம் "நான் நேர்மையான வங்கி அதிகாரி ஜெயிலுக்கு வரும் முன்னர், அனைத்து திருட்டு தனத்தையும் ஜெயிலுக்கு வந்த பிறகே செய்கிறேன்".

"நான் ஏன் ஜெயிலுக்கு வந்தேன்?? வக்கீல் சரியில்லாததால், இங்கு வந்த அனைவரும் அப்பாவிகள்"

Friday, April 10, 2009

டேமேஜருடனான எனது அனுபவங்கள் பகுதி ஒன்று.

சில நாட்களுக்கு முன் (சில நாட்கள் இல்லங்க மாதங்கள்) சொல்லியது போல இந்த பதிவை ஆரம்பிக்கிறேன், இது ஒரு பதிவோடு முடிந்து போவது இல்லை, எனக்கு நினைவு வரும் போதெல்லாம் அவ்வப்போது ஒவ்வொரு பகுதியாக வெளிவரும்.

இந்த பதிவு எனது டேமேஜருடன் என்னுடைய முதல் அனுபவம். அது என்னுடைய வேலைக்கான இன்டெர்வியு. என்னுடைய பெரிய டேமேஜர் முதலில் என்னை ஒரு மூன்று மணி நேரம் காக்க வைத்தார் (அவரை டேமேஜர் என்று சொல்லக்கூடாது, மானேஜருக்கு அனைத்து தகுதியும் உள்ளது அவர்க்கு) பின்னர் என்னை சில கேள்விகளை கேட்டார். இதற்கு முதல் நாள் வேறு ஒரு இன்டெர்வியு அதற்கு படித்த பகுதிகளில் இருந்து அவர்கள் ஒன்றுமே கேட்கவில்லை ஆனால் இவர்கள் இங்கு நான் அன்று படித்ததை மட்டுமே கேட்டனர், என் வாழ்நாளில் முதல் முறையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி நானே அசந்து போனேன்.( நெசமாதாங்க முதலும் கடைசியுமா இந்த ஒரு முறை தான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிருக்கேன்)

அப்புறம் என்னை இன்னும் ஒரு மணி நேரம் காக்க வைத்தனர் ஏனென்றால் என் டமாஜர் என்னை கேள்வி கேடகணுமாம். அப்போது ஆரம்பித்தது எங்கள் நட்பு.

பெருசா எதும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை ( ஆமா ரெண்டு பேருக்கும் தெரிஞ்சாதான கேக்கறது சொல்றது எல்லாம் ), ஆனா அதுதான் அவனுக்கும் முதல் இன்டெர்வியு என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன். என் ப்ராஜெக்ட் பத்தி கேள்வி கேட்டான். நான் ஒழுங்கா பண்ணின குளிர்சாதன வசதி ப்ராஜெக்ட் பத்தி கேட்டிருந்தா சொல்லிருப்பேன், சும்மாதான இருக்கோம் என்று காசு குடுத்து வாங்கின ரோபோட் ப்ராஜெக்ட் பத்தி கேட்டா??. அவன் எதோ ஒரு பெயர்ல ஒரு கேள்வி கேட்க எனக்கு நீங்க கேட்கறது புரியல என்று சொல்லிட்டேன். அப்புறம் நீ பண்ண ரோபோட்கு கை கால் இருக்கா என்று கேட்டான், நான் அதெல்லாம் பண்ண வசதி இல்ல ரெண்டு வீல் வச்சுருக்கோம் அப்படின்னு சொன்னேன், இன்டெர்வியு முடிஞ்சுது. எனக்கும் வேலை குடுத்துடாங்க. (என் வாழ்நாள் சாதனை)


அடுத்த திங்கள் வந்து வேலைல சேர்ந்த மூணு மணிநேரம் காக்க வச்சுட்டாங்க அப்புறம் கடைசியா எங்க ஆளுகிட்ட சேர்த்து விட்டாங்க, வாழ்க்கைல முதல் வேலை, பேந்த பேந்த முழிச்சுகிட்டு உட்கார்ந்தேன், என்னை எங்க உட்கார வைக்க என்று பெரிய திடமே தீட்டினான், அங்க இருந்தது மூணு சீட்டு அது ஒன்னு ஒரு பொண்ணுக்கு பக்கத்துல இருந்துச்சு, இன்னொன்னு அவனுக்கு புடிக்காதவன் பக்கதுலயாம் அதனால பிரிண்ட் மெசின வேற பக்கம் மாத்திட்டு என்ன அங்க உட்கார வச்சான். (அந்த பொண்ண அவன் அப்போ ரூட் உட்டுகிட்டு இருக்கான் அதான் நம்மள அங்க உட்கார வைக்கலனு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன் )

சிஸ்டம் குடுக்க ரெண்டு நாள் ஆச்சு அதுவரை ரொம்ப கடி. இவன் அப்பப்ப கூப்பிட்டு என்ன பத்தி படிச்சா (என்னது படிச்சவா?? ) கல்லூரி பத்தி நிறைய கேட்ப்பான். இப்படியே வாழ்க்கை ஓடுச்சு

என்னடா மரியாதை குடுக்காம இப்படி அவன் இவன்னு சொல்றான்னு நெனைக்காதீங்க, படிக்க படிக்க புரிந்து கொள்வீர்கள்.

மீதிய அடுத்த பகுதில பார்க்கலாம்

Thursday, April 9, 2009

ஆலோசனை தேவை

பெருமிழப்பை சந்தித்து மீண்டு கொண்டு இருக்கும் எனக்கு தங்களின் ஆலோசனை வேண்டும்.

முக்கிய உறவின் இழப்பை சந்தித்து மறுபடியும் வேலைக்கு வந்து சேர்ந்து ஒரு நாள் ஆகின்றது. இந்த வார இறுதியில் அலுவலக வேளையாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளது, ஏற்க்கனவே போடப்பட்ட திட்டம், இழப்பின் பதட்டத்தில் தவறாக பயணத்தை மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டேன், தற்போது பார்த்தால் வீட்டிற்கு பதினைந்து நாட்கள் செல்ல முடியாது என்று தோன்றுகிறது.

என்னால் இப்போது செய்ய முடிந்தது,

திட்டத்தை ரத்து செய்துவிட்டு வார இறுதியில் வீட்டிற்கு செல்வது.

இல்லை திட்டத்தை செயல்படுத்துவது.

அலுவலக நண்பர்கள் உதவ முன்வரா நிலையில் உடன் வருபவரும் தனியாக செல்ல மறுக்கையில் நான் என்ன செய்ய என்று தெரியவில்லை. என் மனதிற்கு நான் வீட்டினருடன் இருக்க வேண்டும் என்று படுகிறது. ஆனால் இழப்பை மறக்க ஒரு மாற்றம் தேவை என்றும் தெரிய வருகிறது. தங்களால் முடிந்த அறிவுரை ஆலோசனை எதுவாயினும் எனக்கு அளிக்கலாம்.

என்னை முட்டாளாக்கிய கடவுளுக்கு நன்றி

நான் முட்டாளாக்க திட்டம் போட்டேன் ஆனால் கடவுள் என்னை முட்டாளாக்கிவிட்டார். என்ன சொல்வது எனது திட்டம் அனைத்தும் தெரிந்து இருக்கும் போல அதனால் என்னைமுந்திக்கொண்டு திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வெற்றியும் பெற்று விட்ட அவனை என்னவென்று சொல்வது.

நம்பிக்கை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது, இனி நம்பி பயன் இல்லை, கவலை அடைய எதுவுமில்லை, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக்கொள் உனக்கென்று எதுவும் நிரந்தரமில்லை என்பதை ஒரு பெரிய இழப்பின் மூலம் தெரிய வைத்த அவருக்கு நன்றி.

துக்கம் நடந்த வீட்டில் செய்யக்கூடாத சில செயல்களை சொல்கிறேன்.
துக்கத்திற்கு சென்றால் அமைதியாய் இருந்து திரும்புங்கள் என்ன ஆச்சு, எப்படி ஆனது என்று கேட்டு துக்க வீட்டில் உள்ளவரை சங்கட படுத்தாதீர்,

முன்னாடியே பாத்திருக்க வேண்டியது தானே, வேற இடத்தில கொண்டு சேர்த்து பார்த்திருக்கலாம் தானே என்று அறிவு ஜீவி தனமாக பேசாதீர். எவரும் வசதி குறைவான இடத்தில சிகிச்சை செய்ய வேண்டும் என்றோ, இல்லை மெதுவாக சிகிச்சை செய்யலாம் என்றோ நினைக்க மாட்டார்கள்.

இறந்தவரை பற்றியோ அவரின் உடல் நிலையை பற்றியோ தவறான சேதிகளை பரப்பாதீர். பின்னாளில் அவரின் ஆயுள் காப்பீட்டு பணம் பெறக்கூட அச்செய்தி தடையாயிருக்க கூடும்.

இறந்தவரின் நெருங்கிய உறவினரை முடிந்த வரையில் தொந்தரவு செய்யாதீர், அவர்கள் தேறி வரும் நேரம் பார்த்து நீங்கள் சென்று அழுது, அவரை பற்றி பெருமை பாடி மறுபடியும் கஷ்டப்படுத்தாதீர்.

இறந்தவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை பரிதாப பார்வையிலோ, இறக்க பார்வையிலோ பார்க்காதீர்.

இறந்த மூன்றாம் நாளே அவரின் சொத்துகளையோ, பொருட்களையோ விலை பேசி, கேட்டு தொந்தரவு செய்யாதீர்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கின்றது ஆனால் சொல்ல முடியவில்லை, துக்கத்தில் இருந்து வெளிவர அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு வெகு விரைவிலேயே திரும்பினால் உறவினர்களின் ஏளன பேச்சு மனதை புண் படுத்துகிறது. இறந்த நன்கு நாட்களுக்குள் வேலைக்கு செல்கிறார்கள் மற்றும் பல பேச்சு. அதுக்காக மாச கணக்கா அழுது கொண்டு இருக்க முடியுமா?? மருத்துவ மனையில் இருக்கும்போது உதவி செய்ய ஒரு நாய் வரவில்லை, இப்போது பேச வந்துட்டானுக.

இறப்புக்கான காரணத்தை நம்பாமல் மருத்துவமனைக்கு தொலைபேசி அறிய முயற்சித்த உங்களுக்கு மிக நன்றி, இப்படி மற்றவர் விசயத்தில் அதிக அக்கறை காட்டுவது போல எல்லோருக்கும் எதாவது செய்யணும் என்று செய்தால் நன்றாக இருக்கும். நீங்கள் தெரிந்து கொண்ட தவறான காரணத்தை மற்றவர்களுக்கும் தவறாக பரப்பி என்ன புகழை கொண்டீர்கள்?? உங்களுக்கும் கடந்த காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்ப்பட்டது என்பதையும் அதில் இருந்து மீண்டு வர உங்களுக்கு இத்தனை ஆண்டு காலம் பிடித்தது என்றும் தெரிந்தும் அதனை மறந்தது ஏன்?..

இந்த இழப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது ஏராளம், கடவுள் நம்பிக்கையை அசைத்துப்பார்த்து புரட்டி போட்டுவிட்டது. எதிர்பாராத இழப்பின் மூலம் நமக்கு யார் யார் உண்மையான பாசத்துடன் பழகினர் என்று தெரிய வந்து உள்ளது. நண்பர்களே உறவினர்களே உங்களின் உண்மையான முகத்தை காண்பித்ததற்கு மிக நன்றி. இந்த பதிவு யாருக்காகவும் எழுதப்படவில்லை. மீண்டு வர நாளாகும் என்றாலும் அந்த நாளை எதிர்நோக்கி பயணத்தை துவக்கி முன்னேறுகின்றோம்.