Saturday, September 27, 2008

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு பதிவு

நேத்து ஒரு மொக்கை பதிவு போட்டேன், எழுத்துப்பிழை நிறைந்த அதை எனக்கே படிக்க சகிக்கலை

அலுவலகத்தில் புதிய துறைக்கு மாறியதில் இருந்து வேலை அதிகரித்துவிட்டது, பதிவிட நேரம் கிடைக்கவில்லை, அதற்குள்ளாகவே அண்ணன் திருமணம், மற்றும் சில நிகழ்ச்சிகள் என்னை பதிவுலகில் இருந்து வெளியே இருக்கும்படி அமைத்துவிட்டது. இன்றும் பெரிதாக எழுத எதுவும் இல்லை அனாலும் எனக்கு தோன்றியவைகளை எழுதப்போகின்றேன்
சென்னையில் வாகனம் இல்லாமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது, அமாம், அண்ணன் திருமணத்திற்காக எனது காரை ஊருக்கு கொண்டு சென்றேன், அங்கு சிறு விபத்தில் மாட்டி இப்போது வேலைக்காக நின்று கொண்டு உள்ளது, எனது RX-135 திருமணத்திற்கு கிளம்பும் முன்னரே கண்டபடி சத்தம் போட்டு நின்றுவிட்டது, இஞ்சினில் கோளாறு என்று தெரிகிறது, rebore பண்ணி சரி பண்ண வேண்டும் தற்போதைய நிதிநிலைமையில் காரை சரி செய்துவிட்டு வண்டியை சரி செய்யலாம் என்று விட்டுவிட்டேன். எந்த வாகன வசதியும் இல்லாமல் சென்னையில் வெளியே செல்வது மிக கடினம், ஆட்டோ என்ற பணம் தின்னும் இயந்திரம் சென்னையில் உள்ளது அதற்கும் கால் டாக்ஸி என்னும் இயந்திரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்ன பின்னர் வருவது ரசீது கொடுத்து பணம் வாங்கும் ,முன்னர் வருவது எதுவும் குடுக்காமல் பணம் வாங்குவது. கூடிய விரைவில் எதாவது வாகனத்தை சரி செய்து விட வேண்டும்.

ஒரு வரமாக அலுவலகத்திற்கு ஒரு சொகுசான பயணம், அலுவலக பேருந்து எங்கள் வழித்தடத்திற்கு மட்டும் மாற்றி மாற்றி வந்தது, பின்னர் அந்த ஒப்பந்தக்காரர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை பத்து நாட்களாக குளிர்சாதன பேருந்தை இயக்கிக்கொண்டு உள்ளனர். சக நண்பர்கள் வயிற்றில் பொறாமை தீ எழுவது நன்றாக தெரிகிறது, இருந்தாலும் சொகுசான பயணம் மிக விரைவில், சிறுசேரியில் இருந்து வேளச்சேரிக்கு 45 நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.

அண்ணன் திருமணம் முடிந்துவிட்டது, அந்த திருமணத்திலேயே அடுத்த திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர் அனைவரும், குடும்பத்தில் எஞ்சி நிம்மதியாய் இருப்பது நான் மட்டுமே அதையும் விட மாட்டார்கள் போலிருக்கிறது, தைபோதைக்கு அவகாசம் கேட்டு பிழைத்து உள்ளேன். இந்த திருமணத்திலேயே செலவைப்பற்றி ஒரு அபிப்பராயம் வந்துவிட்டது, குறைந்தது 5 லட்சங்கள் இருந்தால் மட்டுமே எதுவும் முடியும் என்ற நிலை வந்துவிட்டது. திருமண செலவுப்பட்டியல் இதோ -புகைப்படம் மற்றும் video - 40000 ரூபாய், சமையல் ஆள்- 30000 மணவறை மற்றும் மற்ற அலங்காரம் 40000 மளிகை- 100000 (இது ஒரு இரவிற்கு செய்ததற்கு மட்டும்) இதுவே திருமனமாய் வைத்தால் 3 வேலைகள் செய்ய வேண்டும் இன்னும் சிலஆயிரங்கள் கூடும். போக்குவரத்து செலவு 25000 ( தங்குமிடம் , பேருந்து எல்லாம் சேர்த்து ) இதையெல்லாம் முடித்து சென்னையில் வீடு புடித்து தங்க வேண்டும் என்றால் குறைந்தது 60000 வேண்டும் வீட்டிற்க்கு அட்வான்ஸ் குடுக்க, இது இல்லாமல் மணப்பெண்ணிற்கு நகைசெய்ய புடவை எடுக்க மற்றவர்களுக்கு துணி எடுக்க என்று மிகப்பெரிய தொகை சென்று விடுகிறது. இதெல்லாம் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் சம்பாதித்து இதைப்பற்றி யோசிக்கலாம் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் பார்த்த படம் பொய் சொல்ல போறோம், நன்றாக உள்ளது, நில ஆக்கிரமிப்பு மோசடி பற்றி அழகாக நகைச்சுவையாக கூறியுள்ளனர். லகே ரகோ முன்னா பாய்க்கு அப்புறம் தற்செயலாக ஒரு இந்திப்படம் பார்க்க நேரிட்டது ROCKON இந்தியே தெரியவில்லை என்றாலும் நன்றாக புரிந்தது, ஏனோ தெரியவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு படமாக அமைந்துவிட்டது. அதில் நடித்தவர் எவெரும் எனக்கு தெரியாது, ஒருநாள் மனது மிக கனமாக இருந்தது, வீட்டில் நண்பர்கள் இந்தப்படத்திற்கு சென்றனர், கடைசி நேரத்தில் நான் ஒட்டிக்கொண்டு சென்றாலும் தனியாகத்தான் இருக்கை கிடைத்தது, இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு ஒரு நன்றி இப்படி ஒரு படத்தை காட்டியதற்கு.

புதுப்பேட்டைக்கு சென்றால் உதிரி பாகங்களாக ஒரு காரையே வாங்கலாம் போல, எனது காருக்கு பாகங்கள் வாங்க சென்றபோது தெரிந்தது புதுப்பேட்டையின் வீரியம், என்ன வேண்டும் என்றாலும் கிடைக்கிறது, விலை உங்கள் பேச்சு சாமர்த்தியம், எதோ பொறியியல் வல்லுனராக விற்பனை பிரிவில் இருப்பதால் பேசி இரண்டு கதவுகளை 5500 ரூபாய்க்கு வாங்க முடிந்தது, புதுசாக வாங்கினால் ஒரு கதவு 9000 ரூபாய், இந்த காரை வாங்கும்போதே சொன்னார்கள் உதிரி பாகங்கள் விலை மிக அதிகம் என்று இருந்தாலும் பாதுகாப்புக்கு கருதி வாங்கினேன், வாங்கியது குறை போகவில்லை, வண்டியை சரி செய்ய எடுத்து செல்லும்போது அங்குள்ள மெக்கானிக் சொன்னது இந்த வண்டியாக இல்லாவிடில் கண்டிப்பாக உள்ளே இருந்தவர்களுக்கு அடிபட்டிருக்கும் என்று. நன்றி எனது பியட் பாலியோக்கு இனி இதை எப்போதும் விற்கும் எண்ணம் இல்லை.

1 comment:

Karthik said...

Dhans,

//தற்செயலாக ஒரு இந்திப்படம் பார்க்க நேரிட்டது ROCKON

Superb movie. Superb Songs.

The lead actor is Farhan akhtar..Director of Dil Chahta Hai, Don. This is his acting Debut..Arjum Rampal & Luke Kenny are also there.