Saturday, January 30, 2010

இன்றும் ஒரு பதிவு

சனிக்கிழமை வந்து ஆபிசில் ஆணி புடுங்கலாம் என்றால் நம்ம நேரம் எதுவுமே வேலை செய்ய மாட்டேன்குது. வந்தது தான் வந்துட்டோம் ஒரு பதிவு போட்டு போய்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன்.


ஆபிசில் யாருமே இல்லை, தனியா உட்கார்ந்து இருக்க கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நண்பர்கள் போய்வந்த கோவா மற்றும் தமிழ் படம்பற்றிய விமர்சனங்கள் பலர் எழுதிவிடுவதால் நான் அதை ஒதுக்கிவிடுகிறேன்.


வார இறுதி எப்ப வரும் என இருக்கிறது வந்தால் உடனே முடிந்து விடுகிறது, என்னைய நியாயம் இது, அஞ்சு நாள் வேலை செஞ்ச ரெண்டு நாள் தான் லீவு தராங்க, இத கேட்க மட்டேன்கரான்கப்பா


இப்பலாம் சினிமாக்கு போகவே புடிக்கல, போன எல்லாம் ஜோடி ஜோடிய வராங்க நமக்கு உள்ள ஒருத்தன் கேட்கறான் ஏண்டா நீ இப்படி தனிய வந்து வயிறு எரிச்சல் பட்டு போற என்று. இனி எங்க நம்ம போய் பொண்ணு பார்த்து தேடி காதலிச்சு, எல்லாம் வேலைக்கு ஆகாது, வீட்ல பாக்கற பொண்ண கட்டிக்கிட்டு ஜோடிய வர வேண்டியதான். நிச்சியம் பாணின ஒரு ஆறு மாசம் இடைவெளி கொடுத்தாங்கன நாமளும் லவ் பண்லாம்.


வேளச்சேரி பக்கம் வந்தா புதுசா ஆரம்பிச்சு இருக்க ஹோட்சிப்ஸ் கடைதான் எல்லோருக்கும் தெரியும் போல, எப்ப பர்தாளும்கூடமவே இருக்கு, வேளச்சேரில எந்த கடை ஆரம்பித்தாலும் கூடமைடுது, பசங்க எத பத்தியும்கவலபடாம ஜோடிய வந்து சாப்பிடறாங்க. குடுபத்தோட கூட வராங்க. ஏங்க நான் கேட்கறேன் நீங்க யாருமே வீட்ல சமைக்க மாட்டீங்களா ?, எப்ப பார்த்தாலும் ஹோட்டல்க்கு போன கூட்டம் வெயிட் பண்ணி சாப்பிடவேண்டி இருக்கு, எங்கள மாதிரி பாச்சலர்ஸ் எங்க போறது??


நண்பர்கள் எனக்கு அறிவுரை வேற சொல்றாங்க நீ கார்க்கு நிறைய செலவு பண்ற என்று, அவங்க தன காதலிக்கு செலவு பண்றதும், குடிக்கு செலவு பண்றதும் விட நன் குறைவாதான் பண்றேன், இத ஏலம் சொல்ல முடியல, சில மதங்களுகுமுன்னடி எதுக்கோ பார்ட்டி என அயிந்து பேர் சென்று ரூபாய் 6000க்கு குடித்துவிட்டு வந்தனர், ஆனால் நான் 2000 செலவு செஞ்சு ஊருக்கு போனால் எனக்கு அட்வைஸ். நன் என் காரை காதலிக்கறேன் அதற்கு செலவு பண்றேன் அட்லீஸ்ட் அதாவது நான் சொல்றத கேட்குதே :)


நண்பர் பிரேம்குமார் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகுது ஏன்னு தெர்ல, யாரது சொல்லி எழுதவச்ச நல்லா இருக்கும்.


விட்டு போன தொடர்களை எல்லாம் மறுபடியும் எழுதலாம் எனநினைக்கிறேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் மறுபடியும்

3 comments:

தராசு said...

ஒழுக்கமா வீட்ல படுத்து தூங்க வேண்டியதுதானே, சும்மா ஆணி புடுங்க வந்தேன், புல்லு புடுங்க வந்தேன்னு சொல்லிகிட்டு.

Karthik said...

rofl post.. :D :D

prem is still on jet lag it seems..

DHANS said...

@ தராசு
என்ன பண்றதுங்க உங்க ஒழுக்கம் எல்லாம் நமக்கு வர மாட்டேன்குது

நன்றி கார்த்திக், பாக்கலாம் எப்ப எழுந்து வராருன்னு