Thursday, March 8, 2012

அட போங்கப்பா

நமது பதிவர்களில் எல்லோரும் எதாவது ஒரு கட்சியை சார்ந்தவராகவே உள்ளனர் ஒரு சிலர் இல்லை கட்சியா? அரசியலா? என்று கேட்கும் அளவில் உள்ளனர், யாரும் நடுநிலையாக ஒரு கருத்தை சொல்வதும் இல்லை, நானும் கூட. நடுநிலை என்று நானே சொல்லிக்கொள்வது தவறு.



ஆனால் சமீபகாலமாக வரும் பதிவுகளில் அதுவும் மின்வெட்டை பற்றி வரும் பதிவுகளில் இப்பொதுள்ள ஆட்சியில் மின்வெட்டை பற்றி கவலைப்படாமல் ஏதோ இருப்பது போல எழுதுவது தான் வேதனை அளிக்கிறது. இப்போது ஏன் தேர்தலுக்கு முன்பிருந்தே ஆட்சிக்கு வர தகுதி இருந்த கட்சிகள் அனைத்துக்கும் தெரியும் தமிழகத்தின் மின் நிலை, அதில் ஆட்சியில் இருந்த கட்சிக்கு மிக தெளிவாக தெரியும் நிலை என்ன என்று.

எதிர்க்கட்சி ஒன்று இன்னும் மூன்று மாதத்தில் மின்வெட்டை நிறுத்தி விடுவோம் என்று கூறினால் நம்பிவிடுவீர்களா? ஆட்சியில் இருக்கும் கட்சி ஏன் அப்போது சொல்லவில்லை? அவர்களே எப்போது மின்வெட்டு நிறுத்தலாம் என்பதை மற்றவர்களை விட அதிகமாக தெரிந்தவராக இருப்பார்கள் ஆனால் எந்த பிரசாரத்தின்போது அவர்கள் மின்வெட்டு இருப்பதை ஒத்துக்கொள்ளவும் இல்லை அதை தீர்ப்போம் என உறுதி கூறவும் இல்லை.


எதிர்க்கட்சி அவ்வாறு உறுதி கூறினால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற கூறுகின்றனர் என்பது பலருக்கும் தெரியும், ஏன் அப்போதே பதிவிடுவது தானே உங்களால் முடியாது என்று?? அப்போது இருந்துவிட்டு இப்பொது குறை கூறுவதில் பயன் இல்லை, எந்த கட்சியாக இருந்தாலும் இன்றைய மின்வெட்டு தவிர்க முடியாதது, மேலும் மின்வெட்டை தவிர்க்க இரண்டு கட்சிகளுமே தகுந்த நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருக்கும், அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் கண்டிப்பாக மின்வெட்டு நிலைமை ஓரளவிற்கு சரி செய்யப்பட்டு இருக்கும், ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் மின்வெட்டு இருந்தால் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என.

கட்சி சார்பாகவோ, இல்லை தமக்கு பிடிக்காத தலைவரை தூற்றவோ இல்லாமல் நடுநிலையாக நடந்த நல்லவற்றை பாராட்டாமல் இருப்பது தவறு. நூலக மற்றம், சமச்சீர் கல்வி போன்றவற்றில் தவறாக கையாண்டு இருந்தாலும் நில அபகரிப்பு, டிஎன்பிசி தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை போன்ற நல்லவைகளும் இருக்கின்றன.




சதா ஆட்சியில் இருக்கும் கட்சியை தூற்றியும், என்னமோ எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்காது என்பது போலவும் வரும் பல பதிவுகளை பார்த்து எரிச்சலில் (மின் வெட்டு தந்த ஏரிச்சல் கூட சேர்ந்து) எழுதிய பதிவு.

இதனால் சகலவிதமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த பதிவால் என்னைத்தயவு செய்து எந்த கட்சியிலும் இணைத்து ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளன் ஆகவோ நினைத்துவிடதீர்கள்.


எனக்கு தேவை என்றால் யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவாளன் ஆகும் சந்தர்ப்பவாதி நான் என்பதை நீங்கள் யோசிக்கும் போதே தெரிகிறது அதற்கும் நான் பொறுப்பல்ல.




No comments: