Friday, October 3, 2008

மனசு சந்தோசமா இருக்கு

மனசு சந்தோசமா இருக்கு, எனக்கு அரசியல்ல பெருசா ஆர்வம் இல்லை, எந்த அரசியல்வாதியையும் புடிக்காது

அனால் அன்புமணி ராமதாஸ்க்கு ஒரு நன்றி, புகை பிடிக்க கூடாது என்று ஒரு தடை, எனது அலுவலகத்தில் மதியம் உணவுக்கு பின்னர் என்னுடன் வருபவர்கள் புகைபிடிப்பார், சிலரைத்தவிர, நாங்கள் எவ்வளவோ சொல்லியும் விட மாட்டாமல், மேலும் எங்களையும் தொந்தரவு செய்தனர் அவர்கள் புகையால்.

இன்று முதல் எங்கள் அலுவலகத்தில் புகை பிடிக்க தடை அனைவரும் பல்லு புடுங்கப்பட்ட பாம்பு போல ஆனார்கள், அலுவலகத்தை விட்டு வெளியே சென்று பிடித்தனர் அனாலும் எங்களை குப்பிடவில்லை, குப்பிட்ட சிலரையும் நாங்கள் ஒதுக்கி விட்டோம்.
நிம்மதி
நண்பன் ஒருவன் மிக அதிகமாக புகை பிடிப்பவன் எவ்வளவோ சொல்லியும் திருந்தாத அவன் இப்போது அடிக்கடி புகை பிடிக்க முடியாமல் தவித்து பின்னர் பான்பராக் போட மாறிவிட்டான் இன்றிலிருந்து.எதோ பண்ணட்டும் எங்களை தொந்தரவு செய்யாதவரை.

புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்யாமல் இருக்கலாம் முடிந்தவரை அனால் அத பண்ண முடியாது.

எனக்கு தெரிந்தவரை பூடான் மட்டுமே புகையிலை தயாரிப்புகள் தடை செய்யப்பட்ட நாடு.

1 comment:

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா இருங்க...

இருங்க போய் ஒரு தம் போட்டுட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்