Tuesday, November 18, 2008

வாரணம் ஆயிரம் எனக்கு வைத்தது நானூறு ரூபாய் ஆப்பு.

வெள்ளி அன்றே மாயாஜாலில் பார்த்தாயிற்று அனாலும் ஞாயிற்றுகிழமை ஏற்கனவே முடிவு பண்ணியபடி கல்லூரி நண்பர்களுடன் போவது உறுதியாயிற்று.

வெள்ளிக்கிழமை இரவே படம் பார்த்தோம், மொத்தம் சரியாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது. முதல் பாதி கலகலப்பாக சென்றது இருந்தாலும் ஏன் இன்னும் இடைவேளை வரவில்லை என்ற கேள்வி மனதில் வந்து தொலைத்தது. இடைவேளைக்கு பின்னர் படம் கொஞ்சம் நீளம், கெளதம் பேட்டில எல்லாம் சொன்ன மாதிரி இந்த படம் பார்த்த அப்பாவ என்னவோ எவ்வளவு மிஸ் பண்ணினூம் அவர போய் கட்டி பிடிக்கணும் என்றுலாம் எனக்கு தோணல. ஆனாலும் மனசு முழுக்க பையன் சூர்யா இருந்தார்.

இந்த படத்தில் கெளதம் மேனன் தெரியல, அனா சூர்யா படம்முழுக்க தெரியறார். நல்ல நடிச்சு இருக்கிறார்.

அப்பாவ பையன் வி ஆர் எஸ் வாங்க சொல்றார் அப்புறம் அமெரிக்க போறார், நானும் எங்கப்பாவ வி ஆர் எஸ் வாங்க சொல்லி இருக்கேன் பார்ப்போம் யாரையது தேடி நானும் அமேரிக்கா போறேனானு. இந்த காரணத்த சொன்ன விசா குடுக்க மாட்டான் கண்டிப்பா.
மொத்ததுல படம் பார்த்துட்டு வரும்போது மறுபடியும் ஒருதடவ பையன் சுர்யாக்காக பார்க்கணும் என்று தோணிச்சு (இல்லைனாலும் பார்க்கத்தான் போறேன் என்பது வேற விஷயம்)

ஞாயிறு காலை வழக்கம் போல கிளம்பி நண்பர்களை அழைத்துக்கொண்டு ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன், காரப்பாக்கம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற தேள் வண்டி (அதாங்க ஸ்கார்பியோ ) வழி விடாம ஆமை வேகத்தில போனாங்க, திடிர்னு வழி விட்டானே என்று நம்பி வேகமா போன புடிச்சாங்க போலிசு, அதி வேகமா வண்டி ஓட்டினேன் என்று. அதெப்படியோ கண்டிப்பா அவங்க இதையெல்லாம் ஞாயிற்று கிழமை மட்டும் தான் பண்ணுவாங்க ஏன்ன அப்பத்தான் போக்குவரத்து கம்மியா இருக்கும், சாலை எல்லாம் காலியா இருக்கும் நிறைய மாட்டுவாங்க என்று.

வண்டியை தூரமாக நிறுத்தி விட்டு பேப்பர் எல்லாம் எடுத்துக்கொண்டு போய் நிறுத்தியவரை பார்த்தேன், நீங்க நிறுத்துவீங்க என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி உங்க வண்டிய நிறுத்த சொல்லி அடுத்த செக் போஸ்ட்ல சொல்லி விட்டோம் என்றார்.

பின்னர் அதி வேகத்துக்கு கட்டணம் 300 ரூபாய் ரசீது குடுப்போம் என்றார்.சரி என்று கட்ட 300 ரூபாய் எடுத்து குடுத்தேன், ரசீது கொடுக்க சிறிது நேரம் ஆகும், நீங்கள் எங்கு போகிறீர்கள் என்றார், மாயாஜால் போகிறேன் என்றேன், வாரணம் ஆயிரம் படமா என்று அவர் கேட்க ஆமாம் என்றேன், படத்திற்கு நேரமாச்சு என்றால் எதாவது பார்த்து செய்து விட்டு போங்கள் என்றார். எவ்வளவு நேரம் ஆனாலும் ரசீது வாங்கி செல்கிறேன் என்றேன் 5 நிமிடத்தில் ரசீது குடுத்தார், கிளம்பும்போது உங்கள் காட்சிக்கு நேரம் ஆகிவிட்டால் சொல்லுங்கள் அடுத்த காட்சிக்கி டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று கூறி அசத்தி விட்டார், ஆனாலும் கிளம்பி நேரத்துக்கு சென்று விட்டோம்.

இந்த முறை ஆபரேடர் எடிட்டிங் வேலையை சரியாக செய்து இருந்தார், படம் சரியாக இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஓடியது. இரண்டாம் முறை பார்க்கும்போது சில காட்சிகளை தவிர மற்றவை எல்லாம் நன்றாக இருந்தது.
திரும்பி வரும்போது சிக்னல் மீறி விட்டதற்க்காக ஒரு நூறு கட்டியது மனதை உறுத்தியது, ஆக வாரணம் ஆயிரம் எனக்கு வைத்தது நானூறு ரூபாய் ஆப்பு.

கடைசி செய்தி, தியேட்டர் காரங்க எல்லாம் வெவரமா விலை எத்திவிடாங்க, மாயஜாலில் டிக்கெட் 120 ரூபாய் ஆனால் அவர்கள் பாக்கேஜ் டிக்கெட் ஆக மட்டுமே தருவார்களாம், ஒரு டின் பெப்சி மற்றும் சோள பொறி நூறு ரூபாய்,கண்டிப்பாக அதையும் சேர்த்து 220 ரூபாய்க்கு வாங்க வேண்டுமாம். இதை தடுக்க புகார் சொல்ல எங்கு செல்வது தெரியவில்லை

No comments: