Monday, June 22, 2009

வாரக்கடைசி- நானும் எழுதுவேன்ல

வாரக்கடைசி எப்பவும் போல இல்லாமல் கொஞ்சம் புதுசாகவும் பழைய நிலைமைக்கு திரும்பியது போலவும் இருந்தது எனக்கு.

வெள்ளிக்கிழமை நண்பனது திருமண வரவேற்ப்பு பல்லாவரத்தில், வர வர பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களது திருமண நிகழ்ச்சியில் உடன் படித்தவர்கள் கலந்து கொள்வது மிக குறைந்து விட்டது. கண்டிப்பாக எனது நிகழ்ச்சியில் இருவர் வருவதே அதிசயம் என்று நினைக்கிறேன்.


நண்பனின் மனைவி எனது அலுவலக ஊழியரின் தங்கை என்பதால் அலுவலகத்தில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை பின்ன அவர்கள் அனைவரும் அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி துறையை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்ல.


மணப்பெண் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் என்னையே பார்ப்பது போல தோன்றியது, அட ஆமாம் என்னைக்கூட ஒரு பெண் பார்க்கிறதே, ஒரு மணிநேரம் இந்த பார்வைகள் சந்தித்துக்கொண்டன, மின்னலே படத்தில் வருவது போல நண்பனிடம் மேடையில் சென்று விசாரித்தேன், அவன் மனைவியின் தங்கையின் தோழியாம், பின்னர் விசாரித்து சொல்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளான். இவனல்லவோ நண்பன். அதுவரைக்கும் மனசுக்குள் பட்டாம்பூசி பறக்கட்டும். நெஜமா பட்டாம்பூச்சி பறக்கற பீலிங்க்ஸ் நல்லாத்தான் இருக்கு :)


சனிக்கிழமை மெதுவாக விடிந்தது, எழுந்து கலையில் நண்பர் ஒருவருடன் ஸ்ரீபெரும்புதூர் போவதாக ஏற்ப்பாடு. போய்விட்டு வந்தோம். எனது மாமா எப்போதோ வாங்கிய நிலத்தை எங்கே இருக்கிறது என்று பார்க்க சென்று வந்தோம். வல்லகொட்டை முருகன் கோவிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அடுத்த முறை பார்க்க போகும்போது முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.


போய்விட்டு வந்து மதியம் வழக்கம் போல காருக்கு சிறிய வேலைகளை செய்ய நண்பரது வொர்க் ஷாப் சென்றேன். பாவம் அவர் எனது கார் அவரை பாடாய் படுத்துகிறது. பின்னர் அவரது அடகு வைக்கப்பட்ட நகையை மீட்க அடையாறு KVB பாங்க்குக்கு சென்றோம். போகும்போதே தொலைபேசியில் அழைத்து வரலாமா என்று உறுதி செய்துவிட்டே சென்றேன், போனவுடன் கணக்கை சரி பார்த்து எல்லாம் செட்டில் செய்ய சொல்லி பணம் காட்ட சென்றால் இன்று உங்களை யார் வர சொன்னா என்று பணம் வாங்கும் இடத்தில அமர்ந்து இருந்தவர் கூறினார். இவனுக இன்னும் திருந்தவே இல்ல போல, எனக்கு KVB பங்கில் இரண்டாவது மோசமான அனுபவம், கண்டிப்பாக இனி இவர்களுடன் எந்த விதமான உறவும் வைக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். பேனாவை மறந்து காரில் வைத்து விட்டு வந்ததால் ஒரு பேனாவை கேட்டோம், எழுதிக்கொண்டு இருக்கும்போது அருகில் இருந்த பெண் என்னங்க பேனாவை கேட்க்காமலே எடுக்கறீங்க என்றார், பாவம் அவர் விளையாட்டாய் கேட்டார், காசாளரிடம் இருந்த கோவத்தை அவரிடம் காட்டிவிட்டேன்.


சனிகிழமை இப்படியே போனது, இரவு வீடிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்தோம், அடுத்தநாள் காலை 9.30, ௦ எழுந்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நண்பன் தேனிர் குடிக்கலாம் என்று அழைத்தான். சென்று குடித்துவிட்டு வரும்போது வீடிற்கு அருகில் வரும்போது துணி துவைக்கும் மிஷன் வாங்கலாம் என்று யோசித்தோம், உடனே வண்டியை திருப்பு, நேராக வேளச்சேரி வசந்த் & கோ சென்றோம், கடைகுஉள்ளே நுழைந்து 5 நிமிடம் வரை ஒருவரும் வரவில்லை,அவரவர் அவரவர் வேளையில் இருந்தனர், சரி இது எதோ சூப்பர் மார்க்கெட் போல, நமக்கு வேனும்கரத செலேக்ட் பண்ணி சொன்னா குடுதுவிடுவாங்க என்று நெனைச்சு, அப்புறம் ஒருத்தரை கூப்பிட்டு கேட்டால் மேல முதல் மாடி போங்க என்றார்.


இவர்களிடம் போராடி விபரம் கேட்டு பின்னர் வேண்டாம் என்று முடிவு பண்ணி அருகில் உள்ள கடையில் விசாரித்தோம், சின்ன கடை, வாடிக்கையாளர் சேவை நன்றாக இருந்தது அனால் விலை மற்றும் விரும்பிய வகை அங்கு இல்லை, வீட்டிற்கு திரும்புகையில் நாம் ஏன் திநகர் செல்லக்கூடாது என்று யோசித்து வண்டியை திருப்பினோம். போகும்போதே நண்பன் அவனது நண்பர்கள் சமீபத்தில் வாசின் மிஷன் வாங்கினதால் எங்கு வாங்கினார்கள் என்று விசாரித்தான், புது சரவணா ஸ்டோர் என்றுபதில் வந்தது.


நேராக வண்டி அங்கு சென்று நின்றது, பார்க்கிங் செய்ய இருபது ரூபாய் வாங்கினார்கள், கடைக்குஉள்ளே செல்லும்போது முன்னாலேயே ஒரு பத்து பெண்கள் கையில் தட்டை வைத்துக்கொண்டு நின்றுகொண்டு இருந்தனர், யாரையோ எதிர்பார்த்து வரவேற்க நின்றுகொண்டு இருக்கின்றனர் போல. அடுத்த வரிசையிஇல் ஒரு பத்து ஆண்கள் நின்று கொண்டு இருந்தனர், கையில் எந்த எந்த பொருட்கள் எங்கு உள்ளன என்று அட்டை வைத்திருந்தனர், நாங்கள் சென்று அவர்கள் கையிலிருந்து புடுங்காத அளவிற்கு கேட்ட உடன்கொடுத்தனர், ஒருவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. அப்பவே திரும்பலாம் என்றேன் நண்பனின் நச்சரிப்பால் ஏழாவது மாடி சென்றோம். எப்படி?? லிபிட்க்கு காத்திருந்த கூடத்தில் சென்று ஒரு வழியாய் லிபிட்க்குள் நுழைந்தோம்.


ஏங்கம்மா பெண்களே உங்களுக்கு ரோட்டில் நடக்கும் பொது தெரியாமல் இடிசுட்டாலும் , பேருந்தில் தெரியாமல் மோதினாலும் வரும் கோவம் ஏனுங்க நீங்க shopping செய்யும்போது மட்டும் எந்த நசுங்கு நசுங்கினாலும் வர மாட்டேன் என்கிறது. பாவம் அவர்கள் ...


கடைசியாய் ஏழாவது மாடியில் சென்று விசாரித்தால் அங்கு வாசின் மெசின் எல்லாம் இல்லையாம். கடுப்புடன் நண்பனை பார்க்க அவன் போனை எடுத்து விசாரித்த நண்பனை கடுப்படித்தான், பைக்குக்கு கொடுத்த இருபது ரூபாவை இரண்டு டம்ளர் வாங்கிக்கொண்டு வந்தால் இந்த பக்கம் போ அந்த பக்கம் போ என்று சிலர் விரட்டுகின்றனர். ஒரு வழியாக பில்போட்டுகொண்டு வந்தால் பொருளை பாலிதீன் பேப்பரில் தான் தருவேன் என்று சொல்கின்றனர். வேண்டாம் கையில் எடுத்து செல்கிறோம் என்றாலும் கேட்க்கவில்லை, ஒரு வழியாக அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் கொடுத்த பையை அவர்களிடம் கொடுத்துவிட்டு கீழே இறங்க கடைசி மாடியில்பையை கொடுத்து அனுப்பினர். நா பாலிதீன் பை உபயோகப்படுத்துவது இல்லை என்று கூறினாலும் கேட்பதாய் இல்லை. கீழே வரும்போது அந்தபையை வெளியே நின்றுகொண்டு இருந்த ஒரு ஊழியரிடம்கொடுத்துவிட்டு வந்தேன். சரவணா ஸ்டோர் அவர்கள் பங்குக்கு சுற்று சூழலை பேணி காக்கின்றனர். நண்பர்களே இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பது.


எப்படியோ ஒரு வழியா எல்லாம் வாங்கி முடிச்சாச்சு. டீ குடிக்க போலாம் என்று தி நகர் சென்று டம்ளர் வங்கி குடித்திருக்கிறோம் .


மதியம் தோழி வீட்டில் சாப்பாடு. நண்டு மீன் என்று வெளுத்து கட்டினேன். இரவு behind the enemy lines 2 படம்பார்த்தேன், நல்ல படம் ஆனால் முதல் பகுதி போல் இல்லை, திரைக்கதையில் ஒரு வேகம் இருந்தது ஆனால் பரபரப்பு இல்லை.

இதற்க்கு இடையில் சில பல வேலைகளை செய்திருந்ததால் நன்றாக சென்றது வாரக்கடைசி... சென்ற பதிவில் கூறியது போல Fiat punto பற்றி பதிவு எழுத முடியவில்லை காரணம் என்னால் test drive செய்ய முடியவில்லை.

5 comments:

Karthik said...

அடப்பாவமே!!! :)))

செமையான வீக் என்ட் போல?!

பதிவு நல்ல இருந்தது. பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது.. :)

ச.பிரேம்குமார் said...

//வாரக்கடைசி எப்பவும் போல இல்லாமல் கொஞ்சம் புதுசாகவும் பழைய நிலைமைக்கு திரும்பியது போலவும் இருந்தது எனக்கு.//
படிக்கவே மகிழ்ச்சியா இருக்கு தனா

ச.பிரேம்குமார் said...

ஆக மொத்தம் வாரயிறுதி ஒரே குதூகலமா இருந்துச்சு போல :)

DHANS said...

செம குதூகலம் அட்டகாசம் பண்ணிடோம்

மகிழ்ச்சி இனி நிலைக்கும் பிரேம்

DHANS said...

கார்த்திக் பட்டம்போசி நல்லாவே பறக்குது

இப்பதான் நண்பனிடம் விசாரிச்சேன் நாளைக்கு கேட்டு சொல்றேன்னு சொளிருக்கன்