Monday, November 14, 2011

ஒரு குழப்பம் தெளிவாகிறது

நான் மிகப்பெரிய ஆள், எனக்கு மற்றவரை விட எல்லாம் தெரியும் இல்லை தெரிந்து கொள்ளாதது குறைவு, நான் பல திறமைகள் மிக்கவன், இன்னும் என்ன வேணும் என்றாலும் நாம் நம்மைப்பற்றி நம்முள் எண்ணிக்கொள்ளலாம் ஆனால் என்றுமே நம்மைப்பற்றிய பிறரின் பிம்பம் வேறாக இருக்கும், நாம் அவற்றை தெரிந்துகொள்ளாமல் இருப்பது தவறில்லை ஆனால் தவறாக புரிந்துகொண்டால் அது அந்த உறவில் பெரிய விரிசலைக்கொடுக்கும். இது எல்லாம் தம்மைப்பற்றி அதிகபட்சம் சரியாக புரிந்து கொண்டு நடப்பவர்களுக்கு , ஆனால் தன்னைப்பற்றி சரியாகப்புரிந்து ஆனால் அதற்க்கு நேர்மாறாக தன்னின் மற்றொரு பிம்பத்தை உலகிற்கு அறியச்செய்யும் பலருக்கு விரிசலை மட்டுமில்லாமல் மனதளவில் மிகப்பெரிய ஒரு கவலையை கொடுக்கும்.




என்றுமே நாம் நம்மை நல்லவன் என நினைத்துக்கொண்டு நாம் செய்யும் செயலில் சில தவறை நம் பார்வையில் சரி என்றும் சொல்லிக்கொண்டு இருப்போம், மிகச்சிறிய அளவிலே நம் தவறை புரிந்து அதற்கான தண்டனையையும் அனுபவித்து அதில் இருந்து மேலேறி வர துடிப்போம், அத்தகைய ஒரு தவறை செய்து அதன் தண்டனையை அந்த கொடுமையை அனுபவித்து அதிலிருந்து சிறிது மீண்டு வந்துள்ளேன். நான் செய்த தவறை நியாப்படுத்த ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சில தவறுக்கு நான் மட்டுமே என்றுமே காரணமாக்கப்படுவேன், புரிதலை தவறாக புரிந்த எவனுமே என்னைப்போல மிகப்பெரிய மனச்சிக்கலை கொண்டு பின்னர் எதாவது ஒரு வழியில் மீண்டு வர முயற்சிப்பர். பல வழிமுறைகளை பின்பற்றினாலும் காலம் மட்டுமே எவற்றையும் மறக்க செய்யும். சில தவறுக்கு சரிய அளவில் பிராயச்சித்தம் கிடைத்துள்ளது. சந்தோசமே, இந்த சந்தோசம் அதிகரிக்கும் என நினைக்கிறேன். எதோ எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இந்த குழப்பமான பதிவுக்கு மன்னிக்கவும், நாளை முதல் வழக்கம் போல கடை திறக்கப்படும்.


இந்த பதிவுக்கு மறுமொழி வேண்டாமே

No comments: