Monday, January 2, 2012

கடந்து வந்த பாதை 2011

நடந்து முடிந்த 2011 ஆம் ஆண்டு எல்லோருக்கும் எப்படி இருந்ததோ ஆனால் எனக்கு கொஞ்சம் மோசமானதாகவே முடிந்தது, செய்வதெல்லாம் நான் ஆனால் ஆண்டு இறுதியில் பழியை தூக்கி அந்த ஆண்டின் மேல் போடுவது எல்லோரும் செய்வதுதானே.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேரம் சரி இல்லை என எனது பெற்றோர் சொன்னாலும் வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை, ஆனால் சரியாக ஆரம்பத்திலேயே வாகன விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பி முகத்தில் சிறிது அடியோடு வெளிவந்தேன், அந்த காயங்கள் ஆறினவுடன் மறுபடியும் வேதாளம் முடுங்கைமரம் ஏறியது. என் நேரமோ என்னவோ தெரியவில்லை ஏதும் எனக்கு நேர்ந்தால் எனது காருக்கும் ஏதும் நேர்ந்துவிடும், நான் அடிபட்ட அடுத்த நாளே எனது காரும் அடிபட எல்லாமே தலைகீழ்.




அதற்குப்பின்னர் என்னதான் நான் தேறி வந்தாலும் எனது கார் தேறவில்லை, காரில் சிறு சிறு வேலைகளும் எனது வேலைப்பளுவினால் காரை கவனிக்கமால் அது மேலும் பல வேலைகளை கொண்டு வந்து, அதை வெறுத்து விற்கலாம் என முடிவு செய்யும் அளவிற்கு சென்றது.


அலுவலகத்திலும் வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களும், அலைச்சலும் மிகுதியாக இருந்தன, அலுவலகத்தை பொறுத்தவரை என்ன வேலைகளை செய்தாலும் பலன் கிடைக்காமல் இருந்து வந்தது, நம் வேலைகளை நம் மனதிற்கு திருப்தி இருக்குமாறு செய்ததால் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.


சொந்த விசயத்தில் பலவிதமான இன்னல்கள், எல்லாவற்றிலும் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை, சான் ஏறினால் முலம் சறுக்குதல் என்பது சரியாகவே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சொந்த விஷயம் அலுவலக விஷயம், நண்பர்கள் மற்றும் மனது என எல்லாவற்றிலும் பிரச்சனைகள் வர எப்படியோ தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு ஒரு வழியாக சமாளித்து வந்தாயிற்று. எல்லா மோசமான காரியங்களும் இறுதியில் ஒரு நல்ல காரியத்தால் மறக்கப்பட்டுவிடும் என்பது போல ஆண்டின் இறுதியில் திடிரென்று ஒரே வாரத்தில் வீடு வாங்குவது என்று முடிவு செய்து உடனே வாங்கியாகிவிட்டது, அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் வரும்போல இருந்தாலும் எளிதில் சமாளித்து வந்து இருக்கிறேன், இன்னும் பண விசயங்களில் நிறைய சமாளிக்க வேண்டி இருந்தாலும் சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கை உடன் பிறந்தோர் கூட இருப்பதால் ஏற்படுகிறது.


ஆகமொத்தம் கடந்த ஆண்டு என்னைப்பொறுத்த வரை சிறிது கஷ்டமான ஆண்டாக இருந்தது( அதில்பாதி நானே தேடிக்கொண்டது) , இந்த புத்தாண்டு கண்டிப்பாக இன்னும் அதிக சோதனைகளைக்கொடுக்கும் என ஏதிர்பார்த்து இருக்கிறேன், எத்தனைகள் சோதனைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதால் இந்த ஆண்டு எல்லாவற்றிலும் நல்ல ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.


பதிவுலகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டின் பாதியில் மீண்டும் புதிய உத்வேகத்தில் எழுத ஆரம்பித்து ஒரு வாரத்தில் நிறுத்திவிட்டேன், இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் மீண்டும் அடுத்த அத்தியாயத்தை துவக்கலாம் என முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



2 comments:

தராசு said...

தலைவா
விடு வாங்கிட்டா, சொல்லவே இல்லை. வாழ்த்துக்கள்.

DHANS said...

ஆகா இப்படி தலைவா தலைவா சொல்லி நிறைய பெற கவுத்தியாச்சு அண்ணே, இன்னும் அபிசியல அனவுன்ஸ் பண்ணல சார்