Friday, January 13, 2012

3 இடியட்ஸ் படத்தின் கலர் ஜெராக்ஸ் நண்பன்

விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா தெரியாது ஆனால் இந்தப்படத்தை விமர்சனம் செய்ய விரும்புகிறேன்.
 நண்பன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இந்த வருடம் பொங்கலுக்கு, சிறு வயதில் தீபாவளி பொங்கல் என்றால் குறைந்தது 4 படங்களாவது வரும் இப்போது அது இரண்டு ஒன்று என குறைந்துவிட்டது, இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியிட்டு வசூலை அதிகரிக்கும் எண்ணத்துடன் வெளி வந்து இருக்கும் நண்பன் எப்படி?


இந்தியில் வெளி வந்து வசூலை அள்ளிக்குவித்த படம், அமிர்கானின் சிறப்பான நடிப்பால் பேசப்பட்ட படம், கல்வி சூழலை விமர்சித்து வெளி வந்த படம் என்று இந்த படத்தின் இந்திப்பதிப்பு மிகவும் பேசப்பட்டதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த படத்தை வூட்லான்ஸ் சிம்பனி திரை அரங்கில் பார்க்க வேண்டிய கட்டாயம். எந்த ஒரு படத்தையும் நமக்கு பிடித்த படமாக மாற்ற திரை அரங்கும் அங்கு நிலவும் சூழலும் ஒரு வித காரணி என நான் சொல்வேன், அந்த விதத்தில் இந்த திரை அரங்கும் இங்கிருந்த சூழலும் அத்தகைய பிடித்தமான படத்தை எனக்கு தரவில்லை. மிக மிக மோசமான சவுண்ட் சிஸ்டம், அதிலும் விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகளின் தொல்லை என படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் அவஸ்தையாகவே முடிந்தன. ஓரளவிற்கு சத்தம் அடங்கும் வரை திரையில் விஜய் படம் ஓடினாலும் மனதில் இந்தி பதிப்பின் டயலாக் மட்டுமே ஓடியது.

வேறு வழியில்லாமல் பெற்றோர் வற்புறுத்தலுக்காக இன்ஜினியரிங் சேரும் ஒருவன், குடும்பத்தை காப்பாற்ற இன்ஜினியரிங் சேரும் ஒருவன், இன்ஜினியரிங் விரும்பி படிக்கும் ஒருவன் என மூன்று பேர் தமிழகத்தின் முதன்மை இன்ஜினியரிங் கல்லூரியில் சேருகிறார்கள், கல்லூரி வரும்போது தமிழகத்தின் முதல் இருநூறு இடங்களில் இருக்கும் இவர்கள் முடியும்போது படிப்பு அவர்களை எப்படி மாற்றியது என்பதே கதை .


விஜய் மிக அறிவாளி, படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடம் கழித்தே வருகிறார், எல்லாவற்றையும் மாத்தி யோசிக்கிறார், கல்வி சூழ்நிலையை மாற்ற வேண்டும் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் கற்பிக்கப்பட வேண்டும் வெறும் கழுதைகளை உருவாக்கக்கூடாது என்கிறார். ஜீவா நன்றாக படித்து முதல் நிலை கல்லூரியில் வந்து சேர்ந்தாலும் சேர்ந்த பின்னால் நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை, தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என யோசித்து பயந்து சாகும் சராசரி மாணவனின் மன நிலையில் உள்ளார். வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் மிகப்பெரிய புகைப்பட கலைஞராக வர வேண்டும் எனபது ஸ்ரீகாந்தின் கனவு அவரது அப்பாவின் கனவிற்காக இன்ஜினியரிங் படிப்பில் சேருகிறார் அதனால் படிப்பில் சுமார். மூவரும் விடுதியில் ரூம் மேட்ஸ்.

கல்லூரியும் முதல்வராக நம்ம சத்யராஜ், அவர் படித்த கல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்து அங்கேயே பணியில் சேர்ந்து அந்த கல்லூரியை 28 இடத்தில இருந்து தமிழ்நாட்டின் முதல் இடத்துக்கு உயர்த்தியுள்ளார்( படத்தின் பாதி டயலாக் விசிலடிச்சான் குஞ்சுகளால் புரியாததால் இப்படித்தான் அவர் சொன்னதாக நினைத்துக்கொண்டு உள்ளேன்). சத்யராஜ் இந்த பாத்திரத்தை எப்படி செய்யப்போகிறார் என்ற கொஞ்சம் பயமும் இருந்தது ஆனால் சமாளித்துவிட்டார். எப்பவும் நம் கல்லூரியில் எப்படியும் ஒரு ஆர்வக்கோளாறு இருக்கும் புத்தகத்தை அட்டை டு அட்டை மனப்பாடம் செய்து கல்லூரியின் சந்தோசத்தை அனுபவிக்காமல் இருக்கும் ஆனால் படிப்பில் அதுதான் நம்பர் ஒன்னாக இருக்கும் அத்தகைய பாத்திரத்தை அநாயசமாக செய்துள்ளார் சத்யன்.
 இலியான மிகவும் ஒல்லியாக இருக்கிறார் பெருசா வேலை இல்லை என்றாலும் நன்றாக நடித்துள்ளார், அனாயா (?) சிவா மனசுல சக்தி படத்து நாயகி இதில் இலியானாக்கு அக்கா.


படம் ஆரம்பித்தவுடன் ஆரம்பிக்கும் நகைச்சுவை படம் முடிந்தும் நம்மை விட்டு அகல மறுக்கிறது, மூவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்க நம்ம வசந்த் அன் கோ பையன் இறுதியாண்டு ப்ராஜெக்ட் ஒன்றை தானே உருவாக்குகிறான் (ஒரு ஹெலிகாப்டர் அதில் வயர்லெஸ் கேமரா ) ஆனால் அதை முடிக்க சிறிது நாள் டைம் கேட்க நம்ம சத்யராஜ் கொடுக்க மறுத்ததால் அவர் ப்ரொஜெக்டை குப்பையில் போட்டு சோகத்துடன் சென்று விடுகிறார். விஜய் அதை பார்த்து அந்த ப்ரொஜெக்டை முடித்து சோதனை செய்து பார்க்கும்போது வசந்த் அன் கோ பையன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனின் இறுதி ஊர்வலத்தில் ஆரம்பிக்கும் விஜய்க்கும் சத்யாரஜ்குமான பகை நாளடைவில் பெரிதாகுகிறது. சத்யராஜ் தான் நடத்தும் கல்லூரியில் எல்லோரும் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை படித்து மதிப்பெண்கள் எடுத்து வேலையில் சேர்ந்து வளர்ந்தால் போதும் என்ற எண்ணம். விஜயக்கோ படிப்பு என்பது புதிதாக கற்க ஏதுவாக இருக்க வேண்டும், அடிப்படை தெரிந்துகொண்டு அதை உபயோகித்து புதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று எண்ணம், இந்த இருவேறான எண்ணம் ஓடும் இருவர் மோதிக்கொல்வதே கதை, விஜய் தன நண்பர்களை எப்படி அவரவர் வாழ்க்கையில் வெற்றி பெற தூன்றுகோளாக இருக்கிறார், ஆனால் கல்லூரி முடித்த பின் காணாமல் போய்விடும் அவரை தேடி கண்டுபிடிப்பது தான் கதை.


சத்யன் முதலாம் ஆண்டு ஆசிரியர் தினத்தில் வரவேற்புரை நிகழ்த்த அழைக்கப்படுகிறார்.தமிழ் தெரியாத அவர் கல்லூரி நூலக பொறுப்பாளரை தமிழ் உரையை ஆங்கிலத்தில் எழுதி தர சொல்லி அதை அப்படியே மனப்பாடம் செய்து பேசிவிட திட்டம் போடுகிறார். விஜய் படிப்பு என்பது மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பது அல்ல என தன் நண்பர்களுக்கு புரிய வைக்க அந்த உரையில் சில வார்த்தைகளை மாற்றி விடுகிறார் சத்யனுக்கு தெரியாமல், நல்ல உரையாக இருக்க வேண்டிய அது மிக விரசமான உரையாக மாறி கல்லூரி முதல்வரிடம் கேட்ட பெயர் வாங்கி வைக்கிறார் சத்யன். அதன் பின்னர் இந்த மூவரிடமும் சவால் விட்டு அடுத்த பத்து வருடம் கழித்து இதே நாள் சந்திப்போம் அப்போது யார் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கிறார் என பார்ப்போம் என சவால் விட்டு செல்கிறார். பத்து வருடம் கழித்து அதே நாளில் எல்லோரும் வந்து சேர விஜய் மட்டும் கல்லூரி முடித்து சென்றவர்தான் ஆளை காணவில்லை ஆனால் சத்யனுக்கு அவர் இருக்குமிடம் தெரியும் என்பதால் தேடிக்கண்டு பிடிக்க கிளம்புகிறார்கள். சத்யராஜின் பெண்ணை விஜய் காதலிக்கிறார் ஆனால் அவரையும் விட்டு காணாமல் போகிறார், ஒரு வழியாக விஜய் இருக்கும் இடத்தை தேடி சென்றால் அங்கு இருப்பது வேறு ஒருவர், ஆனால் தன்னுடன் படித்த விஜய் வாங்கிய டிகிரி மற்றும் புகைப்படம் அங்கு உள்ளது அதில் விஜய்க்கு பதில் வேறு ஒருவர். அவர் யார் என்பது படத்தை பார்த்தால் தெரியும்.

படம் முழுக்க அதகளம் செய்பவர்கள் சத்யன் மற்றும் சத்யராஜ். சத்யன் கலக்கியுள்ளார், சத்யராஜ் முதல் பாதியில் சுமாராக செய்திருந்தாலும் இரண்டாம் பாதியில் அட்டகாசம். ஜீவா வழக்கம் போல தன் பாத்திரத்துக்கு தேவையானவைகளை அட்டகாசமாக செய்துள்ளார், ஸ்ரீகாந்த் இந்தியில் மாதவன் செய்த பாத்திரம், சொதப்பியுள்ளார், ஆனால் இந்தியில் இருந்த மூன்று பாத்திரத்தை அப்படியே எடுத்தாலும் தமிழில் விஜய்க்கு மட்டும் முக்கியத்துவம் இருப்பதுபோல் தெரிகிறது. விஜய் படம் முழுக்க அமுக்கி வாசித்து உள்ளார், கோவில் படத்தில் சிம்பு எப்படி அமுக்கி வாசித்தாரோ அப்படி ஆனால் நன்றாக வந்து இருக்கிறது. என்ன தன் ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அழகாக பாத்திரத்துக்கு பொருந்தி இருப்பார். அமீர் கான் இடத்தில இவரை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. ஒரு பாடலில் துப்பாக்கி படத்தின் கெட்அப்பில் (அப்படித்தான் என்று நினைக்கிறன்) வருகிறார் நன்றாக இருக்கிறது அது. சச்சின் படத்தில் இருந்தது போல இருந்து இருந்தால் சரியாக பொருந்தி இருக்கும்.
கதாநாயகி, அவரின் அக்கா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவாவிடம் அடி வாங்குகிறார் விஜய், இந்தியில் இருந்த சில சீன்கள் இருக்காது என நினைத்தால் இருக்கிறது,  விஜய் திருந்தியுள்ளார், நல்ல தொடக்கம்


எப்படியோ படத்தை இந்தியி பார்த்தவருக்கு தமிழில் பார்க்கும்போது சொதப்பியது தெரிந்தாலும் பிடிக்கும் , முதல் முறை பார்க்கும் எல்லோருக்கும் படம் ரொம்ப பிடிக்கும் ஆனால் எனக்கு தெரிந்து தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் எதுவும் இதில் இல்லாததால் வேட்டை வந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். அதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்னாலே வெளியிட்டுள்ளனர் போல. சங்கர் வழக்கம் போல தான் ஒரு பிரமாண்டமான ஆள் மட்டுமே என நிருபித்துள்ளார், தமிழ் சூழலுக்கு கதையை மாற்றியுள்ளோம் என கூறிவிட்டு ஒரு பாட்டை மட்டும் இடையில் போட்டுவிட்டார். இந்தியில் இருந்த ரிச்னெஸ் தமிழ் படத்தில் இல்லை. கடைசி சீனில் மாதவனின் புகைப்பட புத்தகங்களை அந்த பையன் எடுத்து போடும்போது அதெல்லாம் ஒன்றும் நேஷனல் கியோகரபி புத்தகம் போல இல்லாமல் அண்ணா யுனிவெர்சிட்டி லோக்கல் ஆத்தர் புக் போல உள்ளது. இது போல சில சில இடத்தில ரிச்னெஸ் கெடுகிறது. கனாக்காணும் காலங்கள் நாடகத்தில் வருவது போல இருபது பேரை வைத்து ஒரு கல்லூரியை காட்டியுள்ளார். கல்லூரி மாணவன் என்றாலே காலர் இல்லாத டி ஷர்ட் போடுவது என்பதை யார் சொல்லிக்கொடுத்தார்கள் என தெரியவில்லை. கல்லூரி மாணவர்கள் என்றால் நன்றாக படிப்பவர் படிக்காதவர் என எல்லோரும் குடிப்பவர் போல ஒரு தோற்றத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தகத்து. இந்தியில் இருந்து எடுத்தாலும் அங்கும் இருக்கும் சூழலும் இங்கு இருக்கும் சூழலும் வேறு, மாணவர்களை குடிக்கத்தூண்டுவது போல இருக்கும். அதுபோல எப்படியும் டாக்டர்க்கு படித்து முடித்தவுடன் எல்லோரையும் கொல்லத்தான போறீங்க என்று டாக்டர்களை அவமதிப்பது போல டயலாக் வைத்ததும் இன்றைய சூழலில் கண்டிக்கத்தக்கதே. ஸ்ரீகாந்தின் அப்பா விஜயிடம் தான் பட்ட கஷ்டங்களை சொல்லும்போது டயலாக் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம், அவர் ஏன் தன் பையன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று சொல்லுவது பெரிதாக மனதை தொடவில்லை. படம் முடிந்து டிகிரி வாங்கும்வரை அங்கே சுத்திக்கொண்டு இருக்கும் ஸ்ரீகாந்த் ஏன் கடைசி பரீட்சை எழுதவில்லை? போடோக்ராபர் ஆக முடிவு செய்தாலும் இன்ஜினியரிங் முடித்து இருக்கலாமே, அதன் டைம் இருந்ததே.


சங்கர் நண்பனை 3 இடியட்ஸ் படத்தின் கலர் ஜெராக்ஸ்சாக எடுத்துள்ளார், விஜய்க்கு ஒரு நல்ல படம், சங்கருக்கு மற்றும் ஒரு வெற்றிப்படம், சத்யனுக்கு ஒரு திருப்புமுனை, சத்யராஜ்க்கு இனி கேரக்டர் ரோல் அடுத்து நிறைய வரவைக்கும் படம். ரீ ரெகார்டிங் சுத்த மோசம், படம் ஸ்ரீகாந்த் கதை சொல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் பேசுவது பாதி புரியவில்லை. பின்னால் அமர்ந்து இருந்த ஒரு குடிமகன் விஜயின் பரம ரசிகன் போல படம் முழுக்க எல்லா சீனிலும் விஜய் மட்டுமே வரவேன்றும் விஜய் பேசினால் மற்றவர் படத்தில் பதில் பேசக்கொடது என நினைத்து 'தெளிவாக' இருந்தார்.




பொங்கல் ரேசில் நண்பன் முதலிடத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது, வேட்டை வந்தால் தான் தெரியும்.

4 comments:

Marc said...

பிரமாதம் நண்பரே!வாழ்த்துகள்.

கோவை நேரம் said...

அட..விமர்சனம் உங்கள் பார்வையில் நன்றாய் இருக்கிறது.என்ன இருந்தாலும் ஏற்கனவே பார்த்த படம் என்பதினால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகாதான் இதுக்கும்

DHANS said...

நன்றி கோவை நேரம் எனது பார்வையிலும் நன்றாக இருக்கிறது அனால் இந்தியில் பலமுறை பார்த்து பிடித்த படம் அதனால் தமிழில் சிறிது நெருடல்.

DHANS said...

நன்றி தனசேகர்