Showing posts with label சுயபுலம்பல். Show all posts
Showing posts with label சுயபுலம்பல். Show all posts

Tuesday, January 3, 2012

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாய்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது நாட்டில் எதுவுமே மாறாமல் ஒற்றுமையா இருப்பது ஒன்றில் மட்டுமே, அதுதான் ஒழுக்கமின்மை. பெரும்பாலான இந்தியர் இந்த ஒழுக்கமின்மையில் அடங்குகின்றனர். சின்ன சின்ன விசயத்தில் இருந்து பெரிய விஷயங்கள் வரை நம்மில் இருப்பது ஒழுக்கமின்மை மனப்பான்மையே.

சின்ன வயதில் இருந்தே நாம் வளர்க்கப்படும் விதம் அவ்வாறே இருப்பதால் இதில் நாம் யாரை குறை சொல்ல? சின்ன வயதில் பள்ளியில் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் அதே மாணவர்கள் முன்னிலையில் மதிய உணவு இடைவேளையில் புகைபிடிக்கிறார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் அதை கடைபிடித்து நேர்மையாக ஒரு முன்னோடியாக இருந்தால் கண்டிப்பாக அவர்களிடத்தில் பயிலும் மாணவர்களில் ஒரு 25 % மாணவர்கள் கண்டிப்பாக அவரை பின்பற்றுவர்.

ஆசிரியர் மட்டுமில்லாமல் ஆசிரியைகளும் சிலர் அவ்வாறே இருகின்றனர், மற்றவர்களை பற்றி புறம் பேசுதல், மாணவர்கள் முன்னிலையில் சிறு சிறு விதி மீறல் செய்தல் போன்றவைகளை செய்வதால் பாதிக்கப்படுவது நம் மக்களே, இதில் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களை குறை சொல்லி பயன் இல்லை, அவர்களும் மனிதர்களே.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தால் போதும் என்ற நினைப்பில் பெற்றோர் இருந்தால் எப்படி பிள்ளைகள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வளருவார்கள், பள்ளியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என படித்து விட்டு வரும் பிள்ளைகளை கூட்டி செல்லும் பெற்றோர் எத்தனை பேர் வாகன பாதைகளுக்கு எதிர் புறமாக செல்கின்றனர்? சிகப்பு விளக்கை தாண்டி செல்வது,  பையனுக்கு லைசென்சு வாங்கற வயசு வரதுக்குள்ள வண்டி வாங்கி கொடுப்பது, என் பையன் எட்டு வயசுலேயே கார் ஓட்டுவான் என பெருமை பேசுவது, ஒரு பெரிய குடும்பத்தையே இரு சக்கர வண்டில கூடி செல்வது,  பையனோ பெண்ணோ  தப்பு செய்திருந்தால் தண்டிக்காமல் ஆதரித்து பேசுவது, மன்னிப்பு கோராமை என எல்லா தப்பையும் அவர்கள் முன்னாடி நாம் செய்தால் அவர்கள் எப்படி வளருவார்கள். வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி அதை முன்னால் பெருமையாக பேசினால் பின்னர் பிள்ளைகள் எப்படி ஒழுக்கமாக வளருவர்?

வாகனம் ஓடுவது மட்டும் இல்லை, ஊருக்கு செல்ல அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது என நாம் எதையும் பிள்ளைகள் முன்னாடியே செய்கிறோம். மேலும் பெண்களை மதிக்காமல் நடப்பது, பிள்ளைகள் முன்னினையில் பெண்களை கிண்டல் செய்வது, தேவையில்லாத கமெண்ட் அடிப்பது, ஆண் பெண் பேதம் பார்த்து வளர்ப்பது என எல்லாவற்றையும் நாமே செய்துவிட்டு பிற்காலத்தில் இந்த காலத்து பிள்ளைகள் கெட்டு போய்விட்டனர் என சொல்கிறோம்.

குறிப்பாக, இப்போது பெரும்பாலான ஆண்கள் பெண்களை எந்த அளவுக்கு மதிக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும், நமது ஒட்டுமொத்த இந்தியாவுமே இன்னும் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் படித்தவர் படிக்காதவர் எல்லோருமே தமது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க முன் வருவது இல்லை. தன் வீட்டு பெண்களையே மதிக்காத எத்தனையோ ஆண்கள் எப்படி மற்ற பெண்களை மதிப்பார்கள்? பள்ளிகளில் இருந்து கல்லூரி, அலுவலகம் என போகுமிடம் எல்லாம் சக ஆண்கள் எவ்வாறு பெண்களின் மேல் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என யோசித்தால் நிலைமை கவலைக்கிடமாக போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரு பெண் எவ்வளவு கஷ்டத்தை கடந்து ஒரு அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தால் அதை சில வஞ்சக மனிதர்கள் எளிதில் அந்த பெண்ணிற்கு இடையூறு செய்து எவ்வவளவு தொந்தரவு தர முடியுமோ அவ்வளவும் தருகின்றனர்.

அதை நேர்மையாக அவர்களுக்கு அதரவாக பேசும் ஆண்களுக்கு பெண்களிடம் வழிபவன், பல் இளிப்பவன், சொல் விடுபவன் என சக மனிதர்களிடமே  இளக்கார பேச்சு வேறு.

சுயக்கட்டுப்பாடு இல்லாத, ஒற்றுமை இல்லாத, ஒழுக்கம் இல்லாத, போராட்ட குணம் இல்லாத சமுதாயமாக நமது ஒட்டுமொத்த இந்தியாவுமே வழிநடத்தப்படுகின்றது. பெண்கள் மரியாதையை என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, அத்தனை பேர் நம்மில் படித்தவர்கள் ஒரு அரை கிலோமிட்டர் தூரம் சென்று திரும்பி வருவதற்கு பதிலாக, எதிர் வழியில் செல்கிறோம், நாம் செய்வது மற்றவர்களுக்கு இடையூறு என்பதை தெரிந்தே செய்கிறோம். சாலையை கடக்க சுரங்க பாதையோ இல்லை மேல் வழிப்பாதையோ இருக்கும்போது தடுப்புக்கட்டையை தாண்டி குதிப்பது பெரும்பாலும் படித்தவர்களே.

ஒழுக்கம், சுயகட்டுப்பாடு என்பது பாடப்புத்தகத்தில் மட்டும் இருந்தால் போதும் என்ற நினைப்பு பெரும்பாலும் அனைவர் மனதிலும் இருக்கிறது.

ஊரே அம்மணமாய் இருக்கும்போது கோவணம் கட்டியவன் பைத்தியம் என்பது போல ஒரு சிலர் நேர்மையாய் இருப்பதுமற்றவர்களுக்கு கேலி செய்ய எதுவாக அமைந்து விடுகிறது, வருடத்தின் முதலிலேயே இத்தகைய பதிவை எழுதுவது மனதிற்கு சிறுது வருத்தமே ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

தனி நபர் சம்பந்தப்பட்ட விசயங்களை நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை, புகை பிடிப்பது, குடிப்பது என்பது அவரவர் விருப்பம் ஆனால் அதற்குபின் நாம் நடந்துகொள்வது என்பது தனை நபர் சார்ந்தது அல்ல.


நான் இதில் சொல்ல வந்தது பொதுவாக நம் அனைவருக்கும் உள்ள பிரச்சனையே, நானும் இதில் சிலவற்றை பிடித்தோ பிடிக்காமலோ, சமுதாயதுக்காகவோ செய்துள்ளேன், எப்படி இதில் இருந்து மீண்டு வருவது?

Tuesday, March 31, 2009

முட்டாள் திட்டம் இப்போது இல்லை...

முட்டாள் திட்டம் தற்போதைக்கு நமது நாட்டில் போடப்பட்ட பலவிதமான திட்டங்கள் போல கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனது மாமாவிற்கு உடல் நிலை சரிஇல்லாத காரணத்தால் இதை செயல் படுத்த முடியாத நிலைமை.

சிலநாட்களாக மனது சரியாகவே இல்லை, நேற்று எப்படியும் சரி பண்ண வேண்டும் என்ற் நினைப்பில் கடந்த வருடம் சேமித்து வைத்த அந்த ரகசியம் (the Secret) என்ற motivational video பார்த்தேன், பல விஷயங்கள் புரிபட துவங்கியுள்ளது. மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய தகுந்த ஒரு பெட்டகம் இது. இந்தியாவில் இதுவரை கிடைக்காமல் இருந்த இந்த புத்தகம் மற்றும் குறுந்தகடு இப்போது கிடைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் landmark இல் பார்த்தேன்.


ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் எனது மாமா குணமைடைய, வழக்கமாக கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுள் நம்பிக்கை வரும் இப்போதும் அப்படியே, பெருசாக நம்பிக்கை இல்லாவிடிலும் கஷ்டம் என்று வரும்போது நம்பிக்கை தேவையை உள்ளது. ஒரு துணை போல... வழக்கம் போல நெல்லை மாவட்டத்தில் உள்ள காரையார் அணைக்கட்டு அருவிக்கரையில் ஒரு சிறு பிள்ளையார் இருப்பார் அவரிடம் வேண்டியுள்ளேன். மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் அவர் (என்னைப்பொறுத்தவரையில் ). அப்புறம் அவர் தம்பி பழநிமலை முருகனையும் வேண்டியுள்ளேன்.

நண்பர் பிரேம்குமார் என்னை பார்த்து ஒரு வருடம் முன்னாடி smart ஆகா இருந்துளீர் என்று சொல்லிவிட்டார், அதனால் இப்போது நான் எப்படி உள்ளேன் என்பதை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிகிறது. மறுபடியும் பழைய நிலைமைக்கு வர இன்று முதல் முயற்சிகளை துவங்கிவிட்டேன். பதிவுலகம் என்பது முதலில் நான் எனது எண்ணங்களை வெளிப்படுத்த மட்டுமே உபயோகித்தேன் பின்னர் இந்த உலகம் எனக்கு பலவிதமான ரசனைகளையும் நண்பர்களையும் கொடுத்து உள்ளது இப்பொது தான் தெரிகிறது. தற்சமயம் தீவிரமாக பதிவுலகத்தில் இல்லாவிடிலும் அவ்வப்போது எழுதுவதை படித்து சிறு பின்னூட்டம் போடுவதற்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்க மகிழ்ச்சி.

ஆட்டோமொபைல் துறையை பற்றியும் வாகனங்களை பற்றியும் எழுத நிறைய ஆசை ஆனால் முடியவில்லை. இந்த வாரம் முதல் எழுத ஆரம்பிக்க உள்ளேன்.

எதையோ எழுத நினைத்து எதையோ எழுதியுள்ளேன். வழக்கம் போல மொக்கை என்று நினைத்தால் நல்ல பதிவு தங்களுக்காக தயாராகிக்கொண்டு உள்ளது விரைவில் வெளியிடப்படும்.