Showing posts with label மீண்டும். Show all posts
Showing posts with label மீண்டும். Show all posts

Thursday, August 20, 2009

மறுபடியும் நான்

வெகு நாளாக பதிவுலகில் இருந்து விலகி இருந்தேன்.. காரணம் எல்லாம் தெரியவில்லை ஒரு விதமான சோம்பேறித்தனம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இனி மறுபடியும் துவங்கலாம் என்று இருக்கிறேன். என்னையும் ஒரு பதினோரு பேர் follow பண்ணுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் நான் யாரென்று மறந்து போய் பல நாட்கள் இருக்கும்.

எனவே இது ஒன்றும் comeback இல்லை... இத்தனை நாளாய் அதிகம் பதிவுகளை படிக்கவும் இல்லை சில சில பதிவுகளை படித்தேன். என்னை போலவே பலரும்பதிவுலகில் தற்காலிக விடுமுறை எடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன், கூடிய செய்கிறம் அனைவரும் திரும்புவார்கள் என்று எண்ணுகிறேன்.

எழுதுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன்.

வாழ்க்கை எத்தனை வேகமாய் நகருகிறது பாருங்கள், அனால் எத்தனை பேர் இதனை வருடம் அதை தங்களுக்குரியதாய் வாழ்ந்து அனுபவித்திருக்கிறீர்கள், ஏதோவொரு நிமிடத்தில் ஏன் நாம் இதை செய்கிறோம் இதனால் நமக்கு வருத்தம் வந்தாலும் எதற்கு செய்கிறோம் என்று எண்ணியது உண்டா? நான் எண்ணியிருக்கிறேன், என் வாழ்க்கை அதன் போக்கில் போகின்றது, பலர் அதை கடிவாளம் போட்டு இழுக்கின்றனர், முரண்டு பிடிக்கும் குதிரையாக சண்டித்தனம் பணிக்கொண்டு இருக்கிறேன் நான்.

பார்ப்போம் வரும் நாளில் என்ன வருதிறது என்று.

Sunday, February 15, 2009

மீண்டும் தலைமறைவிலிருந்து..

மீண்டும் தலைமறைவிலிருந்து..
வலைப்பதிவுக்கு வந்து நெகு நாட்கள் ஆகியதால் என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை. வீட்டில் இணையம் வந்துவிட்டதால் மறுபடியும் வலைபூவுக்கு ...மறுபடியும்

எழுத நிறைய இருக்கின்றது. என்ன எழுதலாம்???இந்த வருடத்திலிருந்து டைரி எழுதலாம் என்று நினைத்து நண்பன் குடுத்த டைரியை வாங்கி வைத்து எழுத வில்லை இன்று முதல் எழுத வேண்டும்.

நான் கடவுள் சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது அய்யா பால உங்களுக்கு நான் எண்ண எடுத்தாலும் பார்க்க ஆள் இருகிறார்கள் நான் என்னமோ பெருசா எடுத்துவிட்டேன் என்று சொல்வார்கள் என்று நினைத்து இருப்பார் போல. எனக்கு அடம் பார்க்க பிடிக்கலை, ஊனமுற்றை காட்டுவதில் அப்படி எண்ண வக்கிரம் அவருக்கு??

பூஜாவிற்கு பதிலாக நிஜமாகவே ஊனமுற்ற பெண்ணாக நடிக்க வைத்து இருக்கலாமே?

வெண்ணிலா கபடி குழு படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு வாரமாக பார்க்க முயன்று இன்னமும் முடியவில்லை.

இன்று எழுத நினைத்து இவளவுதான் எழுதியுள்ளேன், என்னிடம் இருந்து பதிவுகளை இனி எதிர்பார்க்கலாம்.