Showing posts with label வக்கீல் தாதா. Show all posts
Showing posts with label வக்கீல் தாதா. Show all posts

Friday, November 14, 2008

மாணவர்கள் இல்லை ரவுடிகள்

சட்ட கல்லூரி வன்முறையை பற்றி நேற்று பதிவுகளை பார்த்து மட்டுமே தெரிந்துகொண்டேன். இன்று காலையில் நண்பன் அனுப்பிய வீடியோ பார்த்து அதிர்ந்து போனேன்.

மாணவர்களுக்குள் அடிதடி சகஜம் அனால் இது அப்படி இல்லை ஒரு கொலை வெறி தாக்குதல், இந்த பரதேசிகள் எல்லாம் சட்ட கல்லூரி மாணவர்களாம் , இவர்கள் நாளைக்கு வக்கீல்கள், நீதிபதிகள். நிலைமை மோசமாகிக்கொண்டே போகின்றது.

எனக்கு தெரிந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் எல்லோருமே ரவுடிகள் மற்ற கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், மற்றும் பள்ளியிலேயே பொறுக்கிகள் மாட்டுமே இங்கு வந்து படிப்பார்கள், எனது நண்பனின் சகோதரி சட்ட கல்லூரியில் படித்தார் ஆனால் ஆண்டில் பாதி நாட்கள் அவர் வீட்டில் மட்டுமே இருப்பார் ஏன் என்றால் கல்லூரியில் எதாவது ஒரு பிரச்சனை விடுமுறை என்று பதில் சொல்வார்.

அப்போதே தெரியும், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, கீழ்பக்கம் மருத்துவ கல்லூரி விழாவில் இரண்டு சட்ட கல்லூரி மாணவர்கள் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டு அடி வாங்கி சென்றனர், அப்போது அங்கிருந்த காவல் அதிகாரிகள், இவர்களை மாணவர்கள் என்று யார் சொன்னது, எல்லோரும் ரவுடிகள், சந்தர்பத்திற்காக காத்திருக்கிறோம், கிடைத்தால் புளிந்து எடுத்து விடுவோம் என்றனர்,

நேற்று இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லையா? ஏன்யா உன் கண்ணு முன்னாடி ஒருதானை அப்படி அடிக்கிறார்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் கூட உங்களுக்கு மனச்சாட்சி இல்லை? இப்படி அடிக்க எப்படி மனசு வருகிறது, ஏண்டா 20 பேர் சேர்ந்து ஒருத்தனை அதுவும் மயங்கி விழுந்தவனை அடிப்பது என்னடா வீரம் .

இதெல்லாம் பண்ணினால்தான் நாளைக்கு வக்கீல் தொழிலில் கட்ட பஞ்சாயத்து பண்ண வசதியாய் இருக்கும் போல. காவல் துறை கண்டிப்பாக இவர்களில் சிலரை கைதுசெய்யும் ஆனாலும் வழக்கம் போல கடுமையான நடவடிக்கை இருக்காது, பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.
வெட்ககேடு,