Monday, August 4, 2008

விபத்து

நமது வலையுலக நண்பர் ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி தப்பி வந்தது பற்றி இந்த பதிவை எழுதியுள்ளார், இன்று எப்பாடுபட்டாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது இந்த பதிவு கண்ணில் பட்டது. நான் எழுத இருந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சிறிதளவு சம்பந்தம் உள்ளது.

நேற்று முன்தினம் எனது உறவினர் பையன், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பவன் தன் நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்தான். இவன் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டு இருக்க எதிரே வந்த மினி டோர் ஆடோ சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த இவர்களை நோக்கி வந்து எதிர்பாராத விதமாக இவர்களை இடித்து விட்டது.

இடித்த பின் வாகனத்தை விட்டு இறங்கவில்லை அந்த ஓட்டுனர், மக்கள் கூடி பார்க்கையில் அவர் மிக அதிக போதையில் இருந்துள்ளார், எனது உறவினர் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார், வண்டி ஓட்டி சென்ற பையனுக்கு இடது கையில் சதை கிழிந்துவிட்டது அனால் இவருக்கோ இடது கையில் எலும்பு முறிவு, தொடை எலும்புமுறிவு, முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு. internal bleeding அதிகமாக இருந்துள்ளது, நல்ல வேளையாக விபத்து நடந்த இடமும் எனது உறவினர் வேலை செய்யும் அரசாங்க மருத்துவமனையும் அருகில் இருந்தது, முதற்கட்ட சிகிச்சை முடிந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போதைய நிலவரம் கையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது, காலுக்கு சிகிச்சை செய்ய இனும் நான்கு நாட்கள் ஆகும், காலின் எலும்பு முறிவு காயத்துடன் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி தோலின் தன்மை சோதித்து விட்டு செய்ய வேண்டுமாம். பின்னர் அறுவை சிகிச்சை க்கு பின் உள்ள நாட்களில் infection ஆகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவர்க்கென ஒதுக்கப்பட்ட அறையில் உடன் வந்த உறவினர்கள் நோயாளியின் பெட்டில் ஏறிப்படுத்து விட்டனர், நாங்கள் அவர்களை அழைத்து கண்டிகையில் எங்களிடம் சண்டை, காலையில் அவரை கொண்டு வருவார்கள் அதுவரை என்ன என்று, நாங்கள் எவ்வாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை, பின்னர் உறவினரின் பெற்றோரை அழைத்து கூறி ஒரு வழியாக சரி செய்தோம். கடைசி வரை உடனிருந்து பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை எங்களுக்கு, இருந்தும் பெற்றோரிடம் கடினமாக கூறி வந்துளோம், மிக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. நோயாளியை பார்க்க வரும் உறவினர் தயவு செய்து இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது காவல்துறையில் புகார் செய்வது பற்றி, அந்த புகாரில் அந்த ஓட்டுனர் குடித்துவிட்டு வந்தது பற்றி ஒரு வார்த்தை இல்லை, அதை விட ஆச்சரியம் ஓட்டுனர் பெயரே மாறி இருந்ததுதான், அந்த வாகனத்தின் வசதிக்காக இவ்வாறு மாற்றி விட்டனர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு விபத்து காப்பீடு இல்லை, ஒட்டிய பையனுக்கு உரிமம் இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றதால் கோர்ட்டில் நட்ட ஈடு கேட்க்க வழி உள்ளது. காவல் துறையினரிடம் பின்னர் பேசியபோது தெரிந்தது ஓட்டுனர் மாற்றப்பட்டார், காரணம் அவர்க்கு உரிமம் இல்லை என்று.
குடித்து விட்டு வாகனத்தை ஓடியதால் இப்போது யாருக்கு நட்டம்? பாவம் ஒரு பையனின் ஒரு வருட வாழ்க்கை.

ஓட்டிய பையனுக்கு அடி இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றவருக்குபலத்த அடி.

இடித்த வண்டியின் உரிமையாளர் நேற்று வந்து பார்த்துவிட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவை குடுத்து விடுகிறேன் சமாதானமாக செல்லலாம் என்றார், அவரிடம் சிகிச்சைக்கு இரண்டு லட்சங்கள் ஆகும் என்று கூறுகையில் வேறு மருத்துவமனையில் வைத்து குறைந்த செலவில் குடுக்கிறாராம் ஆனால் புகார் வேண்டாமாம். தற்ப்போது நாங்கள் புகார் குடுத்து கோர்ட் மூலமாகவே செல்ல விருப்பம் என்று கூறி விட்டோம்.

தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டதீர் நண்பர்களே, இன்றில்லை என்றாவது சிறிது நேர தவறில் எதிர்காலம் பாழாகும் வாய்ப்பு எதற்கு குடுக்க வேண்டும்.

2 comments:

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Karthik said...

//தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டதீர் நண்பர்களே

கண்டிப்பாக. மற்ற நாடுகளில் குடித்து விட்டு ஓட்டுபவர் மினிஸ்டராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. நமக்கு சுதந்திரம் என்பது சட்டத்தை மீறுவதுதான். சட்டம் என்பதை தாண்டி நம்முடைய, மற்றவருடைய உயிரை மதிக்க வேண்டும்.