Friday, October 3, 2008

ராமன் தேடிய சீதை-பாத்துபுட்டோம்ல

ராமன் தேடிய சீதை
எனக்கு படத்திற்கு விமர்சனம் எழுதவெல்லாம் தெரியாது அனால் இந்த படத்தை பார்த்தபோது தோன்றியவை இங்கே.

ஒரு ஆணின் பார்வையில் இருந்து பெண் பார்க்கும் படலம் மற்றும் திருமணம் பற்றிய பார்வை.

இந்த படத்தில் நிறைய இடத்தில் இந்த பெண் பார்க்கும் படலத்தை பழைய சினிமா தனமாக எடுத்துள்ளனர். போன், இணையம் என்று வந்து அனைவரும் இந்த வசதிகளை உபயோகிக்க துவங்கிய பிறகும் நேரில் சென்று பெண் பார்த்து முடிவு பண்ணுகிறோம் என்று சொல்வது கொஞ்சம் நெருடல்.
இவரிடம் இருக்கும்குறைகளை பார்ப்பதற்கு முன்னரே தெரிவித்து சம்மதம் வாங்கலாமே?

அனால் படத்தில் திருமண வயதை கடந்து பெண் கிடைக்காமல் இருக்கும் ஆண்களைப்பற்றி அவர்களின் உணர்வுகளை தெளிவாக காட்டியுள்ளார் சேரன்.

பசுபதி இன்னும் நன்றாக செய்திருக்கலாம், பாவம் சேரன் குருடன், திருடனுக்கேலாம் பெண் கிடைக்கிறது அனால் இவருக்கு கிடைக்க வில்லை.
நவ்யா நாயரை பார்க்கும் முன்னரே ஒரு காட்சியில் மணிவண்ணன் நான் வேணும் என்றால் அந்த ஆஸ்பிடல் பொண்ணுகிட்ட பேசறேன் என்பார் சேரன் வேணாம் என்று மறுத்து விடுவார்.

அப்பவே சரி என்று சொல்லி இருந்தால்படத்தில் இருபது நிமிடங்களையும் நிஜத்தில் சில லகரங்களை மிச்சம் பிடித்திருக்கலாம்.

நாயகனுக்கு வேலையே வார இறுதியில் பெண் பார்க்க போவது பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு பைத்தியம் என்று சொல்வது, இப்படியே பொழுதை ஊட்டி இருக்கிறார். அப்பத்தான் அந்த பெண் இவரை வேணாம் என்று சொல்லும் அடுத்த வீட்டில் பஜ்ஜி சாப்பிடலாம். (யாரையம் இது புண்படுத்த அல்ல, பார்க்கும் பொது நண்பர்கள் அடித்த கமன்ட் )
போலீசில் அடி வாங்குவது செம சீன். மொத்தத்தில் இரண்டரை மணி நேரமும் நன்றாக சிரித்து பார்த்த படம் இது, சீரியஸ் படமாக எடுத்தாலும் நண்பர்களுடன் பார்கையில் சிரிப்பு படமாக போய்விட்டது,

இதற்கு முன்னர் பார்த்த சத்யம் படத்திற்கு இது எவ்வளவோ தேவலை. அவர் போலீசு என்று நினைத்தாலே சிரிப்பு வருது இதுல மிரட்டற இடத்துல எல்லாம் கெஞ்சிகிட்டு இருக்காபுல. உபேந்திர வரும் சீன்கள் நன்றாக இருந்தன.

தயவு செஞ்சு இனி எப்படி போலீசு கேரக்டரில் நடிக்க கூடாது என்று இந்தப்படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

ராமன் தேடிய சீதை- இந்த படத்திற்கு இரண்டு டிக்கட் எடுத்து அப்பா அம்மாவை பார்க்க சொல்லி அனுப்ப வேண்டும், பின்ன ஒழுங்கா இப்பவே பெண் பார்க்காமல் விட்டுவிட்ட பின்னர் இப்படித்தான் நானும் அலையனும் என்று தெரிஞ்சுக்க வேணாமா?

அனைத்து பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் :)

4 comments:

thamizhparavai said...

//அனைத்து பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் :)//
:-)

rapp said...

me the first

rapp said...

//ஒரு ஆணின் பார்வையில் இருந்து பெண் பார்க்கும் படலம் மற்றும் திருமணம் பற்றிய பார்வை.//

அழகா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க:):):)

DHANS said...

நன்றி ராப் மற்றும் தமிழ்ப்பறவை