Wednesday, June 24, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்-5

பகுதி-4

காலையில் எழும்போதே பரபரப்பாக இருந்தது எனத் வேலையுமில்லை அனால் ஆறு மணிக்கே எழுந்து விட்டான். திடிரென்று கிளம்பினான் நேராக நண்பர்களது வீடிற்கு சென்றான், அங்கு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர், இவங்களை எழுப்பி கிளம்பவைக்க நேரமாகும் என்பதால் நேராக வண்டியை ECR திருப்பினான், முட்டுக்காடு வரை சென்று திரும்பினான், வீடிற்கு வந்து பார்க்கையில் செல போனில் மூன்று missed calls. எதற்கோ சைலன்டில் வைத்தவன் மாற்ற மறந்து விட்டிருந்தான்.

அழைத்து பேசலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு உரிமையில் அழைத்தான்.. இரண்டாவது முறை அழைத்தபோது எடுக்கப்பட்டது. எங்க இருகிறாய் என்ற கேள்விக்கு வீட்டில் தான் என்று பதில் வந்தது,தூங்கிற்றுந்தியா என்றாள், இல்லை ஒரு வேலையை வெளியே சென்று இப்போதுதான் வந்தேன், சைலன்டில் வைத்ததால் உன் call பார்க்கல என்றான்.
சரி பரவாயில்லை எனக்கு ஒரு பூட்டு வாங்கணும் எங்கே வாங்கறதுன்னு தெரியலை அதான் உங்கிட்ட கேட்டா தெரியும் என்று கால் பண்ணினேன் என்றால். பின்னர் ஆனா நானே என்னோட பழைய பூட்ட கண்டுபிடிச்சுட்டேன் so no problem என்றாள்.

ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு பிறகு அவள் அவளது தோழியை காண செல்வதாக கூறியதால் வைத்தான். ஏன் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி? விடை தெரிந்தும் அதை புரியாமல் விழித்தான். எதோ புரிந்தும் புரியாமல் ஒரு விதமான நிலைமையில் இருந்தது.

ஆகா மனதில் சுதா நியாபகம் வந்தது. காலையிலேயே missed call வந்து இருந்தது, வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். பேசினான். எல்லாம் நன்றாக இருப்பதாகவும் திங்கள் வந்துவிடுவதாகவும் கூறினால். thanks என்று சம்பந்தம் இல்லாமல் அவளிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான். எதற்கு எனக்கு thanks சொல்றான் இவன், என்ன ஆச்சு என்று குழம்பியபடியே போனை வைத்தாள் சுதா.

வாரக்கடைசியும் ஓடியது, எப்பவும் sms அவ்வப்போது phone call என்று பேசிக்கொண்டு இருந்தான். அலுவலகத்தில் சில நாட்களில் நேரம்கடந்து வேலை செய்வது உண்டு. அன்று ஒரு நாள் அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும்போது போன் வந்தது அவளிடமிருந்து. என்னவென்று தெரியவில்லை மிக சோகமான நிமையில் பேசினாள், அவனுக்கோ நேரில்பார்க்க வேண்டும் போல இருந்தது அனால் கேட்க்க தயக்கம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "சரி எப்ப கிளம்புவ" என்று கேட்டான். தெரியல என்று பதில் வந்தது. சரி கிளம்பும்போது சொல்லு என்று கூறினான்.

பத்து நிமிடத்தில் sms " i am leaving " உடனே பதில் அனுப்பினான் " wait am on d way" உடனே போன் வந்தது, "எங்க இருக்க? ஏன் வர நீ? நான் ஆட்டோல போய்க்கிறேன் என்று, இல்லை பக்கத்துலதான் இருக்கேன் இரண்டு நிமிடத்தில் அங்க இருப்பேன் என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடத்திலேயே அங்கு இருந்தான். . வண்டியில் அமர்ந்தாள், நேராக அந்த ரெஸ்டாரன்ட்சென்றது. அவளிடம் கேட்க்காமலேயே ஆர்டர் பண்ணினான். அவளுக்கு நான் ஆர்டர் பண்ணி வரவைத்தான். சாப்பிட்டு முடிக்கும்போது அவள் மாறி இருந்தாள், வழக்கம் போல உற்சாகத்துடன்.

அவளை விட்டுவிட்டு வீட்டிற்க்கு வந்தான். செல்போனில் இருந்த ஒரே பாட்டு " சுட்டும் விழி சுடரே" திரும்ப திரும்ப ஓடியது வீடு வரும் வரை. சொல்லவும் வேண்டுமா வீட்டிற்க்கு வந்தவுடன் ஆரம்பித்த sms பின்னர் phone call ஆக மாறி நெடுநேரம் பேசியது பற்றி.

தொடரும்

1 comment:

Karthik said...

well..well..well.. semaiya poguthey?!

:)