Thursday, August 20, 2009

மறுபடியும் நான்

வெகு நாளாக பதிவுலகில் இருந்து விலகி இருந்தேன்.. காரணம் எல்லாம் தெரியவில்லை ஒரு விதமான சோம்பேறித்தனம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இனி மறுபடியும் துவங்கலாம் என்று இருக்கிறேன். என்னையும் ஒரு பதினோரு பேர் follow பண்ணுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் நான் யாரென்று மறந்து போய் பல நாட்கள் இருக்கும்.

எனவே இது ஒன்றும் comeback இல்லை... இத்தனை நாளாய் அதிகம் பதிவுகளை படிக்கவும் இல்லை சில சில பதிவுகளை படித்தேன். என்னை போலவே பலரும்பதிவுலகில் தற்காலிக விடுமுறை எடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன், கூடிய செய்கிறம் அனைவரும் திரும்புவார்கள் என்று எண்ணுகிறேன்.

எழுதுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன்.

வாழ்க்கை எத்தனை வேகமாய் நகருகிறது பாருங்கள், அனால் எத்தனை பேர் இதனை வருடம் அதை தங்களுக்குரியதாய் வாழ்ந்து அனுபவித்திருக்கிறீர்கள், ஏதோவொரு நிமிடத்தில் ஏன் நாம் இதை செய்கிறோம் இதனால் நமக்கு வருத்தம் வந்தாலும் எதற்கு செய்கிறோம் என்று எண்ணியது உண்டா? நான் எண்ணியிருக்கிறேன், என் வாழ்க்கை அதன் போக்கில் போகின்றது, பலர் அதை கடிவாளம் போட்டு இழுக்கின்றனர், முரண்டு பிடிக்கும் குதிரையாக சண்டித்தனம் பணிக்கொண்டு இருக்கிறேன் நான்.

பார்ப்போம் வரும் நாளில் என்ன வருதிறது என்று.

1 comment:

Karthik said...

வெல்கம் பேக், அடிக்கடி காணாமல் போகாதீர்கள்! :)