Tuesday, April 3, 2012

ஆரம்பிச்சாச்சு ஐபிஎல்

போன வருடம் IPL  ஆரம்பித்த சமயம் எழுதி டிராப்டில் வைத்திருந்தேன், ஒரு வருடத்திற்கு பிறகு  பதிவதால் பல வருடம் பொட்டிக்குள் கிடந்த படம் போல வித்தியாசம் எல்லாம் பெருசா ஒன்னும் தெரியல.  

என்னிக்குத்தான் இந்த IPL முடியுமோ தெரியல, தூங்கும் முன்னாடி IPL தூங்கி எழுந்தா காலைல வேலைய ஆரம்பிக்கும் முன்னாடி செய்தி சேனல் முதல் சக நண்பர்கள் வரை ஒரே IPL பற்றி மட்டும் தான் பேச்சு, அப்பா சாமி முடியல.. அவனவன் பணத்துக்காக விளையாடறான் அத இவங்க இவ்வளவு பெருசா பேசறாங்க. அளவுக்கு மீறின அமிர்தமும் நஞ்சு என்பது சிலருக்கு போகப்போகத்தான் தெரியும்.

 
பதிவுலகத்துக்கு கொஞ்சநாள், இல்லை இல்லை நீண்ட நாள் இடைவெளி விட்டு இருந்தேன், என்ன எழுத என்பதில் இருந்து எழுத எங்க நேரம் என்பது வரை ஏகப்பட்ட கேள்விகள், இதில் நம்ம மடிக்கணினி வேறு தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது. இனி இந்த இடைவெளியை குறைக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
 
இந்த தலைமறைவு எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை அதனால் மாற்றத்தை நாம் தேடிப்போகக்கூடாது  
 அதுவாகவே நம்மளை தேடி வரும் என்பதை புரிந்து கொண்டேன்.

No comments: