Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Thursday, June 12, 2008

நீச்சல்

நீச்சல்

ஒரு வருடமாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தேன், நீச்சல் குளத்துக்கு செல்ல போகிறேன் என்று, மெம்பெர் ஆகணும் என்றால் டாக்டர் சான்றிதல் மற்றும் வங்கி வரைவோலை வேண்டும் என்றும் தெரியும் அனாலும் சேரவில்லை.

என்னைகேட்டு பலபேர் சேர்ந்த பிறகு எனக்கும் அறிவு வந்தது, தினமும் வாழ்க்கையே வெறுத்து போனது போல புலம்பிக்கொண்டு இருந்த நான், ஏதும் புதிதாக இல்லை எல்லாம் அப்படியே இருக்கு என்று சொல்லியே காலத்தை ஓட்டினேன். ஏதும் புதிதாக பண்ணினால் சுவாரசியமாக இருக்கும் என்று பல நாட்கள் நினைத்தது உண்டு அனால் செயல் வடிவம் பெறவில்லை.

திடீரென்று எனது அறை நண்பர்கள் நீச்சல் தெரியாதவர்கள் அவர்களே நீச்சல் கற்றுக்கொண்டு இப்போது வழக்கமாக செல்லும் பழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர் அனால் நான் மட்டும் அட்வைஸ் ஆருமுகமாக இருந்தேன், எப்படி எனக்குள்ளும் அந்த தீ பற்றிக்கொண்டது?? தெரியவில்லை, திடீரென்று ஒரு நாள் முடிவெடுத்தேன் அடுத்த நாள் சென்று சேர்ந்து விட்டேன்.

முதல் நாள் நண்பனுடன் சென்றேன் ஏற்கனவே அவனை நீயெல்லாம் என்ன அடிக்கிற நான் சின்ன வயசுள்ள அப்படி இப்படி என்று பீலா வேறு விட்டிருந்தேன் அதை காப்பற்ற வேண்டுமே என்ற பயம் இருந்தது. உள்ளே சென்றவுடன் முதல் முறை வேகமாக சென்றேன், ஆஹா நமக்கு இன்னும் அதே வேகம் இருக்கிறது என்று எண்ணி அடுத்த முறை செல்லும்போது தெரிந்தது இன்னும் நீ பழையபடி இல்லை என்று ஆனாலும் என்னாலும் முடியும் என்று என்னுடன் பிறந்த விடாமுயற்சியுடன் 5 முறை சென்று விட்டு எழுந்து விட்டேன்.

கடந்த வாரம் கூட ஊருக்கு சென்று இருக்கையில் தோட்டத்து கிணற்றில் தனியாக நீச்சல் அடித்தேன் அப்போ கூட இன்னும் சில நேரம் இருந்து விட்டு வரலாம் என்று நினைத்தேன் அனால் இங்கு?? உள்ளே விழுந்தவுடன் எப்போடா முடித்து விட்டு கிளம்பலாம் என்ற எண்ணம் தான், என்னதான் நகர்புறம் நீச்சல் தொட்டி என்றாலும் மனது இன்னும் கிராமத்தை தான் நாடுது. கற்கண்டு போல இனிக்கும் அந்த கிணற்று தண்ணீர் எங்கே, இந்த கிளோரின் கலந்த தொட்டி தண்ணீர் எங்கே, வாயில் பட்டவுடன் கசக்கின்றது. குளம் முழுவது நீல நிறத்தில் உள்ளது பார்க்க அழகாக உள்ளது அனாலும் நீந்த மனதுக்கு ஏன் பிடிக்கவில்லை??

கிணற்றில் உள்ள பயம் கலந்த ஒரு த்ரில் ஏன் இங்கு இல்லை? கற்றுக்கொண்ட கிணற்று நீச்சலில் தேர்ந்த நான் இந்த நகர்புறத்து பகட்டு நீச்சலில் எந்த விதத்தில் தாழ்ந்தேன்? தலைக்கு உரை அணிந்து தான் வர வேண்டுமாம், சரி இருக்கட்டும் இது ஒரு சுகாதாரமான முறை அனால் நானாக கற்ற நீச்சலை இவர்கள் சொல்லி குடுக்கும் முறையில் மட்டுமே அடிக்கணும் என்று இவர்கள் சொல்ல என்ன காரணம்??

என்னால் தண்ணீரில் மிதிக்க முடியும், இவர்கள் செய்யும் எல்லாமும் செய்ய தெரியும் அனாலும் இவர்கள் முறையில் அல்ல, அனாலும் அதற்கு இறுதி பயன் என்ன? எல்லாம் ஒன்று தான? கணித பாடத்தில் ஒரு ஆசிரியரிடம் பயின்று அவர் முறைப்படி கணக்கு போடுகையில் அவர்க்கு மாற்றாக வந்த ஆசிரியர் அதை தப்பு என்று சொல்லியபோது எனக்கு எழுந்த கோவம் இப்போதும் வருகின்றது, அனால் அப்போது அது கட்டாயம், இப்போது இங்கு அறிவுரை அனால் கட்டாயம் இல்லை.
எதோ ஒன்று நான் கற்ற நீச்சல் எனக்கு பயத்தை முதலில் கொடுத்தாலும் பின்னர் தன்னம்பிக்கையை கொடுத்து பயத்தை விரட்டி அடித்து பாம்புடன் நீந்தும் அளவிற்கு தைரியம் குடுத்தது, இந்த நகர்ப்புறத்து நீச்சல் வெறும் பகட்டு நீச்சல் போல என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது.

எது எப்படியோ போகட்டும் எனக்கு தெரிந்து கிராமத்தில் வளர்ந்து நகர்புறத்துக்கு வந்த அனைவரும் மற்றவர்களை விட வாழ்க்கையில் சிறிது அதிகம் கற்று வந்திருக்கின்றனர் என்று எண்ணுகிறேன் சரியா??, அவர்கள் வாழ்க்கையாய் கற்றதை நகர்ப்புறவாசிகள் பணம் குடுத்து கற்க வேண்டிய நிர்பந்தம் இங்கு என்று எண்ணுகிறேன், சரியா? இல்லை என் எண்ணம் தவறா? எதுவாக இருந்தாலும் சரி வாழ்க்கை அனைவருக்கும் ஒண்ணுதானே....

Wednesday, June 11, 2008

ஜாதகம் நம்பலாமா??

எனக்கு மனதுக்குள் மிகப்பெரிய கேள்வி, ஜாதகத்தை நம்பலாமா? சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த ஜாதகம், ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, வயசு அதிகமாக அதிகமாக கோவிலுக்கு செல்வதும் குறைந்தது, பரீட்சை காலங்களில் எலோரும் போல கோவிலுக்கு செல்வது என இருந்தேன்.

இப்பொது கோவிலுக்கு செல்வதும் குறைந்து விட்டது, சென்னை வந்து 2 முறை பெசென்ட் நகரில் உள்ள புதிதாக கட்டப்பட்ட முருகன் கோவிலுக்கு மட்டுமே சென்றுள்ளேன். எனக்கோ கூட்டம் என்றால் ஒத்துக்காது அப்புறம் எங்க கோவிலுக்கு செல்வது.

சரி ஜாதகத்துக்கு வருவோம், நான் ஒரு எட்டாவது படித்துக்கொண்டு இருப்பேன் அப்போ எல்லாம் வீட்டில் அம்மா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று விடுவார்கள். ஒரு நாள் எங்க மாமா வீட்டிற்க்கு ஒரு ஆள் ஜாதகம் பார்க்க வந்தார், பின்னர் அவரை எங்க வீட்டிற்க்கு கூட்டி வந்து பார்க்க சொன்னார்கள். அவர் சொன்னதிலிருந்து முதலில் அண்ணன் ஜாதகம், அண்ணன் சுமாராக படிப்பார் என்று சொன்னார், எங்களுக்கு அதிர்ச்சி என்னடா மருத்துவம் படிப்பவரை சுமாராக படிப்பார் என்று சொல்கிறாரே என்று, இருந்தாலும் அதில் மற்றவர்களை விட எதோ சுமாராக படிப்பார் போல என்று சமாதான படுத்திகொண்டோம். பின்னர் பையன் இரும்பு சம்பந்தப்பட்ட படிப்பு மற்றும் தொழில் தான் இருப்பார் என்றார். எங்க அப்பா குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் பையன் காதல் திருமணம் செய்ய போகிறான் என்று சொன்னார். அதையும் குறித்து வைத்துக்கொண்டோம்.

பின்னர் அக்கா ஜாதகம் (அக்காவும் விடுமுறையில் வந்திருந்தார்) ஜாதகத்தை பார்த்த உடன் இந்த பெண்ணிற்கு படிப்பு வராது, 12 வரை மட்டுமே படிக்க வாய்ப்பு உள்ளது என்று அடுத்த குண்டு போட்டார், பின்ன அவரும் மருத்துவம் படிக்கும்போது அப்படி சொன்னா?? உண்மையில் எங்க வீட்டில் அவர்தான் ரொம்ப நல்லா படிப்பார். அவரிடம் என்னங்க சும்மா மாத்தி மாத்தி சொல்றீங்க என்று சொன்னா அவர் அதற்கு பையன் மருத்துவம் படித்தால் ஊசி இரும்பு தான இரும்பு சம்பந்தமான தொழில் தானனு முடக்கினார், காதல் கல்யாண மேட்டர் பொறுத்து இருந்து பார்த்தாயிற்று, எனக்கு தெரிந்து என் அண்ணன் கல்லூரியில் மௌனம் பேசியதே சூரியா மாதிரி இருந்தார், பொண்ணுங்கன்னா ஒத்துக்காது. அக்கா படிப்புக்கு பதில் பேசவே இல்ல இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பலாமா?

இன்னொரு விஷயம் உள்ளது, என் ஜாதகம் தப்பா எழுதி இருக்காங்க என்று சொல்லி மறுபடியும் ஒருத்தர் எழுதி குடுத்தார், அஅதில் அடுத்து வரும் 80 வருடங்களுக்கு சிறு சிறு குறிப்பாக குறிப்பு எழுதி உள்ளார். நான் எதையும் நம்பவில்லை அவர் குறிப்புப்படி 2002-2003 படிப்பில் மந்தமா இருக்கும் என்றார், நான் இரண்டாம் வருடம் படித்துகொண்டிருந்தேன், 5 பேப்பரில் கப்பு.
2003 இறுதியில் காவல்நிலையம் செல்வேன் என்று எழுதி இருந்தார், அதன்படி செல்ல வேண்டியதாயிற்று. அதிலிருந்து சிறிது நம்பிக்கை ஏற்ப்பட்டது.

இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பறதா வேண்டாமா?

அனாலும் எப்பலம் மனசு கஷ்டப்படுகிறதோ அப்போ ஜாதகத்தை நம்பலாமா என்று சஞ்சலம் மனதில், அம்மா வழக்கம் போல ஜாதகம் பார்த்துவிட்டு வந்து டைம் சரி இல்ல பார்த்து இருந்துக்கோ என்பார்கள், நானும் சரி என்று விட்டு உங்களுக்காக பாத்துக்கறேன் ஆனா ஜாதகம்லாம் நீங்களே பாத்துக்கோங்க எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வேன்.

டைம் நல்லா இருக்கிறது என்று சொன்னால் அதே வரிகளை பொய்யாக சொல்லி வைப்பேன். நல்லது நடக்கும் என்றால் நம்பலாம் தான?

கடவுள் நம்பிக்கையுமுண்டு அனாலும் கோவிலுக்கு செல்ல பிடிக்கவில்லை, நான் கடவுளை வணங்கும் பல பேரை பார்த்து இருக்கிறேன் எல்லோரும் தங்களுக்க்காகவும் குடும்பதிர்க்காகவும் வேண்டுகின்றனர், எவரும் அனைவரும் நல்லா இருக்கணும் என்றோ, தனது நாடு நல்லா இருக்கணும் என்றோ வேண்டுவது இல்லை, இதுவே எனது கோவில் வெறுப்பை குடுத்தது. என்ன இருந்தாலும் நானும் சராசரி மனிதன் தானே, நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல அதான் நல்லதுன்னா நம்பலாம், கெட்டதுன்னா நம்ப தேவை இல்லைனு முடிவெடுத்துள்ளேன் இது சரியா?