Thursday, June 12, 2008

நீச்சல்

நீச்சல்

ஒரு வருடமாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தேன், நீச்சல் குளத்துக்கு செல்ல போகிறேன் என்று, மெம்பெர் ஆகணும் என்றால் டாக்டர் சான்றிதல் மற்றும் வங்கி வரைவோலை வேண்டும் என்றும் தெரியும் அனாலும் சேரவில்லை.

என்னைகேட்டு பலபேர் சேர்ந்த பிறகு எனக்கும் அறிவு வந்தது, தினமும் வாழ்க்கையே வெறுத்து போனது போல புலம்பிக்கொண்டு இருந்த நான், ஏதும் புதிதாக இல்லை எல்லாம் அப்படியே இருக்கு என்று சொல்லியே காலத்தை ஓட்டினேன். ஏதும் புதிதாக பண்ணினால் சுவாரசியமாக இருக்கும் என்று பல நாட்கள் நினைத்தது உண்டு அனால் செயல் வடிவம் பெறவில்லை.

திடீரென்று எனது அறை நண்பர்கள் நீச்சல் தெரியாதவர்கள் அவர்களே நீச்சல் கற்றுக்கொண்டு இப்போது வழக்கமாக செல்லும் பழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர் அனால் நான் மட்டும் அட்வைஸ் ஆருமுகமாக இருந்தேன், எப்படி எனக்குள்ளும் அந்த தீ பற்றிக்கொண்டது?? தெரியவில்லை, திடீரென்று ஒரு நாள் முடிவெடுத்தேன் அடுத்த நாள் சென்று சேர்ந்து விட்டேன்.

முதல் நாள் நண்பனுடன் சென்றேன் ஏற்கனவே அவனை நீயெல்லாம் என்ன அடிக்கிற நான் சின்ன வயசுள்ள அப்படி இப்படி என்று பீலா வேறு விட்டிருந்தேன் அதை காப்பற்ற வேண்டுமே என்ற பயம் இருந்தது. உள்ளே சென்றவுடன் முதல் முறை வேகமாக சென்றேன், ஆஹா நமக்கு இன்னும் அதே வேகம் இருக்கிறது என்று எண்ணி அடுத்த முறை செல்லும்போது தெரிந்தது இன்னும் நீ பழையபடி இல்லை என்று ஆனாலும் என்னாலும் முடியும் என்று என்னுடன் பிறந்த விடாமுயற்சியுடன் 5 முறை சென்று விட்டு எழுந்து விட்டேன்.

கடந்த வாரம் கூட ஊருக்கு சென்று இருக்கையில் தோட்டத்து கிணற்றில் தனியாக நீச்சல் அடித்தேன் அப்போ கூட இன்னும் சில நேரம் இருந்து விட்டு வரலாம் என்று நினைத்தேன் அனால் இங்கு?? உள்ளே விழுந்தவுடன் எப்போடா முடித்து விட்டு கிளம்பலாம் என்ற எண்ணம் தான், என்னதான் நகர்புறம் நீச்சல் தொட்டி என்றாலும் மனது இன்னும் கிராமத்தை தான் நாடுது. கற்கண்டு போல இனிக்கும் அந்த கிணற்று தண்ணீர் எங்கே, இந்த கிளோரின் கலந்த தொட்டி தண்ணீர் எங்கே, வாயில் பட்டவுடன் கசக்கின்றது. குளம் முழுவது நீல நிறத்தில் உள்ளது பார்க்க அழகாக உள்ளது அனாலும் நீந்த மனதுக்கு ஏன் பிடிக்கவில்லை??

கிணற்றில் உள்ள பயம் கலந்த ஒரு த்ரில் ஏன் இங்கு இல்லை? கற்றுக்கொண்ட கிணற்று நீச்சலில் தேர்ந்த நான் இந்த நகர்புறத்து பகட்டு நீச்சலில் எந்த விதத்தில் தாழ்ந்தேன்? தலைக்கு உரை அணிந்து தான் வர வேண்டுமாம், சரி இருக்கட்டும் இது ஒரு சுகாதாரமான முறை அனால் நானாக கற்ற நீச்சலை இவர்கள் சொல்லி குடுக்கும் முறையில் மட்டுமே அடிக்கணும் என்று இவர்கள் சொல்ல என்ன காரணம்??

என்னால் தண்ணீரில் மிதிக்க முடியும், இவர்கள் செய்யும் எல்லாமும் செய்ய தெரியும் அனாலும் இவர்கள் முறையில் அல்ல, அனாலும் அதற்கு இறுதி பயன் என்ன? எல்லாம் ஒன்று தான? கணித பாடத்தில் ஒரு ஆசிரியரிடம் பயின்று அவர் முறைப்படி கணக்கு போடுகையில் அவர்க்கு மாற்றாக வந்த ஆசிரியர் அதை தப்பு என்று சொல்லியபோது எனக்கு எழுந்த கோவம் இப்போதும் வருகின்றது, அனால் அப்போது அது கட்டாயம், இப்போது இங்கு அறிவுரை அனால் கட்டாயம் இல்லை.
எதோ ஒன்று நான் கற்ற நீச்சல் எனக்கு பயத்தை முதலில் கொடுத்தாலும் பின்னர் தன்னம்பிக்கையை கொடுத்து பயத்தை விரட்டி அடித்து பாம்புடன் நீந்தும் அளவிற்கு தைரியம் குடுத்தது, இந்த நகர்ப்புறத்து நீச்சல் வெறும் பகட்டு நீச்சல் போல என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது.

எது எப்படியோ போகட்டும் எனக்கு தெரிந்து கிராமத்தில் வளர்ந்து நகர்புறத்துக்கு வந்த அனைவரும் மற்றவர்களை விட வாழ்க்கையில் சிறிது அதிகம் கற்று வந்திருக்கின்றனர் என்று எண்ணுகிறேன் சரியா??, அவர்கள் வாழ்க்கையாய் கற்றதை நகர்ப்புறவாசிகள் பணம் குடுத்து கற்க வேண்டிய நிர்பந்தம் இங்கு என்று எண்ணுகிறேன், சரியா? இல்லை என் எண்ணம் தவறா? எதுவாக இருந்தாலும் சரி வாழ்க்கை அனைவருக்கும் ஒண்ணுதானே....

No comments: