Showing posts with label தமிழ்ப்புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ்ப்புத்தாண்டு. Show all posts

Thursday, April 12, 2012

இதுதான் நமது தமிழ் சமூகம்



மாலையில் இருந்தே டாஸ்மார்க்கில் கூட்டம் அலை மோதவில்லை,வழக்கத்தை மிஞ்சும் வியாபாரமும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்னணியே முன்னணி செய்தித்தாள்களில் இரவு பார்ட்டிக்கு விளம்பரங்கள் இல்லை.

காவல் துறையினரின் முதல் நாள் மீட்டிங்கும் பின்னர் தொலைகாட்சி பேட்டியும் இல்லை.

நள்ளிரவு குடியும் பின்னர் கொலைவெறி வாகனம் ஓட்டுதலும் இல்லை.

புத்தாண்டு உறுதி மொழி இல்லை அதை எடுத்தாலும் கடைபிடிக்காத எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.

அதீத குறுஞ்செய்தி இல்லை.

தொலைக்காட்சிகளில் வழக்கம் போல வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் இல்லை.
 
இப்படி பல இல்லைகள் இருந்தாலும் இந்த புத்தாண்டைக்கொண்டடும்போது ஒரு பெருமிதம் மட்டும் இருக்கிறது.

இத்தனை இல்லைகள் இருக்கும் அமைதியான தமிழ்ப்புத்தாண்டே நமக்கு போதும்

சமீபத்தில்தான் களவாணி படம் பார்த்தேன் அதில் சாமிய கொண்டுபோய் ஆறு மாசம் நீ வச்சு கும்பிடு ஆறு மாசம் நான் வச்சு கும்பிடறேன் என்று சொல்வது போல.

அஞ்சு வருஷம் நீ சித்திரை ஒன்னாம் தேதிய கொண்டாடு அஞ்சு வருஷம் நான் தை ஒன்னாம் தேதிய கொண்டடறேன்னு ஒப்பந்தம் போட்டுடுவாங்க என்று நினைக்கறேன்.

ஊருக்கு போவதால் பதிவு உலகம் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது ஆகையால் இந்த வருஷம் ஒரு நாள் முன்னாடியே எல்லோருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, April 14, 2010

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 

என்னதான் தேதிய மாத்தினாலும் மனச மாத்த முடியாது லீவ் விடலான தமிழ்ப்புத்தாண்ட மறந்துடுவோமா?