முன்பே சொன்ன படி நான் கார் வாங்கி விட்டேன், விட்டேன் என்றால் முன் பணம் செலுத்தி விட்டேன், இன்னும் வங்கி கடன் வரத்தால் இரண்டு நாளில் வண்டியை எடுக்க போகிறேன். அவர்களிடம் ஒரு தொகைக்கு பேசி முன்பணம் செலுத்தி உள்ளேன்.
நேற்று எனது மற்றொரு நண்பர் நான் வாங்கிய அதே மாடல் வண்டி வியாளிக்கு வந்துள்ளதாகவும் விலை கணிசமான அளவு குறைவாகவும் இருப்பதாக கூறி எனை அழைத்தார். அவர் அழைப்பை மறுக்க முடியாமல் நானும் சென்று பர்தீன், ஊடிப்பர்ததில் வண்டி நன்றாக உள்ளது. நான் ஏற்க்கனவே முடித்த வண்டிக்கும் இந்த வண்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனால் இந்த வண்டி கணிசமான அளவு குறைவான விலைக்கு கிடைக்கின்றது.
இப்போது நான் என்ன செய்வது? இரண்டுமே பழைய கார் , ஒரே வருடம், ஒரே அளவு ஓடியுள்ளன. வித்தியாசம் எதுவுமில்லை விலையை தவிர.
பழைய காருக்கு முன்பணம் செய்து உறுதி செய்ததால் நாணயமாக அதையே எடுத்துக்கொள்வதா?
இல்லை சில ஆயிரங்களை சேமிக்க இந்த இரண்டாவது காரை எடுத்துக்கொள்வதா?
தொழில் நேர்மை என்னை முதல் முடிவிர்ற்கு செல்ல தூண்டுகிறது இருந்தாலும் சேமிப்பு இரண்டாவதுமுடிவுக்கு இழுக்கிறது.
நண்பர்களே முடிந்தால் முடிவெடுக்க உதவி செய்யுங்கள்