Showing posts with label எண்ணம். Show all posts
Showing posts with label எண்ணம். Show all posts

Wednesday, January 20, 2010

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் என்னை ஆனால் ஏதும் பாதிக்காமல் போகுமா?

Thursday, December 11, 2008

மனதில் பட்டவை

இன்று பதிவு எழுவது என்று முடிவெடுத்துவிட்டேன், என்ன எழுவது என்று தெரியவில்லை
சமீப காலங்களாக என் மனது வெறுமையாக உள்ளது
------------------------------
பெட்ரோல் விலையை அரசு குறைத்து உள்ளது ஆனாலும் எதிர்பார்த்த அளவு விலை குறைப்பு இல்லை, சாதாரண மக்களே எளிமையாய் கணக்கு போடுகின்றனர்.
விலை 70 டாலராக இருந்த பொது இங்கு 48 ரூபாய் , பின்னர் 147 டாலராக ஏறியது 5 ரூபாய் ஏத்தினார்கள் மறுபடியும் விலை 45 டாலராக குறைந்து விட்டது ஆனால் விலை குறைப்பு 5 ரூபாய் (ஆக விலை குறைப்பு 70 டாலராக இருந்த நிலைக்கு மட்டுமே )
எனக்கென்னமோ தேர்தலுக்கு முன் ஜனவரியிலோ இல்லை மார்ச் மாதத்திலோ ஒரு விலைகுறைப்பு இருக்கும். தேர்தலில் பிச்சை எடுக்க ஒரு பரிதாப காரணம் வேண்டும் அல்ல.
சென்னை ஆட்டோகாரங்க ரொம்ப நல்லவங்க பெட்ரோல் விலை குறைந்தாலும் கட்டணத்தை கொஞ்சம் கூட குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இதற்க்கு பேசாமல் காரிலேயே வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது, செலவு ஒன்றும் பெரிய அளவிற்கு வித்தியாசமில்லை.
பகல் கொள்ளைகாரர்கள்
---------------------------
சட்ட கல்லூரி பிரச்சனை, மும்பை பிரச்சனை எல்லாம் மறந்து விட்டு போகும் நேரம் இது, இந்த ஊடகங்கள் அவர்கள் மீது சுமற்றப்பட்ட கேள்விகளுக்கும் தவறுகளுக்கும் எந்த பதிலையும் சொல்லவில்லை, ஒரு வருத்தம் கூட சொல்லவில்லை,இந்த ஊடகங்களை நாம் மதிக்க வேண்டுமா? சில நாட்களுக்கு முன்பு times now சானலில் ஒரு செய்தி காட்டினர், இந்திய நகரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு எல்லாம் மீறுகின்றனர் என்று, இதற்க்கு தீர்வு என்ன என்று எல்லாம் கேட்டனர் அடுத்த நாள் காலையில் அலுவலகம் வரும்போது என்னை முந்தி சென்ற ஒரு வாகனம் தாறுமாறாக சென்றது, எந்த ஒரு பூகுவரத்து விதிகளையும் மதிக்க வில்லை, இரு சக்கர வாகனங்களில் செல்பவரை மிரட்டிவிட்டு செல்லும் வகையில் செலுத்தப்பட்டது, நன்றாக கவனிக்கையில் அது Times of India பத்திரிக்கையின் அலுவலர்களை கொண்டு வந்து விடும் வாகனம், அவர்களே இவ்வாறு இருந்துகொண்டு இவர்கள் மற்றவர்களை சொல்கிறார்களாம், ---------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன்ன்பு சென்னை ரயில் நிலையம் சென்றேன், ஒரு நண்பரை வரவேற்க, அங்கு நிறுத்தியிருந்த காவல் படையினர் மற்றும் சோதனை எல்லாம் நன்றாக இருதது உள்ளே சென்ற பின்பு என் வாழ்வில் முதல் முறையாக ஒரு பொது இடத்தில் செல்லும்போது தீவிரவாதிகள் தாக்கிவிட்டால் என்ன ஆவது என்ற பயம் வந்தது, இவ்வளவு நாட்களில் நடந்த எந்த தாக்குதலுக்கு பின்பும் தோன்றாத பயம் இப்போது தோன்றுகிறது என்பதால் கண்டிப்பாக நமது உள்நாட்டு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது
---------------------------------------------------------------------
எது கூறினாலும் குறை கூறுபவர் என்று எப்போதும் நமக்கு அருகிலேயே இருகிறார்கள் நாம் என்னதான் ஒரு விசயத்தை நன்றாக அலசி நன்மை இருக்கிறது என்று கூறினாலும் அதில் ஒரு குறை இல்லை என்றால் அந்த விஷயம் முற்றிலும் தவறு என்று கூறுபவர் என் அருகில் இருக்கிறார். நல்ல மனிதர் ஆனாலும் தற்போது அவரின் மறுத்தல்கள் எல்லாமும் கடுப்படிக்கிறது எனக்கு, எது சொன்னாலும் அது தவறு நான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறார், என்ன சொல்ல இவர்களை விட்டு சற்று தள்ளியே இருக்க வேண்டும் என்று முயன்று கொண்டு இருக்கிறேன்
-----------------------------------------------------------
தனிமை இப்போதெல்லாம் நன்றாக இருக்கிறது, அதை அனுபவிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆனாலும் என்னை இது சோம்பேறி ஆக்கிவிடும் போல பயமாய் உள்ளது, நண்பர்களை அழைத்தால் எவனும் மதிப்பளிக்க மாட்டேன் என்கிறான், அவனவன் அவனவன் காதலியுடன் வார இறுதியில் காலத்தை கழிக்க விரும்புகிறான், என்னைப்போல காதலி இல்லாத மூன்று நண்பர்கள் அவ்வப்போது கூடுகிறோம், பின்னர் வேறு என்ன பாட்டிலை திறக்கும் வேலையத்தான் செய்கிரூம், நான் என் தனித்துவத்தை மறந்து தண்ணிதுவம் கண்டுவிடுவேனோ என்ற பயத்தில் பேசாமல் திருமணம் செய்துகொல்லாலாம் என்று நினைக்கிறேன், வீட்டில் ஒரு வருடம் கழித்து என்று சொல்கின்றனர். என்னதான் நடக்கிறது என்று பொருத்து பார்க்கலாம்.---------------------------------------------------

Thursday, August 14, 2008

குழப்பம்

எல்லோருக்கும் வணக்கம்,

வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.

நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.

நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.

சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்