Sunday, March 22, 2009

யாவரும் நலம்

நேற்று நண்பரை சந்திக்க சென்ற பொது திடீரென்று இந்த படத்திற்கு செல்ல முடிவு செய்து சென்றோம். வழக்கம்போல மாயாஜால் ஆனால் மதிய நேரத்து மாயாஜால் வித்தியாசமாய் இருந்தது. சென்னையில் இளமை இல்லை என்று யார் சொன்னது... நாம் தான் வெட்டி என்று நினைக்க வைத்தது, அத விடுங்க படம் ஆரம்பித்தது ரொம்ப நேரம் தொல்லைக்காட்சி பெட்டிய காட்டினார்களா, முதலில் அந்த லிப்ட் காட்சிகள் நெகு நேரம் காட்டப்பட்டதால் போர் அடித்துவிட்டது. படம் நன்றாக இருந்தது.


திரில்லர் படம் ஆனால் பயமூட்டவில்லை, சில காட்சிகள் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது. சில குறைகளும் உள்ளன. வீடிற்கு சாமி படம் துளை பட வந்தவர் மின்சாரம் தாக்கி அடிபடுவார் அப்போது நுழைவு வாயிலின் இடது பக்கம் மின்சார plug point மற்றும் சுவிட்ச் இருக்கும் ஆனால் அதே இடத்தில அதற்க்கு பிறகு மாதவன் வரும்போது அங்க எதுவுமே இருக்காது. மாதவன் எப்போது கீழே இறங்கி கார் பார்க்கிங் செல்லும்போதும் எதிரே ஒரு போர்டு ஐக்கான் மற்றும் குவாலிஸ் நின்று கொண்டு இருக்கும்அதுவும் நிலை மாறாமல். காவல் துறை வாகனத்தை காடும்ப்து பதிவு எண் வேறு இருக்கும் இது போன்ற சிறு குறைகளை களைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

இரண்டாம் பகுதியில் படம் நன்றாக சென்றது ஆனால் முடிவுகள் சில சமயம் நினைத்தது போலவே இருந்தன, அந்த சுத்தியல் காட்டப்படும் போதே தெரிந்துவிட்டது முடிவு வேறு மாதிரி என்று. படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லை. இதை ஆங்கில படத்திற்கு உரிமை வாங்கி உள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் இன்னும் நன்றாக எடுக்கக்கூடும்.


முடிந்து வெளியே வந்த போது வழக்கம் போல நண்பர்கள் வெளியே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். எடுக்கலாம் என்றால் அருகில் இருந்த மூன்று பெண்களிடம் கொடுத்து எடுக்க சொல்லலாம் என்றால் நான் விடவில்லை. அந்த பெண்கள் எதிர்பார்த்து இருந்து பின்னர் ஏமாற்றம் அடைந்தனர், அதே பெண்கள் இந்த பதிவை படித்தால் ஒரு ஹாய்...


மற்றவை அடுத்த பதிவில்

No comments: