Wednesday, May 6, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-3

பகுதி 2
எதுக்கு இவ்ளோ கோவமா சென்றாள் என்று புரியாமல் இருக்கைக்கு வந்தான், வேலை நிறைய இருந்தாலும் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைத்து விட்டு சுதாவுக்கு மெயில் பண்ணினான், "என்ன ஆச்சு ஏதும் கோவமா?" என்று.

treat மட்டும் என்கிட்டே கேளு ஆனா நேத்து உதவின்னு கேட்ட நீ பாட்டுக்கு நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கட் பண்ணின, என்ன எதுன்னு கேட்க மாட்ட. பதில் இப்படி வந்தது..

உடனே அவளுடைய extn க்கு கால் பண்ணினான், நேத்து நீ பேசினப்ப நான் அவ கூடத்தான் இருந்தேன், அந்த பக்கமா போறப்ப திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா என்ன ஆச்சுன்னு கேக்கலாம் என்று நின்னேன் நீ கால் பண்ணிட்ட. அதான் நான் அப்படி சொன்னேன் என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

sorry கதிரா எனக்கு இதெல்லாம் தெரியாது உன்கிட்ட அவ நம்பரும் இல்லை, அப்புறம் பேசினப்ப சுரேஷ் கொண்டு வந்து விட்டான்னு சொன்ன ரொம்ப கோவம் வந்துடுச்சு, உன்கிட்ட ஒரு உதவி கேட்டா இப்படித்தான் பண்ணுவியா என்று.


மறுபடியும் கேட்டப்பக்கூட நீ சரியாய் பேசாத மாதிரி தெரிஞ்சுது அவளும் ஆட்டோல வந்து இறங்கினா அதான் கோவம்.எதுவுமே பண்ணாம treat கேக்கறது பாருன்னு கோவம் வந்தது டா அதான்.

சமாதான படுத்திவிட்டு மொபைலை எடுத்தான், sry i slept yest, hpe u r busy dnt wanna dis u. sms u l8r. என்று அனுப்பினான். உடனே வந்தது பதில் its k i too slept imm.. also im nt too busy, என்று பதில் வந்தது

ஆகா வேலை கிடக்குது என்று மனதில் நினைத்துக்கொண்டு 1st time i hrd dat 1 SW engg telng c s nt bsy. 2 strange... என்று அனுப்பினான். கோவமாய் பதில் வரும் என்று நினைத்து, ஆனால் வந்தது வேறு. actly im too bsy bt i thgt i nd a brk n imm i gt ur msg. so i replid u. so hw abt thr?

nthng bsy,just chkig fwd msg. hey chk ur mail என்று சொல்லி அனுப்பினான் ( மனசு திட்டியது, அட பாவி எவ்ளோ வேலை இருக்கு நீ என்னடா சொல்ற என்று)ஒரு fwd மெயில் அனுப்பினான் , அவனுக்கு பிடித்த ஒன்று, ஒரு game இருக்கும் அதில்.

thx 4 d mail, will see u l8r ltl bsy என்று பதில் வந்தது... அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை அவனுக்கு

தொடரும்

திடிரென்று அலுவலக வேலை வந்து விட்டதால் இந்த பகுதி இத்தோடு முடிக்கப்படுகிறது

2 comments:

Raj said...

நல்லா சுவாரசியமா போகுது...சீக்கிரம் அடுத்த பாகம் கொடுங்க

DHANS said...

நன்றி ராஜ் கூடிய விரைவில் அடுத்த பாகம், இன்னும் சில பாகங்களில் முடிவு