சில நாட்களாக பதிவு எழுதவில்லை, எழுத தோன்ற வில்லை இன்று எதாவது எழுத வேண்டும் என தோன்றியது எழுதுகிறேன்.
முதலில் என்னைப்பற்றி:
சில நாட்களாக நான் என் நிலையில் இல்லை என தோன்றுகிறது, ஆராய்ந்து பார்த்ததில் எனக்குள் எதோ ஒரு மாற்றம், இனம்புரியாத ஒன்று என்னை மாற்றிக்கொண்டு உள்ளது. என்னால் முயன்றவரை அது என்ன என்று கண்டுபுடிக்க முடியவில்லை, என் சோம்பேறித்தனம் அதிகமாகி உள்ளது. எந்த வேலையையும் செய்யாமல் காலம் தாழ்த்துதல், எதிலும் முழுமையாக கவனம் செலுத்தாமல் இருத்தல் போன்ற செயல்கள் அதிகமாகி உள்ளன.
காரணம் என்னவென்று தெரியவில்லை, பணக்கஷ்டம் வந்தாலே மனக்கஷ்டம் வந்துவிடும் அனால் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தால் அதை தீர்க்க காரணங்களை யோசிக்க மறந்து விடுவோம். அனுபவித்து புரிந்து மறுபடியும் அனுபவித்து சொல்கிறேன் வாழ்வில் கடன் கொடுக்காதீர்/ வாங்காதீர் அதிலும் நண்பர்களுக்குள். இரவல் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது மிக நலம்
சில காலங்களாக ஈழத்தமிழர் பிரச்சனை பதிவுலகில் அதிகம் எழுதப்படுகிறது, பிரச்சினையின் ஆழம் புரிந்தாலும் செய்திகளை அறியவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதிகமான உண்மை தெரியாத பதிவுகளால் எதையும்படிப்பதில்லை என முடிவெடுத்து உள்ளேன். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்துகொண்டு புலம்பியும் மற்றவரை திட்டியும் என்ன ஆகப்போகின்றது? மனத்தால் என்னை நானே திட்டிக்கொண்டு அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்கிறேன். என்றோ ஒருநாள் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில்.
நேற்று வெகு நாட்களுக்கு பிறகு watchmen என்ற ஆங்கில படத்திற்கு போனேன். மூன்று வருடங்களுக்கு பிறகு சத்யம் சினிமாஸ். அடேங்கப்பா என்ன மாற்றம். சத்யம் சினிமாஸ் உன்னை மூன்று வருடங்களாக தவறவிட்டு விட்டேன். என்ன மாயாஜால் எப்பவுமே நமக்கு பிடித்த இடமாயினும் அங்கு இருக்கும் வேலையாட்களுக்கும் சத்யம் வேலையாட்களுக்கும் நிறைய வித்தியாசம். வேலையாட்களில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும். இவ்வளவு அழகான திரை அரங்கில் மறுபடியும் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க இப்படி ஒரு மொக்கை படம்தான கிடைத்தது?? படம் மரண மொக்கை. பின்னணி இசை மிக அற்ப்புதம் ஆனால் படம் மொக்கை.
நெடு நாட்களுக்கு பிறகு எனது கல்லூரி நண்பர்களை சந்தித்தேன், பெசென்ட் நகர் கடற்கரையில் சில நேரம் பேசிவிட்டு பின்னர் அங்குள்ள அஞ்சப்பர் உணவகத்தில் உணவு அருந்தினோம் ஐயோ என்ன விலை விக்கிறார்கள்? மற்றபடி உணவு மிக அருமை ஆனால் விலையோ மிக அதிகம் :)
********************************************************************************************************************
கார் வாங்கினதில் இருந்து செலவு அதிகம் ஆகிறது இருந்தும் மனது சன்தூசாம் அடைகிறது. எனது கார் பராமரிப்பில் என்னை விட எனது நண்பர்/ மெக்கானிக் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வது மனதை நெருடுகிறது. எனக்கு தெரிந்து மிக சிறப்பான வேலை செய்கிறார். தொழிலில் மிகுந்த அனுபவம் இருந்தும் இன்னும் நிறைய முன்னேற வேண்டி இருக்கிறது இவருக்கு. தனியாக ஒரு மெக்கானிக் ஷெட் வைத்திருக்கிறார், கூடிய விரைவில் சென்னையில் ஒரு சிறந்த மகிழுந்து பராமரிப்பு ஆளாக வருவார்.
மறுபடியும் பழைய சுறுசுறுப்பான நிலைக்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஏற்ப்பட்டு அதற்க்காக முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன்.
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
மந்த நிலை மாறி சீக்கிரமே இயல்புக்கு திரும்ப வாழ்த்துகள் தனா
Thanks for a good article.
dhans, long time no see. busy?
ஏன் என்று தெரியவில்லை சிறிது இடைவெளி கொடுத்து விட்டேன் கார்த்திக்.. அடுத்த வாரம் முதல் மறுபடியும் வரலாம்.
Post a Comment