Tuesday, October 26, 2010

ஒரு நட்பு, ஒரு ஷாப்பிங், ஒரு டின்னர், ஒரு காதல் (?) பின்னர் ஒரு விபத்து

ஞாயிறு நல்லாத்தான் போச்சு சோம்பேரித்தனமா, மாலை தோழியிடம் தொலைபேசினேன்,  அவர் மற்றும் ஒரு நண்பர் வருவதால் அவருக்கு ஷாப்பிங் செய்ய போவதாக சொல்ல, நானும் சோம்பேறி என்ற அவப்பெயரை துடைக்க கிளம்பிபோவதாக முடிவு.

அவர்களுக்கு சொல்லாமல் நண்பன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றேன். அடையாரில் உள்ள style one  என்ற கடைக்கு. ஏற்கனவே அங்கு சென்ற அனுபவம் இருப்பதால் நன் எதையும் வாங்கும் எண்ணத்துடன் போகவில்லை. நண்பன் மட்டும் ஷாப்பிங் செய்ய நான் சும்மா வேடிக்கை பார்த்தேன்.

எல்லாமே விலை அதிகம் மேலும் அங்கு தோழி வாடிக்கையாளர் சலுகை அட்டை வைத்திருந்தாலும் அதில் இரண்டு சதவிகிதம் மட்டுமே தள்ளுபடி, என்னிடம் உள்ள rex  வாடிக்கையாள அட்டையில் பத்து சதவிகிதம் தள்ளுபடி. மேலும் விலையும் இதைவிட குறைவு.  ஷாப்பிங் முடித்து கிளம்பும்போது பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஒரு பெண்மணி எங்களை கேவலமாக பார்த்தார். ஆமா நாங்க அடித்த கமெண்ட் ஏலத்தையும் கேட்ட அவர்  இதுங்கல்லாம் எங்க உருப்பட போகுது என்று நினைத்திருக்கலாம். அதும் குறிப்பாக ஒரு செர்வானி ஒன்றை பார்த்து அதன் விலையை கேட்டவுடன் நான் இதை வாங்கணும் என்றால் நல்ல வசதியான மாமனாரத்தான் தேடனும் என்று சொல்லியபோது அவர் பார்வை கேவலமாய் இருந்தது. ( அவர் என்னைத்தான் கேவலமாய் பார்த்தார் என சொலவும் வேண்டுமா? அவர்க்கு கண்டிப்பாய் ஒரு பெண் இருக்க வேண்டும்.)


கடையை விட்டு வெளியே வந்து KFC யில் கொஞ்சம் கொறித்துவிட்டு கிளம்பலாம் என்று சென்றோம். அங்கு ஒரு பையன் அஞ்சு பொண்ணுங்களுடன் சும்மா வறுத்துகிட்டு இருந்தான். பின்னர் தெரிந்தது அவன் பெயர் சதீசாம், மானாட மயிலாடல டான்ஸ் ஆடி இருக்கானாம். நடத்துப்பா நடத்து.

தோழியை விட்டுவிட்டு மத்திய கைலாசில் இருந்து டைடல் பார்க் வழியாக வேளச்சேரி செல்லலாம் என்று இடப்புறம் திரும்பினேன். சாலை காலியாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள், இரவு நேரம், மெல்லிய சில்லென்ற காத்து, அனுபவித்து வண்டியை விரட்ட. 


கொஞ்ச தூரத்தில் என்னை விட அதிகமா ரசிக்க வேண்டிய, ரசித்துக்கொண்டு இருந்த ஒரு ஜோடி பைக்கில் எனக்கு முன்னாடி. வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும், கண்டிப்பா ஒருநாள் நாமும் இப்படி செல்ல வேண்டும் என நினைத்துகொண்டு அவர்களை முந்தி செல்ல முயன்றேன்.

அவர்களை கடக்கும்போது அந்தப்பெண் திடிரென்று தனது ரசனை அதிகமாக, இரண்டு கையையும் விரித்து லேசாக எழுந்து நின்று ரசிக்க முயல, நான் அவர்களை முந்த முயல. அவரின் கை என் கழுத்தை பதம் பார்த்தது. அனிச்சையாக நான் வலப்புறம் உடம்பை நெளித்து வண்டியை திருப்ப, ஒரு வழியாக பாலன்ஸ் செய்து நிறுத்தும்போது பின்னால் வந்த காரைப்பற்றி நினைத்தேன். நினைத்துகொண்டு திரும்பி பார்த்தால், பின்னால் வந்த கார் பிரேக் போட்டு வழுக்கிக்கொண்டு எனக்கு பின்னல் வேகமாக வந்தது. உயிர் பயம் இரண்டாவதுமுறையாக வந்தது எனக்கு.(முதன்முறை வேறொரு இடத்தில் வேறொரு ரோபத்தில் அதை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்) இன்றுகதை முடிந்தது என நினைத்து கண்ணை மூடும் முன்னர் அந்த கார் வலப்புறம் திரும்பி நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் முட்டியது.

என்ன செய்ய என நான் திகைத்து நிறைக்க, அந்த ஜோடியும் வண்டியை நிறுத்தி என்னை பார்க்க, கார் அப்படியே நிற்க. என் பின்னால் வந்தவர் அந்த ஜோடியை திட்டினார், நன் அவர்களை பார்த்து நிற்க சொல்லும் முன் அவர்கள் கிளம்பி விட்டனர். நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு காரை நெருங்கி பார்த்தேன். ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் திகைத்து பயந்து அமர்ந்திருந்தார். அவர்க்கு அடி இல்லை என உறுதி செய்துகொண்டு மெல்ல வண்டியை ஓரங்கட்டினோம். எனது நன்றியை அவர்க்கு தெரிவித்தேன். அவர் மட்டும் வண்டியை நிறுத்த வில்லை எனில் இன்று இந்தப்பதிவு இல்லை. அவர் வருத்ததுடன் என்னைப்பார்த்து "நல்ல வேலைங்க நான் பயந்துட்டேன் இனி வண்டிய வேகமா ஓட்ட மாட்டேன்" என கூறினார்.
 
காருக்கு சேதம் அதிகம், பம்பர், ஹெட் லைட், வலது புறம் கொஞ்சம் என அடி அதிகம். எனது தொலைபேசி எண்ணைக்கொடுத்து, எனது கார் இன்சூரன்சில் கிளைம் செய்துகொள்ள சொன்னேன் அவரிடம். அவர் மறுத்து விட்டார், ஏதும் உதவி வேண்டும் எனில் என்னை தொடர்பு கொள்வதாகவும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டார்.

அந்த பன்னாடை ஜோடி இளம்பி சென்று விட்டனர், அவள் மட்டும் நின்று இருந்தா அவ்வளவுதான், அம்மா உங்க காதலுக்கு எவன் சாவது? காதலுக்கு கண் இல்லை,  காதல் ஒரு உயிர்க்கொல்லி என இப்பொது தெரிந்தது. அசிங்க அசிங்கமாய் வருது,இதுக்கு மேல எழுதினா அப்புறம் அண்ணன் ஜாக்கி போல கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதுதான் நமக்கும் வேலை வெட்டி இருக்குதுல்ல. (எப்படி பதிவுலக அரசியல கோர்த்துட்டோமல) 

பைக் வாங்கும் கனவில் இருந்தேன் இதற்குப்பிறகு பைக்கை எடுக்கவே கூடாது என முடிவு செய்துவிட்டேன். கடந்த இரு மாதத்தில் அலுவலக நண்பர்கள் இருவரை விபத்தில் ஏற்கனவே இழந்தாயிற்று, இன்னொரு எண்ணிக்கை கூட வேண்டியது எப்படியோ தப்பி விட்டது. எப்போதும் காரில் போவதால் அன்றைக்கு பைக்கில் போகலாம் என சென்றேன், இனி எவ்வளவு செலவானாலும் கார் மட்டுமே.

நண்பர்களே தயவு செய்து பைக்கில் செல்லும்போது மெதுவாக கவனமுடன் செல்லவும், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

1 comment:

DHANS said...

இன்னும் தூங்கல? நான் ஓகே இப்ப.

என்ன பண்ண இப நெனைச்ச சிரிப்பா வருது. அப்போ கோவமா வந்துச்சு . என் பின்னாடி வந்தவன் கண்டிப்பா நினைச்சு நினைச்சு சிரிப்பான் நடந்தத :)