காலையில் கிளம்பும்போது அந்த பள்ளிச்சிறுமியை தினமும்பார்ப்பேன், இன்று எதோ ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். ஒவ்வொரு நாளும் ஓவொரு முக பாவனையுடன் வித விதமான பேச்சில். அமைதியாய், ஆச்சரியமாய், மகிழ்ச்சியாய், அழுகையுடன் என்று வித விதமான செய்கைகள் பேச்சுகள் என்று. இன்று புதிதாய் பள்ளி வாகனம் மாற்றப்பட்டு உள்ளதாம் அதை பற்றி பேசும்போதே என்னுள் எனது கடந்த கால பள்ளி செல்லும் நினைவுகள் வந்தது.
அப்பா பதிவுக்கு ஒரு தலைப்பும் விசயமும் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.
நான் பள்ளியில் சேர்க்கப்படும்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் இருந்தோம். கரூருக்கு அருகில் இருந்த கிராமம் எங்களுது. பள்ளிக்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றால் அங்கிருந்து பள்ளி பேருந்து வரும். நான் பள்ளிக்கு செல்வது என்பது இன்றும் உறவினர்களால் கேலி செய்யப்படும் ஒரு நிகழ்வு, பின்ன சும்மாவா என் தாத்தாவுடன் சென்று பள்ளி பேருந்தை பிடிக்க வேண்டும். அவர் சைக்கிளுக்கு நான்தான் ஆஸ்த்தான பயணி. என்னை அவ்வளவு பாதுகாப்பா கூட்டி செல்வார் . அவர் சைக்கிளில் பின்னால் ஒரு பெரிய பலகை வைத்திருப்பார் அதில் முதலில் என் அண்ணாவின் புத்தகப்பை அடுத்து என்னை உட்கார வைப்பார், அதன் பின்னர் எனது புத்தகப்பை என் பின்னால். இதுல என்ன இருக்கு??? இருங்க இருங்க, அப்புறம் ஒரு கயிறு எடுத்து புத்தகப்பை மற்றும் என்னை சேர்த்து கட்டுவார். கட்டிவிட்டு பின்னை நன்றாக புடித்துக்கொள்ள சொல்லுவார். டாடா கூட காட்டக்கூடாது. அப்படியே சென்று பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவார். பின்னால் இவன் ஒரு பெரிய மேதையாவன் பாதுகாப்பா கொண்டு செல்லனும் என்று அப்போதே அவருக்கு தெரிந்து இருக்கிறது பாருங்களேன்.
இரண்டு வருடங்கள் கழித்து எங்கள் ஊரிலேயே ஒரு அண்ணன் பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுவது தெரிந்து எங்களை அதில் அனுப்பி வைத்தனர். அப்போது பள்ளிக்கு ஆட்டோவில் போவது ஒரு முக்கியமான நிகழ்வு, ஆட்டோ என்றால் நன்றாக இருக்கும். அங்கேயும் ஆட்டோவில் முன்னாள் நிற்பதற்கு தகுதி சிறு வயதாக இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு இரு புறமும் நின்று கொண்டு வர பெரிய பையனாக இருக்க வேண்டும். நான் தான் ரெண்டும் இல்லை மேலும் எங்கள் வீட்டில் இருந்தே ஏறி விடுவதால் பின்னால் சீட்டில் நடுவில் தான் உட்கார வேண்டும். அதிலும் பக்கத்து ஊரில் ஒரு சிறுவன் (நானே அப்போது சிறுவன் தான் ஆனாலும் 1 ஒன்றாம் வகுப்பு படித்தேன்) ஏறினான், முன்னாள் நிற்கும் இடம் அவனுக்கு போயிற்று. ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் என் அண்ணன் நின்று கொள்வார்.
இதில் தான் எத்தனை அனுபவங்கள் , பள்ளி முடிந்து திரும்பும்போது சில நாட்கள் நாவல் மரத்தின் அடியில் ஆட்டோவை நிறுத்தி உதிர்ந்த நாவல் பழம் எடுத்து சாப்பிடுவோம். ஸ்டார்ட் ஆகாத ஆட்டோவை தள்ளுவது. எங்க ஆட்டோதான் எப்பவுமே பள்ளியில் இருந்து கடைசியாக கிளம்பும், எனக்கு தெரிந்து இரண்டு முறை தான் மற்ற ஆட்டோவை முந்தியுள்ளது.
மூன்று வருடம் இப்படியே பயணம் செய்து பின்னர் ஓட்டுனர் அருகில் நிற்கும் தகுதி வந்த வேளையில் நாங்கள் கரூருக்கு வீடு மாறி வந்தோம். பின்னர் மறுபடியும் பள்ளி பேருந்து. அப்போது எங்கள் வீட்டில் குடியிருந்தவரின் பெண் எங்கள் பள்ளியில் படித்தார், அவரும் பள்ளி பேருந்தில் செல்வதால் அவருடன் அனுப்பி வைப்பார்கள். பேருந்தில் அப்போதெல்லாம் உட்கார இடம் இருக்காது. அடைத்துதான் செல்வார்கள். சின்ன பசங்க எல்லாம் சீட்டில் சாய்வதற்கும் உட்காருவதர்க்கும் உள்ள பலகைக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கே அதில் காலை வைத்து சாயும் பலகையை நோக்கி முகம் பார்த்து உட்கார வேண்டும். மற்றவர்கள் எங்களுக்கு பின்னால் இருக்கும் இடத்தில் முன்னோக்கி அமருவார்கள். எங்கள் பேருந்து வேறு நாய் வண்டி போல இருக்கும். சிறிது காலத்தில் பேருந்து மாறியது. அப்போது அந்த அக்காவும் என்னை அவர் அருகிலே உட்க்கார வைத்துக்கொண்டனர்.
ஒன்றரை வருடங்கள் அப்படியே ஓடியது. பின்னர் அரசு பேருந்தில் செல்ல துவங்கினேன், தினமும் வீட்டில் இருந்து காலையில் கிளம்பி ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இரண்டு பேருந்துகளே பள்ளிக்கு செல்லும். கால் மணி நேர வித்தியாசத்தில் இருக்கும் இரண்டும். இரண்டாவதாக வரும் பேருந்தில் சென்றால் கூட்டம் அதிகம், மணி அடிக்கும்போது உள்ளே செல்லும் நிலை இருக்கும் ஆதலாம் முடிந்த வரை முதல் பேருந்தில் செல்வேன். எல்லாமே கூட்டமாக வரும், பத்தாவது முதல் +2 வரை படிக்கும் மாணவர் அரசு பேருந்தில் தான் வருவார்கள். அப்போதெல்லாம் நினைப்பேன் ஏன் இவர்கள் அழகா சைக்கிளில் வராமல் பேருந்தில் கூட்டமாக வருகிறார்கள் என்று, பின்னர் நான் அந்த வகுப்பு வரும்போது தான் புரிந்தது, பின்னே அந்த பேருந்து எங்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னாள் இரண்டு பெண்கள் பள்ளியை கடந்து வரும்.
ஆறாவது பாதியிலேயே நான் சைக்கிளில் செல்ல துவங்கிவிட்டேன், வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு ஏழு கிலோமீட்டர் சுற்றி செல்வோம் (கூட்டம் இல்லாமல் செல்லும் வழி அது, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று செல்வோம்) பத்தாவது வரை சைக்கிள்தான் எங்கு சென்றாலும் சைக்கிள்தான் துணை, சில நாட்கள் வீட்டிற்கு அருகில் பை பாஸ் சாலைக்கு அருகே உள்ள வயல் வெளிகளுக்கு சென்று தனியாய் அமைந்து விடுவேன், ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் திரும்பும்போது மன அமைதி இருக்கும்.
11ம் வகுப்பு பள்ளி மாறிவிட்டேன், வீட்டில் இருந்து 15 நிமிடபயணம் . மதிய சாப்பாடு வீடிற்கு வந்து சாப்பிடுவேன் பெரும்பாலும் பள்ளி நடக்காது அப்படி நடந்தாலும் நாங்கள் போக மாட்டோம். 9 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் பத்து மணிக்கு பாதி பேர் வெளியே சென்று விடுவார்கள்.பெரும்பாலும் விளையாடவும் சிலர் சினிமாவுக்கும் செல்வார்கள், என்னைமாதிரி பயந்த பையன்கள் வீட்டிற்கு சென்று விடுவோம், நன்றாக தூங்கிவிட்டு பின்னர் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு பள்ளி வந்து சிறிதுநேரம் அரட்டை அடித்துவிட்டு மீண்டும் டியுசன் சென்று விடுவோம்.
பதினொன்றாம் வகுப்பு பாதியில் நண்பன் ஒரு TVS-50 இல் பள்ளிக்கு வரத்துவங்கினான். அவனுடம் சேர்ந்து வரத்துவங்கியதால் எனது சைக்கிள் ஓய்வு எடுத்தது. அவ்வப்போது தேவைப்படும்போது எடுப்பேன் மற்றபடி அதிகம் சென்றது நண்பனுடன் வண்டியில். அப்போது ரொம்ப முக்கிய தேவை எனில் வீட்டில் எப்படியாவது கேட்டு எனது தந்தையின் TVS-50 யை எடுத்து செல்வேன் அப்போது அதுவே பெரிய சாதனை பள்ளிக்கு வண்டியில் வருவது.
கல்லூரி வந்தவுடன் ஹாஸ்டல் வாழ்க்கை, ஈரோட்டிற்கு சென்று வர கல்லூரி பேருந்து 7 B மறக்க முடியாத பேருந்து. பல காதல்களையும் சில மோதல்களையும் ஒன்று சேர சுமந்த பேருந்து, இதில் அதிகம் பயணித்ததுஇல்லை எப்போதும் கீழே இறங்கி மூன்றாம் நம்பர் பேருந்தை பிடிப்பதுதான் எங்கள் வழக்கம்.
இவ்வாறெல்லாம் இனிய பயன்களை கடந்த நான் இப்போதெல்லாம் அலுவலக பேருந்தை ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விட்டேன், சமீப காலமாக அவ்வப்போது வெளியே எட்டிப்பார்த்து பயணத்தை அனுபவிக்கிறேன்.
பயணங்கள் எப்போதும் இனிமையானவை.. இப்போது கூட...
Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts
Friday, March 20, 2009
Tuesday, March 17, 2009
திடீரென்று நினைவில் வந்த நிமிடங்கள்...
முதல் நாள் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்ற அபோது இருந்த பயம் கலந்த உண்ர்வு,
முதல் நாள்பள்ளி அழுகை
முதல் பள்ளி நண்பர்கள், பள்ளியின்மதிய தூக்கம்,
முதன் முதல் படித்த மழலை பாடல்
பிடித்தமான வகுப்பு ஆசிரியை
பள்ளிக்கு சென்ற ஆட்டோ, நண்பர்கள்.
முதன்முதல் எழுதிய சிலேட்டு, முதன் முதல் தின்ற பல்பம் (சிலேட்டு பென்சில்)
எப்பவுமே பயமுறுத்தும் தலைமை ஆசிரியை
மதிய இடைவேளை சாப்பாடு
இப்பவும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்கள்
முதல் நாள்பள்ளி அழுகை
முதல் பள்ளி நண்பர்கள், பள்ளியின்மதிய தூக்கம்,
முதன் முதல் படித்த மழலை பாடல்
பிடித்தமான வகுப்பு ஆசிரியை
பள்ளிக்கு சென்ற ஆட்டோ, நண்பர்கள்.
முதன்முதல் எழுதிய சிலேட்டு, முதன் முதல் தின்ற பல்பம் (சிலேட்டு பென்சில்)
எப்பவுமே பயமுறுத்தும் தலைமை ஆசிரியை
மதிய இடைவேளை சாப்பாடு
இப்பவும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்கள்
Friday, June 27, 2008
வகுப்பறையில் ஒரு நாள்-ஹாக்கி
வகுப்பறையில் ஒரு நாள்
எட்டாவது சேந்து சில நாட்களில் உடற்கல்வி ஆசிரியர் வந்து மாணவர் அனைவரையும் அழைத்து நமது பள்ளியில் ஹாக்கி அணித்தேர்வு செய்யப்போகிறோம், விருப்பமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்று கூறினார். நம்ம மனசு ஆஹா கிரிக்கெட் என்றால் அத்தன பெரும் வருவாங்க இதுக்கு எப்படியும் ரொம்ப கம்மியாதான் பசங்க வருவாங்க அதனால நாம இதவே விளையாடலாம், அதுவுமில்லாம இது நம்ம தேசிய விளையாட்டு என்று நினைத்தது. அதுமாதிரி நெறைய பசங்கலாம் வரல ஒரு இருபதுபேர் இருந்தோம்.
அப்பவே மைல்டா ஒரு கேள்வி மனசுல இருந்துச்சு,, எதுக்குடா இத்தன பேரையும் இந்த மைதானத்த இரண்டு ரவுண்டு அடிக்க சொல்றாருன்னு, கஷ்ட்டப்பட்டு அடிச்சு முடிச்சா, சரி எல்லோரும் மட்டைய எடுத்துகிட்டு வாங்கடா சொல்லித்தாரேன் என்று சொல்லி கூட்டிப்போனார், அடடா நம்ம இவளவு எளிதாக தேர்வு செய்யப்படுவோம் என்று நினைக்கவில்லையே சந்தோசப்பட்டேன். நானும் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு சென்றேன்.
எல்லோருக்கும் பந்தை அடிக்க சொல்லிகொடுத்தார், எனக்கும்தான், சரி என்று நானும் அடிக்க, அடுத்த அடி எனக்கு விழுந்தது, மட்டையின் எந்தப்பக்கம் அடிக்க சொன்னா நீ எந்தப்பக்கம் அடிக்கற என்று, அப்புறம் அவர் சொன்னமாதிரி அடிக்க முயற்சி செய்தால் பந்து ஐந்து அடிகூட நகரவில்லை. அப்புறம்தான் தெரிந்தது நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன், இவர் சொல்லிகொடுத்தது வலதுகைப்பழக்கம் என்று.நான் அவரிடன் "சார் நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் எனக்கு இப்படி வரவில்லை, இடது கை மட்டைகுடுங்க நான் விளையாட" என்று சொல்ல. அவர் என்னை ஒரு மாதிரியாத்தான் பார்த்தார். இப்பதான் தெரியுது நம்ம கனாக்காணும் காலங்கள்ல வர பி.டி மாதிரியோ என்று...
அப்புறம் இப்படி விளையாண்டா விளையாடு இல்லாட்டி போ, நம்ம பள்ளியில அந்த மட்டை எல்லாம் இல்ல, நீ உண்மைலேயே விளையாடனும் என்று எண்ணம் இருந்தா நீயே சொந்த காசுல ஒரு மட்டை வாங்கி வந்து விளையாடு என்றார். எங்க நமக்கு குடுக்கற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்ல அப்ப எங்க ஹாக்கி மட்டை வாங்க, இருந்தாலும் மனச தளர விடாம ஊர்ல இருக்க எல்லா கடைலயும் போய் கேட்டேன், இடதுகை மட்டை எங்ககிட்ட இல்ல வேற பக்கம் இருக்கலாம் என்று சொன்னாங்க, நானும் நம்பி ஒரு மாசாம் தேடிட்டு அப்புறம் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து ஹாக்கிக்கு முழுக்கு போட்டுட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு ஹாக்கில இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு என்று தனியாக மட்டை இல்லையாம். அவர்களும் வலது கை ஆட்டக்காரர் போல ஆட வேண்டுமாம். இடது கை மட்டை எங்குமே கிடைக்காதாம். இப்ப சொல்லுங்க அந்த பி. டி எப்படி பட்டவர் என்று, "ஐ வான்ட் டு சி யூர் ஒரிஜினல் சர்டிபிகட்" என்று அணிக்கு அவர்ட்ட கேட்க்க அங்க ஆள் இல்ல .
நம்ம ஊர்ல விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கே இந்த அளவுக்குத்தான் தெரிஞ்சு இருக்கு அப்புறம் எங்க ஒலிம்பிக்ஸ்ல போய் தங்கம் வாங்கறது, அதெல்லாம் கனவோடு நிறுத்திக்கணும் போல.
இப்படித்தான் நான் ஹாக்கி விளையாண்டு, அப்படியே மாவட்ட அணி, மாநில அணி, அப்புறம் இந்திய அணி, அப்படியே நேரா ஒலிம்பிக்ஸ் தான் என்ற கனவு கலைந்து போனது. என்னடா வகுப்பறையில் ஒருநாள் என்று சொல்லி மைதானத்தில் ஒருநாள் என்று முடிச்சுட்டானே என்று பாக்காதீங்க, இதுவும் வகுப்பறையில்தான் ஆரம்பித்தது :))
எட்டாவது சேந்து சில நாட்களில் உடற்கல்வி ஆசிரியர் வந்து மாணவர் அனைவரையும் அழைத்து நமது பள்ளியில் ஹாக்கி அணித்தேர்வு செய்யப்போகிறோம், விருப்பமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்று கூறினார். நம்ம மனசு ஆஹா கிரிக்கெட் என்றால் அத்தன பெரும் வருவாங்க இதுக்கு எப்படியும் ரொம்ப கம்மியாதான் பசங்க வருவாங்க அதனால நாம இதவே விளையாடலாம், அதுவுமில்லாம இது நம்ம தேசிய விளையாட்டு என்று நினைத்தது. அதுமாதிரி நெறைய பசங்கலாம் வரல ஒரு இருபதுபேர் இருந்தோம்.
அப்பவே மைல்டா ஒரு கேள்வி மனசுல இருந்துச்சு,, எதுக்குடா இத்தன பேரையும் இந்த மைதானத்த இரண்டு ரவுண்டு அடிக்க சொல்றாருன்னு, கஷ்ட்டப்பட்டு அடிச்சு முடிச்சா, சரி எல்லோரும் மட்டைய எடுத்துகிட்டு வாங்கடா சொல்லித்தாரேன் என்று சொல்லி கூட்டிப்போனார், அடடா நம்ம இவளவு எளிதாக தேர்வு செய்யப்படுவோம் என்று நினைக்கவில்லையே சந்தோசப்பட்டேன். நானும் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு சென்றேன்.
எல்லோருக்கும் பந்தை அடிக்க சொல்லிகொடுத்தார், எனக்கும்தான், சரி என்று நானும் அடிக்க, அடுத்த அடி எனக்கு விழுந்தது, மட்டையின் எந்தப்பக்கம் அடிக்க சொன்னா நீ எந்தப்பக்கம் அடிக்கற என்று, அப்புறம் அவர் சொன்னமாதிரி அடிக்க முயற்சி செய்தால் பந்து ஐந்து அடிகூட நகரவில்லை. அப்புறம்தான் தெரிந்தது நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன், இவர் சொல்லிகொடுத்தது வலதுகைப்பழக்கம் என்று.நான் அவரிடன் "சார் நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் எனக்கு இப்படி வரவில்லை, இடது கை மட்டைகுடுங்க நான் விளையாட" என்று சொல்ல. அவர் என்னை ஒரு மாதிரியாத்தான் பார்த்தார். இப்பதான் தெரியுது நம்ம கனாக்காணும் காலங்கள்ல வர பி.டி மாதிரியோ என்று...
அப்புறம் இப்படி விளையாண்டா விளையாடு இல்லாட்டி போ, நம்ம பள்ளியில அந்த மட்டை எல்லாம் இல்ல, நீ உண்மைலேயே விளையாடனும் என்று எண்ணம் இருந்தா நீயே சொந்த காசுல ஒரு மட்டை வாங்கி வந்து விளையாடு என்றார். எங்க நமக்கு குடுக்கற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்ல அப்ப எங்க ஹாக்கி மட்டை வாங்க, இருந்தாலும் மனச தளர விடாம ஊர்ல இருக்க எல்லா கடைலயும் போய் கேட்டேன், இடதுகை மட்டை எங்ககிட்ட இல்ல வேற பக்கம் இருக்கலாம் என்று சொன்னாங்க, நானும் நம்பி ஒரு மாசாம் தேடிட்டு அப்புறம் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து ஹாக்கிக்கு முழுக்கு போட்டுட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு ஹாக்கில இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு என்று தனியாக மட்டை இல்லையாம். அவர்களும் வலது கை ஆட்டக்காரர் போல ஆட வேண்டுமாம். இடது கை மட்டை எங்குமே கிடைக்காதாம். இப்ப சொல்லுங்க அந்த பி. டி எப்படி பட்டவர் என்று, "ஐ வான்ட் டு சி யூர் ஒரிஜினல் சர்டிபிகட்" என்று அணிக்கு அவர்ட்ட கேட்க்க அங்க ஆள் இல்ல .
நம்ம ஊர்ல விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கே இந்த அளவுக்குத்தான் தெரிஞ்சு இருக்கு அப்புறம் எங்க ஒலிம்பிக்ஸ்ல போய் தங்கம் வாங்கறது, அதெல்லாம் கனவோடு நிறுத்திக்கணும் போல.
இப்படித்தான் நான் ஹாக்கி விளையாண்டு, அப்படியே மாவட்ட அணி, மாநில அணி, அப்புறம் இந்திய அணி, அப்படியே நேரா ஒலிம்பிக்ஸ் தான் என்ற கனவு கலைந்து போனது. என்னடா வகுப்பறையில் ஒருநாள் என்று சொல்லி மைதானத்தில் ஒருநாள் என்று முடிச்சுட்டானே என்று பாக்காதீங்க, இதுவும் வகுப்பறையில்தான் ஆரம்பித்தது :))
எனது பள்ளி ஆசிரியர்கள்
எனது பள்ளி ஆசிரியர்கள்
எவருமே அவரது பள்ளி வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த ஆசிரியர்களை மறந்து இருக்க முடியாது. என்னை எந்த விதத்திலாவது கவர்ந்த அல்லது என்னால் மறக்க முடியாத, எனக்கு நினைவில் உள்ள ஆசிரியர்களை பற்றி எழுதப்போகிறேன்.(ஆசிரியர் மற்றும் ஆசிரியை அனைவரும் தான்)
கீழ் வகுப்பில் இருந்து வருவோம்,
எனக்கு எல்.கே.ஜி வகுப்பு எடுத்தவரெல்லாம் நியாபகம் இல்லை அனால் யு.கே.ஜி வகுப்பு ஆசிரியை முகம் மட்டும் இன்னும் நியாபகம் இருக்கிறது. கலையான அந்த முகம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, கடைசி வரை அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன், இப்போது அவர் அந்த பள்ளியில் இல்லை. எனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தது, மதியம் தூங்க வைத்தது எல்லாம் இன்னும் நியாபகம் வருகின்றது. எனது கல்வி வாழ்வை துவக்க உறுதுணையாய் அமைந்த அந்த ஆசிரியைக்கு நன்றி.
அடுத்து எனது இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஆசிரியை, கற்பகம் டீச்சர், அப்போதெல்லாம் இவரிடம் நிறைய பயம், அதிகம் அடிக்க மாட்டார்கள் அனால் முகத்தில் ஒருவித கோவம் மட்டும் எப்போதும் இருக்கும். பின்னர் என்னை வகுப்புத்தலைவன் ஆகியதில் இருந்து என்னிடம் சின்ன பாசம். ஆனால் இவங்கதான் என்னை ஒரு பெரிய மாற்றத்துக்கு "அடி" போட்டு தயார் பண்ணினாங்க. இடது கை பழக்கம் உள்ள என்னை அடித்து அடித்து வலதுகையில் எழுத வைத்த உலகப்பெருமை இவங்களையே சேரும். அன்றில் இருந்து இன்று வரை இவங்கள நெனச்சாலே ஒரு வித கோவம் எனக்குள் வருகின்றது. அனாலும் ஒரு நல்ல காரியம்,நான் இடது கையால் எழுதுவதை விடவில்லை.
ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நான் அன்றில் இருந்து இன்று வரை என்னால் மறக்க முடியாத சில ஆசிரியரை சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.ஆறாம் வகுப்பு படிக்க போகும் முதல் நாளில் எனது தந்தை எனது அண்ணாவின் துணையுடன் என்னை ஆங்கில வழி கல்விக்கு மாற்ற திட்டம் போட்டார், அப்போது நான் படித்த அதே பள்ளியில் இருந்த ஆங்கில வழித்திட்டத்தில் ( மெட்ரிகுலேசன் பள்ளி ) என்னை சேர்க்க திட்டமிட்டு படிவம் எல்லாம் நிரப்பியாயிற்று, திடீரென்று என்னைப்பார்த்த அந்த பள்ளி முதல்வர் என்னப்பா உன்னால ஜெய்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், நீ நம்புறியா? சேந்துகிரியா இல்லை வேணாமா என்றார். நான் வேணாம் என்று சொல்லியவுடன் பையனுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தமிழ் வழியிலே படிக்கட்டும் அடுத்த வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினார், அதுமட்டுமில்லாது எனது வகுப்பு ஆங்கில ஆசிரியரை தனியாகச்சந்தித்து என்னைப்பற்றி சொல்லி தனி கவனம் எடுத்துக்கொள்ள கூறியுள்ளார். எனவே இவர்க்கும் என்னிடத்தில் தனி மரியாதை எப்போதும் உண்டு.
எனது ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் வைத்தியலிங்கம், மிக அமைதியான ஆசிரியர், அப்போது அவர்க்கு சின்ன வயசுதான் இருக்கும், வகுப்பில் என்னை வகுப்புத்தலைவன் ஆக்கியது மட்டுமில்லாமல், தினமும் வகுப்பில் ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வது, ஆங்கிலத்தை நுணுக்கமாக சொல்லித்தருவது என்று என்னை ஒரு வழியாக தயார்ப்படுத்தினார் (அப்படியும் நான் கத்துகல என்பது வேறு விஷயம்).இருந்தாலும் ஆங்கிலத்தின் மேலுள்ள ஒரு பயம் போயிற்று. இப்பொது ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர்க்கு எனது நன்றிகள்.
அடுத்து அறிவியல் ஆசிரியர் பாபு அவர்கள், இவரும் ஆங்கில ஆசிரியரும் நண்பர்கள், குணத்தில் நேர் எதிர், கோவத்தில் எனக்கு அண்ணன். அடிபிரிச்சுடுவார், என்மீது கொஞ்சம் அக்கறை உண்டு இவர்க்கு. ஆனாலும் வகுப்புத்தலைவன், நன்றாக படிக்கிறேன் என்ற அகந்தையில் நான் ஏதும் சில சின்ன விஷயம் பண்ணினாலும் அடி பின்னி எடுத்துவிடுவார். இவர் கடைசிவரை என்னிடம் கற்றுக்கொள்ள சொல்லியது "கோவப்படு, நான் என்ற அகந்தையை எப்போதும் விட்டுவிடு, உனக்கு மட்டும்தான் வெற்றி நிரந்தரம் என்பதை மறந்துவிடு" இதுதான். இவரின் பண்புகள் எனக்குள் வந்ததை சமீபத்தில்தான் கண்டுகொண்டேன் (இன்னும் இந்த அகந்தை மேட்டர் நம்மகிட்ட வரல, அப்பப்ப தலை தூக்கும் அப்போதெல்லாம் இவர் நியாபகம் வந்து எட்டிப்பார்க்கும்)
எட்டாவது வரை இவர்கள் இரண்டு பேர்மட்டுமே எனக்கு நினைவில் நின்ற ஆசிரியர், ஒன்பதாவது போகும்போது என்னை ஒரு வழியாக மனதளவில் ஆங்கில வழிக்கல்விக்கு தயார் படுத்திக்கொண்டேன், அதே முதல்வர் இப்போது என்னப்பா தயாரா என்று சொல்லி சிரிக்கிறார். என்னை வகுப்பறையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்த ஆசிரியையிடன் சொல்லிவிட்டுச்சென்றார். அந்த ஆசிரியை பெயரும் கற்பகம், இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் ஆசிரியை, இவர்க்கும் என்னை பிடிக்க ரொம்ப சில நாட்களே ஆகியது. எனக்கு மிக நல்ல அறிவுரைகளை சொல்லி, பயத்தை போக்கி, என்னை மற்ற மாணவர்களுடன் சகஜமாக பழக வைத்ததின் பெருமை இவரையே சேரும். இன்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரைப்பற்றி பேசுவது உண்டு.
அடுத்து கணித ஆசிரியர் விஜயகுமார், நானும் பள்ளிக்கு புதிது இவரும் புதிது, அடி பின்னியெடுக்கும் ஆசிரியர்க்கு பதிலாக இவர்தான் உங்கள் கணித ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை இவருடன் தொடர்பு இருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் தனிப்பாடதிலிருந்து வெளியேறினேன். இவரைப்பற்றி நிறைய எழுத வேண்டியதால் தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.
அடுத்து புது முதல்வர், இவரும் விஜயக்குமாரின் பதிவில் வந்துவிடுவார், இவர்க்கும் மிகப்பெரிய பங்கு இல்லாவிடிலும் எனது எதிர்காலத்தை மாற்றிய ஆசிரியரில் மிக முக்கிய இடம் உண்டு.
அப்புறம் சமூக அறிவியல் ஆசிரியை சுலோக்சனா, தாவரவியல் ஆசிரியை அங்கையர்க்கன்னி இவங்கல்லாம் அங்கங்க வந்துட்டு போனாங்க. அங்கையர்க்கன்னி நான் புத்தகத்தைப்பார்த்து பரீட்சை எழுதும்போது கண்டுபிடித்து அடித்து,ஏண்டா என்கிட்டயே இப்படி மாட்டிகிட்டா நீ பிட் அடிக்கவே லாயக்கு இல்லை என்று சொல்லி என்னை நன்றாக வித விதமாக பிட் அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற தூண்டிவிட்டவர்.(இத இப்ப பார்த்தாங்கன்னா அவ்வளவுதான் )
பதினொன்றாம் வகுப்பு, பள்ளி மாறியாயிற்று.கோவிந்தராஜன் அய்யா தமிழாசிரியர், என்னால் மறக்க முடியாத ஆசிரியர்... தமிழை படிக்காத நீ, போதுமான அளவுக்கு ஏற்கனவீ படிச்சுட்ட அத தக்கவைத்துக்கொண்டாலே போதும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க தேவையானதை மட்டும் இப்போது செய் என்று அறிவுரைகூறியவர்.
பசுபதி -இயற்பியல் ஆசிரியர், பொதுவாக மற்றவரைப்போல இவரை எனக்கு கொஞ்சம் புடிக்காது ஆனால் இவரின்றி நான் இயற்பியலில் 185 மதிபெண்கள் எடுத்து இருக்க முடியாது, எனது தந்தையின் நண்பர், அதற்காக என்மீது தனி அக்கரை செலுத்தாமல் எல்லோரிடமும் அக்கறை செலுத்துவார். அவர் சொல்லிகொடுத்த அந்த cyclotran பாடம் இன்றும் என் நினைவில் நிற்கின்றது. இவர் கையெழுத்தை நான் செய்முறை அறிவியல் ஆய்வு புத்தகத்தில் போட ஆரம்பித்து வகுப்பில் பாதி பேர் அதை பின்பற்றினர்.
இதற்கு பிறகு எனக்கு மனதில் நிற்கும் ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை... இன்னும் சிலர் இருந்து இருக்கலாம். ஆனால் எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு நேரமிருந்தால் அவரது ஆசிரியர் பற்றி எழுதலாம் இன்னும் விரிவாக சுவையாக. (முக்கியமாக கோவிந்தராஜ் அய்யாவைப்பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்)
எவருமே அவரது பள்ளி வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த ஆசிரியர்களை மறந்து இருக்க முடியாது. என்னை எந்த விதத்திலாவது கவர்ந்த அல்லது என்னால் மறக்க முடியாத, எனக்கு நினைவில் உள்ள ஆசிரியர்களை பற்றி எழுதப்போகிறேன்.(ஆசிரியர் மற்றும் ஆசிரியை அனைவரும் தான்)
கீழ் வகுப்பில் இருந்து வருவோம்,
எனக்கு எல்.கே.ஜி வகுப்பு எடுத்தவரெல்லாம் நியாபகம் இல்லை அனால் யு.கே.ஜி வகுப்பு ஆசிரியை முகம் மட்டும் இன்னும் நியாபகம் இருக்கிறது. கலையான அந்த முகம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, கடைசி வரை அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன், இப்போது அவர் அந்த பள்ளியில் இல்லை. எனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தது, மதியம் தூங்க வைத்தது எல்லாம் இன்னும் நியாபகம் வருகின்றது. எனது கல்வி வாழ்வை துவக்க உறுதுணையாய் அமைந்த அந்த ஆசிரியைக்கு நன்றி.
அடுத்து எனது இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஆசிரியை, கற்பகம் டீச்சர், அப்போதெல்லாம் இவரிடம் நிறைய பயம், அதிகம் அடிக்க மாட்டார்கள் அனால் முகத்தில் ஒருவித கோவம் மட்டும் எப்போதும் இருக்கும். பின்னர் என்னை வகுப்புத்தலைவன் ஆகியதில் இருந்து என்னிடம் சின்ன பாசம். ஆனால் இவங்கதான் என்னை ஒரு பெரிய மாற்றத்துக்கு "அடி" போட்டு தயார் பண்ணினாங்க. இடது கை பழக்கம் உள்ள என்னை அடித்து அடித்து வலதுகையில் எழுத வைத்த உலகப்பெருமை இவங்களையே சேரும். அன்றில் இருந்து இன்று வரை இவங்கள நெனச்சாலே ஒரு வித கோவம் எனக்குள் வருகின்றது. அனாலும் ஒரு நல்ல காரியம்,நான் இடது கையால் எழுதுவதை விடவில்லை.
ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நான் அன்றில் இருந்து இன்று வரை என்னால் மறக்க முடியாத சில ஆசிரியரை சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.ஆறாம் வகுப்பு படிக்க போகும் முதல் நாளில் எனது தந்தை எனது அண்ணாவின் துணையுடன் என்னை ஆங்கில வழி கல்விக்கு மாற்ற திட்டம் போட்டார், அப்போது நான் படித்த அதே பள்ளியில் இருந்த ஆங்கில வழித்திட்டத்தில் ( மெட்ரிகுலேசன் பள்ளி ) என்னை சேர்க்க திட்டமிட்டு படிவம் எல்லாம் நிரப்பியாயிற்று, திடீரென்று என்னைப்பார்த்த அந்த பள்ளி முதல்வர் என்னப்பா உன்னால ஜெய்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், நீ நம்புறியா? சேந்துகிரியா இல்லை வேணாமா என்றார். நான் வேணாம் என்று சொல்லியவுடன் பையனுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தமிழ் வழியிலே படிக்கட்டும் அடுத்த வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினார், அதுமட்டுமில்லாது எனது வகுப்பு ஆங்கில ஆசிரியரை தனியாகச்சந்தித்து என்னைப்பற்றி சொல்லி தனி கவனம் எடுத்துக்கொள்ள கூறியுள்ளார். எனவே இவர்க்கும் என்னிடத்தில் தனி மரியாதை எப்போதும் உண்டு.
எனது ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் வைத்தியலிங்கம், மிக அமைதியான ஆசிரியர், அப்போது அவர்க்கு சின்ன வயசுதான் இருக்கும், வகுப்பில் என்னை வகுப்புத்தலைவன் ஆக்கியது மட்டுமில்லாமல், தினமும் வகுப்பில் ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வது, ஆங்கிலத்தை நுணுக்கமாக சொல்லித்தருவது என்று என்னை ஒரு வழியாக தயார்ப்படுத்தினார் (அப்படியும் நான் கத்துகல என்பது வேறு விஷயம்).இருந்தாலும் ஆங்கிலத்தின் மேலுள்ள ஒரு பயம் போயிற்று. இப்பொது ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர்க்கு எனது நன்றிகள்.
அடுத்து அறிவியல் ஆசிரியர் பாபு அவர்கள், இவரும் ஆங்கில ஆசிரியரும் நண்பர்கள், குணத்தில் நேர் எதிர், கோவத்தில் எனக்கு அண்ணன். அடிபிரிச்சுடுவார், என்மீது கொஞ்சம் அக்கறை உண்டு இவர்க்கு. ஆனாலும் வகுப்புத்தலைவன், நன்றாக படிக்கிறேன் என்ற அகந்தையில் நான் ஏதும் சில சின்ன விஷயம் பண்ணினாலும் அடி பின்னி எடுத்துவிடுவார். இவர் கடைசிவரை என்னிடம் கற்றுக்கொள்ள சொல்லியது "கோவப்படு, நான் என்ற அகந்தையை எப்போதும் விட்டுவிடு, உனக்கு மட்டும்தான் வெற்றி நிரந்தரம் என்பதை மறந்துவிடு" இதுதான். இவரின் பண்புகள் எனக்குள் வந்ததை சமீபத்தில்தான் கண்டுகொண்டேன் (இன்னும் இந்த அகந்தை மேட்டர் நம்மகிட்ட வரல, அப்பப்ப தலை தூக்கும் அப்போதெல்லாம் இவர் நியாபகம் வந்து எட்டிப்பார்க்கும்)
எட்டாவது வரை இவர்கள் இரண்டு பேர்மட்டுமே எனக்கு நினைவில் நின்ற ஆசிரியர், ஒன்பதாவது போகும்போது என்னை ஒரு வழியாக மனதளவில் ஆங்கில வழிக்கல்விக்கு தயார் படுத்திக்கொண்டேன், அதே முதல்வர் இப்போது என்னப்பா தயாரா என்று சொல்லி சிரிக்கிறார். என்னை வகுப்பறையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்த ஆசிரியையிடன் சொல்லிவிட்டுச்சென்றார். அந்த ஆசிரியை பெயரும் கற்பகம், இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் ஆசிரியை, இவர்க்கும் என்னை பிடிக்க ரொம்ப சில நாட்களே ஆகியது. எனக்கு மிக நல்ல அறிவுரைகளை சொல்லி, பயத்தை போக்கி, என்னை மற்ற மாணவர்களுடன் சகஜமாக பழக வைத்ததின் பெருமை இவரையே சேரும். இன்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரைப்பற்றி பேசுவது உண்டு.
அடுத்து கணித ஆசிரியர் விஜயகுமார், நானும் பள்ளிக்கு புதிது இவரும் புதிது, அடி பின்னியெடுக்கும் ஆசிரியர்க்கு பதிலாக இவர்தான் உங்கள் கணித ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை இவருடன் தொடர்பு இருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் தனிப்பாடதிலிருந்து வெளியேறினேன். இவரைப்பற்றி நிறைய எழுத வேண்டியதால் தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.
அடுத்து புது முதல்வர், இவரும் விஜயக்குமாரின் பதிவில் வந்துவிடுவார், இவர்க்கும் மிகப்பெரிய பங்கு இல்லாவிடிலும் எனது எதிர்காலத்தை மாற்றிய ஆசிரியரில் மிக முக்கிய இடம் உண்டு.
அப்புறம் சமூக அறிவியல் ஆசிரியை சுலோக்சனா, தாவரவியல் ஆசிரியை அங்கையர்க்கன்னி இவங்கல்லாம் அங்கங்க வந்துட்டு போனாங்க. அங்கையர்க்கன்னி நான் புத்தகத்தைப்பார்த்து பரீட்சை எழுதும்போது கண்டுபிடித்து அடித்து,ஏண்டா என்கிட்டயே இப்படி மாட்டிகிட்டா நீ பிட் அடிக்கவே லாயக்கு இல்லை என்று சொல்லி என்னை நன்றாக வித விதமாக பிட் அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற தூண்டிவிட்டவர்.(இத இப்ப பார்த்தாங்கன்னா அவ்வளவுதான் )
பதினொன்றாம் வகுப்பு, பள்ளி மாறியாயிற்று.கோவிந்தராஜன் அய்யா தமிழாசிரியர், என்னால் மறக்க முடியாத ஆசிரியர்... தமிழை படிக்காத நீ, போதுமான அளவுக்கு ஏற்கனவீ படிச்சுட்ட அத தக்கவைத்துக்கொண்டாலே போதும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க தேவையானதை மட்டும் இப்போது செய் என்று அறிவுரைகூறியவர்.
பசுபதி -இயற்பியல் ஆசிரியர், பொதுவாக மற்றவரைப்போல இவரை எனக்கு கொஞ்சம் புடிக்காது ஆனால் இவரின்றி நான் இயற்பியலில் 185 மதிபெண்கள் எடுத்து இருக்க முடியாது, எனது தந்தையின் நண்பர், அதற்காக என்மீது தனி அக்கரை செலுத்தாமல் எல்லோரிடமும் அக்கறை செலுத்துவார். அவர் சொல்லிகொடுத்த அந்த cyclotran பாடம் இன்றும் என் நினைவில் நிற்கின்றது. இவர் கையெழுத்தை நான் செய்முறை அறிவியல் ஆய்வு புத்தகத்தில் போட ஆரம்பித்து வகுப்பில் பாதி பேர் அதை பின்பற்றினர்.
இதற்கு பிறகு எனக்கு மனதில் நிற்கும் ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை... இன்னும் சிலர் இருந்து இருக்கலாம். ஆனால் எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு நேரமிருந்தால் அவரது ஆசிரியர் பற்றி எழுதலாம் இன்னும் விரிவாக சுவையாக. (முக்கியமாக கோவிந்தராஜ் அய்யாவைப்பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்)
Tuesday, June 17, 2008
வகுப்பறையில் ஒரு நாள்- ரெடிமேட் பரீட்சை
வகுப்பறையில் ஒரு நாள்- ரெடிமேட் பரீட்சை
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு தேர்வுக்கு முந்தைய மாதம், வழக்கம் போல சமூக அறிவியல் ஆசிரியர் வகுப்பு தேர்வு வைத்தார், தினமும் அவர் வகுப்பில் தேர்வு வைக்கப்படும், இரண்டு அல்லது மூன்று கேள்விகள் முதலிலேயே சொல்லிவிடுவார், அதிலிருந்து அடுத்த நாள் இரண்டு கேள்வி அல்லது ஒரு கேள்வி தேர்வில் வரும்.
நம்ம வழக்கம் போல முதல் இரண்டு நாள் படித்து வந்து பரீட்சை எழுதினால் பாதியில் எல்லாம் நின்றுவிடும், பின்ன அதுவரை தமிழில் மனப்பாடம் பண்ணின நான் இங்க ஆங்கிலத்தில் மனப்பாடம் பண்ண கஷ்டப்பட்டு அதை தமிழில் எழுதி ஆங்கிலத்தை தமிழில் படித்து ஒருவழியாக மனப்பாடம் பண்ணி தேர்வு எழுதினேன். தேர்வு முடிவு வழக்கம் போல தான், ஜஸ்ட் பாசு, அனால் எனக்கோ அவர்களிடம் நல்ல பேர் எடுத்ததை காப்பாற்ற வேண்டும் என்று ஆசை, அனால் என்ன மற்றவர் போல காபி அடிக்க தெரியாது பயம் வேற, என்ன செய்யலாம் என்று யோசித்தேன்...
அடுத்த இரண்டு டெஸ்டிலும் நல்ல முன்னேற்றம் எனது மார்க்கில், பசங்க ஆச்சரியப்பட்டு போனார்கள் இருந்தாலும் சந்தேகம் நான் காபி இல்லை பிட் அடிக்கிறேனா என்று, பின்னர்தான் தெரிந்தது நான் இரண்டுமே செய்யவில்லை புதுசாக ஒன்று பண்ணுகிறேன் என்று, அதுதான் ரெடிமேட், எப்படியும் இரண்டு கேள்விகள் அல்லது ஒரு கேள்வி, நான் ஒரு தாளில் முதல் இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் அடுத்த இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் என்று எழுதி வந்து விடுவேன், ஒருகேள்வி கேட்டால், முதல் இரண்டு பக்கத்தை கிழித்துவிட்டு ஒரு கேள்வியை குடுத்து விடுவேன், இது மற்ற பசங்களுக்கும் எளிதாக போய்விட்டதால் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
வழக்கமாக பரீட்சை அட்டையில் நிறைய பேப்பர் வைத்து அதில் இதை ஒளித்து வருவோம் பின்னர் அந்த ஆசிரியை அதையும் கண்டு பிடித்து இனி பரீட்சை அட்டையில் ஒரு வெள்ளை பேப்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார் ஆப்பு, நாம விடுவோமா?? அடுத்த ஐடியா கண்டுபிடித்தூம், அப்போ நாங்க எல்லாம் முழங்கால் வரை சாக்ஸ் போட்டு வருவோம் அதனால் பரீட்சை பேப்பர் மடிப்பது போல மடித்து சாக்சில் வைத்து எடுத்து வந்து குடுத்தோம்ல.....
வகுப்பறையில் ஒரு நாள் தொடரும்....
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு தேர்வுக்கு முந்தைய மாதம், வழக்கம் போல சமூக அறிவியல் ஆசிரியர் வகுப்பு தேர்வு வைத்தார், தினமும் அவர் வகுப்பில் தேர்வு வைக்கப்படும், இரண்டு அல்லது மூன்று கேள்விகள் முதலிலேயே சொல்லிவிடுவார், அதிலிருந்து அடுத்த நாள் இரண்டு கேள்வி அல்லது ஒரு கேள்வி தேர்வில் வரும்.
நம்ம வழக்கம் போல முதல் இரண்டு நாள் படித்து வந்து பரீட்சை எழுதினால் பாதியில் எல்லாம் நின்றுவிடும், பின்ன அதுவரை தமிழில் மனப்பாடம் பண்ணின நான் இங்க ஆங்கிலத்தில் மனப்பாடம் பண்ண கஷ்டப்பட்டு அதை தமிழில் எழுதி ஆங்கிலத்தை தமிழில் படித்து ஒருவழியாக மனப்பாடம் பண்ணி தேர்வு எழுதினேன். தேர்வு முடிவு வழக்கம் போல தான், ஜஸ்ட் பாசு, அனால் எனக்கோ அவர்களிடம் நல்ல பேர் எடுத்ததை காப்பாற்ற வேண்டும் என்று ஆசை, அனால் என்ன மற்றவர் போல காபி அடிக்க தெரியாது பயம் வேற, என்ன செய்யலாம் என்று யோசித்தேன்...
அடுத்த இரண்டு டெஸ்டிலும் நல்ல முன்னேற்றம் எனது மார்க்கில், பசங்க ஆச்சரியப்பட்டு போனார்கள் இருந்தாலும் சந்தேகம் நான் காபி இல்லை பிட் அடிக்கிறேனா என்று, பின்னர்தான் தெரிந்தது நான் இரண்டுமே செய்யவில்லை புதுசாக ஒன்று பண்ணுகிறேன் என்று, அதுதான் ரெடிமேட், எப்படியும் இரண்டு கேள்விகள் அல்லது ஒரு கேள்வி, நான் ஒரு தாளில் முதல் இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் அடுத்த இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் என்று எழுதி வந்து விடுவேன், ஒருகேள்வி கேட்டால், முதல் இரண்டு பக்கத்தை கிழித்துவிட்டு ஒரு கேள்வியை குடுத்து விடுவேன், இது மற்ற பசங்களுக்கும் எளிதாக போய்விட்டதால் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
வழக்கமாக பரீட்சை அட்டையில் நிறைய பேப்பர் வைத்து அதில் இதை ஒளித்து வருவோம் பின்னர் அந்த ஆசிரியை அதையும் கண்டு பிடித்து இனி பரீட்சை அட்டையில் ஒரு வெள்ளை பேப்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார் ஆப்பு, நாம விடுவோமா?? அடுத்த ஐடியா கண்டுபிடித்தூம், அப்போ நாங்க எல்லாம் முழங்கால் வரை சாக்ஸ் போட்டு வருவோம் அதனால் பரீட்சை பேப்பர் மடிப்பது போல மடித்து சாக்சில் வைத்து எடுத்து வந்து குடுத்தோம்ல.....
வகுப்பறையில் ஒரு நாள் தொடரும்....
Subscribe to:
Posts (Atom)