Tuesday, June 17, 2008

வகுப்பறையில் ஒரு நாள்- ரெடிமேட் பரீட்சை

வகுப்பறையில் ஒரு நாள்- ரெடிமேட் பரீட்சை

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு தேர்வுக்கு முந்தைய மாதம், வழக்கம் போல சமூக அறிவியல் ஆசிரியர் வகுப்பு தேர்வு வைத்தார், தினமும் அவர் வகுப்பில் தேர்வு வைக்கப்படும், இரண்டு அல்லது மூன்று கேள்விகள் முதலிலேயே சொல்லிவிடுவார், அதிலிருந்து அடுத்த நாள் இரண்டு கேள்வி அல்லது ஒரு கேள்வி தேர்வில் வரும்.

நம்ம வழக்கம் போல முதல் இரண்டு நாள் படித்து வந்து பரீட்சை எழுதினால் பாதியில் எல்லாம் நின்றுவிடும், பின்ன அதுவரை தமிழில் மனப்பாடம் பண்ணின நான் இங்க ஆங்கிலத்தில் மனப்பாடம் பண்ண கஷ்டப்பட்டு அதை தமிழில் எழுதி ஆங்கிலத்தை தமிழில் படித்து ஒருவழியாக மனப்பாடம் பண்ணி தேர்வு எழுதினேன். தேர்வு முடிவு வழக்கம் போல தான், ஜஸ்ட் பாசு, அனால் எனக்கோ அவர்களிடம் நல்ல பேர் எடுத்ததை காப்பாற்ற வேண்டும் என்று ஆசை, அனால் என்ன மற்றவர் போல காபி அடிக்க தெரியாது பயம் வேற, என்ன செய்யலாம் என்று யோசித்தேன்...

அடுத்த இரண்டு டெஸ்டிலும் நல்ல முன்னேற்றம் எனது மார்க்கில், பசங்க ஆச்சரியப்பட்டு போனார்கள் இருந்தாலும் சந்தேகம் நான் காபி இல்லை பிட் அடிக்கிறேனா என்று, பின்னர்தான் தெரிந்தது நான் இரண்டுமே செய்யவில்லை புதுசாக ஒன்று பண்ணுகிறேன் என்று, அதுதான் ரெடிமேட், எப்படியும் இரண்டு கேள்விகள் அல்லது ஒரு கேள்வி, நான் ஒரு தாளில் முதல் இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் அடுத்த இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் என்று எழுதி வந்து விடுவேன், ஒருகேள்வி கேட்டால், முதல் இரண்டு பக்கத்தை கிழித்துவிட்டு ஒரு கேள்வியை குடுத்து விடுவேன், இது மற்ற பசங்களுக்கும் எளிதாக போய்விட்டதால் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

வழக்கமாக பரீட்சை அட்டையில் நிறைய பேப்பர் வைத்து அதில் இதை ஒளித்து வருவோம் பின்னர் அந்த ஆசிரியை அதையும் கண்டு பிடித்து இனி பரீட்சை அட்டையில் ஒரு வெள்ளை பேப்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார் ஆப்பு, நாம விடுவோமா?? அடுத்த ஐடியா கண்டுபிடித்தூம், அப்போ நாங்க எல்லாம் முழங்கால் வரை சாக்ஸ் போட்டு வருவோம் அதனால் பரீட்சை பேப்பர் மடிப்பது போல மடித்து சாக்சில் வைத்து எடுத்து வந்து குடுத்தோம்ல.....

வகுப்பறையில் ஒரு நாள் தொடரும்....

2 comments:

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

ஃபிராடுபன்ன மட்டும் உலகமுழுசும் ஓரே மாதிரி யோசிப்பாய்ங்க போல..
நானும் நீங்க பன்னுனததான் பன்னுனேன்.