Monday, December 15, 2008

இரண்டு மணி நேர பயணம் அலுவலகத்திற்கு

நேற்று ஒரு திருமணத்திற்காக பாண்டி சென்று இரவு திரும்ப நேரமானதால் இன்று காலை ஒரு மணி நேர தாமதமாக அலுவலகம் செல்லலாம் என்று தீர்மானித்து தூங்கி விட்டேன்.சரியாக கிளம்பி எட்டு மணிக்கு காரை கிளப்பி வேளச்சேரியில் இருந்து பழைய மஹாபலிபுரம் சாலை அடைந்து பார்த்தல் life line மருத்துவமனை அருகே சாலையில் ஒரே வாகன கூட்டம்.

அட இன்று முதல் இந்த சாலையில் பணம் வாங்குகிறார்களே என்று நொந்துகொண்டு வாகனத்தை செலுத்தினேன், நமதுமக்கள் படித்தவர் படிக்காதவர் என்று பாகுபாடு இல்லாமல் சாலை விதிகளை பின்பற்றாமல் அவசர குடுக்கை தனமாக வாகனத்தை ஓட்டி ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு இருந்தனர், ஐந்து வரிசையாக செல்ல வேண்டிய இடத்தில் ஒன்பது வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அந்த இடத்தை கடந்து வர சரியாக ஒரு மணி நேரம் பிடித்தது .

இதில் அங்கே பணம் வாங்குபவரிடம் திரும்பி வருவதற்கும் சேர்த்து ரசீது கொடுங்கள் என்று கேட்டால் அவர் அது எல்லாம் இங்கு கிடையாது ஒவ்வொரு முறையும் நீங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார். விதியை நொந்துகொண்டு இனி இந்த சாலையில் வர கூடாது மாலை திரும்பும்போது கிழக்கு கடற்க்கரை சாலையில் வந்து விட வேண்டும் என்று தீர்மானித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், மணி அப்போது சரியாங்க ஒன்பது நாற்பத்து ஐந்து.

சில குளறுபடிகள்: மொத்தமாக ஒரு நாளைக்கு என்று பணம் வசூலிக்கும் முறை இல்லை, ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டும் அல்லது மொத்தமாக 50 முறை பயணிக்க 100 முறை பயணிக்க என்று வாங்கி வைத்து கொள்ள வேண்டும், மாற்ற சாலைகளில் இருப்பது போல ஒரே நாளில் திரும்பி வந்துவிடும் சீட்டு, ஒரு நாளைக்கு முழுவதையும் உபயோகிக்கும் முறை எல்லாம் இல்லை.

இதில் பாவப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு வாகனம் ஓடுபவர்கள் தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 தடவை அந்த சாலைகளை பயன்படுத்துகின்றனர், ஒவ்வொரு முறைக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், மொத்தத்தில் பெரிய தொகை.

இன்னும் சில மாதங்களுக்கு பெரிய போராட்டத்திற்கு பின்னரே வீடு செல்வோம் என்று நினைக்கிறேன்.

நேற்று இரவு சென்னை திரும்புகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவன்மியுரை நெருங்கும்போது போலீசார் வழிமறித்தனர், எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று எல்லாம் கேட்டுவிட்டு எதற்கு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டனர், நான் வந்தது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம், நான் இரவு இரண்டு மணிக்கு இந்த வேகத்தில் செல்லவில்லை என்றால் நாளைக்கு அலுவலகம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு வந்தேன்.

இருந்தாலும் அவர்கல்பணி மிக சிறந்தது.இரவு இரண்டு மணிக்கும் சாலையில் நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments: