Tuesday, March 10, 2009

குழப்பம்

இன்றைய பொழுதை நல்ல படியாக கழிக்க வேண்டுமென்ற நினைப்பில் தான் தினமும் பொழுது துவங்குகிறது ஆனால் எல்லா நாளும் அப்படி இருபது இல்லையே. என்னுள் எழுந்த சில மாற்றங்கள் என்னையும் அறியாமல் என்னை ஆக்கிரமித்துள்ளன. பொய் வாழ்கையில் எவ்வளவு நாள் வாழ்வது?

சந்தோசங்களை தருகிறது என்று என் மகிழ்ச்சியை இழந்து இப்போது நிற்கிறேன். வாக்குறுதிகளும் உன்மீதுள்ள பற்றும் மட்டுமே இப்போது என்னில் உள்ளன, காத்துக்கொண்டு இருக்கும் வாக்குறுதிகளே என்னைகாப்பாற்றுகின்றன என்று சொன்னால் அது கண்டிப்பாக உண்மை, இத உண்மை என்னை மட்டுமே அறிந்தது, நீ அறிய வாய்ப்புகளை நீ ஏற்படுத்திக்கொள்ள வில்லை. இந்த உண்மையை என்னுள் மட்டுமே புதைத்திட விருப்பமில்லாமல் ஒரு நாள் நீ அறிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தவே வெளிப்படுத்துகிறேன். என்னில் ஏற்படுத்திய அனைத்து மாற்றத்திற்கும் நீயே காரணம் ஆனால் உன்னில் சிறு மாற்றங்களை ஏற்ப்படுத்த முடிந்த என்னால் இப்போது எதையும் செய்ய முடியவில்லையே??

கைகளைமீறி சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் மீண்டும் ஏறி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையில் மறுபடியும் நான்

4 comments:

கணேஷ் said...

ஸாரி.. எனக்கு புரியவே இல்லை..

DHANS said...

மன்னிக்கவும் கணேஷ்

நானிருந்த குழப்ப நிலையில் எழுதியது, கண்டிப்பாக ஒருவருக்கு மட்டுமே இது புரியும். அவரும் இதை பார்க்க போவது இல்லை.

அவ்வபோது இப்படி வரும் பதிவுகளை பொறுத்துகொள்ளவும்.

Karthik said...

நமக்காக மட்டும் நம் ப்ளாக்கில் எழுத முடிவது உண்மையில் சூப்பர்ப்பான விஷயம். அது எங்களுக்கு புரிய வேண்டும் என்பதில்லை.

I just want to say, Good times are never too far. :)

DHANS said...

எதையுமே நாம் நமக்காகவே செய்கிறோம் சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வேடமிட்டு மற்றவர்காக சிலவற்றை செய்ய வேண்டி உள்ளது.
நன்றி கார்த்திக்