Friday, May 15, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-4

பகுதி 3
நாள்தோறும் smsகள், forward mail என்று நடப்பு வளர்ந்து கொண்டு இருந்தது. treat போவதற்கு மட்டும் சரியான நாள் அமையவில்லை.
திடிரென்று ஒரு நாள் அவனுக்கு தோன்றியது, y dnt v meet today? என செய்தி அனுப்பினான்.

"naanum athan nenachen, iniku meet panalaama nu" பதில் வந்தது. மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. எதோ அவனது yamaha பைக்கில் ரேஸ் ஜெயித்து போன்ற உணர்வு.

" enga meet panalaam?" செய்தி அனுப்பினான், "hostel va " என்று பதில்.
hostela ஐயோ சுதா இருப்பாளே, ஒரு பைக் தான் இருக்கு ரெண்டு பேரையும் குட்டி போகனும்னா auto ல போகணும் என்று யோசித்துக்கொண்டு சுதாவுக்கு மெயில் அனுப்பினான்.

ஈவினிங் ப்ரீயா? treat போலாமா என்று, ஊருக்கு போகிறேன் என்று பதில் வந்தது.

சரி உன்ன டிராப் பண்ணிட்டு போறேன் என்றுசொல்லிவிட்டு, "ethana manikku meet பண்லாம்" என்று அனுப்பினான், பின்னாலேயே "7.30 to 8 pm tonght? " என்று அனுப்பினான்.

yes என்று பதில் வந்தது, சரி "call u evening " என்று பதில் அனுப்பிவிட்டு வேளையில் மூழ்கினான்.

மாலை சுதாவை கூடிக்கொண்டு போகும்போது சில அலுவலக கண்கள் அவர்களை மொய்ப்பதை கவனிக்க தவறவில்லை.

சோகமாக இருந்தாள், ஏன் சுதா சோகமா இருக்க என்ன ஆச்சு என்று கேட்கையில், அவளது அக்கா பையனுக்கு உடம்பு சரி இல்லை அதான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அமைதியானாள். கவலைபடாதே என்று ஆறுதல் படுத்திவிட்டு அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு கிளம்பினான். சிறிது தூரம் நடந்திருப்பான்.
பேருந்து கிளம்ப்பத்தொடங்கும்போது திடிரென்று சுதாவிற்கு யாரோ அழைப்பது போல தோன்ற திரும்பினால், கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் கேக் உடன் கதிர்.

" எப்படியும் நீ சாப்பிட மாட்ட அதான் இத சாப்பிடு" என்று கையில் திணித்துவிட்டு இறங்கி சென்றான், அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தாள் சுதா.

மொபைலை எடுத்து " thanks for being my friend" என்று அனுப்பினாள்.பதில் உடனடியாக வந்தது " i dnt need ur thx, hav a safe jurny.gve me a call r sms hn u rech." என்று.

"drive safe, take care" என்று பதில் அனுப்பினாள், ஏனோ தெரியவில்லை இவனுக்கு என்மேல ரொம்ப அக்கறை என்று தோன்றியது.

சரியாக கதிர் 7.15 க்கு hostel அருகே நின்று கொண்டு இருந்தான். அவள் வந்தால், அவனுக்குமுதன்முறை ஒரு பெண்ணோடு வெளியே செல்வது எங்கு போவது என்று தெரியவில்லை.

ஹை எப்படி இருக்க? லேட் ஆகிவிட்டதா? என்று கேட்டபடி வந்தாள். 'இல்லை இப்பத்தான் வந்தேன் 'என்று சொல்லியபடி சிரித்தான்.
எங்கயாது போகலாம் இங்க பேச வேண்டாம் hostel ல பார்த்தா திட்டுவாங்க என்று சொல்லியபடி நின்றாள், வண்டியை கிளப்பி திருப்பி நிறுத்தினான். "எப்படி உட்க்கார?" என்று கேட்டால், எப்படி உனக்கு இஷ்டமோ அப்படி உட்கார் என்று பதில் கொடுத்தான்.

வண்டி கிளம்பியது இருவரும் பேசவில்லை எங்க போகலாம் என்று கேட்டான், "எனக்கென்ன தெரியும் நீ எங்க கூட்டிக்கொண்டு போறியோ அங்க வருவேன்" என்றாள்.

"எங்கயாது சாப்பிட போலாமா?" என்று கேட்டான். போலாமே என்று பதில் கூறினாள். "எங்க போறது?" என்று இவன் கேட்க எனக்கு எந்த இடமும் தெரியாது நீ எங்க போறியோ அங்க வரேன் என்று கூறிவிட்டாள். ஆபிஸ் பக்கதுல இருக்கும் ஹோட்டல் போகலாம் என்று தோன்றியது.

வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான், எங்கு செல்கிறோம் என்பதையே மறந்து வழி எல்லாத்தையும் மறந்து வண்டியை ஓடிக்கொண்டு இருக்கும் பொது கேட்டாள் "எங்க கூட்டிட்டு போற" என்று அப்போதுதான் நியாபகம் வந்தது வழி மாறி எங்கோ சென்று கொண்டு இருக்கிறோம் என்று. எப்படியோ பத்து நிமிடத்தில் போகும் இடத்தை நாற்ப்பது நிமிடத்தில் அந்த ஹோட்டேல் சென்று அடைந்தனர்.

அன்று அவனின் கனவு நனவாகியது முதன்முதலாக ஒரு பெண்ணுடன் உணவருந்தினான். அதுவும் மனதுக்கு மிக பிடித்த பெண்ணுடன் என்று தோன்றியது.
மறுபடியும் அவளை கொண்டு விட்டுவிட்டு திரும்புகையில் வண்டியை மிக வேகமாக ஆனால் நிதானம் தவறாமல் ஓட்டி சென்றான். அனுபவித்து வண்டி ஓட்டும்போது இருக்கும் நிறைவே நிறைவு. இவன் இப்படித்தான் மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது வேகமாக வண்டி ஓட்டுவான் சோகமாக இருக்கும்போது மிகவும் அனுபவித்து மெதுவாக ஓட்டுவான்.

வீடு வந்து சேர்ந்து "reched home, wat u doing " என்று கேட்டு செய்தி அனுப்பினான்.
"aftr a lng time i had gud dinner. so gng 2 sleep " என்று பதில் வந்தது.
"me 2, gud nte, slp wel" என்று பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றான்.

1 comment:

Karthik said...

ஏன்னு தெரியலை.. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. :))