Friday, May 8, 2009

பசங்களும் நானும்

பசங்க படம் பார்த்தீன் சில நாட்களுக்கு முன்னாள்
என்னுடைய பள்ளிக்கால நாட்கள் நினைவுக்கு வந்ததை மறக்க முடியாது.

அந்த ஓட்டை டவுசரும், சட்டையை இன் செய்து போவது போன்ற நினைப்பும், சைக்கிள் வாங்க வேண்டும் என்ற கனவும், கோஸ்டி சேர்த்து பூட்டி போடுவதும் என்று மறக்க முடியா நினைவுகள்.

வகுப்பு கரும்பலகையில் பெயர் எழுதும் வகுப்பு தலைவன் : இந்த கதாபாத்திரத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்ன அப்போதெல்லாம் வகுப்புக்கு தேர்தல் கிடையாது, வெறும் ஆசிரியர் யாரை சொல்கிறாரோ அவர்தான், நன்றாக படித்ததால் நான் மட்டுமே அந்த போஸ்ட்டுக்கு அன்னப்போஸ்ட்டாக வந்துகொண்டு இருந்தேன்.

பேர் எழுதும் பொது எல்லாம் பெண்கள் பெயரை எழுதாமல் விடும் வழக்கம் என்னிடம் இல்லை, ஆமா நான் படிச்சது ஆண்கள் பள்ளி. ஆனால் பின்னால் கடைசி வரிசைல இருக்கும் யார் பெயரும் வராது.
மாலையில் மக்கள் கடையில் கரம் வாங்கி தருவது அவர்கள் மட்டுமே :)

எனக்கும் போட்டிக்கென்று ஒருத்தன் வந்தான் முதல் மூன்று ரேங்க் எடுக்கும் எனக்கு போட்டியாக வந்தது செந்தில் நாதன், ஆமாம் முதல் தடவை அவனை சாதாரணமாக நினைத்து முதல் ராங்க்கை அவனிடம் இழந்தேன், அடுத்த முறை எட்டாவது ரேங்க் தள்ளப்பட்டேன், அப்போதுதான் இந்த உலகில் போட்டி என்பது உள்ளது என்று புரிந்துகொண்டேன். அய்ந்தாவது வரை எப்போதும் முதல் ரேங்க் எடுத்தவனுக்கு போட்டி என்பது ஒன்று உண்டு அதற்க்கு உன்னை தகுதிபடுத்தி தயார் படுத்த வந்தவன்தான் அவன் என்று புரிந்துகொள்ள நான் எட்டாவது ரேங்க் போக வேண்டியது அவசியமாயிற்று. என் வாழ்க்கையிலேயே மிக மோசமாக அழுதது அன்றுதான் எப்படி ரேங்க் சீட்டை வீட்டில் காட்டுவது என்றும், இப்படி படிக்காமல் போய்ட்டோமே என்றும் இன்னும் என்னனமோ எண்ணங்கள். நம்மை சாதாரணமாக ஜெயித்துவிட்டனே என்ற வன்மமும் தலை தூக்கியது.

அப்புறம் அடுத்தமுறை இரண்டு மார்க்கில் அவனை ஜெயித்து மீண்டும் பெயரை நிலைநாட்டினேன். அடுத்த ஒரு வருசத்துக்கு எங்களுக்குள் பலமான போட்டி அந்த போட்டியில் இன்னும் சிலர் சேர்ந்துகொள்ள அப்போதுதான் போட்டியைப்பற்றிய பயம் என்னுள் வந்தது. நம்ம கூடவும் சில கதாபாத்திரங்கள் பசங்க படம் போல இருந்தனர், அவன் அதை பண்றான் நீ என்ன பண்ற என்று சொல்லி காட்டி உசுப்பு ஏற்றிவிட.

அப்புறம் என்ன அடுத்த ஒரு வருடத்துக்கு என்று சொல்லும்போதே தெரிந்து இருக்கணும் இரண்டு பேரில் ஒருவர் வேறு பள்ளிக்கு சென்றிருக்க வேண்டும் , அது நான் தான், எட்டாவதில் பள்ளி மாறினேன், அன்றுடன் முடிந்தது என்னுடைய ரேங்க் சகாப்தம், அப்புறம் கடைசி பத்து ரேங்க் மட்டுமே நம்ம ஏரியா , தமிழ்மீடியம் பள்ளியில் இருந்து ஆங்கில மீடியம் பள்ளிக்கு மாறுவது என்பது மிகப்பெரிய ரிஸ்க் அதை அப்போது தைரியமாக என்னை எடுக்க வைத்து தள்ளி விட்டனர் என் அண்ணனும் அப்பாவும் (நன்றி அண்ணா).

அப்போது எனக்கிருந்த மனநிலையை காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். முதல் இடைத்தேர்வு தேர்வுத்தாளை எடுத்துக்கொண்டு ஆங்கில வழியிலே படித்த பையனின் தேர்வுத்தாளையும் எடுத்து பக்கத்துக்கு மாணவரிடம் கொடுத்து என் தேர்வுத்தாளில் பிழை இல்லாத எழுத்துக்களை எண்ணி சொல்ல சொன்னார், அந்த பையனின் தாளில் பிழை உள்ள எழுத்துக்களை எழுத சொன்னார். நம்முது எட்டு அந்த பையனுது ஐந்து. அதுல கூட நம்ம தான் அதிகம் ஆனாலும் அத வெளிய சொல்லி அந்த பையன அவமானபடுத்திட்டார் எங்க சோசியல் சைன்ஸ் ஆசிரியர், அதுக்கு பதிலாக அவர் பாடத்தில் பத்தாவதில் பதினேழு மதிப்பெண் வாங்கி அவரை நான் அவமானப்படுத்தினது தனி கதை, நன்றி சுலக்சனா டீச்சர்.


அடுத்த வகுப்பு தமிழ் வகுப்பு அந்த ஆசிரியை இதே போல இன்னொரு கேள்வி கேட்டு என்னை அசிங்க படுத்தினார், தமிழ் வழியில் இருந்து வந்து எந்த பாடத்திலும் தோல்வி அடையாதவன் இவன், முதல் வகுப்பில் இருந்து ஆங்கில வழியில் படித்து பெயில் ஆனவர்கள் எண்ணிக்கை எத்தனை என்பதை கூறி அசிங்கப்படுத்திவிட்டார் அதற்கும் பதிலடி பத்தாவதில் அவர் பாடத்தில் பள்ளியில் முதல் மூன்று இடத்தில வந்தேன். நன்றி லக்ஷ்மி டீச்சர்.

படத்தை பார்த்து அதை விமர்சனம் பண்ணலாம் என்றுலாம் எழுதலை ஆனாலும் அதை பற்றி எழுதப்போய் என்னைப்பற்றி வந்துவிட்டது, என்ன இருந்தாலும் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள். செந்தில்நாதா நீ எதோ ஒரு பொட்டி தட்டும் வேளையில் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி, என் வாழ்விலும் போட்டியை கொண்டு வந்ததுக்கு.

முதல் ரேங்க் வாங்கி கற்றுக்கொள்ளாததை கடைசி ரேங்க் வங்கி கற்றுக்கொண்டேன், வாழ்க்கையை அதன் போக்கை எல்லாவற்றையும் அந்த கடைசி பத்து ரேங்க் மட்டுமே கற்றுக்கொடுத்தது.

என்னைப்பொறுத்தவரை நான் படிப்பில் முதல்பத்து இடத்திலும் கடைசி பத்து இடத்திலும் இருந்து இருக்கிறேன், கண்டிப்பாக முதல் பத்து இடம் என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே, வெறும் உலகம் தெரியாதவனாக உலகத்தை நடத்தும் மிகப்பெரிய கூடத்தில் முறையை புரியாமல் இருக்க மட்டுமே லாயக்கு, கடைசி பத்து என்பது உலகத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, எப்போதும் ஒரு வித போட்டியும், தயாரிப்பும் தேவைப்படும் இடங்கள். உன்னை எப்போதும் ஒரு விதமான தகுதிக்கு தயார் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அந்த இடத்தில் அதனால் நீ அடையும்பயன் பின்னாளில் உனக்கு தெரியும்.

தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் பசங்க படத்தை பார்த்தவுடன் அவர்கள் பள்ளி நியாபகம் வருவது தவிர்க்க முடியாதது

4 comments:

Thamiz Priyan said...

பசங்க பார்க்கும் ஆவலைக் கிளறி விட்டது உங்கள் பள்ளி அனுபவம்.. :)

mvalarpirai said...

அட நீங்களும் நம்மாளுதானா...ஆனா ஒன்பதுவரைக்கும் முதல் ரேங்க்கு...ஆங்கில வழிகல்விக்கு மாறல..ஆனா கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் அதற்கான பலனை அனுபவிச்சேன்..இப்பவும் சில நேரங்களில் ..:)

DHANS said...

கண்டிப்பாக பாருங்க தமிழ் பிரியன் குடும்பத்தோடு பார்க்கலாம்

DHANS said...

//ஆனா கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் அதற்கான பலனை அனுபவிச்சேன்//

மாறியதன் பயனை கல்லூரியில் அறுவடை செஞ்சேன், பள்ளியில் பெற்ற கஷ்டத்தை கல்லூரியில் போக்கினேன்